<?xml version="1.0" encoding="utf-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title>ஊற்று</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/" />
    <link rel="self" type="application/atom+xml" href="http://ootru.com/atom.xml" />
   <id>tag:ootru.com,2011://1</id>
    <link rel="service.post" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1" title="ஊற்று" />
    <updated>2011-04-25T04:08:21Z</updated>
    <subtitle>&quot;கங்கையைப்போல் காவிரிபோல், கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்&quot; - பாவேந்தர் பாரதிதாசன் (1891-1964)</subtitle>
    <generator uri="http://www.sixapart.com/movabletype/">Movable Type 3.2ysb5-20051201</generator>
 
<entry>
    <title>1961 சத்தியாக்கிரக இயக்கத்தின் 50 ஆண்டு நிறைவு</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2011/04/1961_50.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=362" title="1961 சத்தியாக்கிரக இயக்கத்தின் 50 ஆண்டு நிறைவு" />
    <id>tag:ootru.com,2011://1.362</id>
    
    <published>2011-04-24T21:07:14Z</published>
    <updated>2011-04-25T04:08:21Z</updated>
    
    <summary>(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது) &quot;....இப்படியாக அடக்குமுறையாளரின் வன்முறை, அடக்கப்பட்டவர்களின் அஹிம்சையை ஒடுக்கியது. சிங்கள பெருமிதவாதத்தின் ஆயுத வலு தமிழர்களின் வன்முறையில்லாத போராட்டத்தை நசுக்கியது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, தமிழ் தேசிய போராட்டத்துக்கு மிகவும் அவசியமான அரசியல் அநுபவத்தின் தொடக்கமாக அமைந்தது. இந்த...</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><em>(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)</em></p>

<p>"....இப்படியாக அடக்குமுறையாளரின் வன்முறை, அடக்கப்பட்டவர்களின் அஹிம்சையை ஒடுக்கியது. சிங்கள பெருமிதவாதத்தின் ஆயுத வலு தமிழர்களின் வன்முறையில்லாத போராட்டத்தை நசுக்கியது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, தமிழ் தேசிய போராட்டத்துக்கு மிகவும் அவசியமான அரசியல் அநுபவத்தின் தொடக்கமாக அமைந்தது.  </p>

<p>இந்த அநுபவம் தமிழர்களுக்கு ஒரு பாடத்தையும் கற்றுக்கொடுத்தது. தமது அகிம்சை வழியான போராட்டத்தின் ஆன்மீக பலம், வன்முறை அடக்குமுறையாளரின் இராணுவ பலத்தின் முன் தாக்குபிடிக்காது என அவர்கள் அறிந்து கொண்டனர். இந்த அடக்குமுறையாளர்கள் மனிதத்தின் தார்மிக  நியமங்கள், நாகரிகப்பண்பு என்பவற்றை கடந்தவர்களாக காணப்பட்டனர். </p>]]>
        <![CDATA[<p>தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இராணுவ பயங்கரவாதத்தின் மூலம்தான் பதிலளிக்க வேண்டும் என்ற கருத்தை இந்த நிகழ்வு, அடக்கு முறையாளரிடம் உண்டாக்கியது. </p>

<p>தமிழ் அரசியல் எதிர்ப்பின் அஹிம்சை வழி என்னும் அத்திவாரம், துப்பாக்கிக் குழலின் முன் பலவீனமானது, வலுவுற்றது என அவர்களை எண்ண வைத்தது."  - அன்ரன் பாலசிங்கம் எழுதிய 'விடுதலை புலிகளும் தமிழீழ சுதந்திர போராட்டமும்' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.<br />
இழந்த உரிமைகளை பெறுவதற்கான இலங்கை தமிழ் அரசியல் போராட்ட வரலாற்றில் பெப்ரவரி 20, 1961 ஒரு முக்கிய நாளாகும்.</p>

<p>இந்த நாளில்தான் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தால் தலைமை தாங்கப்பட்ட ஆங்கிலத்தில் 'பெடரல்' கட்சி என அறியப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சி ஐம்பது ஆண்டுகளுக்கு முன், உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமா பண்டாரநாயக்காவால் தலைமை தாங்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக அஹிம்சைவழி நேரடி நடவடிக்கை இயக்கத்தை ஆரம்பித்தது.</p>

<p>தமிழ் போராளிகள் மேற்கொண்ட கொடூரமான ஆயுத போராட்டத்தை ஆண்டாண்டு காலமாக கண்டு வந்தமையால் பலரின் மனதில்  தமிழ் அரசியல் இயல்பு அடிப்படையில் வன்முறையானது என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது. இந்த வன்முறை, தமிழர் கோரிக்கைகளின் நியாயத்தை  தட்டிக்கழிக்க சுயநலமிகளுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. இந்த 'பிரச்சினை'யை சட்டம், ஒழுங்கு தொடர்பான விடயமாக சித்திரிக்கவும் முடிந்தது.</p>

<p>சுதந்திரத்துக்கு பின்னரான மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழ் அரசியல் போராட்டம் மாகாத்மா காந்தியின் அஹிம்சை தத்துவத்தை கடைப்பிடித்த வன்முறையில்லாத வழியில் அமைந்திருந்தது என்ற உண்மை மறக்கப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்டு, வருகிறது. </p>

<p>வன்முறையில்லாத தமிழ் போராட்டம் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற தவறியதே விரக்தியுற்ற தமிழ் இளைஞர்களை துப்பாக்கி தூக்க வைத்தது என பலர் கருத்து தெரிவித்தனர்.</p>

<p>இது எவ்வாறு இருந்தபோதிலும், 20 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காற்பகுதி, இலங்கைத் தமிழர்களால் நடத்தப்பட்ட வன்முறை சாராத எதிர்ப்பு நடவடிக்கைகள் நிறைந்து காணப்பட்டது என்பதை மறுக்கமுடியாது. இந்த காலத்தில் ஹர்த்தால்கள், சத்தியாக்கிரகங்கள், கறுப்புக் கொடி காட்டுதல், ஊர்வலங்கள் , பேரணிகள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், துக்கதினம் அனுஷ்டிப்புகள் ஒத்துழையாமை இயக்கம், மக்கள் எதிர்ப்பியக்கம், பகிஷ்கரிப்பு என்பன தமிழ் அரசியலின் வெளிப்பாடாக இருந்தன.</p>

<p>இந்த வன்முறை சாரா அரசியல் எதிர்ப்பின் முக்கிய வெளிப்பாடாக பெப்ரவரி 20, 1961 இல் தொடக்கி நடத்தப்பட்ட மகா சத்தியாக்கிரக இயக்கம் இருந்தது.</p>

<p>இலங்கை தமிழர்கள் பெருமைப்படக்கூடிய ஒரு சாதனையாக இந்த சத்தியாக்கிரகம் அமைந்தது. இராணுவ ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் வரையில் ஒரு சிறிய, ஆயுதம் தாங்காத மக்கள், அர்ப்பணிப்பு மற்றும் ஐக்கியம் மூலம், கொழும்பு அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரத்தை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இரண்டு மாதகாலமாக முடக்கி வைத்திருந்தனர்.</p>

<p>அறிகுறி<br />
ஆயுத படைகள் அழைக்கப்பட்டமை, வடக்கு கிழக்கு மாகாணங்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதன் அறிகுறியாக அமைந்தது. இப்பகுதிகளில் அதிகரித்த தீவிரவாதம், அதிகரித்த இராணுவமயப்படுத்தலால் எதிர்கொள்ளப்பட்டது.</p>

<p>இப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் அளவுக்கு மீறிய இராணுவ பிரசன்னம் காணப்படுகிறது. இந்த மாகாணங்களில் பிரதிநிதித்துவ அரசியல் வீழ்ச்சி கண்டு, சிதைந்து வருகிறது.</p>

<p>அடிப்படையில் வன்முறையற்ற இயல்பினதாக இருந்தபோதும் 1961 சத்தியாக்கிரகம், தமிழ் அரசியலின் எதிர்கால செல்நெறியின் அறிகுறிகளையும் வெளிப்படுத்தியது. எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட சில இளைஞர்கள் வெளிப்படுத்திய அவசரம், வரக்கூடிய தீவிரவாதத்தின் எழுச்சியை அடையாளம் காட்டியது.</p>

<p>சத்தியாக்கிரகத்தின்போது, சமாந்தரமாக நடத்தப்பட்ட தபால்சேவை போன்ற சட்டமறுப்பு நடவடிக்கைகளும்,  எதிர்காலத்தில் வளரப்போகும் பிரிவினையையை சுட்டுவதாக இருந்தன.</p>

<p>திருமதி பண்டாரநாயக்கவை அதிகாரத்துக்கு கொண்டுவந்த 1960 யூலை தேர்தல்களில் சமஷ்டி கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் கூட்டாளியாக இருந்தது என்பது கவலைக்குரிய முக்கிய விடயமாக இருந்தது.</p>

<p>இவ்வாறு இருந்தபோதும், நிலைமைகள் மோசமடைந்தன. ஒரு வருட காலத்தினுள் பிரதான சிங்கள கட்சிகளும், தமிழ் கட்சிகளும் ஒன்றோடு ஒன்று பிரச்சினைப்பட்டுக் கொண்டிருந்தன. இவ்வாறு அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கபடாதவாறு தடைப்பட்டபோது அது அரசியல் மோதலாகி 1961 சத்தியாக்கிரகத்தில் முடிந்தது.</p>

<p>முக்கியத்துவம்</p>

<p>இந்த விடயங்களை நன்கு விளங்கிக்கொள்வதற்கு மார்ச் 1960 இலும் யூலை1960 இலும் நடந்த பொது தேர்தல்கள்பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். இந்த தேர்தல்களில் டட்லி சேனநாயக்க அரசாங்கத்தை வீழ்த்தியும் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தை கொண்டு வந்தும் சமஷ்டி கட்சி முக்கிய பங்காற்றியது.</p>

<p>ஐ.தே.க.விக்கு எதிராக சமஷ்டிக்கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டு வைப்பதற்கு காரணமாக அமைந்தவை பற்றியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – சமஷ்டிக் கட்சி கூட்டு உடைந்தமை பற்றியும் விபரமாக அறிந்திருப்பது முக்கியமானதாகும்.</p>

<p>1961 சத்தியாக்கிரகம் நடைபெற்ற பின்னணியை நன்கு விளங்கிக் கொள்வதற்கு, அதற்கு முந்தைய கால நிகழ்வுகளை ஆராய்வது அவசியமானதாகும்.</p>

<p>மார்ச் 1960 இற்கும் யூலை 1960 இற்கும் இடையில் மிகவும் சிக்கலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இவற்றில் சமஷ்டிக் கட்சி வெளியில் தெரியாத முக்கிய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டது. 1961 சத்தியாக் கிரகத்தைப் பற்றி நன்கு விளங்கிக் கொள்ள இந்த விடயங்களை நன்கு ஆராயவேண்டும்.</p>

<p>சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருந்தபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கமும் எதிர்க்கட்சியான சமஷ்டிக கட்சியும் காட்டிய தீவிரமும், உறுதிப்பாடும் முழுமையாக விளங்கிக் கொள்ளப்படுவதற்கு, மார்ச்- யூலை 1960 காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியல் நடவடிக்கைகளை ஆராய வேண்டும்.</p>

<p>செப்டெம்பர் 1959 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கொலையுண்ட பின், வித்தியாசமான போக்குக் கொண்ட டபிள்யூ. தஹநாயக்கா பிரதமரானார். ஆனால் இவர் பிரதமராக இருந்தது கொஞ்சக் காலத்திற்குதான். மார்ச் 1960 இல் புதிதாக தேர்தல் நடத்தப்பட்டது.</p>

<p>101 ஆக இருந்த நாடாளுமன்ற ஆசனங்கள் 157 ஆக அதிகரித்தது. இதில் 6 பேர் நியமன  உறுப்பினர்களாக இருந்தனர். 151 உறுப்பினர்கள் 145 தொகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். கொழும்பு தெற்கு, அக்குரணை, மட்டக்களப்பு, மூதூர் ஆகிய தொகுதிகள் இரட்டை அங்கத்தவர்கள் தொகுதிகளாக இருந்தன. கொழும்பு மத்தியிலிருந்து மூன்று அங்கத்தவர்கள் தெரிவாகினர்.</p>

<p>பிரசாரம்</p>

<p>1953 இல் தானாக அரசியலை விட்டு நீங்கிய டட்லி சேனநாயக்க 1957 இல் மீண்டும் அரசியலுக்கு வந்திருந்தார். அவர் 1960 தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமை தாங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சி.பி.டி சில்வாவினால் தலைமை தாங்கப்பட்டது.</p>

<p>தேர்தல் பிரசாரத்தில் கொலையுண்ட பண்டாரநாயக்கவின் மனைவி சிறிமா முக்கிய பங்கு எடு;க்கவில்லை.</p>

<p>மக்கள் ஒற்றுமை முன்னணியின் தலைவர் பிலிப் குணவர்த்தன, லங்கா சம சமாஜிஸ்ட கட்சியின் தலைவர் டாக்டர். என்.எம். பெரேரா, காபந்து பிரதமர் தஹநாயக்க ஆகியோர் பிரதமராக ஆசைபட்டவர்களாக இருந்தனர்.</p>

<p>தேர்தல் முடிவு தொங்கு நாடாளுமன்றத்துக்கு வழிவகுத்தது. லங்கா சமசமாஜிஸ்ட் கட்சி, மக்கள் ஒற்றுமை முன்னணி ( ஆநுP)  என்பவை தலா 10 இடங்களை எடுத்திருந்தன. மூன்றாவது பெரிய கட்சியான சமஷ்டிக் கட்சி 15 இடங்களை எடுத்திருந்தது. புதிய நாடாளுமன்றத்தில் சமஷ்டி கட்சி தீர்மானிக்கும் கட்சியாக இருந்தது.</p>

<p>ஐ.தே.க. சார்பானவர் என கருதப்பட்ட கவர்னர் ஜெனரல் சேர். ஒலிவர் குணதிலக தனியொரு கட்சியாக அதிகூடிய இடத்தை எடுத்த ஐ.தே.க.வை அரசாங்கத்தை அமைக்கும்படி அழைத்தார். ஆனால் டட்லி சேனாநாயக்காவினால் அரசாங்கத்தை அமைக்க கூடிய பெரும்பான்மையை பெற முடியுமா என்பது சந்தேகத்துக்கு உரியதாகவே இருந்தது. </p>

<p>நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில சுயேட்சை அங்கத்தவர்கள், கட்சி மாறிவரக் கூடியவர்கள் என்று பார்த்தாலும் டட்லி சேனாநாயக்கவினால் மொத்தமாக 157 அங்கத்தவர்களில்  60 அல்லது 61 பேரை மட்டுமே சேர்க்கக் கூடியதாக இருந்தது. சமஷ்டி கட்சியின் 15 அங்கத்தவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டால், இன்னும் சில சுயேட்சை அங்கத்தவர்களையும், சிறுகட்சிகளின் அங்கத்தவர்களையும் தன்பக்கம் இழுக்க முடியும் என டட்லி சேனநாயக்கா நம்பிக்கை கொண்டிருந்தார்.</p>

<p>செல்வநாயகம்<br />
சேனநாயக்க ஒரு உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு செல்வநாயகத்தின் ஆதரவு அத்தியாவசியமான இருந்தது. இவ்வாறே மாற்று அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சமஷ்டிக் கட்சியின் ஆதரவு முக்கியமானதாக இருந்தது.</p>

<p>எனவே வெற்றியாளரான சமஷ்டிக் கட்சி தலைவர் பலாலியிலிருந்து இரத்மலானைக்கு விமானத்தில் சென்றபோது, அவர் அரசியல் ரீதியில் மிகவும் வேண்டப்பட்டவராக காணப்பட்டார்.</p>

<p>முன்னாள் பிரதமர் சேர்.ஜோன் கொத்தலாவல முன்னாள் சட்டசபை உறுப்பினர் சேர். அருணாசலம் மகாதேவா, இளைப்பாறிய பிரதம நீதியரசர். சேர்.எட்வேட் ஜயதிலக, முன்னாள் நீதியமைச்சரும், செனட் தலைவருமான சேர். லலித் ராஜபக்ஷ ஆகிய முக்கியஸ்தர்கள், ஐ.தே.க.வின் சார்பில், செல்வநாயகத்தை தமது பக்கம் இழுக்க முயன்றனர். டட்லி சேனநாயக்கவுடன் கூட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்தனர்.</p>

<p>ஆனால், ஐக்கிய தேசிய கட்சியால், போட்டியிட முடியாத துரும்புச் சீட்டு ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வைத்திருந்தது.</p>

<p>இதுதான் பண்டா- செல்வா ஒப்பந்தமாகும். இது யூன் 1957 இல் கையொப்பமிட்டது. </p>

<p>இந்த ஒப்பந்தத்தில் வடக்குக்கு ஒரு பிராந்திய சபையும் கிழக்குக்கு இரண்டு பிராந்திய சபையும் அமைப்பதாக ஏற்கப்பட்டிருந்தது. இதில் இணைக்க கூடிய ஏற்பாடும் காணப்பட்டது. நிர்வாகத்திலும், நீதிமன்றங்களிலும் தமிழின் பயன்பாட்டிற்கான வழிமுறைகளும் ஏற்கப்பட்டிருந்தன. குடியேற்றங்கள் என்ற விடயம் தொடர்பிலும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.</p>

<p>ஐ.தே.க.வும் பௌத்த துறவிகளில் ஒரு பகுதியினரும் காட்டிய எதிர்ப்பின் காரணமாக பண்டா- செல்வா ஒப்பந்தம் ஒரு தலைப்பட்சமாக கைவிடப்பட்டது.</p>

<p>செல்வநாயகம் இரத்மலானையில் வந்திறங்கியபோது எதிர்பாராத ஒருவரும் வந்திருந்தார.; மலைநாட்டு முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராமானுஜம் தான் அவர்.</p>

<p>அவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொணடமானின் பிரதிநிதியாக அங்கு வந்திருந்தார். அப்போது தோட்டத்துறையின் தமிழ் தலைவரான எஸ்.பி.வைத்தியலிங்கத்துடன், டட்லி சேனநாயக்கா நெருக்கமாகவிருந்தார். முன்யோசனை மிக்க தொண்டமான் இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நெருக்கமாகி வந்தார்.</p>

<p>சமஷ்டிக் கட்சி பதவியிலுள்ள எந்த அரசாங்கத்தோடு பேசினாலும் மலைநாட்டு தமிழர்களின் நலன்களையும் முன்வைக்க வேண்டும் என்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  கோரிக்கையை சமஷ்டிக்கட்சி ஏற்றிருந்தது. இதனால் இரண்டு  கட்சிகளுக்குமிடையில் அரசியல் ரீதியான நெருக்கம் ஏற்பட்டிருந்தது.</p>

<p>ராமானுஜம், செல்வாநாயகத்தை தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்திக்கு வந்து எதிர்பாராத ஒரு விருந்தாளியை சந்திக்குமாறு வற்புறுத்தினார். அங்கு தொண்டமானுடன் காத்துக்கொண்டிருந்தவர் டாக்டர் .பதியுதின். மஃமூத் ஆவார்.</p>

<p>பின்னர் திருமதி பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திலும் கல்வியமைச்சராக வந்த டாக்டர். மஃமூத் பண்டாரநாயக்கா குடும்பத்துக்கு மிக நெருக்கமாகவிருந்தார். சிறிமாவை முழுதாக அரசியலில் ஈடுபட வைத்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.</p>

<p>பண்டா - செல்வா ஒப்பந்தம்</p>

<p>சமஷ்டி கட்சி, ஐ.தே.கவுக்கு. ஆதரவு வழங்காதுவிடின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பண்டா- செல்வா ஒப்பந்தத்தை அழுலுக்கு கொண்டுவரும் எனவும், நிலம், குடியேற்றம் ஆகியவை தொடர்பில் இன்னும் கூடிய அதிகாரம் கொண்ட பிராந்திய சபைகளை அமைக்க தயாராக இருக்கின்றதெனவும் டாக்டர். மஃமூத் செல்வநாயகத்திடம் கூறினார்.</p>

<p>நிர்வாகம் மற்றும் சட்டத்துறைகளில் தமிழுக்கு நியாயமான இடத்தை வழங்கும் முற்போக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். பண்டா செல்வா ஒப்பந்தத்தை சமஷ்டிக் கட்சிக்கு ஐ.தே.கவினால் அமுலாக்க முடியாது என மஃமூத், சாதுரியமாக பேசினார்.</p>

<p>எனவே, டட்லி சேனநாயக்காவுடன் பேசும்போது, பண்டா – செல்வா ஒப்பந்தம் கிடைக்கவுள்ளது என்ற தைரியத்துடன் செல்வநாயகம் காணப்பட்டார்.</p>

<p>பேச்சுவார்த்தை தொடங்க முன்னரே, டட்லி சேனாநாயக்கா, தேசாதிபதிக்கு சமஷ்டிக் கட்சியின் ஆதரவு கிடைக்கவுள்ளதாக அறிவித்ததாக பத்திரிகைகளில் வந்த செய்திகளால் சமஷ்டிக் கட்சி எரிச்சலடைந்து இருந்தது.</p>

<p>டட்லி சேனநாயக்கவுடன் பேசும்போது சமஷ்டிக் கட்சியின் தலைவர் பரந்தளவில் நான்கு கோரிக்கைகளை வாய்மொழியாக முன்வைத்தார். காணி, குடியேற்றம் ஆகிய விடயங்களில் அதிகாரம் கொண்ட, பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் முன் மொழியப்பட்டிருந்த பிராந்திய சபைகள் இவற்றில் முதலாவது ஆகும்.</p>

<p>நிர்வாக மற்றும் நீதிமன்ற  மொழியாக தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்குவது இரண்டாவது ஆகும்.</p>

<p>மூன்றாவது கோரிக்கை, 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க இலங்கை பிரஜாவுரிமை சட்டத்தை திருத்தி  இதன் மூலம் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட, வாக்குரிமை பறிக்கப்பட்ட மலைநாட்டுத் தமிழர்களை பிரஜைகளாக பதியும் நடவடிக்கையை விரைவுபடுத்தலாகும்.</p>

<p>ஆறு நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் மலை நாட்டு தமிழர்களாக இருக்க வேண்டும் என்பது நாலாவது கோரிக்கையாகும். </p>

<p>தேவையேற்படின் கோரிக்கைகளில் சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள சமஷ்டிக் கட்சி தயாராக இருப்பதாக செல்வநாயகம், டி.எஸ்.சேனநாயக்கவிடம் கூறினார்.</p>

<p>தமிழர்கள்  அனுபவித்த துயரங்களையும் போக்குவதற்கு டி.எஸ்;.சேனநாயக்க நேர்மையாக முயற்சிகளை மேற்கொள்வாராயின் தனது கட்சி ஐ.தே.க.வை ஆதரிக்கும் என செல்வநாயகம், டி.எஸ்.சேனநாயக்கவிடம் தெரிவித்தார்.</p>

<p>எந்த கோரிக்கைகளில், செல்வநாயகம் விட்டுக் கொடுக்க தயாராக உள்ளார் என டி.எஸ். சேனநாயக்க கேட்காமலே கூட்டம் முடிந்தது. அடுத்த கூட்டம் மார்ச் 26 இல் நடைபெறுமென தீர்மானிக்கப்பட்டது.</p>

<p>மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரைந்து செயற்பட்டு டட்லியை ஓரங்கட்டியது. </p>

<p>மார்ச் 23 இல்  செல்வநாயகத்துடன் பேச ஒரு இளைஞன் வந்திருந்தார். இவர்  பண்டாரநாயக்கவின் மருமகனும் தொம்பே நாடாளுமன்ற உறுப்பினருடான பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்க ஆவார்.</p>

<p>அதிவிவேகமான இந்த இளம் வழக்குரைஞர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வளர்ந்துவரும் நட்சத்திரமாக திகழ்ந்தவர். உயர்நீதிமன்றத்தின் நீதியரசரான, பீலிக்ஸின் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயக்கதின் நண்பராவார்.</p>

<p>1957 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் செல்வநாயகமும் ஒப்புக்கொண்ட விடயங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடைமுறைப்படுத்தும் என பீலிக்ஸ் செல்வநாயகத்துக்கு உறுதியளித்தார். </p>

<p>பண்டா-செல்வா ஒப்பந்தம் முழுமையாக அமுலாகும், பிராந்திய சபைகள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. சிம்மாசன பிரசங்கத்தின் போது இது பற்றி கொள்கைப்பிரகடனம் செய்யப்படும் என பீலிக்ஸ் செல்வநாயகத்திடம் கூறினார்.</p>

<p>மார்ச் 26 இல் சேனநாயக்க, செல்வநாயகத்துடன் பேசும் போது, சமஷ்டிக் கட்சியின் கோரிக்கைகளை வழங்குவதில் தனக்குள்ள கஷ்டங்களைப் பற்றி கூறினார். இயலுமாயின் கோரிக்கைகளை குறைக்குமாறு டட்லி, செல்வநாயகத்திடம் கூறினார்.</p>

<p>சிங்கள, தமிழ் மொழிகளின் சம அந்தஸ்துக் கோரிக்கைகையை கைவிடத் தயாரென செல்வநாயகம் கூறினார். பதிலாக வடக்கு, கிழக்கில் உத்தியோக மொழியாக தமிழை பயன்படுத்தும் ஏற்பாட்டுடன், நிர்வாக, சட்ட துறைகளில் தமிழ் மொழியின் நியாயமான பிரயோகத்தை ஏற்பதாக கூறினார்.</p>

<p>நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாக 4 தோட்டத்துறை தமிழர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலாக, ஒரு உறுப்பினரை நியமித்தால் போதும் என சமஷ்டிக் கட்சி கூறியது.</p>

<p>பிராந்திய சபைகள், குடியுரிமை சட்டம் என்ற விடயங்களில் விட்டுக் கொடுக்க முடியாது என சமஷ்டிக் கட்சி கூறியது. சேனநாயக்க இறுதியான கோரிக்கைளை எழுத்து வடிவில் தரும்படி கேட்டுக் கொண்டார். அன்றே அது செய்யப்பட்டது.</p>

<p>மார்ச் 27 காலை டட்லி சேனாநாயக்க செல்வநாயகத்துடன் தொடர்புக்; கொண்டு ஐ.தே.க வேட்பாளரை சபாநாயகராக தெரிவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டார். எதிர்க்கட்சி  வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க சம்மதித்து விட்டதால், இது முடியாதது என செல்வநாயகம் மறுத்துவிட்டார்.</p>

<p>சபாநாயகர் தெரிவில் ஐ.தே.க. வின் தெரிவான சேர். அல்பேர்ட் பீரிஸை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் ரி.ரீ. சுபசிங்க தோற்கடித்தார்.</p>

<p>சேனாநாயக்க மார்ச் 27 மாலை மீண்டும் செல்வநாயகத்தை சந்தித்தார்.</p>

<p>பிரிவினை</p>

<p>பிரிவினைக்கான முதல்படி என ஐ.தே.க. கடுமையாக எதிர்த்ததனால். பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட பிராந்திய சபைகளை அமைக்க தன்னால் முடியாதென சேனாநாயக்க அப்போது வெளிப்படையாக பேசினார்.</p>

<p>பதிலாக, தன்னை நம்புமாறு சமஷ்டிக் கட்சியை கேட்டுக்கொண்டார். தான் தமிழர்களுக்கு எதிராக செயற்படமாட்டாரென்றும் உறுதியளித்தார். அவர் சமஷ்டிக் கட்சிக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவும் முன்வந்தார். </p>

<p>செல்வநாயகம் அமைச்சு பதவிகளை ஏற்க மறுத்தார். அவர் பேச்சுவார்த்தையிலிருந்து விலகி கொண்டார். பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது. வெளிப்படையாக தெரிந்தது.</p>

<p>ஆயினும், கண்ணியமான அரசியல்வாதியாகிய டட்லி சேனநாயக்காவை நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டும் என கொழும்பு வாழ் தமிழர்கள், சமஷ்டிக் கட்சி மீது பொதுவிலும், செல்வநாயகத்தின் மீது குறிப்பாகவும் பெரும் அழுத்தத்தை பிரயோகித்தனர்.</p>

<p>சமஷ்டிக் கட்சி இந்த அழுத்தங்களை உறுதியாக எதிர்த்து நின்றது. </p>

<p>எற்கெனவே கட்சி, சில  விடயங்களி;ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருந்தமையே சமஷ்டிக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணமாக இருந்தது. </p>

<p>செல்வாவுக்கும் பீலிக்ஸுக்குமிடையில் நடந்த முதல்கட்ட 'பேச்சு'க்கு புறம்பாக, சி.பி டி. சில்வா, மைத்திரிபால சேனநாயக்கா, ஏ.பி.ஜயசூரிய மற்றும் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா ஆகியோர் அடங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோக பூர்வ குழு ஒன்று செல்வநாயகம் தலைமையிலான குழுவை சந்தித்தது.</p>

<p>ஐக்கிய தேசியக் கட்சியிடம் முன்வைத்த அதே கோரிக்கைகளையே, செல்வநாயகம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமும் முன்வைத்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடக்கத்திலேயே சமஷ்டி கட்சியுடன் ஒப்பந்தம் எதையும் செய்யாது என கூறியது.</p>

<p>பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு காட்டப்பட்ட சிங்கள எதிர்ப்பின் பின்னணியில் இன்னொரு ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக செய்துகொள்வது நடைமுறைக்கு பொருந்தாது.  எதிர்பார்க்கப்படுவது போல ஐ.தே.க அரசாங்கம் விழும்போது அரசாங்கம் அமைக்குமாறு அழைக்கப்பட்டால் தனது சிம்மாசன பிரசங்கத்தில், சமஷ்டி கட்சி எழுப்பிய பிரச்சினைகள் மீது கொள்கை பிரகடனம் ஒன்றை செய்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறியது.</p>

<p>மாவட்ட சபைகள் </p>

<p>முன்வைக்கப்பட்ட நான்கு கோரிக்கைகள்  தொடர்பில், பீலிக்ஸ் பண்டாரநாயக்காவினால் சொல்லப்பட்ட  நிலைப்பாட்டிலிருந்து சி.பி.டி. சில்வாவினால் தலைமை தாங்கப்பட்ட தூதுக் குழு சற்று வித்தியாசமான நிலைப்பாட்டிலிருந்தது.</p>

<p>வடக்கு, கிழக்குக்கான பிராந்திய சபைகளை நிறுவுவதை அதுவும் எதிர்ப்பதாக வெளிப்படையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறியது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா ஒரு கட்டத்தில் இதை ஏற்றுக் கொண்டிருந்த போதும், பின்னர் நடந்தவை அந்த எண்ணக்கருவை சிதைத்துவிட்டன.</p>

<p>வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு என தனியான ஏற்பாடு சாத்தியமில்லை, அது சிங்கள எதிர்ப்புக்கு வழிவகுக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறியது.</p>

<p>இதற்கு பதிலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்துக்குமான 'மாவட்டசபை'யை நிறுவுவதாக கூறியது. முன்னர் கூறப்பட்ட பிராந்திய சபைகளுக்கு இருந்த அதிகாரங்கள், கடமைகள் இந்த மாவட்ட சபைகளுக்கு இருக்குமென கூறப்பட்டது.</p>

<p>மொழிப் பிரச்சினை விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழுக்கு சம அந்தஸ்து வழங்க தயாராக இருக்கவில்லை. நிர்வாக தேவைகளுக்கும் வடக்கு கிழக்கு நீதிமன்றங்களிலும் தமிழை பயன்படுத்தும் ஏற்பாடுகளை அமுலாக்க அது தயாராக இருந்தது. வடக்கு, கிழக்குக்கு அப்பால், தமிழின் நியாயமான பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்யப்படும்.</p>

<p>எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவால் முன்வைக்கப்பட்டு ஆக்ஸ்ட் 1958 இல் நாடாளுமன்றத்தால் ஏற்கப்பட்ட தமிழ் மொழி (விசேட ஏற்பாடு) சட்டம் இதற்கான வழிக்காட்டலை வழங்கும்</p>

<p>ஆயினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரஜாவுரிமை சட்டத்தில் எந்த திருத்தமும்  செய்யமுடியாது என கூறியது.  இந்த விடயத்தில் அது நெகிழ்வுத்தன்மையை காட்டவில்லை. அது இரண்டு தோட்டத்துறை தமிழர்களை நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாக்க சம்மதித்தது.</p>

<p>இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொண்டமான் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்றும் மலைநாட்டு தமிழ் மக்கள் பிரச்சினை அவருடன் பேசி தீர்க்கப்படுமெனவும் ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி கூறியது.</p>

<p><br />
சிம்மாசன பிரசங்கம்</p>

<p>இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஏற்றுக்கொண்ட விடயங்களுக்கு சிம்மாசனப் பிரசங்கத்தின் போது கொள்கைப் பிரகடனம் வழியாக தூல வடிவம் கொடுக்கப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறியது. ஆயினும் எழுத்து வடிவிலான ஒப்பந்தம் இருக்காது. </p>

<p>தனது நிலைப்பாட்டை ஒழிவு மறைவின்றி வெளிப்படுத்தியப்பின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதிமொழியை நிறைவேற்ற தவறினால், சமஷ்டி கட்சியால் சிம்மாசன பிரசங்கத்தின் பின் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க முடியும் என கூறியது.</p>

<p>சமஷ்டி கட்சியின் ஆதரவு இல்லாதுவிடின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் வீழ்ச்சி காணும். எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் வாக்குறுதியை மீறமுடியாது எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு சில விடயங்களில் விட்டுக்கொடுப்பு இல்லாததாக இருந்தபோதும் சமஷ்டிக் கட்சி அதற்கு ஆதரவு வழங்கவும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக வாக்களிக்கவும் தீர்மானித்தது.</p>

<p>எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுடன் அடையப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் அமுல்படுத்தப்படும் என கூறப்பட்டமை மீற முடியாத வகையில் ஆசை காட்டியது.</p>

<p>பண்டா-செல்வா ஒப்பந்தத்தை முறியடிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி வகித்த பாத்திரம், அதன்மீது வெறுப்பை உருவாக்கியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் கதை முடிந்து போயிற்று. நாடாளுமன்றம் வைபவரீதியாக ஏப்ரில் 19 இல் திறந்து வைக்கப்பட்டது. சிம்மாசன பிரசங்கம் மீதான விவாதம் ஏப்ரில் 20 இல் தொடங்கியது. விவாதத்தின் இறுதி நாளன்று செல்வநாயகம் ஐக்கிய தேசிய கட்சியை கடுமையாக சாடினார்.</p>

<p>தமிழ் பேசும் மக்களின் எதிரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்ல, ஐக்கிய தேசிய கட்சிதான். பண்டா – செல்வா ஒப்பந்தத்தை பண்டாரநாயக்காவை கிழிக்க செய்தது, ஐக்கிய தேசியக் கட்சி பிக்குகள் தான்;' என செல்வநாயகம் குற்றஞ் சுமத்தினார்.</p>

<p>ஏப்ரில் 22 இல் வாக்கெடுப்பு நடைபெற்றபோது சமஷ்டிக்கட்சி எதிர்க்கட்சியோடு சேர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தது. சிம்மாசன பிரசங்கம் 25 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.</p>

<p>அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை நடத்தியப் பின் டட்லி சேனாநாயக்க நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துமாறு தேசாதிபதிக்கு சிபாரிசு செய்ததார்.</p>

<p>சேர்.ஒலிவர் சகல அரசியல் கட்சிகளினதும் தலைவர்களை அழைத்து தேர்தலை நடத்துவதற்கு பதிலாக மாற்று அரசாங்கம் அமைப்பதைப் பற்றி, தான் ஆராய்வதாக கூறினார். இப்போது 46 இடங்களை வைத்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டியிருந்தது.</p>

<p>சி.பி.டி.சில்வா</p>

<p>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான சி.பி.டி.சில்வா தேசாதிபதியை  சந்தித்து தனக்கு அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பை தரும்படி வலியுறுத்தினார். அவர் தனக்கு தேவையான பலம் உண்டு என்றும் சமஷ்டி கட்சியின் ஆதரவு நிச்சயம் தனக்கு கிடைக்கும் என்றும் கூறினார்.</p>

<p>இதன் பின், தேசாதிபதி செல்வநாயகத்தை இராணி மாளிகைக்கு அழைத்தார். உண்மையில் சமஷ்டிக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளதா என்பதை நிச்சயப்படுத்துவதே அவரின் நோக்கமாக இருந்தது. தனது அல்பிரட் ஹவுஸ்  கார்டன்லில் இருந்த வீட்டிலிருந்து கோட்டைக்கு செல்லும் வழியில் செல்வநாயகம் மஹனுகே கார்டன்ஸில் இருந்த பீலிக்ஸின் வீட்டுக்கு சென்றார். அங்கு சி.பி.டி சில்வாவும் ஏ.பி. ஜயசூரியாவும் காத்திருந்தனர்.</p>

<p>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் இன்னும் வலுவுடையனவா என செல்வநாயகம் மீண்டும் கேட்டார். விடை உடன்பாடானதாக இருந்தது. அதன் பின் செல்வநாயகம், பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படை விடயங்கள் வாக்கு தரப்பட்டதைப் போல அமுல்படுத்தப்படுமா எனக் கேட்டார். மீண்டும் உடன்பாடான விடையே கிடைத்தது.</p>

<p>இப்போது செல்வநாயகம் தன்னோடு சென்.தோமஸ் கல்லூரியில் படித்தவரும், பிரதமராக வரக் கூடியவருமான சிபி.டி.சில்வாவை பார்த்து 'இந்த உறுதி மொழிகளை நீங்கள் அமுலாக்;குவீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?' என முகத்துக்கு நேரே கேட்டார். </p>

<p>இதற்கு சிபி.டி.சில்வா, தனக்கே உரித்தான பாணியில் விடையளித்தார். </p>

<p>'நான் பேச்சுவார்த்தையில் இறுக்கமாகத்தான் இருப்பேன். ஆனால் ஒன்றை சொல்லிவிட்டால் அதை செய்வேன்' - சி.பி இவ்வாறு குறிப்பிட்டார்.</p>

<p>செல்வநாயகம் திருப்தியோடு இராணி மாளிகை நோக்கி சென்றார். சி.பி.டி.சில்வா விதி நல்லது செய்யும் என காத்திருந்தார். பாவம் !  விதியின் முடிவு வேறு வழியாக இருந்தது.</p>

<p>சேர் ஒலிவர் குணதிலக செல்வநாயகத்தை வரவேற்றார். தான் சி.பி.டி. சில்வாவினால் மாற்று அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியுமா என நிச்சியப்படுத்த முயற்சிப்பதாக கூறிய தேசாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடம் தேவையான பெரும்பான்மை இல்லாதுவிடின் நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாக கூறினார்.</p>

<p>நிபந்தனையற்ற ஆதரவு</p>

<p>இந்த வகையில் சமஷ்டிக் கட்சியின் ஆதரவு முக்கியம் என கூறிய தேசாதிபதி, சமஷ்டிக் கட்சியின் தலைவரிடம், குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்காவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான மாற்று அரசாங்கத்துக்கு சமஷ்டி கட்சி நிபந்தனையற்ற ஆதரவை வழங்குமா என நேரடியாகவே கேட்டார்.</p>

<p>சேர் ஒலிவர் ' நிபந்தனையற்ற' ஆதரவு என்பதை அழுத்தியதிற்கு ஒரு காரணம் இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சமஷ்டி கட்சிக்கு வழங்கிய உறுதி மொழிகளை கௌரவிக்காதவிடத்து சமஷ்டி கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டியிருக்கும்  என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே அவர் செல்வநாயகத்திடமிருந்து ஒரு உறுதி மொழியை பெற்று புதிய அரசாங்கத்தின் உறுதித் தன்மை பற்றி உறுபடுத்திக் கொள்ள விரும்பினார். </p>

<p>ஆனால் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டாம் என செல்வநாயகத்தின் சட்ட மூளை தடை போட்டது.  </p>

<p>நிபந்தனையற்ற  ஆதரவு வழங்குவதாக கூறினால் தானும், கட்சியும் இரண்டு வருடங்களுக்கு முடக்கப்பட்டு விடுவார்கள் என்பதை செல்வநாயகம் உணர்ந்து கொண்டார். நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்குறுதியை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அரசியல் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த தர்மசங்கடமான நிலையிலிருந்து விடுபடும் முறையில்; செல்வநாயகம் கெட்டித்தனமான பதிலளித்தார்.</p>

<p>ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் சமஷ்டிக்கட்சி ஒரு புரிந்துணர்வுக்கு வந்துள்ளது. இரண்டு வருடமல்ல முழுப்பதவிக் காலத்துக்குமே தனது கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கத்துக்கு  ஆதரவை வழங்கும்' என்றார் செல்வநாயகம். </p>

<p>இந்த பதிலினால், நிபந்தனையற்ற ஆதரவு தொடர்பான கேள்விக்கு நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்துக் கொண்டார். ஆனால் அரசியல் மதிநுட்பம் வாய்ந்த சேர். ஒலிவர் செல்வநாயகத்தின் தயக்கத்தில் அமைக்கவுள்ள அரசாங்கத்தின் உறுதியின்மையை கண்டுகொண்டார். </p>

<p>செல்வநாயகத்தின் பதிலால் தான் திருப்தியடையவில்லை எனக் கூறிய தேசாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தார்.</p>

<p><br />
தேசாதிபதி </p>

<p>தேசாதிபதியின் நடவடிக்கைக்கு அவர் ஐ.தே.க.வின் பால் அவர் கொண்டிருந்த பக்கச் சார்பே காரணம் என்றும் தேசாதிபதி இதற்கு செல்வநாயகத்தை சாட்டாக பயன்படுத்தினார் என்றும் பரவலாக நம்பப்பட்டது.</p>

<p>ஆனால் ஒலிவரின் நடத்தைக்கு மோசமான ஒரு விளக்கமும் உண்டு. </p>

<p>செல்வநாயகத்தின் மகளின் கணவனும் அரசியல் விஞ்ஞானியுமான ஏ.ஜே.வில்சன், உண்மைக் காரணம் சாதி என்றார். சி.பி.டி. சில்வா சலகம சாதியை சேர்ந்தவர். ' ஒரு சலகம சாதியை சேர்ந்த ஒருவரை நான் எப்படி நியமிப்பது'? என என்.எம். பெரேராவிடம் சேர் ஒலிவர் கூறியதாக வில்சன் கூறுகிறார்.</p>

<p>தேசாதிபதியின் நடத்தைக்கான காரணம் எதுவாக இருந்தாலும், நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. சமஷ்டிக் கட்சி உட்பட சகல எதிர்க்கட்சிகளும் சேர் ஒலிவர் குணதிலகவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை விமர்சித்து கடிதங்களையும் எழுதின. ஆனால் புதிய தேர்தல் யூலை 60 இல் நடத்தப்பட்டது.</p>

<p>தேர்தல் பிரசாரம் தொடங்கிய பின் சீரமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மார்ச்சில் நடந்த தேர்தலிலும் பார்க்க கூடிய இடத்தை பெறும் என்று தெரிந்தது.</p>

<p>அழுகின்ற விதவை</p>

<p>சிறிமா பண்டாரநாயக்காவின் பிரசாரமே இதற்கு பிரதானமான காரணமாக இருந்தது. ஊடகங்களின் சில பிரிவுகளால் 'அழுகின்ற விதவை' என கிண்டலாக அழைக்கப்பட்ட திருமதி. பண்டாரநாயக்கவின் கூட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் திரண்டனர். </p>

<p>பண்டாரநாயக்காவின் மரணத்தின் பின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டுப்போன பல தலைவர்களும், செல்வாக்குள்ள பிரிவினரும் கட்சிக்கு திரும்பினர். மகஜன எக்சத் பெரமுன, எல்.பீ.பீ. ஆகிய கட்சிகளுக்கு வாக்களித்த ஆதரவாளர்களும ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு திரும்பி வந்த கொண்டிருந்தனர்.</p>

<p>ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சமசமாஜிஸ்ட், கம்யூனிஸ்ட கட்சிகளுடன் போட்டி தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதைவிட, சமஷ்டிக் கட்சியுடன் எய்தப்பட்ட எழுத்துவடிவில் இல்லாத புரிந்துணர்வு, சமஷ்டி கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  மறைவான தேர்தல் கூட்டாளி என கருதக் கூடிய ஒரு நிலைமைக்கு இட்டுச் சென்றது.</p>

<p>'1960 ஜுலை தேர்தலும் தொங்கு நாடாளுமன்றத்திலேயே முடியுமெனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் அதி கூடிய ஆசனங்களை எடுக்கும் என்றும் கருதப்பட்டது. சமஷ்டிக் கட்சியின் ஆதரவு, அரசாங்கம் அமைப்பதற்கு தீர்க்கமான காரணியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. </p>

<p>'ஜூலை தேர்தலில் வென்ற பின் முன்னர் தரப்பட்ட வாக்குறுதிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றும் என சமஷ்டி கட்சி எதிர்பார்த்தது. </p>

<p>'செல்வநாயகம், திருமதி பண்டாரநாயக்காவை பகிரங்கப்படுத்தப்படாத கூட்டமொன்றில் சந்தித்தார். பீலிக்ஸ் டயசும் பிரசன்னமாக இருந்த இந்தக் கூட்டத்தில் சிறிமா, பண்டாரநாயக்க, சிபிடி சில்வா தலைமை தாங்கிய குழுவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய நடப்பதாக உறுதியளித்தார். இதை நம்பிய சமஷ்டி கட்சி ; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பின் சென்றது. </p>

<p>'செல்வநாயகம், இவ்வாறு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து வாக்குறுதியை பெற்றுக்கொண்டதாலும் ஒரு முக்கிய விடயத்தில் உத்தரவாதத்தை பெறுவதில் சமஷ்டி கட்சி தவறிவிட்டது. </p>

<p>கட்டுப்படுதல்</p>

<p>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,  தேர்தலில் போதிய பெரும்பான்மை கிடைத்தது. சமஷ்டி கட்சியின் ஆதரவு தேவைப்படாது காணப்படும் நிலையிலும் வாக்குறுதிக்கு கட்டுப்பட்டு நடக்கும் என்னும் உறுதி;மொழியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து சமஷ்டி கட்சி கோரவில்லை என செல்வநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பேராசிரியர் வில்சன் சுட்டிக்காட்டியுள்ளார். </p>

<p>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் அது தான் வழங்கிய வாக்குறுதிக்கு கட்டுப்பட்டு நடக்குமென்றே செல்வநாயகம் விளங்கிக்கொண்டார். ஆனால் இது செல்வநாயகம் கொண்டிருந்த விளக்கம் மட்டுமே என அவரது மகளின் கணவனான வில்சன் கூறுகிறார். </p>

<p>இது தொடர்பில் தெளிவான உத்தரவாதம் கேட்கப்படவுமில்லை, பெறப்படமில்லை சமஷ்டி கட்சியின் இந்த தவறு பற்றி கூறுவதாயின் குறைந்த பட்சம் இது அரசியல் அப்பாவி;த்தனத்தின் பாற்பட்டது எனலாம். </p>

<p>இவ்வாறு உறுதியான உத்தரவாதம் இல்லாதபோதும் சமஷ்டிக் கட்சி பலத்த நம்பிக்கையோடு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்தது. சமஷ்டிக் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களிக்குமாறு சமஷ்டி கட்சி தமிழ் வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டது. </p>

<p>சமஷ்டிக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்துள்ளதாகவும், பண்டா-செல்வா  ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படுமெனவும் சமஷ்டிக் கட்சி தனது அரசியல் கூட்டங்களில் கூறியது. இதை வைத்துக்கொண்டு ஐ.தே.க , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – சமஷ்டி கட்சிக் கூட்டுக்கு எதிராக நச்சுத் தனமான பிரசாரத்தை தொடக்கியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமஷ்டி கட்சியுடன் சேர்ந்து நாட்டை பிரிக்கப் போவதாக ஐ.தே.க. குற்றஞ் சாட்டியது.</p>

<p>இந்த பிரசாரத்தின் உச்சமாக, இலங்கைத் தீவை ஒரு பெரிய 'கேக்' ஆக காட்டும் சுவரொட்டிகள் நாடெங்கும் ஒட்டப்பட்டன. திருமதி பண்டாரநாயக்க ' கேக்' கின் வடக்கு-கிழக்கை கத்தியால் வெட்டிப் பிரிப்பது போலவும் சி.பி.டி.சில்வா அதை பார்த்து கொண்டிருப்பதாகவும் செல்வநாயகம் தனது பங்கை வாங்க தட்டை நீட்டியபடி நிற்க அவர் பின்னால் ஈ.எம்.வி. நாகநாதன் நிற்பது போலவும் அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது.</p>

<p>இரகசிய உறவு</p>

<p>ஐ.தே.க.வின் இந்த பிரசாரத்தின் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரிகை அடைந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சமஷ்டிக் கட்சிகளிடையே உடன்பாடு எதுவுமில்லை என அறிக்கை விடுமாறு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க செல்வநாயகத்திடம் வலியுறுத்தினார்.</p>

<p>செல்வநாயகம் தயக்கத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் சமஷ்டிக் கட்சி, உடன்பாடு ஏதுமின்றியே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிப்பாதாக செல்வநாயகம் கூறினார். அவர் ஊடகங்களுடானான நேர்முகங்களிலும் இதை மீள வலியுறுத்தினார். இது, சமஷ்டிக் கட்சியின் பிரதான போட்டியாளரான அகில இலங்கை தமிழ் காங்கிரஸுற்கு சமஷ்டி கட்சியை தாக்குவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தது. தமிழ் காங்கிரஸின் தலைவரான ஜீ.ஜீ. பொன்னம்பலம், ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்காமல், எந்த உத்தரவாதமும் இன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிப்பதனால் சமஷ்டி கட்சி  ஒரு பொன்னான சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளதாக கண்டித்தார்.</p>

<p>இவ்வாறான பாதகமான நிலைமையிலும் தமிழ் பெரும்பான்மையுள்ள தொகுதிகளில் சமஷ்டி கட்சி வெற்றி பெற்றது. மார்ச் மாதத்தில் நடந்த தேர்தலில் வென்ற 15 ஆசனங்களையும் அது தக்க வைத்திருந்தது. அத்தோடு முஸ்லிம் பெரும்பான்மை தொகுதியான கல்முனையில் 'வீடு' சின்னத்தில் போட்டியிட்ட எம்.சி. அஹமட்டும் வெற்றி பெற்றிருந்தார்.</p>

<p>157 ஆசனங்களில் சமஷ்டிக் கட்சி 16 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 30 இடங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 75 ஆசனங்களையும்  பெற்றன. </p>

<p>பெரும்பான்மை</p>

<p>நியமிக்கப்பட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், சில சுயேட்சை உறுப்பினர்களுடனும் சேர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சொற்பமான ஆனால் உறுதியான பெரும்பான்மை காணப்பட்டது. முக்கியமாக அது சமஷ்டி கட்சியின் ஆதரவில் தங்கியிருக்கவில்லை. திருமதி பண்டாரநாயக்கா பிரதமாராகி வரலாறு படைத்தார்.</p>

<p>ஆனால், சமஷ்டிக் கட்சிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சமஷ்டி கட்சியின் ஆதரவு தேவையில்லாத நிலையிலும் எழுதப்படாத புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டுப்படும் என்ற அப்பாவித் தனமான எதிர்பார்ப்பு அடித்து நொறுக்கபட்டது.</p>

<p>சமஷ்டி கட்சியுடன் எந்த விதமாக பேச்சும் இல்லாமல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தை அமைத்துக் கொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்த சமஷ்டிக் கட்சி தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டன.</p>

<p>புதிய அரசாங்கத்தின் சிம்மாசன பிரசங்கம் ஆக்ஸ்ட் 12 இல் இடம்பெற்ற போது சமஷ்டி கட்சி மகிழ்ச்சியடைந்தது. இந்த ஆரம்பக்கட்ட மகிழ்ச்சி, சிம்மாசன பிரசங்கத்தின் உள்ளடக்கம் வெளிவந்த போது கணப்பொழுதில் கலைந்து போயிற்று.</p>

<p>மாவட்ட சபைகள், அல்லது தமிழ் மொழி ஏற்பாடுகள் பற்றி சமஷ்டி கட்சிக்கு தேர்தலுக்கு முன் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பற்றி எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை. </p>

<p>மாறாக, ஜனவரி.1.1961 இலிருந்து ஒரே ஒரு அரசகரும மொழியாக சிங்களம் இருக்கும் என அரசாங்கம் அறிவித்தது. சிங்களம் மட்டுமே நீதிமன்ற மொழியாக இருக்கும் என்று அரசாங்கம் கூறியது. சமஷ்டிக் கட்சியை தாழ்த்தி பேசும் தமிழர்களிடையே சமஷ்டிக் கட்சி நகைப்புக்குரிய பொருளாகியது. சமஷ்டிக் கட்சி இரண்டாம் தரமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஏமாற்றப்பட்டு விட்டதாக பொது அபிப்பிராயம் காணப்பட்டது. டட்லியை ஆதரிக்காமல் விட்டமை சமஷ்டிக் கட்சி செய்த மோசமான பிழை என குற்றஞ் சாட்டப்பட்டது.</p>

<p>மறு புறத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் நிர்வாகத்தை முழு அளவில் சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டது. </p>

<p>மோதல்</p>

<p>இது தமிழ் மக்களை மேலும் பலவீனப்படுத்தியது. தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் சமஷ்டி கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டும் என்ற அழுத்தம் காணப்பட்டது. </p>

<p>அரசியல் மோதல் களம் தயாராகி வந்தது. மார்ச் தேர்தலுக்கும் ஜுலை தேர்தலுக்கும் இடையில் உண்டான நிகழ்வுகளே மோதலுக்கான அத்திவாரமிட்டன. நடந்த நிகழ்வுகளும் விசை கொடுக்க அதன் தர்க்க ரீதியான முடிவாக பெப்ரவரி 20, 1961 இல் சத்தியாக்கிரக இயக்கம் தொடங்கிற்று.</p>

<p>(தொடரும்)</p>

<p>தமிழில்: ந.கிருஷ்ணராசா</p>]]>
    </content>
</entry>
<entry>
    <title>சுவிட்ஸர்லாந்தில் புலிகள் மீதான கடும் நடவடிக்கையின் தாற்பரியம்</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2011/04/post_296.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=361" title="சுவிட்ஸர்லாந்தில் புலிகள் மீதான கடும் நடவடிக்கையின் தாற்பரியம்" />
    <id>tag:ootru.com,2011://1.361</id>
    
    <published>2011-04-24T21:03:08Z</published>
    <updated>2011-04-25T04:05:21Z</updated>
    
    <summary>(டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது) ஜனவரி 11 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகள் மீது சுவிஸ் சமஷ்டி பொலிஸார் கடும் நடவடிக்கை எடுத்ததும், அதன்போது 10 உயர்மட்ட புலி செயற்பாட்டாளர்களை பொலிஸார் தமது காவலுக்குள் கொண்டு வந்ததும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்....</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><em>(டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)</em></p>

<p>ஜனவரி 11 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகள் மீது சுவிஸ் சமஷ்டி பொலிஸார் கடும் நடவடிக்கை எடுத்ததும், அதன்போது 10 உயர்மட்ட புலி செயற்பாட்டாளர்களை பொலிஸார் தமது காவலுக்குள் கொண்டு வந்ததும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.</p>

<p>ஹெல்வீச்சியா அல்லது சுவிட்ஸர்லாந்து, இலங்கையில் பிறந்த 40000 - 42000 தமிழர்களின் வதிவிடமாக உள்ளது. கனடா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் புலம் பெயர்ந்தோரைவிட இந்த எண்ணிக்கை குறைவானது ஆகும்.   </p>

<p>பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட எந்தவொரு மேற்கத்தைய நாட்டைவிடவும், சுவிட்ஸர்லாந்து தமிழர்கள் புலிகளின் யுத்த நடவடிக்கைகளுக்கு வழங்கிய பங்களிப்பு விகிதாசார ரீதியில் அதிகமானதாகும்.</p>]]>
        <![CDATA[<p>புலிகளின் கோட்டை</p>

<p>அண்மைக் காலத்தில் சுவிஸ் வாழ் தமிழர்கள் புலிகளின் இலட்சியத்திற்காக அதிகளவான பணவலு, மனிதவலு, சிரமவலு, என்பவற்றை வழங்கியுள்ளனர். இவ்வாறான பண்பு ரீதியான பங்களிப்பு சுவிட்ஸர்லாந்தை ஐரோப்பாவில் உள்ள புலிகளின் கோட்டை என கருத வைத்தது.</p>

<p>இந்த பின்னணியில் பார்க்கும்போது சுவிஸ் அதிகாரிகளின் அண்மைக்கால நடவடிக்கை, சுவிடஸர்லாந்தில் புலிகளின் எதிர்காலம் கெட்ட காலமாக அமையப் போகின்றது  என்பதை கட்டியம் கூறுவதாக உள்ளது. புலிச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சாட்சியமளிக்க பல தமிழர்கள் முன்வந்துள்ளது போல தோன்றுவதால் புலிப் பப்படம்  சுவிட்சர்லாந்தில் நொறுங்கிப் போவதாக தெரிகின்றது.</p>

<p>சுவிட்ஸர்லாந்தில் புலிகளின் தற்போதைய தலைவர் விஜயரட்ணம் சிவனேசன் அல்லது ரகு அல்லது ரகுபதி, இவருக்கு முன் தலைவராக இருந்த செல்லையா குலராஜசேகரம் அல்லது குலம் மற்றும் சுவிட்ஸர்லாந்து புலி நிதிப்பொறுப்பாளர் செல்லையா ஜெயபாலன் அல்லது அப்துல்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குவர்.</p>

<p>சுவிஸ் அதிகாரிகள் முக்கிய புலிச் செயற்பாட்டாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுப்பதில் வெற்றி பெறுவார்களாயின், சுவிட்ஸர்லாந்தில் உள்ள புலிகளின் அமைப்பு நிச்சயம் பலவீனப்படும், அத்துடன் அங்குள்ள தமிழ் மக்கள் மீதான புலிகளின் பிடியும் தளரும்.</p>

<p>இவ்வாறான நீதி விசாரணை வெற்றி பெறுவதற்கு புலிகளால் பாதிக்கப்பட்ட சுவிஸ் வாழ் தமிழர்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமானது ஆகும். </p>

<p>இந்த முறை புலிச் செயற்பாட்டாளர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்பதற்காக பல தமிழர்கள் அதிகாரிகளுடன் உண்மையாகவே ஒத்துழைப்பதாக தெரிகிறது. முன்னைய சந்தர்ப்பங்களில் புலிகளுக்கு எதிராக சாட்சியமளிக்க தமிழர்கள் தயங்கினர். இந்த முறை இது வித்தியாசமாக உள்ளது.</p>

<p>இவ்வாறு பலர் புலிகளுக்கு எதிராக சாட்சியமளிக்க விரும்புவதை பற்றிய விசேட அம்சம், இவர்கள் புலிகளால் பாதிக்கப்பட்ட புலி ஆதரவாளர் அல்லாதவர்களாக இல்லாமல், புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக ஒரு காலத்தில் இருந்தவர்களாக இருப்பதுதான். புலியோடு சேர்ந்திருந்தவர்களே புலிகளுக்கு எதிராக செயற்பட வந்தமையால்  சுவிட்ஸர்லாந்து புலிக் குமிழி உடைந்து போயிற்று. </p>

<p>இவ்வாறு வழமைக்கு மாறாக நடப்பதற்கு புலிச் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளே காரணமாயின. நம்பிக்கைத் துரோகம் செய்யும் வகையில், புலிகளின் ஆட்கள் தமது ஆதரவாளரக்ளின் பெயரில் வங்கிக் கடனை பெற்று அந்த பணத்தை கையாடியதுடன் கடனையும் கட்டாமல்விட்டு விட்டார்கள்.</p>

<p>இவ்வாறு கடன் பெற்றுக் கொடுத்தவர்கள் இப்போது மிகவும் அந்தரமான ஆபத்தான நிலையில் உள்ளனர். கடன் கொடுத்த நிறுவனங்களும் சங்கடமான நிலையில் உள்ளன. இந்த நிலையில் புலிகளின் நம்பி;க்கைக்கு உரித்தாயிருந்த ஆதரவாளர்கள், அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட வேண்டிய நிலைக்கு ஆளாகியதுடன் பிரதான புலிச்செயற்பாட்டாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்கவும் சம்மதித்துள்ளளர். இது ஒழுங்காக நடைபெற்று புலியின் முக்கிய தலைவர்கள் மீது வெற்றிகரமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாயின் இதுவொரு முன்மாதிரியாக அமைந்து ஏனைய நாடுகளில் உள்ள புலிசார்பு புலம்பெயர்ந்தோர்கள் மீதும் தொடர் தாக்கத்தை முடுக்கிவிடலாம். </p>

<p>தாக்கங்கள்</p>

<p>சுவிட்ஸர்லாந்தில் புலிகள் மீதான நடவடிக்கைகளின் தார்ப்பரியங்களையும் தாக்கங்களையும் விளங்கிக்கொள்ள புலிகளின் நிதிசேகரிப்பு பொறிமுறையை விளங்கிக்கொள்ள வேண்டும். </p>

<p>இதில் 5 வகைகள் உள்ளன. இதில் முதலாவது நிலையியல் கட்டளை முறையாகும். இந்த முறையில் புலிகளின் மனப்பூர்வமான ஆதரவாளர்கள் தத்தம் நாடுகளில் உள்ள புலிகளின் முகப்பு அமைப்புகளுக்கு தமது வங்கியூடாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை பணத்தை தவறாது அனுப்பும் நிலையியல் கட்டளையொன்றை பிறப்பித்து இருப்பர். இது, ஒப்பீட்டளவில் குறைவான தொகையாக இருப்பினும், ஒழுங்காக கிடைக்கும் உத்தரவாதம் இருந்தது.</p>

<p>இதில் பலவந்தம் இருக்கவில்லை. ஏனெனில் இவ்வகையில் நிதி கொடுத்தோர் புலிகளின் உண்மையான ஆதரவாளர்களாக இருந்தனர். இவ்வகையில் கிடைத்த பணம் அந்தந்த நாட்டிலிருந்த முகப்பு நிறுவனங்களையும் புலி இயக்கத்தின்  கிளைகளையும் நடத்தப் பயன்பட்டது. இது இலங்கைக்கு அனுப்பப்படவோ அல்லது ஆயுதம் வாங்கவோ பயன்படவில்லை.</p>

<p>இரண்டாவது முறை 'ஆண்டுப் பொது நிதிசேகரிப்பு' ஆகும். இது வருடம் முழுவதும் செயற்படும் திட்டமாகும். இதில் புலிகளின் தீவிர ஆதரவாளர்களும், ஆதரவாளர் இல்லாதோரும் இலக்காக உள்ளனர். சில தவணைகளில் குறிப்பிட்ட தொகைப் பணத்தை செலுத்த வேண்டும்.</p>

<p>இதில் பணத்தை வாங்கவும், பங்களிப்பின் அளவை அதிகரிக்கவும், நெருக்குவாரம் பலவந்தம் என்பன பயன்படுத்தப்பட்டன. இலங்கையில் உள்ள குடும்ப அங்கத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கப்படும் என பயமுறுத்துவது இலகுவான வழியாக இருந்தது. தாமே விரும்பி நிதி கொடுத்தோரும் கணிசமாக காணப்பட்டனர்.</p>

<p>ஆரம்பத்தில் தொண்டர்களே நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் நிதி சேகரிப்போருக்கு தரகுப்பணம் கொடுக்கப்பட்டது. இந்த ஊக்குவிப்பு நிதி சேகரிப்பில் பெரும் அதிகரிப்புக்கு வழிகோரியது. அதேசமயம், தமது தரகுப்பணத்தை அதிகரித்துக் கொள்வதற்காக நிதிசேகரிப்பாளர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். பிரான்ஸில் எல்.ரீ.ரீ.ஈ. நிதி சேகரிப்போர் பாரிஸுக்கு அப்பால் ஒரு பண்ணையொன்றை வைத்திருந்தனர். இங்குதான் நிதிக்காக கடத்தப்பட்டவர்கள் நிதி செலுத்தும்வரை மறைத்து வைக்கப்பட்டனர்.</p>

<p>இவ்வகையில் சேகரிப்பட்ட நிதி மூன்று வழிகளில் செலவழிக்கப்பட்டது. இதில் ஒரு பகுதி இயக்கத்தை நடத்துவதற்காக வன்னிக்கு அனுப்பப்பட்டது. இன்னொரு பகுதி ஆயுதம் வாங்குவதற்குப் பயன்பட்டது. ஆகக் கூடுதலான பகுதி புலி இயக்கம் வெளிநாடுகளில் நடத்திக் கொண்டிருந்த வணிக நடவடிக்கைகளில் முதலீடு செய்யப்பட்டது.</p>

<p><br />
விசேட நிதி சேகரிப்பு </p>

<p>மூன்றாவது வகை நிதி சேகரிப்பு, 'விசேட சேகரிப்பு' என கூறப்பட்டது. இது உண்மையில் ஆயுதம் வாங்குவதற்காக மட்டும் என விசேடமாக ஒழுங்கு செய்த கடன் ஏற்பாடாக இருந்தது. இது கே.பி. இராணுவ தளவாடம் வாங்குவதற்கு பொறுப்பாக இருந்த காலத்தில் அவராலேயே தொடக்கப்பட்ட விடயமாகும். ஆயுதம் வாங்குவதற்கு பெருமளவு பணத்தை சொற்ப கால அவகாசத்தில் பெற வேண்டியிருந்தது. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ.யின் நிர்வாகத்திற்கும்,  நிதி சேகரிப்புக்கும் பொறுப்பாக இருந்த கேபியின் மனதிலேயே இந்த திட்டம் உதயமாயிற்று.</p>

<p>இந்த முறையில், வெளிநாடுகளிலிருந்த நம்பிக்கைக்குரிய, உறுதியான விசுவாசிகள் குறிப்பாக இவர்களில் வங்கியில் நற்பெயர் உடையவர்களாக இருந்தவர்கள் தமது பெயரில் கடனைப் பெற்று எல்.ரீ.ரீ.ஈ. முகவர் அல்லது முகப்பு நிறுவனத்திடம் கொடுத்தனர். இந்த கடனை பெற்றவர்கள் தமது சொத்துக்களை பிணையாக காட்டினர். </p>

<p>இந்த முறையினால் பெருந்தொகையான பணம் விரைவில் சேகரிக்கப்பட்டது. இப்பணம் ஆயுதம் வாங்கப் பயன்படுத்தப்பட்டது. இந்த வங்கிக் கடனுக்கான வட்டி, நிலையியல் கட்டளை மூலம் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்து, கொடுக்கப்பட்டது. கடனின் முதல், படிப்படியாக, பொது சேகரிப்பிலிருந்து பெற்ற பணத்தால் கட்டப்பட்டது. </p>

<p>கே.பி, புலிகளின் ஆதரவாளர்கள் தமது பெயரில் பெற்றுக்கொடுத்த கடனை மீளச் செலுத்துவதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார். அவரின் பின் வந்தவர்களும் அவ்வாறே செய்தனர். விசேட நிதி சேகரிப்பு எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்கள்களின் மனதில் இடம்பிடித்தது. மிக அதிகளவான நிதி சேகரிக்கப்பட்டு பிரச்சினை ஏதுமின்றி மீளச் செலுத்தப்பட்டு வந்தது. விசேட நிதி சேகரிப்பு 18 மாதங்களுக்கு ஒரு தடவை செய்யப்பட்டது.</p>

<p>இவற்றுக்கு மேலாக நிதி சேகரிக்க இரண்டு விரிந்த முறைகள் காணப்பட்டன. இதில் ஒன்றாக, மேடை நிகழ்வுகள் நடத்துதலும், கலண்டர், வீடீயோ, டீவிடி, ஓடியோ சீடிகள், புத்தகங்கள், சஞ்சிகைகள், ஞாபகார்த்த சின்னங்களை விற்பதும் அமைந்திருந்தது. கரும்புலி தினம், மாவீரர் தினக் கொண்டாட்டங்களிலும் நிதி சேகரிக்கப்பட்டது. ஒரு பக்கத்தில் நுழைவுக்கட்டணமாக பெருமளவு பணம் அறவிடபட்ட வேளையில் செலவுகளை சரிக்கட்ட நன்கொடை வழங்கும்படியும் மக்களிடம் கேட்கப்பட்டது. </p>

<p>வர்த்தகம்</p>

<p>இறுதியானது வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும். போரை தொடர்ந்து நடத்துவதற்கு ஒழுங்கான நிதிகிடைக்கும் வழிகள் காணப்பட வேண்டுமெனக் கூறி எல்.ரீ.ரீ.ஈ. தனது வர்த்தக நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது. நன்கொடையில் மட்டும் தங்கியிருப்பது, நீண்டகால நோக்கில் உறுதியில்லாது போகலாம் என்பதால் புலிகள் பல்வகையான வர்த்தக முயற்சிகளிலும் ஈடுப்பட வேண்டுமென காரணம் கூறப்பட்டது. </p>

<p>புலிகளின் பெருந்தலைவர் வே.பிரபாகரன் இதற்கான சம்மதத்தை கொடுத்தபோது வான் கதவுகளை திறந்தது போலாயிற்று. பினாமிகள், மற்றும் முகப்பு நிறுவனங்களுடாக பல வகையான வர்த்தக நடவடிக்கைகளில் புலிகளின் கிளைகள் ஈடுபட்டன.</p>

<p>இந்த வணிக முயற்சிகள் தமிழ்படம் காட்டுதல், உணவு விடுதிகள், உணவு வழங்குதல், மெய்ச்சொத்து வியாபாரம், சில்லறைக்கடைகள், அச்சகங்கள், கட்டுமான வேலை, பணம் அனுப்புதல், கணினி சேவைகள், வாகன சேவைகள் என அமைந்தன.   </p>

<p>சில வர்த்தக  நடவடிக்கைகள் புதிதாக தொடங்கப்பட்டன. ஆனால் அனேகமான சந்தர்ப்பங்களில் ஏற்கெனவே இருந்த வியாபார முயற்சிகளை புலிகள் அதிக விலை கொடுத்து தமதாக்கி கொண்டனர். இலாபத்தில் ஒரு பகுதியை இந்த வர்த்தக நிறுவனங்கள் எல்.ரீ.ரீ.ஈ. க்கு கொடுத்தனர். நிறுவனங்களை நடத்தியோருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.</p>

<p>அநேகமாக முகவர்கள் எல்.ரீ.ரீ.ஈ.யின் விசுவாசத்துக்கு உரியவர்களின் கூட்டாளிகளாக அல்லது உறவினர்களாக இருந்தமையால் துர்ப்பிரயோகமும், ஊழலும் இந்த வர்த்தக நிறுவனங்களில் காணப்பட்டன. பல வர்த்தக நிறுவனங்கள் வங்குரோத்தாகியுள்ள வேளையில் ஏனையவை நட்டத்தை காட்டுகின்றன. (2009 மே ) முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பின் இந்த வர்த்தக நிறுவனங்களை நடத்திக் கொண்டிருந்தவர்கள் அவற்றை தமக்கே சொந்தமாக்கிக் கொண்டனர்.</p>

<p>எல்.ரீ.ரீ.ஈ.க்கு சுவிட்ஸர்லாந்தில் நடந்தது, புலிகளின் வீழ்ச்சிக்கு பின் வேறு இடங்களில் நடப்பதன் ஒரு அடையாளமே. இதனால்தான் சுவிட்ஸர்லாந்தில் நடந்தது எல்.ரீ.ரீ.ஈ.யின் எதிர்காலத்தின் மீது பாரிய விளைவுகளை  ஏற்படுத்திக் கூடியதாக உள்ளது.</p>

<p>சில தசாப்தங்களின் முன் சுவிட்ஸர்லாந்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழர்களே இருந்தனர். இலங்கையில் இன முரண்பாடு தீவிரமாகத் தொடங்கியதோடு இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. 1979 இல் யாழ்ப்பாணத்தில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டு அதன்போது 'இன்பம்' போன்ற தமிழ் இளைஞர்கள் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதும், பலர் சிறைகளில் அடைக்கப்பட்டதும், பல தமிழர் இளைஞர்கள் ஐரோப்பாவில் புகலிடம் கோர வழிவகுத்தது. பயங்கரவாத தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை இந்த வகை வெளியேறுகையை மேலும் முடுக்கிவிட்டது. </p>

<p>1981 மே – ஜுன் பகுதியில் ஒழுக்க கட்டுப்பாடில்லாத பொலிஸாரினால் யாழப்பாண பொது நூல் நிலையம், ஈழநாடு புதினப்பத்திரிகைக் காரியாலயம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் காரியாலயம், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு என்பன எரிக்கப்பட்டதுடன் புகலிடம் கோருதல் மேலும் விசைகொண்டது.</p>

<p>குடித்தொகை</p>

<p>இவ்வாறு, 1979, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் உண்டான உந்தலுடன் தமிழர் குடித்தொகை சுவிட்ஸர்லாந்தில் அதிகரிக்க தொடங்கியது. இதன் பின் சுவிட்ஸர்லாந்தில் தமிழர்களின் வருகை சீராக காணப்பட்டது. சிலர் இந்த நாட்டை விட்டு வெளியேறவும் செய்தனர். அண்மைக்காலத்தில் இலங்கையை சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளனர். தற்சமயம் சுவிட்ஸர்லாந்தில் 2200 தஞ்சம் கோரும் விண்ணப்பதாரிகள் உள்ளனர்.</p>

<p>'ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளிலுள்ள தமிழர்கள் போலன்றி, சுவிஸ் தமிழர்கள் பெரியளவில் உயர்கல்வியை நாடவில்லை. இவர்கள் வெண்ணிற ஆடை வேலைகளில் அதிகம் காணப்படவில்லை. அநேகமான தமிழர்கள் தொழிற்சாலைகள், உணவகங்கள், போக்குவரத்து, நகரசுத்தி, வயோதிபர் பராமரிப்பு, காவல் துறைகளில் நீல ஆடை வேலைகளில் அதிகமாக ஈடுபடுகின்றனர். </p>

<p>இவர்கள் பொதுவில் கடின உழைப்பாளர்களாக உள்ளனர். மாதம் 2000-4000 பிராங்வரை சம்பாதிக்கின்றனர். (ஒரு சுவிஸ் பிராங்க் 117 இலங்கை  ரூபாவுக்கு சமன்) சுவிட்ஸர்லாந்தில் நன்றாக உழைத்தபின் பல தமிழர்கள் பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளில் வசிக்கச் சென்றுள்ளனர்.</p>

<p>40000 – 42000 வரையிலான இலங்கையர்கள் சுவிட்ஸர்லாந்தில் வாழ்கின்றனர். இவர்களில் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களின் ஆதரவாளர்கள் உள்ளனர். படிப்படியாக எல்.ரீ.ரீ.ஈ. ஆதிக்கம் பெற தொடங்கியது. ஆயுதப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த ஒரேயொரு இயக்கம் என்பது புலிகள் இயக்கத்தின் பலமாக இருந்தது. கடும ;பிரச்சார வேலை, தேவையான போது பலவந்தம் போன்ற தந்திரங்கள் சுவிட்ஸர்லாந்து தமிழர் மீது புலி இயக்கம் தனி ஆதிக்கம் பெற உதவியது. சுவிடஸர்லாந்தில் புலிகளுக்கு எதிர்ப்பு காட்டும் ஒரே ஒரு அமைப்பாக புளொட் இருந்து வந்தது. இதன் தலைவராக சொக்கலிங்கம் ஞானலிங்கம் அல்லது ரஞ்சன் இருந்து வருகிறார்.</p>

<p>1991 இல் சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் அல்லது கிட்டு லண்டனிலிருந்து சுவிட்சர்லந்துக்கு சென்றபோது அங்கிருந்த எல்.ரீ.ரீ.ஈ. உற்சாகம் பெற்றது. 1984- 1987 காலப்பகுதியில் புலிகளின் இரணுவ தளபதியாக இருந்த கிட்டு லண்டனில் எல்.ரீ.ரீ.ஈ.யின் சர்வதேச செயலகத்தை நிறுவியிருந்தார். லண்டனில் கைது செய்யப்படலாம் என கருதி கிட்டு சுவிட்ஸர்லாந்தில் இடம்பெயர்ந்தார். கிட்டு சுவிட்சர்லாந்தில் ஓய்வெடுத்தமை சுவிட்சர்லாந்துக்கான எல்.ரீ.ரீ.ஈ. தலைவராகவிருந்த நடராஜா முரளிதரன் அல்லது முரளியின் கரத்தை வலுப்படுத்தியது.</p>

<p><br />
சுவிஸ் முரளி</p>

<p>கிட்டுவினால் போடப்பட்ட அத்திவாரத்தின் மீது முரளியால் சுவிட்ஸர்லாந்தில் எல்.ரீ.ரீ.ஈ.யை புனருத்தாரணம் செய்து வளர்க்க முடிந்தது. முரளி பொறுப்பாயிருந்த 1991-1997 காலப்பகுதியில் எல்.ரீ.ரீ.ஈ. சுவிட்ஸர்லாந்தில் பலம் பெற்று வளர்ந்தது. முரளி சுவிடஸர்லாந்தில் தமிழ் பாடசலைகளின் வலையமைப்பை ஏற்படுத்தினார். இவர் மக்கள் கடைகள் என அழைக்கப்பட்ட கடைத் தொகுதியையும் அமைத்தார். எதிர்ப்புகளை அடக்க  மாற்றுக் கருத்தை எடுக்க, பணம் கொடுக்குமாறு மக்களை பலவந்தப்படுத்த வன்முறையை பயன்படுத்தியமை முரளியின் தலைமைத்துவத்தின் பாதகமான அம்சமாக இருந்தது.</p>

<p>சுவிஸ் முரளியினால் பயன்படுத்தப்பட்ட முறை பெரும் வெற்றியை கண்டது. புலிகள் சுவிட்ஸர்லாந்தில் தம்மை உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டனர். சூரிச், பேர்ண், ஜெனீவா ஆகிய இடங்களில் நடந்த புலிகளின் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஐரோப்பிய நாடுகளில் நடந்த கூட்டங்களில் பங்குப்பற்றி சனக் கூட்டத்தை அதிகரிக்கவும் சுவிட்சர்லாந்தில் இருந்த தமிழர்கள் உதவினர். சுவிஸ் வாழ் தமிழர்கள் உதவினர். சுவிஸ் வாழ் தமிழர்கள் நிதி சேகரிப்பதில் விகிதாசார ரீதியில் முதலிடத்தை பெற்றனர். தலைக்குரிய பங்களிப்பில் ஆகக் கூடிய நிதியை சுவிஸ் தமிழர்கள் வழங்கினர்.</p>

<p>இதனால் முரளி எல்.ரீ.ரீ.ஈ.யின் பெருந்தலைவர்  பிரபாகரனின் விருப்புக்குரியவரானார். ஒரு முறை, பிரபாகரன், சுவிட்ஸர்லாந்திலுள்ள முரளிதரன் எல்.ரீ.ரீ.ஈ.யின் வெளிநாட்டு கிளைகளின் தலைவர்களுள் மிகவும் வினைத்திறன் மிக்கவர் என பிபிசி தமிழ் சேவை அறிவிப்பாளர் ஒருவருக்கு கூறினார். ஆனால் முரளிதரன், ஹம்ரி – டம்ரி போல விழவிருந்தார். </p>

<p>வன்முறை, மிரட்டல், மிரட்டி பணம் பறிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளில் பேரில் முரளியும் இன்னும் பதினான்கு எல்.ரீ.ரீ.ஈ. செயற்பாட்டாளர்களும் 1996 இல் சுவிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர். ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் முரளி 18 மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். முரளிதரன், தன்னை பிழையாக கைது செய்து அடைத்து வைத்தனர் என சுவிஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். முரளிக்கு எதிராக தமிழர் சாட்சி சொல்லாதவாறு தடுக்க பயமுறுத்தல் உட்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.</p>

<p>முரளி மறியலிலிருந்த காலத்தில் அவரை படியிறக்க விரும்பிய சில எல்.ரீ.ரீ.ஈ.யினர், இயக்கத்தின் நலனுக்காக முரளியை பதவியிலிருந்து அகற்றுவது நல்லதென எல்.ரீ.ரீ.ஈ.யில் அதிகாரமுள்ளவர்களை நம்ப வைப்பதில் வெற்றி பெற்றனர். எனவே 1997 இல் முரளி குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டபோது முரளி பதவியிலிருந்து விலக்கப்பட்டார். முரளி வன்னிக்கு வருமாறு பணிக்கப்பட்டார். இதை மறுத்த முரளி தனது குடும்பத்தோடு கனடாவில் குடியேறினார். அவர் இப்போது கனடாவில் வசிக்கின்றார். ஆனால் இப்போது அவர் 'சுவிஸ் முரளி' எனவே அறியப்படுகிறார்.</p>

<p>தவறாக தான் கைது செய்யப்பட்டதற்கு நட்ட ஈடு கோரி முரளி தாக்கல் செய்த வழக்கில் வென்று, பெருந்தொகை பணத்தை நட்ட ஈடாக, கனடாவிலிருந்த போது பெற்றுக்கொண்டார் என்பது சுவாரஷ்யமான செய்தியாகும்.</p>

<p>அவ்ரோ குலம்</p>

<p>சுவிஸ் முரளி பதவி நீங்கி தனிவழி போன போதும், எல்.ரீ.ரீ.ஈ. சுவிட்ஸர்லாந்தில் நல்ல வளர்ச்சி கண்டது. சிலகால கூட்டுத் தலைமையின் பின் செல்லையா குலசேகர சிங்கம் அல்லது குலம் அல்லது அவரோ குலம் சுவிட்ஸர்லாந்து புலித் தலைவராக நியமிக்கப்பட்டார். குலம் எல்.ரீ.ரீ.ஈ.யின் பழைய  அங்கத்தவர் இவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய சகாவும் ஆவார்.</p>

<p>1978 செப்டெம்பர் இல் இரத்மலானையில் 'எயர் சிலோன் விமானத்தில் குண்டு வெடித்த சம்பவத்தில் தொடர்பு இருந்தது என்ற குற்றச்சாட்டின் பேரில், கைது செயய்யப்பட்டபின், குலம், அவ்ரோ குலம் என அழைக்கப்பட்டார்.</p>

<p>'2002 இல் கேபி நிர்ப்பந்தம் காரணமாக பதவி விலகியபின், குலத்தின் நிலைமை ஆட்டம் காணத் தொடங்கியது. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ.யின் புதிய தலைவராக வந்த மணிவண்ணன் அல்லது காஸ்ட்ரோ, குலத்தை கேபியின் விசுவாசியாக கருதி அவரை ஒதுக்கத் தொடங்கினார். குலம், பிரபாகரனுடன் நெருக்கமான தனிப்பட்ட உறவை வைத்திருந்தமையால், காஸ்ட்ரோவால் குலத்தை பதவியிலிருந்து நீக்க முடியவில்லை. எனவே குலத்தை கஸ்ட்ரோ ஒதுக்கி, அப்துல்லா என்னும் இயக்கப்பெயர் கொண்டவரை முதன்மைப்படுத்தி அதிகாரத்தையும் வழங்கினார். </p>

<p>அப்துல்லாவின் உண்மைப் பெயர் செல்லையா ஜெயபாலன். இவர் சுவிஸ் புலிகள் நிதிப்பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். இவரிடமே உண்மையான அதிகாரம் இருந்தது. குலம் பெயரளவில் மட்டுமே தலைவராக காணப்பட்டார். அதிகாரம் செலுத்த முடியாத நிலையில் குலம் இருந்த வேளையிலும், பெயரளவிலான தலைமைப் பொறுப்பிலிருந்தும் இவர் அகற்றப்பட்டார்.</p>

<p>இது நடந்தது மார்ச் 2009 இல் ஆகும். குலம் பதவியிலுருந்து அகற்றப்பட்ட சூழல்கள், தற்போது  சுவிட்சர்லாந்தில் எல்.ரீ.ரீ.ஈ.யை சூழ்ந்துள்ள நெருக்கடியோடு தொடர்பானது ஆகும். 2007-2008 எல்.ரீ.ரீ.ஈ. 'இறுதியுத்தம்'; என பெயரிடப்பட்ட பெரும் நிதி சேகரிப்பு இயக்கமொன்றை வெளிநாடுகளில் நடத்தியது. இதிலும் சுவிட்ஸர்லாந்து முன்னணி வகித்தது. பொது சேகரிப்பு, விசேட சேகரிப்பு என பெருமளவு நிதி சேகரிக்கப்பட்டது.</p>

<p>ஆனால் 2009 ஆரம்பத்தில், ஆயுதம் வாங்குவதற்கு என இன்னொரு விசேட நிதி சேகரிப்பை தொடங்கும்படி சுவிஸ் புலிகளுக்கு காஸ்ட்ரோ அறிவுறுத்தல்  வழங்கினார்.</p>

<p>காஸ்ட்ரோ இந்த முறையும் சுவிஸ் புலிகள் நிதிசேகரிப்பதில் முன்னணி வகிக்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்தார். ஆனால் குலம் இந்த விடயத்தில் காஸ்ட்ரோவுக்கு கடும் எதிர்ப்பை காட்டினார். முன்னர் விசேட சேகரிப்புக்காக பெற்றுக்கொண்ட கடன்கள் திருப்பிச் செலுத்தப்படவில்லை என்பதை குலம் சுட்டிக் காட்டினார். இன்னுமொரு  விசேட சேகரிப்பு மக்களுக்கு தாங்க முடியாத சுமையாகிவிடும் என அவர் கூறினார்.</p>

<p>அப்துல்லா</p>

<p>போர் தீவிரமடைந்திருந்த நிலையில் பிரபாகரனுக்கும் குலத்துக்கும் இடையிலான நேரடி தொடர்புகள் தடைப்பட்டுப் போயிருந்தன. இதனால் காஸ்ட்ரோவுக்கும் ஐரோப்பாவிலிருந்த அவரது கையாளான நெடியவனுக்கும் குலத்தை பதவியிலிருந்து நீக்குவது சுலபமாக இருந்தது. மீண்டும் ஒரு கூட்டுத்தலைமை உருவாக்கப்பட்டது. புதிய நிதிசேகரிப்பு இயக்கம் ஜெயபாலன் அல்லது அப்துல்லாவினால் தொடக்கி நடத்தப்பட்டது. இதனால் சுவிஸ் புலி அமைப்பில் பிளவு ஏற்பட்டது. குலமும் அவரது விசுவாசிகளும் தள்ளி வைக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டனர்.</p>

<p>அப்போது காணப்பட்ட சூழலின் காரணமாக அவசரமாக ஆயுதங்கள் வாங்குவதற்கென தொடக்கப்பட்ட விசேட நிதிசேகரிப்பு, புலி ஆதரவாளர்கள், விசுவாசிகளினால் மனதார ஏற்கப்பட்டது. அப்போது எல்.ரீ.ரீ.ஈ. , முல்லைத்தீவில், கடலோரமாக அமைந்த ஒரு ஒடுங்கிய துண்டு நிலத்தில் அடைபட்டுக் கொண்டு வந்தது. எதிரியை அழித்தொழிப்பதற்கான ஆயுதங்களை வாங்கவென கூறி வெளிநாட்டு புலிகள் நிதிசேகரிப்பு இயக்கத்தை நடத்தியபோது உணர்;ச்சி மேலிட்ட நிலையிலிருந்த புலம் பெயர்ந்தோர் நிதியை வாரி வழங்கினர்.</p>

<p>இது சுவிட்ஸர்லாந்தில் மட்டும் நடந்ததல்ல. தமிழர்கள் செறிவாக வாழ்ந்த ஒவ்வொரு நாட்டிலும் இது நடந்தது. எல்.ரீ.ரீ.ஈ.யின் வெளிநாட்டு அமைப்புகள் பரந்தளவில் விசேட நிதி சேகரிப்பு இயக்கத்தை நடத்தினர்.</p>

<p>இதற்காக பெருமளவிலான புலி ஆதரவாளர்கள் தமது பெயரில் வங்கிக் கடனைப் பெற்று ஆயுதம் வாங்கவென புலிகளிடம் கொடுத்தனர். சில இடங்களில் புலிகள் கடனுக்காக வட்டி தருவதாகவும் கூறி ஊக்குவித்தனர். இது வங்கிக்கு செலுத்தும் வட்டிக்கு மேலானதாகும்.</p>

<p>பொதுசன அபிப்பிராயம்</p>

<p>இவ்வாறு மார்ச் 2009- மே 2009 காலப்பகுதியில், வங்கிக் கடனாகவும், விசேட நிதி சேகரிப்பாகவும் பெருமளவு பணம் சேகரிக்கப்பட்டது. இதிலும் சுவிட்ஸர்லாந்து முன்னிலை வகித்தது. மூன்று, நான்கு மாதங்களில் வெளிநாட்டு புலிகள் பெரும் நிதி சேகரிப்பதில் வெற்றி பெற்றனர்.</p>

<p>எவ்வளவு தான் உணர்ச்சியோடு நீதி சேகரிப்பட்டபோதும், ஒரு சதம் கூட ஆயுதம் வாங்கப் பயன்படவில்லை என்பதுதான் கசப்பான யதார்த்தமாகும். இந்த இலட்சணத்தில் வன்னிக்கு ஆயுதம் அனுப்புவதைப்பற்றி பேசவேண்டுமா? ஆயுதம் வாங்கவென சேகரிக்கப்பட்ட பெருமளவு பணம் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படாமல் கிடந்த வேளையில் எல்.ரீ.ரீ.ஈ. முள்ளிவாய்க்காலில் இராணுவ ரீதியில் தோல்வியை தழுவி முழுதாய் அழிந்து போயிற்று.</p>

<p>இந்த நிலையில் தற்போதைய நெருக்கடிக்கான விதைகள், புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட புலி மற்றும் புலிசார்பு சக்திகளிடையே விதைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வங்கிக்கடன் மூலம் சேகரிக்கப்பட்ட பணம் எல்.ரீ.ரீ.ஈ. யுடன் தொடர்பான சுயநலமிகளின் பைகளுக்குள் போய்விட்டது. தமது பெயரில் கடன் பெற்ற தீவிர ஆதரவாளர்கள் கடன் செலுத்த முடியாது கஷ்டப்படுகின்றனர். கடனை திருப்பி செலுத்துவோம் என உத்தரவாதம் வழங்கிய பெருங் கைகளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் ஒளித்து விளையாடுகின்றனர்.</p>

<p>எல்.ரீ.ரீ.ஈ.யின் விசுவாசமான ஆதரவாளர்களாக இருந்த வெளிநாட்டு தமிழர்களின் எண்ணத்திலும் இதயத்திலும் வெறுப்பும் ஆத்திரமும்; பொங்குகின்றன. எல்.ரீ.ரீ.ஈ.யின் பப்படம் நொறுங்க தொடங்கியுள்ள சுவிட்சர்லாந்தில் நாம் காண்பது இதைத்தான். இந்த வகையில், வேறு எங்கும் உள்ள தமிழர்களைவிட சுவிஸ் தமிழர்கள் கூடுதலாக வருந்துகின்றனர். ஏனெனில் இவர்கள் தமது சக்திக்கு அப்பால் எல்.ரீ.ரீ.ஈ.க்கு நிதி வழங்கியுள்ளனர். இவர்களை புலித் தலைவர்கள் ஏமாற்றிவிட்டனர்.   <br />
DBS Jeyaraj can be reached at இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்  <br />
 <br />
(தமிழில்: ந.கிருஷ்ணராசா)        </p>]]>
    </content>
</entry>
<entry>
    <title>தேசிய கீதம்: நமோ நமோ தொடக்கம் ஸ்ரீலங்கா மாதா வரை</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2011/02/post_295.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=360" title="தேசிய கீதம்: நமோ நமோ தொடக்கம் ஸ்ரீலங்கா மாதா வரை" />
    <id>tag:ootru.com,2011://1.360</id>
    
    <published>2011-02-14T04:15:03Z</published>
    <updated>2011-02-14T12:34:54Z</updated>
    
    <summary>டி.பி.எஸ்.ஜெயராஜ் இலங்கையின் தேசிய கீதம் பற்றி தற்போது கிளப்பப்பட்டுள்ள பிரச்சினை இந்த சமயத்தில் தேவையில்லாத விரும்பத்தகாத ஒன்றாகும். பிரிவினைக்கு எதிரான நீண்ட ஆனால் வெற்றிகரமான யுத்தத்துக்குப் பின் நாட்டை எதிர்நேக்கியுள்ள உடனடி பிரச்சினை, யுத்தத்தின் வடுக்களை ஆற்றுவதும் ஐக்கியப்பட்ட நாட்டை பலப்படுத்துவதுமாகும்....</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><b>டி.பி.எஸ்.ஜெயராஜ்</b></p>

<p><strong>இ</strong>லங்கையின் தேசிய கீதம் பற்றி தற்போது கிளப்பப்பட்டுள்ள பிரச்சினை இந்த சமயத்தில் தேவையில்லாத விரும்பத்தகாத ஒன்றாகும். பிரிவினைக்கு எதிரான நீண்ட ஆனால் வெற்றிகரமான யுத்தத்துக்குப் பின் நாட்டை எதிர்நேக்கியுள்ள உடனடி பிரச்சினை, யுத்தத்தின் வடுக்களை ஆற்றுவதும் ஐக்கியப்பட்ட நாட்டை பலப்படுத்துவதுமாகும்.</p>]]>
        <![CDATA[<p>யுத்தத்தில் கிடைத்த இராணுவ வெற்றியினால் தேசிய ஐக்கியம் தன்பாட்டிலேயே வந்துவிடும் என்பதற்கில்லை. தனித்துப்போய்விட்ட தமிழர்களுக்கு ஏற்புடைய ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதனால் போருக்குக் காரணமான பிரச்சினைகளை தீர்த்து வைப்பது  அவசியமாகும். இலங்கையின் நீண்டகாலமாக துன்பப்படும் தமிழ் மக்களின் உள்ளத்தையும் இதயத்தையும் கவர்வது தமிழீல விடுதலைப்புலிகள் வசமிருந்த பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றுவதிலும் பார்க்க கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.</p>

<p>பூரிக்க வைக்கும் இராணுவ வெற்றியின் பின்னும் நியாயமான மனத்தாங்கல்களுக்கு தீர்வுகாணும் அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும் அர்த்த புஷ்டியான அரசியல்; முன்னெடுப்புகள் தொடர்பில், ராஜபக்ஷ அரசாங்கம் கவலை தரும்வகையில் செய்யலின்மையை காட்டியுள்ளது. மறுபக்கத்தில் தேசிய கீதம் போன்ற கருத்து மோதல்கள் புதிய பிரச்சினைகளை தோற்றுவித்து ஏற்கெனவே நொந்து போன உள்ளங்களை மேலும் நோகடிக்கின்றன.</p>

<p>இன நல்லிணக்கம், ஒற்றுமை என்பவை மீது முக்கிய கவனம் செலுத்த வேண்டிய இந்த நேரத்தில், தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு ஏற்கெனவே உள்ள ஏற்பாட்டின் மீது கைவைத்து மக்களை மேலும் அல்லல்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சிகள் காணப்படுகின்றன. தமிழ் வடிவம் ஒழிக்கப்பட்டு சிங்களம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமென சிங்கள கடுங்கோட்பாட்டளர்கள் கோருகின்றனர். சிலர் தமிழில் தேசிய கீதம் பாடுவது சட்டவிரோதமானது எனக் கூறும் அளவுக்கு சென்றுவிட்டனர்.</p>

<p>ஸ்ரீலங்காவின் தேசிய கீதத்தின் உத்தியோகபூர்வ வடிவம் சிங்களத்தில் உள்ளது. இதுவே அசல் வடிவம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆனந்த சமரகோனின் 'நமோ நமோ மாதா' தேசிய கீதமாக முறையாக ஏற்கப்பட்ட காலத்திலிருந்தும் தமிழ் வடிவமும் இருந்து வருகிறது.</p>

<p>கொழும்பு மற்றும் சிங்கள பெரும்பான்மை மாகாணங்களில் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் சிங்களவடிவம் பாடப்பட்ட வேளையில் தமிழ்பெரும்பான்மை பகுதிகளிலும் தமிழ்மொழி மூல பாடசாலைகளிலும் தமிழ்வடிவம் பாடப்பட்டது. தமிழுக்கும் எந்த வித உத்தியோகபூர்வ அந்தஸ்துமட் இல்லாத, சிங்களம் மட்டுமே தனியொரு உத்தியோகபூர்வ மொழியாக இருந்த காலத்தில் இப்படியான அரவனைத்து செல்லும்போக்கு காணப்பட்டது.</p>

<p>கொழும்பு மற்றும் பெரும்பான்மை மாகாணங்களில் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் சிங்கள வடிவம் பாடப்பட்ட வேளையில் தமிழ் பெரும்பான்மை பகுதிகளிலும் தமிழ் மொழி மூல பாடசாலைகளிலும் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. தமிழுக்கு எவ்வித உத்தியோகபூர்வ அந்தஸ்தும் இல்லாத சிங்களம் மட்டுமே தனியொரு உத்தியோகபூர்வ மொழியாக இருந்த காலத்தில் இப்படியான அரவணைத்துச் செல்லும் போக்கு காணப்பட்டது.</p>

<p><strong>அரசியலமைப்பு</strong></p>

<p>1978 அரசியலமைப்பில் தமிழுக்கு தேசிய மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதேயன்றி உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதே யாப்பின் சரத்து 7 ஊடாக சிங்களத்திலிருந்த தேசிய கீதத்துக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இருப்பினும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு 7 ஆவது சரத்துக்கான 3 ஆவது அட்டவணையின் மூலமும் அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.</p>

<p>1987 இன் யாப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் சி;ங்கள மொழியோடு தமிழும் உத்தியோகபூர்வ மொழியாக உயர்த்தப்பட்டது. 1988 இல் கொண்டு வரப்பட்ட 16 ஆவது திருத்தத்தின் ஊடாக உத்தியோகபூர்வ மொழியென்ற வகையில் நிர்வாக, சட்ட துறைகளில் மேலும் விரிவாக்கம் பெற்றது.</p>

<p>தமிழ்மொழிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாதிருந்தபோது தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது. ஆனால் தமிழ்மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளபோது தமிலுள்ள தேசிய கீதத்தை ஒழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முரண்நகையாக உள்ளன.</p>

<p>இப்போதைய நிலையை தொடரவேண்டும் என்பதற்கு இன்னுமொரு ஆணித்தரமான காரணம் உண்டு. தமிழி;ல் தேசிய கீத்ததை பாடவிரும்பும் தமிழர்கள் பிரிவினை வாதிகளோ அல்லது தீவிரவாதிகளோ அல்லர். அண்மையில் அரச கட்டுப்பாட்டு ஊடகமொன்றில் கட்டுரையில் புலிசார்பு புலம் பெயர்ந்தோர், தேசிய கீதத்தை தமிழில் பாட வேண்டுமென கூறுவதாக சொல்லப்பட்டிரு;தது. இந்த முட்டாள்தனமான கருத்தைப்போல உண்மைக்கு அப்பாற்பட்ட விடயம் எதுவும் இருக்க முடியாது. இலங்கையில் வாழ்கின்ற ஆரவாரப்படாத தமிழ் பெரும்பான்மையினர் தேசிய கீதத்தை தமிழில் பாட விரும்புவது, அவர்கள் இலங்கையில் வாழ்கின்ற ஆரவாரப்படாத தமிழ் பெரும்பான்மை தேசிய கீதத்தை தமிழில் பாட விரும்புவது, அவர்கள் இலங்கையுடன் தம்மை அடையாளப்படுத்தவும், அவர்கள் இலங்கைக்கு உரித்தானவர்கள் என்பதாலும் ஆகும்.</p>

<p>இவர்கள் கேட்பது புதிய உரிமையல்ல. இப்போதும் இருக்கின்ற, இருந்துவந்த உரிமையின் தொடர்ச்சியையே அவர்கள் கேட்கின்றனர். சிங்களத்திலுள்ள தேசிய கீதத்துக்கு முதலிடம் கொடுத்தாலும், பொருத்தமான இயலுமான போதெல்லாம், இடங்களிலெல்லாம் இதை இவர்கள் தமிழில் பாட விரும்புகின்றனர்.</p>

<p><strong>தமிழில் கீதங்கள்</strong></p>

<p>தமிழ் அரசியல் சமூகத்தில் தேசியகீதம் பாடும் நடைமுறைஇழந்து போய் 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது என்பதை நாம் மறக்கலாகாது. சமஷ்டி கட்சியும் பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் அரசியல் கூட்டங்களில் பிரதியீடான 'தமிழ் அரசு' கீதங்களை பாடும் ஒழுங்கை செய்தன. குறைந்த பட்சம் மூன்று வௌ;வேறு கீதங்கள் பாடப்பட்டன. அதில் ஒன்று பரமஹம்ஸதாசன் எழுதிய 'வாழ்க ஈழத்தமிழகம் வாழ்க என்றும் வாழ்கவே.' அடுத்தது, திருக்கோவில் அரியநாயகம் எழுதிய- எங்கள் ஈழத் தமிழ் திருநாடு, கலை வாழும் பொன்னாடு'. மூன்றாவது காசியானந்தன் எழுதிய 'வாழியவே வாழியவே, எங்கள் தங்க மாமணி தமிழ் ஈழம்,</p>

<p>தமிழீழ தேசிய கீதத்தின் இந்த மூன்று வடிவங்களும் அதிதீவிர தேசியமும் பிரிவினைகவாதமும் உச்சத்தில் காணப்பட்ட கடந்த தசாப்தங்களில் பாடப்பட்டன. இவை தமிழ்த்தாயை போற்றிப்பாடப்பட்ட தமிழ் பாடல்களிலிருந்து வித்தியாசமானவை. இந்த 'தமிழ் தாய் வாழ்த்து' சகல தமிழ் கலாசார நிகழ்வுகளிலும் கட்டாயமாக இருந்தது.</p>

<p>தமிழ்மொழியை தமிழ்த் தாயாக உருவகிப்பதும், போற்றிப்பாடுவதும் தமிழர் அல்லாதவர்களால் விளங்கிக்கொள்ள கஷ்டாமனதாகும். வழமையாக சுப்பிரமணிய பாரதி பாடிய 'வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே என்ற கீதமும் பாரதிதாசன் பாடிய 'தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற கீதமும் 'தமிழ் தாயை' கனம்பண்ணும் வகையில் பாடப்படுகின்றன.</p>

<p>பொதுவாக தமிழ் ஆயுதப்போரட்டாத்தினதும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளினதும் எழுச்சியுடன் வடக்கு, கிழக்கில் தமிழில் தேசிய கீதத்தைப்பாடும் நடைமுறை குறையத் தொடங்கியது. அநேகமாக உத்யோகபூர்வ நிகழ்;வுகளில் இசை மட்டுமே போடப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈ. வடக்கு கிழக்கில் சில குறித்த இடங்களில் ஆட்புல கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியபின் இலங்கையின்; தேசியகீதம் முற்றுமுழுதாக கைவிடப்பட்டது.</p>

<p>எல்.ரீ.ரீ.ஈ. பிரதியீட்டு தமிழ்ஈழ கீதத்தை ஆக்கிக்கொள்ளவில்லை. பதிலாக அவர்கள் புலிக்கொடியின் புகழ் பாடினர். புலிக்கொடி, தமிழீமாக அல்லது தமிழ் தேசியக்கொடியாக உருவாக்கப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈயின் அரசவை கவிஞரான புதுவை இரத்தினதுரை 'ஏறுதுபார் கொடி ஏறுதுபார்' என்னும் பாடலை எழுதினார். இது பல கொண்டாட்டங்களில் கட்டாயப்படுத்தப்பட்டிருந்த புலிக்கொடியேற்ற நிகழ்வுகளின்போது பாடப்பட்டது.</p>

<p>எல்.ரீ.ரீ.ஈ.யிடமிருந்து இலங்கையின் ஆயுதப்படைகள் ஆள்புலத்தை மீண்டும் கைப்பற்றத் தொடங்கியபின் கொழும்பு அரசு அதன் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் மீளப்பெற்றுக்கொண்டது. இது தவிர்க்க முடியாத ஆனால் விரசமான ஒரு இராணுவத்தின் இருப்புக்கு இட்டுச்சென்றது. இதன் தொடர்ச்சியான வடக்கு கிழக்கில் தேசியக்கொடி பறந்தது. தேசிய கீதமும் கூடவே இசைந்து வந்தது.</p>

<p><strong>தேவனந்தா</strong></p>

<p>ஆரம்பத்தில் தேசிய கீதம்  வடக்கில் சிங்களத்தில் மட்டும் இசைக்கப்பட்டது. அல்லது போடப்பட்டது. ஆனால் ஒரேயொரு இலங்கைத் தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் விடா முயற்சி காரணமாக தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படலாயிற்று.</p>

<p>இப்போது யாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் தமிழிலும் சிங்களத்திலும் தேசிய கீதம் பாடப்படுகின்ற ஒரு கலப்பு நிலைவரம் காணப்படுகிறது.</p>

<p>இந்த பின்னணியில்தான் இப்போதைய நெருக்கடி பார்க்கப்படவேண்டும். இலங்கைத் தமிழர்கள் பல தசாப்தங்களாக தனிமைப்பட்டிருந்தப் பின் இலங்கையில் தமிழர்கள் மீண்டும் பிரதான நீரோட்டத்தில் இணைந்து வருகின்றனர். அவர்கள் மீண்டும் தமது இலங்கையர் என்ற அடையாளத்தை வலியுறுத்துகின்றனர்.</p>

<p>அதே சமயம் தமிழில் தேசிய கீதத்தை பாடுவதன் மூலம் தமிழர்கள் தமது இன அடையாளத்தைப் பேணவும் விரும்புகின்றனர். இலங்கையராகவும் அதே சமயம் தமிழராகவும் இருப்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் தமிழில் தேசிய கீதம் பாடுவதாகும்.</p>

<p>ஆனால், கவலை தரும் வகையில் இந்த அடிப்படையான, சாதாரண உண்மை சில தொடர்புடைய பகுதிகளில் விளங்கிக் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக தமிழில் தேசிய கீதம் பாடும் விடயத்தில் விரும்பத்தகாத, தேவையில்லாத ஒரு பிரச்சினை உருவாகி வருகின்றது.</p>

<p>தமிழில் தேசிய கீதம் பாடும் நடைமுறையை ஒழித்துக்கட்டுதவற்தகான பிரச்சாரம் ஒன்று பெரும்பான்மை கடும்கோட்பாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது. ஆயினும் நிதானம் காணப்படுவதற்கான அடையாளங்களும் தெரிகின்றன. எமது தேசிய கீதத்தின் வளர்ச்சி, படிமலர்வு என்பவற்றை மீள்பார்வைக்கு உட்படுத்தும்போது, ஆரம்பத்திலிருந்தே கருத்துமோதலுக்குள் அது சிக்குண்டு கிடந்ததை காணக்கூடியதாக உள்ளது.</p>

<p>தேசியகீதம் என்ற எண்ணக்கரு பிரித்தானியர்களால் அப்போதிருந்த சிலோனுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நவீன சிலோன் தேசம் கூட ஒரு காலனித்துவ உருவாக்கமே. பல்வேறு ஆள்புலங்களை ஒரு தனி அலகாக  தமது ஆட்சியின் கீழ் ஒன்றாக்கி நாட்டுக்கு ஒரு வகை நிர்வாகத்தை கொண்டுவந்தவர்கள் பிரித்தானியர்களே.</p>

<p>' கோட் சேவ் த கிங் ஃ குயின்'' 1745 இல் பிரித்தானிய தேசிய கீதம் ஆயிற்று. இது நாடாளுமன்ற சட்டத்தின்படியன்றி பிரித்தானிய பேரரசு மேலும் மேலும் விரிந்து சென்றபோத ' பிரித்தானியரால் ஆளப்பட்ட சகல நாடுகளிலும் ஆள் புலங்களிலும் 'கோட் சேவ் த கிங் ஃகுயின்' தேசிய கீதமாக பாடப்பட்டது.</p>

<p>சிலோனும் விதிவிலக்காக இருக்கவில்லை. விக்டோரியா ராணியின் ஆட்சிக் காலத்தில் கோட் சேவ் த கிங் ஃகுயின், நடைமுறையில் சிலோனினதும் தேசிய கீதமாயிற்று. இது 20 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. இந்திய தேசிய காங்கிரஸை பின்பற்றி 1919 இல் அமைக்கப்பட்ட சிலோன் தேசிய காங்கிரஸ்  20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் கால் பகுதியில், டட்லி ஷெல்டன் சேனநாயக்கவும் ஜூனியஸ் றிச்சர்ட் ஜயவர்த்தனவும் அதன் இணைச் செயலாளர்களாக வந்தபின் புதிய உத்வேகம் பெற்றது.</p>

<p>சிலோன் தேசிய காங்கிரஸ் சிலோனுக்கான ஒரு தேசிய கீதத்தை வைத்துக்கொள்ள தீர்மானித்தது. இதன்படி ஒரு கீதமொன்று டி.எஸ்.முனசிங்க என்பவரால் இயற்றப்பட்டது. இதற்கு சேர்.ஜேம்ஸ்.பீரிஸின் மகனான புகழ்பெற்ற தெவர் சூரியசேன இசை அமைத்தார். இது 1943 இல் சிலோன் தேசிய காங்கிரஸின் அமர்வுகளின்போடப்பட்டது. ஆனால் 6ஆவது ஜோர்ஜின் ஆட்சியின்போது ' கோட் சேவ் த கிங்' ஆதிக்கம் பெற்றது.</p>

<p><strong>போட்டி</strong></p>

<p>சிலோன் டொமினியன் அந்தஸ்தை பெற்றப்போதும் பின்னர் சுதந்திரம் பெற்ற போதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய கீதம் இருக்கவில்லை. லங்கா கந்தர்வ சபாவிடம் ஒரு தேசிய கீதத்தை ஆக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கென ஒரு போட்டி ஒழுங்குபடுத்தப்பட்டது. பொருத்தமான கீதத்தை தெரியும் கடமை 'சபா'' வினால் அமைக்கப்பட்ட ஒரு குழுமத்திடம் கொடுக்கப்பட்டது.</p>

<p>இந்த குழுமத்தில் எஸ்.எல்.பி. கபுகொட்டு, டாக்டர் ஓ.எச்.டி விஜேசேகர, லயனல் எதிரிசிங்க, முதலியார் விஜேசேகர,லயனல் எதிரிசிங்க, முதலியார் ஈ.ஏ.அபேசேகர, எல்.எல்.கே. குணதுங்க, பீபீ. இலங்கசிங்க ஆகியோர் இருந்தனர். பின்னர் தெரிவுக் குழுமத்தில் இருந்த இருவர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டபோது சர்ச்சைக் கிளம்பியது.</p>

<p>பீபி இலங்கசிங்க எழுதி, லயனல் எதிரிசிங்க இசையமைத்த பாடல் புதிய தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. இது ' ஸ்ரீலங்கா மாதா, பலயஸ மஹிம, ஜய ஜய' எனத் தொடங்கி – 'ஜய ஜய தத நங்கா, ஸ்ரீலங்கா மாதா' என முடிந்தது.</p>

<p>தெரிவுக்குழுவின் இரண்டு அங்கத்தவர்களால் சமர்பிக்கப்பட்ட பாடல் தேசிய கீத போட்டியில் வென்றது என்ற விடயம் பரந்தளவில் கசப்புணர்வையும் எதிர்ப்பையும் தோற்றுவித்தது. இது வெட்கக் கேடான நீதியீனமாக கருதப்பட்டது.</p>

<p>இலங்கசிங்க – எதிரிசிங்க ஜோடியால் ஆக்கப்பட்ட பாடல், சுதந்திர தினத்தன்று காலை ரேடியோ சிலோனினால் தேசிய கீதம் என்ற வகையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் எதிர்ப்புகளின் காரணமாக உத்தியோக ரீதியான சுதந்திரதின கொண்டாட்டங்களில் இது பாடப்படவில்லை.</p>

<p>இந்தப் பாடல் நேர்த்தியானதாகவும், விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்தபோதும் இதை தேசிய கீதமாக தெரிந்ததில் பக்கச்சார்பு இருந்தது என்ற அபிப்பிராயமே விமர்சனத்தையும் எதிர்ப்பையும் கிளப்பிவிட்டது. எனவே தேசியகீத போட்டியில் வெற்றி கீதம் மக்களை பொறுத்தவரையில் ஏற்க முடியாத ஒன்றாகியது. இதனால் அதன் மதிப்பு குறையலாயிற்று. அதே சமயம், தேசிய கீதமாகலாம் என்ற அளவுக்கு சிந்திக்கும் வகையில் ஒரு பாடலொன்று மக்களின் உள்ளத்தை கவரத் தொடங்கியது. இந்தப்பாடல்தான் பிரபலமான கவிஞரும் சித்தர கலைஞருமாகிய ஆனந்த சமரக்கோனினால் எழுதப்பட்ட பிரபலமான 'நமோ நமோ மாதா' ஆகும்.</p>

<p><strong>சமரக்கோன்</strong></p>

<p>ஆனந்த சமரக்கோன் ஜனவரி 13, 1911 இல் பாதுக்க பிரதேசத்தில், வட்டறேக்காவுக்கு அண்மையில் உள்ள சிறிய கிராமமான லியன்வலவில் பிறந்தார். இவரது பெற்றோர்களான சாமுவேல் சமரகோன், டொமின்கா பீரிஸ் ஆகியோர் வி;;ல்பிரட் என ஞானஸ்தானம் வழங்கப்பட்டார். இவரது முழுப்பெயர் எகடகஹே ஜோர்ஜ் வில்பிரட் அல்விஸ் சமரக்கோன். அப்போது அவரது பெயரில் ஆனந்த இருக்கவில்லை. சிறுபராயத்திலும் இருபதுகளின் ஆரம்பத்திலும் அவர் ஜோர்ஜ் வில்பிரட் என அறியப்பட்டார்.</p>

<p>இளவயதில் ஜோர்ஜ் வில்பிரட் கோட்டே கிறிஸ்தவ கல்லூரியில் ( இப்போது ஸ்ரீ ஜயவர்த்தனபுர ம.ம.வி) படித்தார். 1934 இல் கிறிஸ்தவ கல்லூரியில் சங்கீத, சித்திர ஆசிரியராக இணைந்தார். ரவீந்திராநாத் தாகூரினால் உந்தப்பட்ட ஜோர்ஜ் வில்பிரட், வங்காளத்திலிருந்த தாகூரின் நுண்கலை கல்லூரியான சாந்திநிகேதினில் சேர்ந்தார்.</p>

<p>இவர் 1936 இல் சாந்தி நிகேதனில் சேர்ந்தார். இங்கு இவர் பிரபல வங்காள சித்திர கலைஞரான நந்தலாலால் போஷிடம் சித்திரத்தையும், சாந்திதேவி கோஷிடம் சங்கீதத்தையும் கற்றார். இவர் பாடநெறியை பூரத்தி செய்யாமலே 1937 இல் இலங்கைக்கு திரும்பிவந்து மீண்டும் ஆசிரியரானார். இப்போது இவர் ஆனந்த சமரக்கோன் என அழைக்கப்பட்டார். 1940 இல் இவர் காலி மஹிந்த கல்லூரியில் ஆசிரியராகினார்.</p>

<p>'நமோ நமோ' தேசிய கீதமாக பயன்படும் என்ற நோக்கில் முதலில் எழுதப்படவில்லை. இதன் தோற்றம் சுவாரஷ்யமானது. சாந்திநிகேதனில் அவரது கல்வி நின்றுவிட்டபோதும், சமரக்கோன் அடிக்கடி இந்தியாவுக்கு போனார்.</p>

<p>ஒரு தடவை அவர், அவரது தனது முதலாவது விமான பயணத்தில் நாடு திரும்பிக் கொண்டிருந்தார். கீழே பார்த்த அவர் நாட்டின் காட்சிகளை கண்டு ஆனந்தமும் பரவசமும் அடைந்தார். விமானம் தரையிறங்கியதும் உடனேயே தனது மனதில் வந்த சில சொற்களையும் வசனங்களையும் குறித்துக்கொண்டார்.</p>

<p>1940 ஒக்டோபர் 20 ஆம் திகதி இவர் பாதுக்கையில் தனது மூதாதையர் வீட்டில் இருந்தார். நித்திரை வராத அவர் கட்டிலில் புரண்டு புரண்டுக் கொண்டிருந்தார். 10 மணியளவில் அவர் திடீரென எழும்பி, இந்தியாவிலிருந்து வான் வழியாக நாடு திரும்பியவுடன் எழுதிய குறிப்புகளை பயன்படுத்தி தன் தாய்நாட்டை போற்றி எழுதத் தொடங்கினார்.</p>

<p><strong>பதிப்புரிமை</strong></p>

<p>சமரக்கோன் நள்ளிரவு கடந்தும் எழுதினார். சிரஞ்சீவித்துவம் பெற்ற 'நமோ நமோ மாதா' பிறந்தது.  இவர் இதை தான் ஆசிரியராகவிருந்த மஹிந்த கல்லூரிக்கு எடுத்துச் சென்று இசையமைத்து தனது மாணவர்களுக்கு பாடக்கற்பித்தார். இந்த பாடல் பிரபலமடைந்தது. இது 1946 இல் வெளிவந்த இசைத்தட்டில் சேர்க்கப்பட்டது. தானே சிறந்த பாடகராக இருந்தமையால், தனது மனைவியான சுவர்ண டி சில்வாவுடன் இணைந்து பாடலை பதிவு செய்தார். சுவர்ண டி சில்வா பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞரான டன்ஸ்ரன் டி சில்வாவின் சகோதரியாவார்.</p>

<p>இந்த பாடல் இவரால் வெளியிடப்பட்ட கவிதை புத்தகத்திலும் சேர்க்கப்பட்டது. அதன் பெயர் 'கீத குமுதின' ஆகும். அச்சக உரிமையாளரான ஆர்.கே.டபிள்யூ. ஸ்ரீவர்தனவிற்கு அச்சுக் கூலியை கொடுக்க முடியாத நிலையில், சமரக்கோன் தனது பதிப்புரிமையை அவரிடம் கையளித்தார். பின்பு அவரது படைப்பு தேசிய கீதமாக  அங்கீகரிக்கப்படும்போது, சமரக்கோன் இதையிட்டு கவலைப்பட வேண்டியிருந்தது.</p>

<p>கந்தர்வ சபா தேசிய கீதத்தை தெரிவதற்காக போட்டியை நடத்தியபோது சமரக்கோன் இந்தியாவுக்கு போயிருந்தார். ஆனால் இவரது மனைவியும் சகோதரனும் அவரது ' நமோ நமோ மாதா' கீதத்தை போட்டிக்கு சமர்பித்தனர். முழுத் தகுதியிருந்த போதிலும் இது கவனிக்கப்படாது இலங்க சிங்க- எதிரிசிங்க ஜோடியில் ஸ்ரீலங்கா மாதா யஸ மஹிம'' தெரிவு செய்யப்பட்டது.</p>

<p>போட்டியில் வென்றாலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட முறை காரணமாக 'யஸ மஹம' பலராலும் வெறுக்கப்பட்டது. எந்த வித உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாதபோதும் நமோ நமோ மாதாவுக்கு கூடிய வாய்ப்புகளும், பாராட்டும் கிடைத்துக் கொண்டிருந்தது. சாதாரண மக்களிடமோ இதன் பிரபலம் காரணமாக பொதுசன அபிப்பிராயம் யஸ மஹிமவை விட நமோ நமோ மாதாவுக்கு சாதகமாக இருந்தது.</p>

<p>ஒரு பொது நிகழ்வின்போது, கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் 50 அங்கத்தவர் கொண்ட பாட்டுக் குழு பாடியதன்பின் இந்தப் பாடல் பிரபலமாயிற்று. இது அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. உத்தியோகபூர்வ அங்கீகாரம் இல்லாத நிலையிலும் நமோ நமோ மாதா உண்மையாக தேசிய கீதம் போல பிரபலமாகிக் கொண்டே வந்தது.</p>

<p><strong>ஈ.ஏ.பி விஜயரட்ண</strong></p>

<p>1950 இல் நிதி அமைச்சராக இருந்த ஜே.ஆர்.ஜயவர்தன, நன்கு பிரபலமாகியிருந்த நமோ நமோ மாதா உத்தியோகபூர்வ தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறும் அமைச்சரவை பத்திரம் ஒன்றை கொண்டுவந்தார். பிரதமர் டி.எஸ். சேனநாயக்க, இந்த விடயத்தை இறுதி செய்யுமுகமாக உள்நாட்டு அலுவலகங்கள், கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சேர். ஈ.ஏ.பி. விஜயரட்னவின் (வைத்தியர் நிஸங்க விஜயரட்னவின் தந்தை) தலைமையில் ஒரு தெரிவுக்குழுவை அடைத்தார். இவர் ஒலிவர் குணதிலகவின் இடத்துக்கு வந்தவர்.</p>

<p>விஜயரட்னவின் தலைமையிலான குழு நமோ நமோ மாதாவையும் வேறு சில பாடல்களையும் கவனதில் எடுத்து சமரக்கோனின் பாடல் தேசிய கீதமாக வேண்டுமென தீர்மானித்தது.</p>

<p>இருப்பினும் ஒரு சிறிய தடங்கள் இருந்தது. இந்த குழு சொற்களில் சில சிறிய மாற்றங்கள் செய்யவேண்டுமென கருதியது. அப்போது இந்தியாவிலிருந்த சமரக்கோன் சேர். எட்வின் ஏ.பி. விஜயரட்னவின் அழைப்பின் பேரில் 1951இன் நடுப்பகுதியில் நாடு திரும்பினார்.</p>

<p>இந்தப் பாடல் பிரித்தானிய ஆட்சியின் கீழ் நாடு இருந்தபோது எழுதப்பட்டது. இப்போது நாடு சுதந்திரமடைந்த நிலையில் பாடலின் 10 ஆவது வரி பொருத்தமற்று காணப்பட்டது. இதனால் இதை மாற்ற வேண்டியிருந்தது. சமரக்கோன் இந்த வரியை மாற்ற சம்மதித்தார்.</p>

<p>எனவே நவ ஜீவன தெமினே என்பது நவ ஜீவன தெமினே நிதின அப்ப புபுது கரன் மாதா என ஆனந்த சமரக்கோனின் மனப்பூர்வமான சம்மதத்டன் மாற்றப்பட்டது.</p>

<p>பின்னர் ஓகஸ்ட் 1951 இல் சேர் ஈ.ஏ.பி. விஜயரட்ன நமோ நமோ மாதா என்ற பாடலை தேசிய கீதமாக சிபாரிசு செய்யும் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்பித்தார். இது அமைச்சரவையால் ஏகமனதாக ஏற்கப்பட்டு நவம்பர் 22 ,1951 இல் தேசிய கீதமாக்கப்பட்டது.</p>

<p>அப்போது, டி.எஸ். சேனாநாயக்கவின் அமைச்சரவையில் இரண்டு தமிழ் அமைச்சர்கள் இருந்தார்கள். ஜி.ஜி.பொன்னம்பலம், அ.சிற்றம்பலம் ஆகியோர்களே அவர்கள். இவர்கள் கேட்க முன்னரே டி.எஸ்.சேனநாயக்கா, பொருத்தமான மொழிபெயர்ப்பு ஒன்று முறையாக ஆக்கப்பட வேண்டுமென கூறினார். ஈ.ஏ.பி.விஜயரட்னவின் தலைமையிலான தெரிவுக்குழு தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் ஒன்று இருக்கும் என்பதை கொள்கையளவில் ஏற்றியிருந்தது.</p>

<p><strong>நல்லதம்பி</strong></p>

<p>தமிழ் புலமையாளரான பண்டிதர் எம்.நல்லதம்பியிடம் இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. வரிக்கு வரியின் சுத்தமான மொழிபெயர்ப்பு ஒன்று செய்யப்பட்டது. தமிழ் வடிவம் பயன்பாட்டுக்கு வந்தது. இது வடக்கு கிழக்கில் தமிழர் அதிகமாக வாழும் பகுதிகளில் உத்தியோகப்பூர்வ நிகழ்வுகளில் அதிகம் பாடப்பட்டது.</p>

<p>இந்த கீதம் நாட்டின் புகழ் பாடுவதாகவும், அதற்கு அஞ்சலி செலுத்துவதாகவும், அமைந்திருந்தது. இது எந்த ஒரு இனம், மதம், சாதி, சமுதாயத்தை புகழ்வதாக இருக்கவில்லை. இதுவே இந்த தேசிய கீதத்தின் சிறப்பு அம்சம் ஆகும். இந்த பாடல் குறுகிய வாதங்களை,  குழச்சிந்தனைகளை கொண்டிருக்கவில்லை. இது இலங்கை மாதாவின் சகல பிள்ளைகளினதும் நாட்டுப்பற்று உணர்வை தட்டிக் கொடுப்பதாக இருந்தது.</p>

<p>எனவே தமிழ் மக்கள் இந்த தேசிய கீதத்தை ஏற்காது விடவோ அல்லது எதிர்ப்புத் தெரிவிக்கவோ காரணம் இருக்கவில்லை. சிங்கள சொற்களின் கருத்து தெரிய வந்த போது எந்த ஒரு தமிழருக்கும் இது எதிர்க்க வேண்டியதொன்றாக இருக்கவில்லை. வரிக்கு வரியான தமிழ் மொழி பெயர்ப்பு கிடைக்கக் கூடியதாக இருந்தப்போது இலங்கை வாழ் தமிர்கள் உணர்வோடும் பற்றோரும் தேசிய கீதத்தை தமிழில் இசைக்கலாயினர்.</p>

<p>சுதந்திரத்தின் நான்கு ஆண்டுகளின் பின் பெர்பரவரி 4, 1952 இல் சுதந்திரதின கொண்டாட்டங்களில் உத்தியோக பூர்வ தேசிய கீதமாக ' நமோ நமோ மாதா பாடப்பட்டது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் திருகோணமலை மட்டக்களப்பு, கச்சேரிகளில் நடந்த சுதந்திரதின கொண்டாட்டங்களின்போது தமிழ் வடிவமான நமோ நமோ தாயே பாடப்பட்டது. சேர். ஜோன் கொத்தலாவல 1954 இல் யாழ்ப்பாணம் வந்தபோது, பிரதமருக்கு மரியாதை செய்யுமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் பாடப்பட்டது.</p>

<p>மார்ச் 12, 1952 இல் 'நமோ நமோ மாதா' வை தேசிய கீதமென அறிவிக்கும் பெரிய அரசாங்க விளம்பரங்கள் சிங்கள, தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. சிங்களப் பத்திரிகைகள், தமிழ் பத்திரிகைகளில் அந்தந்த மொழிகளிலேயே தேசிய கீதம் வெளியிடப்பட்டபோதும் ஆங்கில பத்திரிகைகளில் சிங்கள சொற்கள் ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி எழுதப்பட்டிருந்தது.</p>

<p>நமோ நமோ மாதா உத்தியோக பூர்வ தேசிய கீதமாக பாடப்பட்டபோதும், இசையில் அல்லது பாடும் விதத்தில் ஒரு வகைமை காணப்படவில்லை. பாடகர்களும், இசைக்குழுக்களும் வித்தியாசமான முறையில் பாடினர். இது குழப்பங்களை தோற்றுவித்துக் கொண்டிருந்தது. இதனால், தேசிய கீதத்தை பாடும்போடு ஒருவகைமையை பேணும் நோக்கில், அரசாங்கம் ஒரு குழுவை நியமித்தது. ஏழு பேர் கொண்ட குழு ஒன்று 1953 இல் நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் ஆனந்த சமரக்கோனுடன், டேவார் சூரியசேன, ஜே.டி.ஏ. பெரேரா ஆகியோர் இருந்தனர்.</p>

<p>இந்த குழு தேசிய கீதம் எவ்வாறு பாடப்பட வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளுடன் கொடுத்தது. இந்த இசை, சமரக்கோன் முதலில் அமைத்த இசையின் முன்னேறிய வடிவமாக காணப்பட்டது. எச்.எம்.வி இசைத்தட்டுகளின் முகவராக இருந்த புகழ்பெற்ற கார்கில்ஸ் நிறுவனத்திடம் தேசிய கீதத்ததின் இசைத் தட்டுகளை செய்வதற்கான கட்டளை வழங்கப்பட்டது.</p>

<p><strong>இலங்கை வானொலி</strong></p>

<p>தேசிய கீதத்ததை தமிழ் வடிவத்திலும் ஒரு இசைத்தட்டு தயாரிக்கப்பட்டது. பின்னணி வாத்தியங்களும் இசையமைப்பும் சிங்கள வடிவத்தையே ஒத்திருந்தது. பண்டிதர் நல்லதம்பியால் எழுதப்பட்ட சொற்களை சங்கரி, மீனா என்ற இரு பெண்கள் பாடினர். இந்த  தமிழ் வடிவம் இலங்கை வானொலியில் பெப்ரவரி 4, 1955 இல் ஒலிபரப்பாகியது.</p>

<p>ஜூன் 24, 1954 இல் சேர். ஜோன் கொத்தலாவலையின் அமைச்சரவை தேசிய கீதத்தில் இராகத்தையும் இசையையும் முறைமையாக அங்கீகரித்தது. அன்றைய தினம் 2500 ரூபா கொடுப்பனவு செய்யப்பட்டு 'நமோ நமோ மாதா' அரசாங்கத்தினால் முறையாக பொறுப்பேற்கப்பட்டது. ஆனால் இந்த பணமானது ஆனந்த சமரக்கோனிடம் சேரவில்லை. இந்த கீதத்தை ஒரு கவிதைப் புத்தகத்தில் வெளியிட்ட அச்சக உரிமையாளரிடம் பதிப்புரிமை மாற்றப்பட்டிருந்தமையே இதற்குக் காரணமாகும்.</p>

<p>ஒருவர் எழுதிய பாடல் தேசிய கீதமாக ஏற்கப்படுவது என்பது உண்மையில் மாபெரும் சாதனையே. இதை சாதித்த சமரக்கோன் பெரும் புகழில் மூழ்கித் திளைத்திருக்க வேண்டியவர். புhவம் அது நடக்கவில்லை. இன்பலோக வாழ்வுக்கு பதிலாக, சோதனைகளும் வேதனைகளும் இவரைக் காத்திருந்தன. சிங்கள தேசிய வாதத்தை கிளப்பி 1956 இல் எஸ்.டபிள்யூ ஆர்.டி பண்டாரநாயக்க பிரதமரானார். ' அப்பே ஆண்டுவ' என புகழ்ப்பட்ட இவரது புதிய அரசாங்கம் விரைவிலேயே பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் முகங்கொடுத்தது. அரசாங்கத்திற்கு எதிராக வேலை நிறுத்தங்களும், இனக் கலவரமும், வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களும் இடம்பெற்றன.</p>

<p>சாட்டுப்போக்கு தேடிய சில பிரிவினர் தேசிய கீதத்தின் மீது பழி போட்டனர். (இதில் சுயலாபமும் சம்பந்தப்பட்டிருக்கலாம்.) பண்டாரநாயக்கவின் ஆட்சியில் நாட்டுக்கு வந்த கேடுகளுக்கு இந்த தேசிய கீதமே காரணமென பகுத்தறிவற்ற முறையில் வெறித்தனமான கிளர்ச்சியூட்டும் மூடநம்பிக்கை பிரச்சாரப்படுத்தப்பட்டது.</p>

<p><strong>பிரச்சாரம்</strong></p>

<p>நமோ நமோ மாதா வுக்கு எதிராக ஒரு நச்சுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 'நமோ நமோ மாதா' வின் மாத்திரைகள் அதிர்ஷ்டமற்றவை எனவும் நாட்டின் துன்பங்களுக்கும்  ஏற்பட்ட கெடுதிகளுக்கும் காரணமானவை எனவும் குற்றஞ் சாட்டப்பட்டது. பாடலின் தொடக்கத்தில் வரும் 'ந' என்ற எழுத்து தீங்கு தருவது என கூறப்பட்டது. முதல் மூன்று அசைகளினதும் சீர் நாட்டிற்கு கெடுதி சேர்ப்பதாக உள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டது. ந-மோ-ந என்ற தொடக்க அசைகள் குறில்-நெடில்-குறில் என அமைந்தமை கெடுதி விளைவிக்கும் ஒழுங்கு (சீர்) என கூறப்பட்டது.</p>

<p>விமர்சனங்கள் அதிகரித்தபோது, இந்தக் குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு ஆனந்த சமரக்கோன் தள்ளப்பட்டார்.  அவர் பத்திரிகை விவாதங்களில் பங்குபற்றினார். 'நமோ நமோ மாதாவை' பாதுகாக்க பொதுக் கூட்டங்களிலும் உரையாற்றினார்.</p>

<p>சமரக்கோனுக்கு உண்டான நிதிநெருக்கடி, நிலைமையை மேலும் மோசமாக்கியது. இவர் இலங்கை வானொலியில் நடத்தப்பட்ட கல்வி சேவையில் நிகழ்ச்சிகளை ஒழுங்காக நடத்தினாலும் இவரது சிறப்பான பாடல்கள் வர்த்தக ரீதியில் வெற்றி பெறவில்லை. இவர் 1957 இல் அமரனீய லங்கா என்னும் இசை – நடன நிகழ்வை தயாரித்தார். ஆனால் இது படுதோல்வி கண்டது. 'நமோ நமோ மாதா' மீதான மூர்க்கத்தனமான தாக்குதல் சமரக்கோனின் மன அமைதியை கெடுத்தது.</p>

<p>செப்டெம்பர் 1959 இல் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டார். 1960 மார்ச்சில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் ஒன்றுக்கு வழிவகுத்தது. டட்லி சேனாநாயக்கவின் சிறுபான்மை அரசாங்கம் சொற்ப காலத்தில் வீழ்ச்சி கண்டது. புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஜூலை 1960 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை இலகுவாக கைப்பற்றியது. பண்டார நாயக்காவின் மனைவி சிறிமா பண்டாரநாயக்கா பிரதமரானார்.</p>

<p>புதிய அரசாங்கம் 'நமோ நமோ மாதா' வுக்கு எதிரான பிரசாரத்தை பெரிய விடயமாக எடுத்துக்கொண்டது. உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான மைத்திரிபால சேனாநாயக்க இந்த பிரச்சினையை ஆராயவும், நாட்டின் துன்பங்களுக்கு இந்த தேசிய கீதம் காரணமாக அமைகின்றதா, இல்லையா என தீர்மானிக்கவும் என நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தார்.</p>

<p>இந்தக் குழு 'நமோ நமோ மாதா' என்னும் சொற்களை நீக்கி, பதிலாக 'ஸ்ரீலங்கா மாதா' என்னும் சொற்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என என சிபாரிசு செய்தது. ஆனந்த சமரக்கோன் இதை கடுமையாக எதிர்த்தார். ஆயினும் அரசாங்கம் குழுவினர் சிபாரிசை ஏற்று பெப்ரவரி 1961 இல் ஒரு தலைப்பட்சமாக தேசிய கீதத்தில் மாற்றத்தை செய்தது.</p>

<p>இதற்கு ஆனந்த சமரக்கோனின் சம்மதம் பெறப்படவில்லை. அரசாங்கத்திடம் பதிப்புரிமை இருந்தப்படியால், இவரலர் இந்த எதேச்சாதிகார நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை.</p>

<p><strong>மனதை கலங்க வைத்த கட்டுரை</strong></p>

<p>இதனால் விளைந்த சோகத்தில் ஆனந்த சமரகோன் உருக்குலைந்து போனார். குமுதினி ஹெட்டியாராய்ச்சி எனும் பிரபல இதழியலாளர் சில வருடங்களுக்கு முன் சண்டே ரைம்ஸ்' பத்திரிகையில் ஆனந்த சமரக்கோனைப்பற்றி மனதை உருக்க வைக்கும் கட்டுரை ஒன்றை எழுதினார். ஆந்த கட்டுரையில், தனது பெரியப்பா இந்த விடயத்தால் எவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை கவிஞரின் பெறாமகன் சுனில் சமரக்கோனின் வார்த்தைகளில் தந்துள்ளார்.</p>

<p>ஒரு நாள் சுனில் பதினொரு வயது பையனாக இருந்தபோது அவனது பெரியப்பா அவரது பேபி ஒஸ்டின் காரை 'கேட்' அருகில் நிறுத்தி விட்டு கத்தினார். 'மகனே எனது தலையை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் வேறு தலையை பொருத்தியுள்ளார்கள்.'</p>

<p>'பெரியப்பா இப்படிக் கூறியதன் அர்த்தம் எனக்கு அப்போது விளங்கவில்லை. அவர் உண்மையில் தேசிய கீதத்தில் முதல் வரியான 'நமோ நமோ மாதாவை' நீக்கிவிட்டு பதிலுக்கு ஸ்ரீ லங்கா மாதா என பிரதியீடு செய்ததைதான் அவ்வாறு கூறினார்' என தேசிய கீதத்தை இயற்றிய ஆனந்த சமரக்கோனின் பெறாமகன் சுனில் சமரக்கோன் கூறினார்.</p>

<p>'தனக்கு சஞ்சலம் ஏற்பட்ட சமயங்களில் அவர் அப்பாவுடன் பேச வந்தது எனக்கு ஞாபகமாகவுள்ளது. அவர் காரை நிறுத்தியப்போது அவரை வரவேற்க நான் சென்றேன். அப்போது எனது தோளில் தன் கைகளை வைத்து, பெரும் சோகத்துடன் இந்த வார்த்தைகளை கூறினார். இதன் பின் அவர் பழைய மாதிரி வரவேயில்லை. அவரிடம் சொல்லாமலேயே அவர்கள் அதை மாற்றிவிட்டனர். 'இவ்வாறு சுனிலை மேற்கோள் காட் குமுதினி எழுதினார்.</p>

<p>ஏபரல் 5 , 1962 ஆனந்த சமரக்கோன் மரணித்த நாள். கதவை தட்டியும் எழும்பாதிருந்தமையால் கதவை உடைக்க வேண்டியிருந்தது. கூடுதல் நித்திரை மாத்திரைகளை எடுத்தால் மரணம் ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. தனது கீதம் எவ்வாறு உருக்குலைக்கப்பட்டது என அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் டட்லி சேனநாயக்கவுக்கு முறையிடும் கடிதம் ஒன்று மேசையில் கிடந்தது. தியானத்திலுள்ள சாந்த மூர்த்தியான புத்தரை மான் ஒன்று பார்ப்பதைப் போன்ற படம் முக்காலியில் இருந்தது.</p>

<p><strong>நூற்றாண்டு விழா</strong></p>

<p>இவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், ரைம்ஸ் ஒப் சிலோன்' பத்திரிகையின் 'ரைம்ஸ்மான்' பத்திக்கு ஒரு கடிதம் எழுதினார்.</p>

<p>எனது கீதத்துக்கு தலையை வெட்டி விட்டனர். அது அந்த பாடலை மட்டும் அழிக்கவில்லை. அதை எழுதியவரின் வாழ்க்கையும் அழித்துவிட்டது. நான் விரக்தியிலுள்ளேன். என் இதயம் நொறுங்கிவிட்டது. ஒரு அப்பாவி கவிஞனுக்கு இப்படியெல்லாம் செய்யக் கூடிய நாட்டில் வாழ்வது துரதிஷ்டமே'. சாவதே நல்லது''</p>

<p>இந்த நாட்டுக்கு தேசிய கீதத்தை காணிக்கையாக அளித்த கவிஞரும் பாடகருமான ஆனந்த சமரக்கோனின் பிறப்பு நூற்றாண்டு ஜனவரி 13, 2011 அன்று ஆகும். இந்த  நாட்டுக்கு இவரை பெரியளவில் நினைவு கூறவேண்டிய கடப்பாடு உள்ளது.</p>

<p>இவரது தேசிய கீதத்தை எந்த மொழியில் பாடலாம் என அற்பத்தனமாக சச்சரவுகளில் ஈடுபடுதவதற்குப் பதிலாக எமக்கு தேசிய கீதத்தை தந்த இந்த மனிதனின் பிறப்பு நூற்றாண்டை கொண்டாடுவது எவ்வளவோ பயனுடைய விடயமாக இருக்கும்.</p>

<p><em>(தமிழில்: ந. கிருஷ்ணராசா)</em></p>

<p><em>நன்றி: தமிழ் மிரர்</em></p>]]>
    </content>
</entry>
<entry>
    <title>மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் நினைவு தினம் ~ ஜனவரி 15</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2011/01/_15.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=359" title="மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் நினைவு தினம் ~ ஜனவரி 15" />
    <id>tag:ootru.com,2011://1.359</id>
    
    <published>2011-01-15T04:52:38Z</published>
    <updated>2011-01-15T12:56:59Z</updated>
    
    <summary>அன்பு பட்டை போடப் போடத்தான் பள பளக்கும் வைரமே மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான் மினு மினுக்கும் தங்கமே அரும்பு மலர மலரத்தான் அளிக்கும் மணத்தை மலருமே அன்பு பெருகப் பெருகத்தான் அமைதி அடையும் உலகமே -குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா (1922-1989) [மார்ட்டின் லூதர் கிங் நினைவு கண்காட்சி ~ படக் கோவை]...</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><a href="http://www.mlktamil.blogspot.com/"><strong>அன்பு</strong></a><br />
பட்டை போடப் போடத்தான் <br />
பள பளக்கும் வைரமே </p>

<p>மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான் <br />
மினு மினுக்கும் தங்கமே </p>

<p>அரும்பு மலர மலரத்தான் <br />
அளிக்கும் மணத்தை மலருமே </p>

<p>அன்பு பெருகப் பெருகத்தான் <br />
அமைதி அடையும் உலகமே -குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா (1922-1989)</p>

<p>[<a href="http://www.mlktamil.blogspot.com/">மார்ட்டின் லூதர் கிங் நினைவு கண்காட்சி ~ படக் கோவை</a>]</p>]]>
        
    </content>
</entry>
<entry>
    <title>ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையும் புலம்பெயர்ந்த தமிழர்களும்</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2010/12/post_294.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=358" title="ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையும் புலம்பெயர்ந்த தமிழர்களும்" />
    <id>tag:ootru.com,2010://1.358</id>
    
    <published>2010-12-19T03:55:32Z</published>
    <updated>2010-12-19T21:46:38Z</updated>
    
    <summary>டி.பி.எஸ். ஜெயராஜ் யூ.கே. ரைம்ஸ் பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் ஹாடிங், பென் மஸின்ரயர் ஆகியோர் 2010 டிசெம்பர் 01 ஆம் திகதி, லண்டனில் உள்ள டோசெஸ்ட்ரா ஹோட்டலைவிட்டுச் செல்ல ஆயத்தமானபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உதவியாளர் ஒருவர் கீழ் மண்டபத்துக்கு அவசரமாக வந்து அவர்களுடன் பேசினார். &apos;ஜனாதிபதி ராஜபக்ஷ உங்களை அவசரமாக பார்க்க விரும்புகிறார். தயவுசெய்து உங்களால்...</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><strong>டி.பி.எஸ். ஜெயராஜ்</strong></p>

<p><strong>யூ.</strong>கே. ரைம்ஸ் பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் ஹாடிங், பென் மஸின்ரயர் ஆகியோர் 2010 டிசெம்பர் 01 ஆம் திகதி, லண்டனில் உள்ள டோசெஸ்ட்ரா ஹோட்டலைவிட்டுச் செல்ல ஆயத்தமானபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உதவியாளர் ஒருவர் கீழ் மண்டபத்துக்கு அவசரமாக வந்து அவர்களுடன் பேசினார்.</p>

<p>'ஜனாதிபதி ராஜபக்ஷ உங்களை அவசரமாக பார்க்க விரும்புகிறார். தயவுசெய்து உங்களால் வரமுடியுமா?' என ஜனாதிபதியின் தூதுவர் கேட்டார்.</p>]]>
        <![CDATA[<p>இரண்டு பத்திரிகையாளர்களுமே அப்போதுதான் ஜனாதிபதியுடனான ஒரு மணிநேர நேர்முகத்தை முடிந்துவிட்டு வந்திருந்தனர். அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டனர்.</p>

<p>'ரைம்ஸ்' பத்திரிகையை சேர்ந்த இந்த பத்திரிகையாள்ரகள் மேலே போனபோது கொறிடோரில் பொறுமையிழ்ந்த நிலையில் ஜனாதிபதி காத்திருப்பதை கண்டனர். நேர்முகம் அளிக்கும்போது முன்பு காட்டிய நடத்தைக்கு மாறாக இலங்கை ஜனாதிபதி கோபமாகவும் விரக்தியுடனும் காணப்பட்டார்.</p>

<p>ஒக்ஸ்போர்ட் யூனியனின் சமூகத் தலைவர் ஜேம்ஸ் கிங்ஸ்ரன், அடுத்தநாள் (டிசெம்பர் 2) நடைபெறவிருந்த தனது உரை இரத்துச் செய்யப்பட்டுவிட்டதாக அப்போதுதான் அறிவித்ததாக பத்திரிகையாளரிடம் ராஜபக்ஷ கூறினார்.</p>

<p>தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டங்களை ஆயத்தப்படுத்துவதாகவும் ஒக்ஸ்போட் யூனியனால் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க முடியாதெனவும் காரணம் கூறப்பட்டது. 'இந்த பொடியங்களுக்கு இவர் பயந்துவிட்டார்.' - ஜனாதிபதி சட்டென கூறினார்.</p>

<p><strong>ஒக்ஸ்போர்ட் யூனியன்</strong></p>

<p>ஜனாதிபதியின் மனோநிலை விளங்கிக்கொள்ளப்பட கூடியதே. இலங்கையின் தலைவர், ஒக்ஸ்போர்ட் யூனியனில் பேசுவதற்காக பெருமளவு உதவியாளர்களுடன் பிரித்தானியாவுக்கு வந்திருந்தார். இப்போது யூனியன், மிகக்குறுகிய கால அவகாசத்தில் இதை ஒரு தலைப்பட்சமாக இரத்துசெய்துவிட்டது. தமிழீழ விடுதலை புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த ஒரு மனிதருக்கு நிச்சியமாக இது அரசியல் ரீதியான அவமதிப்பே. இப்போது பிரித்தானியாவில் உள்ள புலிகளின் ஆரதவாளர்கள் ஏற்கெனவே வழங்கப்பட்ட அழைப்பை, ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து மீளப்பெற வைத்ததன் மூலம், பதிலடி கொடுத்துவிட்டனர்.</p>

<p>ஒரு தலைப்பட்சமாக இரத்து செய்யப்பட்டமை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு உண்மையில் அரசியல் ரீதியான சங்கடம்தான். அவர் அண்மைக்காலத்தில் வெற்றிப் பெருமிதத்தில் திளைத்தவர். இவரது உரையை ஒருதலைப்பட்சமாக இரத்துச்செய்த ஒக்ஸ்போர்ட் யூனியனால், இவர் இப்போது இழிந்த இலைக்கஞ்சி குடிக்க வைக்கப்பட்டுள்ளார்.</p>

<p>ஒக்ஸ்போர்ட் யூனியனில் பேசுவதற்காகவே இவ்வளவு தூரம் வந்த இலங்கையில் பிரபலமான அரசுத் தலைவர் கேவலப்படுத்தப்பட்டுள்ளார். ஒக்ஸ்போர்ட் யூனியனின் அவமானப்படுத்தும் நடத்தைக்கு அப்பால் இது மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை மறுத்த பிரச்சினையாகவும் உள்ளது.</p>

<p>முன்னாள் பிரித்தானிய பிரதம அமைச்சர் ஹரோல்ட் மக்மிலனால் மேற்குலகின் பேச்சு சுதந்திரத்தை காக்கும் கொத்தளம் என வர்ணிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவர்,  ஜனாதிபதியின் கருத்து சுதந்திரத்தை மறுத்தமை கசப்பான முரண்நகையாகும்.</p>

<p><strong>அறிக்கை</strong></p>

<p>இந்த கவலை தரும் நிலைமைக்கு இட்டுச்சென்ற நிலைமை யாது?</p>

<p>இது தொடர்பில், ஒக்ஸ்போட் யூனியன் சமூகத்தின் ஊடாக அலுவலர் அலஸ்ரெயர் வோக்கரினால் விளக்க அறிக்கை விடுவிக்கப்பட்டது. அது இவ்வாறு கூறியது:</p>

<p>'இந்த வருடத்தின் முன்பகுதியில் எமது அங்கத்தவர் மத்தியில் உரையாற்ற, அவருக்கு வசதியான திகதியொன்றில் வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒக்ஸ்போட் யூனியன் அழைத்தது. உலகெங்கும் உள்ள பிரபல அரசியல்வாதிகளையும் அரசுத் தலைவர்களையும் அழைக்கும் ஒக்ஸ்போர்ட் யூனியனின் கொள்கைக்கு அமையவே ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.</p>

<p>'திரு.ராஜபக்ஷவினால் இந்த அழைப்பு ஏற்கப்பட்டதால், ஜனாதிபதியின் விஜயத்துக்கான பாதுகாப்பு ஒழுங்குகள் பற்றி எமது யூனியன், தேம்ஸ்வலி பொலிஸுடனும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடனும் விரிவாக பேசியது. பொலிஸாரினால் அண்மையில் எமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட ராஜபக்ஷவின் விஜயம் தொடர்பில் காணப்பட்ட பாதுகாப்பு சம்பந்தமான பயங்கள் காரணமாக, ஜனாதிபதியின் உரை நடைமுறையில் சாத்தியமற்றதென மனவருத்தத்துடன் உணர்ந்து கொண்டு அந்த உரையை இரத்துசெய்ய வேண்டியிருந்தது.'</p>

<p>'இந்த தீர்மானம் கவனமின்றி எடுக்கப்பட்டதல்ல. ஜனாதிபதியின் உரை இரத்து செய்யப்பட்டதையிட்டு யூனியன் ஆழ்ந்த கவலையடைகிறது. முக்கியத்துவம் வாய்ந்த பேச்சாளர்களை அழைக்கின்ற, பேச்சு சுதந்திர கொள்கையை நிலைநிறுத்தும் நீண்டகால பாரம்பரியம் உண்டு. ஆயினும் மிகப்பெரியளவில் நடக்குமென எதிர்பார்க்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஜனாதிபதியின் உரை எதிர்பார்த்ததுபோல சமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடக்க முடியும் என நாம் உணரவில்லை.'</p>

<p>'உரையாற்ற வருவோர் தொடர்பில் யூனியன் அரசியல் ரீதியாக நடுநிலையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. எமது இந்த தீர்மானம், திரு.இராஜபக்ஷவின் அரசியல் நிலைப்பாடு, அவரது அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்பவற்றுடன் தொடர்புப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது அல்ல'.</p>

<p>'கடந்த ஐந்து வருடங்களாக இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தவர் என்ற வகையில் திரு.ராஜபக்ஷ, தனது உரையில் பிராந்தியத்தின் அரசியல் நிலைப்பற்றி தனித்துவமான விளக்கத்தை வழங்குவாரென எமது யூனியன் நினைத்தது. இந்த துரதிஷ்டமான இரத்தையிட்டு எமது உறுப்பினர்களிடம் சங்கம் மன்னிப்பு கோருகின்றது.'</p>

<p>டிசெம்பர் 02 ஆம் திகதிக்கு நிரலிக்கப்பட்ட இந்த நிகழ்வு, முதலில் நவம்பர் 8 இல் நடப்பதாக இருந்தது. பின்னர், ஜனாதிபதியே கேட்டுக்கொண்டதற்கு இணங்க டிசெம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p>

<p>நவம்பர் மாதம் ராஜபக்ஷவுக்கு மும்முரமான வேலைகள் மிகுந்த காலமாக இருந்தது. இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதிவியேற்ற, புதிய மந்திரி சபை அமைத்தல், வரவு செலவுத்திட்டம் தயாரித்தல், பாகிஸ்தானின் ஆஷிப் சர்தாரி, இந்தியாவின் எஸ்.எம்.கிருஷ்னா போன்ற இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள முக்கியஸ்தர்களை சந்தித்தல் என நெருக்கமாக பல விடயங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.</p>

<p><strong>ஒத்திப்போடுதல்</strong></p>

<p>இந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதி ராஜபக்ஷ டிசெம்பர் மாதத்துக்கு தனது உரையை ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். யுத்தக் குற்றவாளி என கைது செய்யப்படலாம் என்ற பயத்தினாலேயே இலங்கையில் அரசுத் தலைவர் பிரித்தானியாவுக்கு வர தயங்கினார் என்ற ஊகங்கள் பலத்த கருத்துமோதலுக்கு காரணமாயின.</p>

<p>சர்வதேச நியாயாதிக்கத்தின் தத்துவத்தின் உதவியுடன், மே 2009 இல் நடந்த புலிகளுக்கெதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இலங்கை ஆயுதப்படைகளினால் செய்யப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்றங்களுக்காக ஜனாதிபதி மீது குற்றம் சுமத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஊடகங்களின் சில பிரிவுகளில் செய்திகள் காணப்பட்டன.</p>

<p>உலக தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே காணப்படும் புலிசார்பான ஆட்கள் ஊடகங்கள் ஊடாக தமது உன்மத்தத்தை வெளிப்படுத்தியதுடன் யுத்தக்குற்றவாளியாக கைது செய்யப்படலாம் என்ற பயம் காரணமாக ராஜபக்ஷ பின்வாங்கியதாக பல செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர் நவம்பர் மாத்தத்தில் முதலில் திட்டமிட்டவாறு வந்திருந்தால் முன்னாள் சிலிநாட்டு சர்வாதிகாரிக்கு ஏற்பட்ட கதி ஏற்பட்டிருக்கும் எனவும் பேசப்பட்டது.</p>

<p>இதன் தாக்கம் இலங்கையிலும் வெளிப்பட்டது. கொழும்பு பத்திரிகைகளில், சர்வதேச நியாயாதிக்க தத்துவம் ஜனாதிபதிக்கு எதிராக பயன்படுத்தப்படும் சாத்தியம், அதன் விளைவுகள் பற்றி பல கட்டுரைகள் வெளியாகின.</p>

<p>இலங்கை ஜனாதிபதி பிரித்தானியாவுக்கு போவதனால் 'கைது செய்யப்படும்' ஆபத்துக்கு முகங்கொடுக்கக் கூடாது என சிலவட்டாரங்கள் கருதின.</p>

<p>லண்டனுக்கான தனது பயணத்தை ஒத்திப்போடுவதனால் ராஜபக்ஷ கால அவகாசத்தை பெற்றுக்கொண்டார் என சில ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன. விசாரணை நடைபெறாது என்ற பாதுகாப்பு உறுதியை, பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள இந்த கால அவகாசத்தை ஜனாதிபதி பயன்படுத்துவார் எனவும் கூறப்பட்டது. இவ்வாறான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டால் டிசெம்பரில் போவார் என்றும், இல்லாதுவிடின்  போகமாட்டார் என்றும் கருதப்பட்டது.</p>

<p><strong>சவால்</strong></p>

<p>பிரித்தானியாவில் கைது செய்யப்படுவார் என்ற மிரட்டலுக்கு பயந்துவிட்டார் எனக் கூறியவர்கள், மெதமுலனவைச் சேர்ந்த ராஜபக்ஷ யார் என விளங்கியிருக்கவில்லை. சவால்களுக்கு பயந்து பின்வாங்குபவர் அல்ல ஜனாதிபதி. அவர், கைது செய்யப்படும் சாத்தியம் கருதி லண்டனுக்கு போகாமல் விடவில்லை.</p>

<p>தனது தனிப்பட்ட, அரசியல் துணிவுக்கு அப்பால் அவர் லண்டனுக்கு போவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஒக்ஸ்போட் அழைப்பை நிராகரிக்க அவர் விரும்பவில்லை. அவர் ஏற்கெனவே 2008 இல் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றியுள்ளார். இப்போது அவர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். எல்.ரீ.ரீ.ஈ. ஆட்களின் கூத்துக்கள் காரணமாக ராஜபக்ஷ இந்த சந்தர்ப்பத்தை தவறவிட விரும்பவில்லை.</p>

<p>ஒக்ஸ்போர்ட் யூனியன் என அறியப்படும் ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகத்தில் உரையாற்ற கிடைக்கும் அழைப்பு மிகவும் கௌரவமான மதிப்பாக கருதப்படுகிறது. ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகம், ஒக்ஸ்போட் யூனியன் மாணவர் யூனியனிலிருந்து (OUSU) வேறுப்பட்டது. இது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் பிரதிநிதித்துவ அமைப்பு ஆகும். (OUSU) இல் 20000 வரையிலான அங்கத்தவர்கள் உள்ளனர்.</p>

<p>ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகம் பல்கலைக்கழகத்தின் தற்போதைய மாணவர்களும் பழைய மாணவர்களும் இணைந்த சங்கமாகும். இது பேச்சுத்திறமைக்கும், விவாதத்துக்கும் பேர் போனது. 1823 இல் அமைக்கப்பட்ட இது, பிரித்தானியாவில் உள்ள இரண்டாவது மிகப்பழைய பல்கலைக்கழக யூனியன் ஆகும். (கேம்றிட்ஜ் இதைவிட பழைமையானது).</p>

<p>ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவராக தெரிவுசெய்யப்படுவது ஒக்ஸ்- பிறிட்ஜ் வட்டாரங்களில் மகத்தான சாதனையாக கருதப்படுகின்றது. சுவாரஷ்யமான விடயமாக, நான்கு இலங்கையர்கள் ஒக்ஸ்போர்ட் யூனியன் தலைவர்களாக இருந்துள்ளனர். இவர்களில் மூவர் ஆண்கள். ஒருவர் பெண்.</p>

<p><strong>தலைவர்கள்</strong></p>

<p>முதலாவது தலைவராக தெரிவு செய்யப்ட்ட இலங்கையர் றோயல் கல்லூரி பழைய மாணவனான லலித் அத்துலத்முதலியாவார். இவர் 1958 இல் தெரிவு செய்யப்பட்டார். அடுத்ததாக கண்டி திரித்துவ கல்லூரி பழைய மாணவனான லக்ஷ்மன் கதிர்காமர் 1959 இல் தெரிவு செய்யப்பட்டார். 1983 இல் தோமஸ் கல்லூரி மாணவர் ஒருவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். அவர் ஹிலாலி நூர்தீன் என்பவராவார். மூன்று வருடங்களின் பின் 1986 இல் முதலாவது இலங்கைப் பெண் தெரிவுசெய்யப்பட்டார். அவர் கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரி பழைய மாணவியான ஜயசுந்தரி வில்சன் ஆவார்.</p>

<p>ஒக்ஸ்போர்ட் யூனியன் தலைவராக தெரிவு செய்யப்பட்ட இலங்கையரில் ஒருவர் சிங்களவர், இருவர் தமிழர், ஒருவர் முஸ்லிம்.</p>

<p>இலங்கை, ஒக்ஸ்போர்ட் யூனியன் ஆகியவை சம்பந்தப்பட்ட சோகமான நிகழ்வு ஒன்று 1959 இல் இடம்பெற்றது. அப்போது பிரதமராகவிருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க செம்டெம்பர் 1959 இல் யூனியனில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.</p>

<p>கொழும்பிலிருந்து புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவர், வண. தலாதுவ சோமராம தேரோவினால் சுடப்பட்டு அடுத்த நாள் மரணமானார். லக்ஷ்மன் கதிர்காமர் அவருக்காக உரையாற்றினார்.</p>

<p>பல பிரபலமான முக்கியஸ்தர்கள் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றியுள்ளனர்.  இவ்வாறு உரையாற்றியவர்களில் அல்பேட் ஐன்ஸ்டீன், வின்சன்ட் சேர்ச்சில், தலாய் லாமா, அன்னை திரேஸா, றிச்சரட் நிக்ஸன், ஜிம்மி காட்டர், றொனால்ட் நீகன், ரொபர்ட் கென்னடி, ஹென்றி கீஸிஞ்சர், ஜோன் மக்கெயின் டேவிட் லாஞ்ச், பர்வேஸ் முஷாரப், ஸ்டீபன் ஹோக்கிங், றிச்சர்ட் டோகின், செரி யூத்,  ஜெரி அடம்ஸ் ஆகியோர் அடங்குவர்.</p>

<p>இந்த பின்புலத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ பிரித்தானியாவுக்கு போக விரும்பியது இயற்கையானதே. சர்வதேச நியாயாதிக்கம் தனக்கெதிராக பயன்படுத்தப்படும் அபாயம், எந்த நேரத்திலும் அறுந்து தன்மேல் விழலாம் என நூலில் கட்டிய வாள்போல பயப்படுத்தும் நிலையிலும் புலம்பெயர்ந்தோருக்கும், தன்நாட்டு பிரஜைகளுக்கும் ஒரு விடயத்தை நிரூபிக்க விரும்பினார்.</p>

<p>இரண்டாவதாக ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றுவதால் கிடைக்கும் பேரையும் புகழையும் அவர் விரும்பினார்.</p>

<p><strong>பிரச்சாரம்</strong></p>

<p>ஜனாதிபதி ராஜபக்ஷ நவம்பர் 29 இல் லண்டனுக்கு புறப்பட்டுச்சென்று டிசெம்பர் 2 இல் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவார் என அறிந்தபோது, வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. வட்டாரங்கள் திடுக்குற்றன. அவர்கள் தமது பிரச்சாரத்தை தாமே நம்பி, ராஜபக்ஷ பயத்தினால் இனி வரமாட்டார் என நினைத்திருந்தனர். தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே காணப்படும் புலிகளின் இன்னுமொரு இயல்பு, விடயங்களுக்கு ஒளிப்பாய்ச்சுவதைவிட சூடு கிளப்புவுதில் கெட்டிக்காரராக இருப்பதாகும். இந்தப்பத்தி பல தடவைகளில் இவர்களை 'வாய்ப்பேச்சு வீரர்கள்'  என விமர்சித்துள்ளது. இவர்கள் NATO உறுப்பினர்களாவர். இதன் பொருள் NO ACTION TALK ONLY என்பதாகும்.</p>

<p>சர்வதேச நியாயாதிக்கத்தின் உதவியுடன் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்தல் என்பதும் வெறும் புசத்தலின் பாற்பட்டதே. இது தொடர்பில் செயற்பாடுகள் திட்டமிடப்படுகின்றன என பல செய்திகள் வெளிவந்தன. ஆனால்,  பிரத்தியட்சமான நடவடிக்கைகள் இல்லையென்றே கூறலாம்.</p>

<p>இப்படியான நடவடிக்கைகள் இரகசியமாக மௌனமாக மேற்கொள்ளப்படும் என்பதே யதார்த்தம். ஆனால், இந்த விடயத்தில் பேச்சு பெரிதாக இருந்ததே ஒழிய, விஷயம் ஏதும் நடக்கவில்லை. சலசலப்பே ஒழிய பலகாரம் இல்லை என்ற கதைதான் இது.</p>

<p>மஹிந்த லண்டன் வருகிறார் என்ற செய்தியை அறிந்ததும் எல்.ரீ.ரீ.ஈ. அமுக்கக் குழுவினர், அதிர்ச்சியடைந்ததனர். தகவல் தரவல்ல தமிழ் மூலமொன்றின் அறிக்கைப்படி ஜனாதிபதிக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான நடவடிக்கை எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. மேலும் புலம்பெயர்ந்த புலிகளுக்கு ஜனாதிபதியின் லண்டன் விஜயம் உண்மையிலேயே வெளிப்படையான சவாலாக இருந்தது.</p>

<p>இப்படியான சூழலில்தான், எல்.ரீ.ரீ.ஈ. மற்றும் எல்.ரீ.ரீ.ஈ. சார்பு ஆட்கள் குறிப்பாக லண்டனில் இருந்தவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டனர். சட்ட நடவடிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக காலம் கடந்திருந்தது. ஆனால் வெகுஜன நடவடிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கான தெரிவுகள் இருக்கவே செய்தன.</p>

<p><strong>ஹீத்ரோ</strong></p>

<p>ஒக்ஸ்போர்ட்டில் ஜனாதிபதிக்கு நடக்கக் கூடியது எது என்பதன் அறிகுறியை ஜனாதிபதி தனி விமானத்தில் லண்டன் வந்தபோது காணக்கூடியதாக இருந்தது. அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுலோக  அட்டைகளை தாங்கிய 300-350 தமிழ் ஆர்வலர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.</p>

<p>அப்போது நிலவிய வானிலையில் நூற்றுக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்;கள் விமான நிலையத்தில் கூடியமை சாதனையென்றே கூறலாம். எல்.ரீ.ரீ.ஈ. இன் இலச்சினையாகிய உறுமும் புலியுடன் கூடிய கொடிகள், சுலோக அட்டைகளை அவர்கள் வைத்திருந்தனர். புலிசார்பு ஆட்கள் இது தமிழீழத்தின் தேசிய கொடி - என்றும் புலிக்கொடி அல்லவென்றும் கூறுகின்றனர். ஆனால், இதனால் வரலாறு பற்றிய அறிவில்லாத இளம் தலைமுறையினரை தவிர வேறுயாரையும் ஏமாற்ற முடியாது.</p>

<p>இந்த சத்தமிடும் ஆர்ப்பாட்டக்காரர்களை தவிர்க்கும் வகையில் அதிவிசேட முக்கியஸ்தர்களுக்கான விசேட வழியூடாக ஜனாதிபதி விரைந்து அழைத்துச்செல்லப்பட்டார். ஆயினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் 15 நிமிட பிரபல்யத்தை பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு பரவலான ஊடகங்களின் கவனமும் கிடைத்தது.</p>

<p>பின்னர், பிரித்தானிய தமிழ் ஆர்வலர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒக்ஸ்போட்  யூனியனில் உரையாற்ற ஒக்ஸ்போர்ட் விடுத்த அழைப்புக்கு எதிராக பரந்தளவிலான இயக்கத்தை தொடக்கினர்.</p>

<p><strong>எதிர்ப்பு இயக்கம்</strong></p>

<p>மேற்கத்தைய நாடுகளில் இருந்த பல தமிழ் நிறுவனங்கள் நிரலிக்கப்பட்டிருந்த உரைக்கு எதிராக கடுமையான இயக்கத்தில் ஈடுபட்டன. பொதுவாக பிரித்தானிய அரசாங்கத்திற்கும், குறிப்பாக ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கும் முறையீடுகள் செய்யப்பட்டன.  ஏராளமான கடிதங்களும், விண்ணப்பங்களும், மின்னஞ்சல்களும், தொலைநகல்களும் ஒக்ஸ்போர்ட்டின் உத்தியோகத்தர்களுக்கு பல தொலைபேசி அழைப்புகளும் இடம்பெற்றன.</p>

<p>ஜனாதிபதி ராஜபக்ஷ தனது உரையை நிகழ்த்தவிருந்த டிசெம்பர் 2 ஆம் திகதி ஒக்ஸ்போட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒக்ஸ்போட்டில் கூடி அன்று முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிடப்பட்டது.</p>

<p>மஹிந்தவுக்கு எதிராக வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளை ஒக்ஸ்போர்ட் சுவர்களில் ஒட்டுவதற்கான திட்டமும் இருந்தது. தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்படவிருந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்ஷ பேசவிருந்த இடத்துக்குப் போகும் சகல பாதைகளையும் தடுக்க திட்டமிட்டிருந்தனர்.</p>

<p>ஒக்ஸ்போர்ட்டுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்து செல்வதற்காக பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் விசேட பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.</p>

<p>முன்னாள்  இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை  நீதியீனமாக நடத்தியதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட சிங்கள செயற்படுநர்களும் அங்கே வரவிருந்தமை இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் விசேட அம்சமாக அமையவிருந்தது.</p>

<p>இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் அல்லாத மனித உரிமை நிறுவனங்களும், ஆர்வலர்களும் பங்குகொள்ள இருந்ததாக அறியப்படுகிறது. 2009 இல் உண்ணாவிரதமிருந்த ரிம் மார்ட்டின் தலைமையிலான “Act Now” என்னும் நிறுவனம் இவற்றுள் ஒன்றாகும்.</p>

<p>பிரித்தானிய தமிழ் அரங்கம் (BTF) இந்த ஆர்ப்பாட்ட இயக்கத்தை திட்டமிட்டு இணைப்பு செய்தது. இது உலகத் தமிழ் அரங்கத்தின் (WTF) ஒரு கூறாகும். உலக எல்.ரீ.ரீ.ஈ. இளைஞர் பிரிவு அல்லது (TYO) அல்லது இளைஞர் நிறுவனம் தேவையான மனிதவலுவை வழங்கியது.</p>

<p>ஐரோப்பிய பெரு நிலப்பரப்பிலிருந்தும் பலநூற்றுக் கணக்கான ஆர்வலர்கள் ஆங்கில கால்வாயை கடந்து ஒக்ஸ்போர்ட் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளவும் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.</p>

<p><strong>நிலை மாறுதல்</strong></p>

<p>பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனமான ' சனல் -4;' இராணுவ சிப்பாய்கள் குரூரமாக கைதிகளை கொல்வதாக கூறப்பட்ட வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியதன் பின், அரசியல் நிலைமை உணர்ச்சி கொந்தளிக்கும் நிலைமைக்கு போயிற்று.</p>

<p>இணையத்தில் பரவலாக காட்டப்பட்ட வீடியோ காட்சியில் நிர்வாணமாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அருவருப்பான, பயங்கர உருவம் காட்டப்பட்டது. இது வன்னியில் எல்.ரீ.ரீ.ஈ.யினால்; நடத்தப்பட்ட தொலைக்காட்சியின் அறிவிப்பாளரான இசைப்பிரியாவின் படமென கூறப்பட்டது. இவர் ஏற்கெனவே யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.</p>

<p>குரூரமாக கொலை செய்யப்பட்டவர்களில் சிரேஷ்ட எல்.ரீ.ரீ.ஈ. தளபதி ' கேணல்' ரமேஷும் ஒருவர் எனக் குற்றம்சாட்டப்பட்டது. ரமேஷ் முன்பு யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என அரசாங்கம் அறிவித்திருந்தபோதும், ரமேஷ் இராணுவத்திடம்; சரணடைந்தார் என தமிழ் செய்தி வழங்குநர்கள் குற்றம் சாட்டினர். இணையத் தளத்தில் காட்டப்பட்ட இன்னொரு வீடியோ காட்சியில் ரமேஷ், சீருடை  அணிந்தவர்களுடன் கெஞ்சிப் பேசும் காட்சி காட்டப்பட்டது. இந்த ரீவி படங்களையிட்டு உண்டான கருத்துமுரண்பாடுகளும், இது தொடர்பான குற்றச்சாட்டுகளும் கொந்தளிப்பான நிலைமையை ஏற்படுத்தின. அத்துடன் ஒக்ஸ்போர்ட்டில் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரைமீதும் தமிழ் வட்டாரங்களில் கசப்புணர்வை தோற்றுவித்தது. முக்கியமான அந்த நாளன்று ஆயிரக்கணக்கான தமிழர்களை ஒக்ஸ்போட்டில் குவிந்து பலத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.</p>

<p><strong>ஒக்ஸ்போர்ட்</strong></p>

<p>பிரித்தானியாவின் பிரதான தொலைக்காட்சி ஒன்றிலும் பத்திரிகைகளிலும் மேறகொள்ளப்பட்ட போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான விடாப்பிடியான பிரச்சாரம் ஒக்ஸ்போர்ட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது ஒக்ஸ்போர்ட் வட்டாரத்திலும் இந்த நிகழ்வுப்பற்றிய விசேட அக்கறை ஏற்பட்டிருந்தது.</p>

<p>ஒக்ஸ்போர்ட் மாணவர்கள் மத்தியில் இரண்டு சிந்தனை பள்ளிகள் காணப்பட்டன. ஒரு பள்ளி, ஜனாதிபதி ராஜபஷ யூனியனில் பேசவிருந்ததை முழுமையாக எதிர்த்தது. இந்த பிரிவினர் ராஜபக்ஷ யுத்தக்குற்றம் இழைத்தவர் எனவும் இவருக்கு யூனியனில் உரையாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்ட கூடாதெனவும் திடமாக நம்பினர்.</p>

<p>இவர்கள், யூனியன் உரையை நடத்துமாயின் ராஜபக்ஷவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும் அறிகுறிகளை காட்டினர்.</p>

<p>அடுத்த சிந்தனைப்பள்ளியினர் ராஜபக்ஷவுக்கு அவரது பேச்சுரிமை வழங்கப்படவேண்டும் என கருதினர். இந்த கருத்துடையோர் இவர் யூனியனில் உரையாற்றுவதை விரும்பினர். ஆனால், உரையின் முடிவில் வில்லங்கமான கேள்விகளால் துளைத்தெடுக்கும் திட்டங்களை கொண்டிருந்தனர். குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்களை ஒடுக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி, பல்கலைக்கழக மாணவர் தோழமையின் அடிப்படையில் அவரை விசாரிக்க திட்டமிட்டனர்.</p>

<p>இதிலிருந்து, 'ஒக்ஸ்போர்ட்' அமைப்புக்குள்ளேயே ஜனாதிபதியின் உரைக்கு கணிசமான எதிர்ப்பு உருவாகியிருந்ததை காண முடிந்தது. தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தபோதும் ஜனாதிபதி ராஜபக்ஷ தொடர்பில் ஒக்ஸ்போர்ட்டின் உயர்மட்டத்தில் ஆரவாரமில்லாத மாற்றம் ஒன்று உருவானது.</p>

<p>விரோத மனப்பாங்கு பரவலாக காணப்பட்ட நிலையை பிரித்தானிய சட்ட அமுலாக்கல் அமைப்புகள், இந்த உரைப்பற்றி, பாதுகாப்பு தொடர்பில் பேரச்சம் கொண்டனர். குறிப்பிட்ட சில இடங்களை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதும் சில வீதிகளுடாக வாகனங்கள் செல்வதை தடுப்பதும் ஒரு வழியாக யோசிக்கப்பட்டது. ஆனால் இதை பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் விரும்பவில்லை. இவர்கள், மதிப்புமிக்க ஒக்ஸ்போர்ட்  சூழலில் கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை மறுத்ததாக தாம் குற்றஞ்சாட்டப்படுவதை விரும்பவில்லை.</p>

<p><strong>எதிர்விளைவுகள்</strong></p>

<p>கடந்த கால அநுபவம் பற்றிய கசப்பான நினைவுகளும் இருந்தன. 2009 இல் யுத்தத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடந்தபோது பிரித்தானிய பொலிஸார் தமிழ் இளைஞர்களின் ' ஆர்ப்பாட்ட முனைப்பை' கண்டிருந்தனர்.</p>

<p>நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய ஊடக பிரசாரம் காரணமாக தமிழ் வட்டாரங்களில் உணர்ச்சிகள் கிளறப்பட்ட நிலைமையில் ஆர்ப்பாட்டங்கள் மட்டுப்படுத்தும் அல்லது தடுக்கும் முயற்சிகள், வன்முறைகள் உருவாக காரணமாகலாம் என்ற பயம் இருந்தது.</p>

<p>கருத்திலெடுக்கப்பட்ட இன்னொரு வழி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், அவரது பாதுகாப்பு கருதி உரையை நிகழ்த்தாமல் விரும்படி கேட்டுக்கொள்வதாகும்.</p>

<p>அவருக்கு எச்சரிக்கையான அணுகுமுறையை கடைபிடிக்கும்படி ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு இது அரசியல் கௌரவம் பொறுத்தவிடயமாக இருந்தது. அவர் பணிந்து போக விரும்பவில்லை. ஆபத்துக்கு முகங்கொடுக்க பயந்து பணிவது மெதமுலன மஹிந்தவின் இயல்புக்கு மாறானது.</p>

<p>எனவே ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதியோடு இருந்தார். ஒரு இலங்கை அதிகாரி இது பற்றி  கூறியது  ' எதிர்ப்புகள் காணப்படினும் உரையாற்றுவதில் ஜனாதிபதி வெளிப்படுத்திய உறுதிப்பாட்டை அவர்கள் பாராட்டினர்' அவர் வில்லங்கமான கேள்விகளுக்கும் முகங்கொடுத்து தனது அபிப்பிராயத்தை கூற தயாராக இருந்தார். எந்த கட்டத்திலும் ஜனாதிபதி இந்த விடயத்தில் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. 'கிறவப்பட்டு' வளவுக்காரன்' துணிந்து போராட தயாராகவே இருந்தார்.</p>

<p>பிரித்தானிய உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொண்ட இலங்கை உத்தியோகத்தர்கள் சிலர் ,எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடைசெய்யுமாறு கோரினர். பேச்சு சுதந்திரத்தை மதிக்கும் ஒரு ஜனநாயக நாட்டில் இது சாத்தியமில்லையாதலால் இந்த வேண்டுகோள் மறுக்கப்பட்டது.</p>

<p><strong>எரிபற்று நிலை</strong></p>

<p>இந்த நிலையில், சட்ட அமுலாக்கல் அமைப்புகளுக்கு, ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகத்தின் மீது அழுத்தம் பிரயோகிப்பதே ஒரேயொரு தெரிவாக காணப்பட்டது. யூனியன் உத்தியோகத்தர்களுக்கு கொந்தளிப்பு நிலைவரம் பற்றி விளக்கப்பட்டது. ஜனாதிபதியின் உரை நிகழ்த்தப்படுமாயின் அது பாரதூரமான வன்செயலுக்கு வழிவகுக்கும் என விளக்கபட்டது. யூனியனே இதற்கு பொறுப்பு கூறவேண்டியிருக்கும் எனவும் கூறப்பட்டது.</p>

<p>ராஜபக்ஷவின் உரையை தடைசெய்யுமாறு மாணவர் சமுதாயத்தின் பெரும்பான்மையோர் வற்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் யூனியன், சங்கடமான நிலையில் தவித்துக்கொண்டிருந்தது. யூனியனுக்குள்ளே நடந்த ஆழமான கருத்தாடல்களின் பின் முற்றுகையிடப்பட்ட நிலையிலிருந்த ஒக்ஸ்போட் யூனியன் உத்தியோகத்தர்கள், ஜனாதிபதியின் உரையை இரத்துச்செய்து கொந்தளிப்பு நிலைவரத்தை தவிர்த்துக்கொள்ள தீர்மானித்தனர். இவ்வகையான விடயங்கள் ஒக்ஸ்போட் யூனியனின் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது.</p>

<p><strong>இரத்துசெய்தல்</strong></p>

<p>ஒக்ஸ்போர்ட் யூனியன் சமூகம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடாமல் அவர் உரையை இரத்து செய்யும் வழமைக்கு மாறான, ஒரு தலைப்பட்சமான தீர்மானத்தை எடுத்தது, இரத்து பற்றி டிசெம்பர் முதலாம் திகதி ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டது. 'மேற்குலகின் பேச்சு சுதந்திரத்தின் பாதுகாப்பு கொத்தளம்' தனக்கு அதே சுதந்திரத்தை எதேச்சதிகாரமாகவும் திடீரெனவும் மறுக்குமென எதிர்பார்த்திருக்காத ஜனாதிபதிக்கு இது எதிர்பாராத அடியாக இருந்தது.</p>

<p>இருப்பினும் ஒக்ஸ்போர்ட் யூனியனால் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. 1998 இல் தீவிர வலதுசாரி தலைவரான ஜோன் ரின்டல் ஒரு விவாதத்துக்காக அழைக்கப்பட்டிருந்தார். இது மாணவர்களின் ஒரு பிரிவினரால் கடுமையாக எதிர்க்கபட்டது. இவர்களின் எதிர்ப்போடு பொலிஸின் ' ஆலோசனையும்' சேர, விவாதம் இரத்து செய்யப்படுவதில் முடிந்தது.</p>

<p>சர்ச்சைக்குரிய சரித்திர ஆசிரியரும் ஹோலோகோஸ்ட் (ஹிட்லரின் யூத இனப்படுகொலைகள்) மறுப்பாளருமான டேவிட் இர்விங் 2000 ஆண்டில் ' தனிக்கை' பற்றிய விவாத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார்.  இதற்கு எதிராக இடதுசாரிகள், பாஸிஸ எதிர்ப்பாளர்களால் யூத சமுதாய ஆர்வலர்களால் ஒன்றிணைந்த எதிர்ப்பியக்கம் மேற்கொள்ளப்பட்டது.</p>

<p>இது ஒக்ஸ்போட் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்த விவாதம் இறுதியில் இரத்துசெய்யப்பட்டது. ஆனால் 2009 இல் இர்விங் வேறொரு விவாதத்தில் உரையாற்றினார்.</p>

<p>'உதவி வழங்கப்படும் தற்கொலை' என்னும் தலைப்பில் விவாதிப்பதற்காக நன்கு அறியப்பட்ட கருணைக்கொலை பிரச்சாரகர் வைத்தியர் பிலிப் நிட்ஸ்ச் அழைக்கப்பட்டார். இதை நிட்ஸ்ச் ஏற்றுக்கொண்ட பின், வழங்கப்பட்ட அழைப்பை வாபஸ் பெற்று இரண்டாவது கடிதம் அனுப்பப்பட்டது. வைத்தியர் நிட்ஸ்ச்சுடன் கருத்து வேறுபாடு கொண்ட பலமான அமுக்கக்குழு ஒன்று இந்த அழைப்பை இந்த அழைப்பை வாபஸ்பெற யூனியனை வற்புறுத்தியிருக்க வேண்டும். வைத்தியர் நிட்ஸ் இந்த செயலை மாபெரும் தணிக்கை என கூறி இதற்கு எதிராக பல விரிவுரைகளை நிகழ்த்தினார்.</p>

<p>நவம்பர் 2007 இல் ஹோலோகோஸ்ட் மறுக்கும் வரலாற்றாசிரியர் டேவிட் இரவில் மற்றும் பிரித்தானிய தேசிய கட்சி தலைவர் நிக் கிரிஃபின் ஆகிய இருவரையும் பேச்சு சுதந்திரம் என்னும் விடயத்தில் விவாதிப்பதற்கு ஒக்ஸ்போர்ட் யூனியன் அழைத்தது. பாரிய வீதிமறுப்பு அமர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு பேச்சாளர்கள் விவாதத்திற்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டனர். காடைத்தனம் பரவலாக காணப்பட்டது. இறுதியாக இர்வின், கிரிஃபின் ஆகியோர் இருவேறு அறைகளில் தனித்தனியாக உரையாற்றிய இரண்டு சிறிய விவாதங்கள் இடம்பெற்றன.</p>

<p>எனவே மேற்கத்தைய உலகின் பேச்சு சுதந்திரத்தை காக்கும் இறுதிக் கொத்தளத்தினால் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மறுக்கப்பட்ட சந்தரப்பங்கள் பல இருந்ததை காண முடிகிறது. மிரட்டல் காரணமாக ஒக்ஸ்போர்ட் யூனியன் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை வாபஸ் பெற்றமை உண்மையில் கவலை தரும் விடயமே.</p>

<p><strong>விரக்தி</strong></p>

<p>விரக்தி காணப்பட்டபோதும் ஜனாதிபதி கலக்கமடையவில்லை. அவர் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் குறிப்பிட்ட முறையில் ஒரு அறிக்கையை எழுதும்படி கூறினார். ஜனாதிபதியின் அறிக்கை இவ்வாறு கூறியது: 'பாதுகாப்பு காரணங்களுக்காக கௌரவ ஜனாதிபதி ராஜபக்ஷ, பேச்சு சுதந்திரத்தின் தாயகமான ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஆற்றவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம், எல்.ரீ.ரீ.ஈ. சார்பான செயற்படுநர்களின் அழுத்தம் என அறியப்படும் காரணத்துக்காக ஒக்ஸ்போட் யூனியனால் ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்பட்டது.</p>

<p>இது தொடர்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார் என அறியப்படுகிறது: 'இது இரத்து செய்யப்பட்டதையிட்டு நான் கவலையடைகின்றேன். ஆனால், இலங்கைக்கான எனது இலட்சியம் பற்றி பேசக்கூடிய களங்களை ஐக்கிய இராச்சியத்திலும் வேறு இடங்களிலும் பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன். இலங்கையில் வாழ்ந்தாலும் சரி, வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் சரி எங்கள் நாட்டு மக்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் எனது முயற்சியை தொடர்வேன்.</p>

<p>ஐக்கியப்பட்ட நாடு என்றவகையில் எமக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு. நாம் பிரிவினைகளை ஆதிக்கம் செலுத்த விடுவோமாயின் எமது முழுஅளவிலான ஆற்றலை வெளிப்படுத்த முடியாது போய்விடும். 30 வருட கால பிரிவினையும் மோதலும் எமக்கு பின்னால் உள்ளது. சகல இலங்கையருக்குமாக நாம் சமாதானத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டும்'</p>

<p>ஜனாதிபதியின் உரை இரத்துச் செய்யப்பட்டதையிட்டு எல்.ரீ.ரீ.ஈ.இன் ஆட்கள் பேருவகை அடைந்தனர். ஈழவாதிகளிடையே வெற்றிக்களிப்பு காணப்பட்டது. இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னும், டோச்செஸ்ரர் ஹோட்டலுக்கு எதிரிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.</p>

<p>புலி மற்றும் புலி ஆதரவு ஆட்களின் நடத்தை எப்படியிருந்த போதும் ஒருதலைப்பட்சமான இரத்தின் பின்னர் பெருந்தலைவருக்கான (Statesman)  கண்ணியத்துடன் ஜனாதிபதி நடந்துகொண்டமையை பாராட்ட வேண்டும்.</p>

<p>சாதாரணமான ஒருவராக இருந்தால் சீறி, சினந்து கொதித்து, கிளர்ந்து ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் ஜனாதிபதி அழுத்தம் காணப்பட்ட நிலையிலும் அமைதியாக இருந்தார். அவரது உடனடி அறிக்கை பெருந்தன்மையானதாகவும் பாராட்டும்படியும் இருந்தது.</p>

<p>இந்த ஒருதலைப்பட்சமான இரத்து ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியாக சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பிரித்தானிய அதிகார வர்க்கத்தினர் சிலர், தமது சொந்த காரணங்களுக்காக ஜனாதிபதியை அவமதிப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களை பயன்படுத்தினார்கள் என்ற சந்தேகத்திற்கும் இடமுண்டு.</p>

<p>புலிகளினதும் புலிஆதரவாளர்களினதும் பொறுப்பில்லாத நடவடிக்கை ஆத்திரமூட்டலுக்கு காரணமாகலாம் என்பதை மறுப்பதற்கில்லை. இலங்கை தமிழர்களின் பெரும்பகுதியினர், சிதறடிக்கபட்ட தமது வாழ்வை  இலங்கையில் மீளக்கட்டியெழுப்பிக்கொண்டு வாழ்க்கையை கொண்டுபோக முயன்றுக்கொண்டுள்ளனர். இதற்கு புலம்பெயர்ந்தோரின் கூத்தடிப்புகள் எவ்வகையிலும் உதவப்போவதில்லை.</p>

<p><strong>வெற்றிபெருமிதம்</strong></p>

<p>ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரையை இரத்துச்செய்ய வைத்ததை புலம் பெயர்ந்த தமிழர்களின் ஊடக அமைப்புகள் பெருவெற்றியென பெருமையடிக்கின்றனர். இந்த வெற்றிப் பெருமிதம் இலங்கையிலுள்ள சிங்கள கடும்போக்காளர்மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வைரித்த மனங்களும் பலப்பிரயோகமும் நல்லதற்கல்ல.</p>

<p>புலம்பெயர்ந்தோரிடையே உள்ள புலிகள் மற்றும் புலி ஆதரவாளர்களின் முன்வைக்கப்படும் முக்கிய கேள்வி இதுதான்: ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டதால் இலங்கையில் துன்பத்தில் உழலும் தமிழர்கள் அடைந்த இலாபம் என்ன? விளைவுகளை பற்றி கவலைப்படாமல் இதை வெற்றியென நீங்கள் கொண்டாடுகின்றீர்களா? ஏன் நீங்கள் கொண்டாடுகின்றீர்கள்?.</p>

<p>மஹிந்த ராஜபக்ஷ , இலங்கையில் மக்காளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இவருக்கு காட்டப்படும் மரியாதையின்மை இலங்கை மக்களுக்கு அவர்கள் சிங்களவர்களாக அல்லது தமிழர்களாக அல்லது முஸ்லிம்களாக அல்லது பறங்கியர்களாக இருந்தாலும் அவர்களின் மனதை புண்படுத்துவதாகவே அமையும். இப்படியான சமயங்களில் மக்கள் ஜனாதிபதியுடன் அணித்திரள்வர்.</p>

<p>இந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ பெருந்தலைவராக கண்ணியவானாக விடுத்த அறிக்கையை இந்தப்பத்தி மீண்டும் பாராட்டுகிறது.</p>

<p>கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போனமையால் அவருக்கு உண்டான மனவுளைச்சலிலும், ஏமாற்றத்திலும் இந்தப் பத்தி பங்கு கொள்கின்றது. இந்த விடயத்தை அற்பமானதாக கருதும்படியும் இலங்கை மாதாவின் சகல பிள்ளைகளும் சமாதானத்துடன் வாழும் பொருளாதார செழிப்புமிக்க நாட்டை கட்டியெழுப்பும் வழியை தொடரும்படியும் இந்த பத்தி கேட்டுக்கொள்கிறது.</p>

<p><em>நன்றி: தமிழ் மிரர்</em></p>

<p><em>(டெய்லிமிரர் ஆங்கிலப் பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)</em></p>]]>
    </content>
</entry>
<entry>
    <title>எல்.ரீ.ரீ.ஈ. புதிய தலைவரை குறிவைக்கும் அதிகாரிகள்</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2010/12/post_293.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=357" title="எல்.ரீ.ரீ.ஈ. புதிய தலைவரை குறிவைக்கும் அதிகாரிகள்" />
    <id>tag:ootru.com,2010://1.357</id>
    
    <published>2010-12-19T03:52:50Z</published>
    <updated>2010-12-19T21:46:03Z</updated>
    
    <summary>டி.பி.எஸ். ஜெயராஜ் விநாயகம் என்னும் இயக்கப்பெயரில் ஐரோப்பாவில் தொழிற்படும், தன்னைத் தானே தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவரென கூறிக்கொள்ளும் நபர்மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை சென்ற வாரம் இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து மேற்கொண்டனர். சேகரபிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலிருந்து பொலிஸ் மற்றும் புலனாய்வு...</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><strong>டி.பி.எஸ். ஜெயராஜ் </strong></p>

<p><strong>வி</strong>நாயகம் என்னும் இயக்கப்பெயரில் ஐரோப்பாவில் தொழிற்படும், தன்னைத் தானே தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவரென கூறிக்கொள்ளும் நபர்மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை சென்ற வாரம் இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து மேற்கொண்டனர். </p>

<p>சேகரபிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலிருந்து பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் நவம்பர் 24 ஆம் திகதி கேட்டுப் பெற்றுக்கொண்டனர். </p>]]>
        <![CDATA[<p>இந்த நபர் தேசத்தின் நியாயாதிக்க எல்லைக்கு அப்பால் தொழிற்படுவதால், விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் செய்ததாக கூறப்படும் பயங்கரவாத குற்றங்கள் தொடர்பில் 'INTERPOL  சிவப்பு அறிவித்தல்' வழங்க, INTERPOL  என அழைக்கப்படும் சர்வதேச குற்றச்செயல் பொலிஸ் அமைப்பின் சேவைகளை, இலங்கை அதிகாரிகள் கேட்டுப் பெற்றுள்ளனர்.</p>

<p>'INTERPOL சிவப்பு அறிவித்தல்' என்பது சர்வதேச பிடியாணை அல்ல. இது சம்பந்தப்பட்ட நபர் தேசிய நியாயாதிக்கத்தினால் அல்லது சர்சவதேச குற்றச்செயல் நியாயசபைகளால் தேடப்படும்போது வழங்கப்படுபவதாகும்.</p>

<p>குற்றமிழைத்ததாக கருதப்படுபவர்களை கைது செய்து அவரின் நாட்டுக்கு ஒப்படைக்கும் நோக்கில் குறித்த நாட்டுப் பொலிஸாருக்கு அவர்களை தேடிப்பிடிக்க உதவுவதே 'இன்ரபோலின்' வேலையாகும்.</p>

<p>சொந்த நாட்டுக்கு ஒப்படைப்பதற்காக, தேடப்படும் நபரை கைது செய்ய வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் பிடியாணையை உலகம் முழுதும் விநியோகிக்க சிவப்பு அறிவித்தல்கள் அனுமதிக்கும்.</p>

<p>இலங்கை அதிகாரிகளால் முன்வைக்கப்டப்ட ஆவணங்களின்படி, விநாயகம் 46 வயதானவர், நவம்பர் 10, 1964 இல் பிறந்தவர் ஆவார.; 1.53 மீற்றர் உயரமானவர், ஆங்கிலம் தமிழ் ஆகிய மொழிகளை பேசுவார். இவர் கண், தலைமயிர் ஆகியன கறுப்பு.</p>

<p>விநாயகம் என அழைக்கப்படும் இந்த நபரின் முக்கியத்துவத்தின் காரணமாக, இலங்கை இன்ரபோலினதும் மேற்கத்தைய நாடுகளின் சட்ட அமுலாக்கல் நிறுவனங்களினதும் ஒத்துழைப்பை புதிய எல்.ரீ.ரீ.ஈ தலைவரை கைதுசெய்வதற்கு கோரும் என்பதில் சந்தேகம் இல்லை.</p>

<p>விநாயகம் பற்றிய விபரமான ஆவணத்தொகுப்பு ஒன்று தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் விரைவில் அது உலகளாவிய ரீதியில் பொருத்தமான சட்ட அமுலாக்கல் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் கொழும்பிலுள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.</p>

<p><strong>குழப்பம்</strong></p>

<p>விநாயகம் என அறியப்படும் நபரின் உண்மையான ஆளடையாளம் பற்றி காணப்படும் எந்தவொரு குழப்பத்தையும் அகற்ற விசேட கவனம் எடுக்கப்படும். ஐரோப்பாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ. இன் ஒரு பகுதியினர் விநாயகத்தை  சிரேஷ்ட கடற்புலி தளபதியாக காட்ட முற்படுவதே இதற்கான காரணம் ஆகும். மருதங்கேணியை சேர்ந்த தங்கவேலு விநாயகம் அல்லது 'மைக்போஃர்'  முன்னர் பிரதி கடற்புலி தளபதியாக இருந்தவர். படிநிலை அமைப்பில் சூசை, செழியன் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருந்தவர்.</p>

<p>இடது பக்க கண்ணில் குறைபாடு உள்ள விநாயகம் பெபர்வரி 4 ,2009 இல் சண்டையின்போது உயிழந்தார். பிரிகேடியர் பிரசன்ன சில்வாவினால் தலைமை தாங்கப்பட்ட 55 படையணி சாளை கடற்புலி தளத்தை தாக்கியபோது தளத்தை பாதுகாக்கும் போரில் விநாயகம் கொல்லப்பட்டார்.</p>

<p>விநாயகத்தின் உடலம் கிடைக்காவிடினும் கெமுனு வோச் துருப்பினர் அவரது அடையாள அட்டையை கண்டெடுத்தனர். 2009 இன்  இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் வெளிப்பட்ட சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம், தான் புலிகளின் புலனாய்வு பிரிவிலிருந்ததாக எல்.ரீ.ரீ.ஈ. இற்கும் எல்.ரீ.ரீ.ஈ. சார்பு வட்டாரங்களுக்கும் கூறிக்கொண்டார்.</p>

<p>ஆயினும் தந்திரோபாய ரீதியில் விநாயகம், இறந்துபோனதாக அறிவிக்கப்பட்ட கடற்புலி விநாயகம் தானேதான் என 2010 இல் நடிக்கத் தொடங்கினார். இவர், எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தலைவர் பொட்டு அம்மானினால் தான் ஒரு முக்கிய வேலையின் பொருட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் தனது மரணம் பற்றிய அறிக்கைகள் தவறானவை எனவும் கூறினார்.</p>

<p>ஐரோப்பாவிலிருந்த சில எல்.ரீ.ரீ.ஈ. செயற்பாட்டாளர்களும், இந்த விநாயகம், உண்மையில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட கடற்புலி சிரேஷ்ட தளபதிதான் என்ற தவறான கருத்தை பரப்பத் தொடங்கினார். கடற்புலி தளபதிக்கு கண்ணில் குறைபாடு இருந்தமையால் இந்த பாசாங்குக்காரரும், சில சமயங்களில் ,தனது கண்களை மறைக்க கறுப்புக்ககண்ணாடி  அணிந்துக்கொண்டார்.</p>

<p>ஐரோப்பாவில் உள்ள தகவல் தரவல்ல தமிழ் வட்டாரங்கள், எல்.ரீ.ரீ.ஈ. இன் சில பிரிவினருக்கும், எல்.ரீ.ரீ.ஈ. சார்பான சிலருக்கும் ஐரோப்பாவில் வெளிப்பட்டு;ள்ள விநாயகம், சிரேஷ்ட, கடற்புலி தளபதி அல்ல என்றும் அவர் எல்.ரீ.ரீ.ஈ. இன் உளவுத்துறையை சேர்ந்த ஒரு முக்கிய தலைவர் என்றும் தெரியுமென கூறுகின்றன.</p>

<p><strong>மாறுவேடம்</strong></p>

<p>இருப்பினும் இவர்கள் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்த மாறுவேட நாடகத்தை அனுமதித்துள்ளனர். இதற்கான முக்கிய காரணம் 'புலனாய்வு' விநாயகத்தின் உண்மையான ஆளடையாளம் பற்றி  மக்களிடையே குழப்பத்தை உண்டாக்குவதாகும். இவரை 'உயிர்த்தெழுந்த' விநாயகமாக காட்டுவது இந்த நோக்கத்தை அடைய உதவியுள்ளது.</p>

<p>இறந்தாக அறிவிக்கப்பட்ட ஒருவர் உயிரோடு இருப்பதாக அறிவிக்கப்படுவது உற்சாகம் இழந்துபோன புலி செயற்பாட்டாளர்களின் உற்சாகத்தை தூண்ட உதவியது இன்னொரு பிரதான காரணமாகும். இது இலங்கை அதிகாரிகளை பொய்யர்களாக காட்டி அவர்களை முகத்தில் கரிபூசும்.</p>

<p>இதைவிட முக்கியமாக, எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் உயிருடன் உள்ளனர் என்னும் கட்டுக்கதையை பரப்பவும் உதவும். 2009 இல் இறந்தாக அறிவிக்கப்பட்ட விநாயகம், ஐரோப்பாவில் உயிருடன் தோன்ற முடியுமாயின் மே 2009 இல் இறந்தாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனும் , பொட்டுவும் உயிரோடு இருந்து சரியான தருணத்தில் வெளிப்பட முடியும் என்பதே இந்த தர்க்கமாகும்.</p>

<p>இந்த காரணங்களுக்கு மேலாக, புதிய எல்.ரீ.ரீ.ஈ. தலைவரை, சிரேஷ்ட கடற்புலி தளபதியாக காட்டுவது இன்னுமொரு நடைமுறை நோக்கத்தை நிறைவு செய்கின்றது. வெளிநாட்டு புலிகள் இலங்கை மீதான கடல்வழி தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளும் ஆயத்தங்கள் நடப்பதாக கதை பரப்பிவருகின்றனர். இது ஏமாளிகளிடமிருந்து நிதிசேகரிப்பதற்கான ஒரு சோடிப்பு ஆகும்.</p>

<p>ஒப்பீட்டளவில் அதிகம் அறியப்படாத புலனாய்வு தொழிற்படுநருக்கு பதிலாக ஓர் அனுபவம் மிக்க கடற்புலி தளபதி, தன் இராணுவ சாதனைகளால் பிரபலமானவர் இந்த கடல்வழி படையெடுப்புக்கு தலைமை தாங்குகிறார் என்று கூறுவதால் இவ்வாறான கடல்வழி படையெடுப்பு சாத்தியமென நம்பவைப்பது இலகுவாக இருந்தது.</p>

<p>இந்த பின்னணியில்தான் விநாயகம் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டார். இருப்பினும் இது முற்றுமுழுதான மாறுவேடம் அல்ல. ஏனெனில் ஐரோப்பாவில் உள்ள பல முக்கியமான எல்.ரீ.ரீ.ஈ.யினர் விநாயகத்தின் உண்மையான ஆளடையாளத்தை அறிந்திருந்தனர். எனவே இவரால் சில பிரிவினரை மட்டுமே கடற்;புலி தளபதி விநாயகம் என பிழையாக நம்பவைக்க முடிந்தது.</p>

<p>விநாயகம் நடிக்கின்றார் என்ற விடயம் வெளிக்கொணரப்பட்டபோது சில புலி சார்ந்த இணையத்தளங்கள் அடைந்த குழப்பம் நகைப்புக்கு உரியதாயிற்று. முன்னரே தமக்கு விநாயகத்தின் உண்மையான ஆளடையாளம் தெரியும் எனக்காட்டும் அவதியில் இந்த இணையத்தளங்கள் ஆள்மாறாட்டத்தை உறுதியாக அம்பலப்படுத்தும் விவரங்களை வழங்கின.</p>

<p>கடற்புலி விநாயகத்தைவிட, புலனாய்வு பிரிவு விநாயகம் குறைவாக அறியப்பட்டவராக இருந்தாலும், பின்னையவரின்  முக்கியத்துவத்தையும் ஆற்றலையும் குறைத்து மதிக்க முடியாது. எல்.ரீ.ரீ.ஈ இன் புதிய தலைவர், முன்னர் எல்.ரீ.ரீ.ஈ.யின் நாசகர நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். இவருக்கு வருங்காலங்களில் அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதனால்தான் இலங்கை அதிகாரிகள் இவரை கைது செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர் போலும்.</p>

<p><strong>தென்மராட்சி</strong> </p>

<p>சேகரபிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் நவம்பர் 10, 1964 இல் பிறந்தவர். இவரது குடும்பம் தென்மராட்சி பிரதேசத்தின் வரணியில் இடைக்குறிச்சி என்னும் இடத்தை சேர்ந்தது. இருந்தாலும் இவர், குடும்பம் சாவகச்சேரியில் சில காலம் வாழ்ந்தது.</p>

<p>விநாயகமூர்த்தி 1985 இல் தன் இருபதாவது வயதில் எல்.ரீ.ரீ.ஈ.  இல் முறையாக இணைந்தார். இதற்கு முன் மாணவனாக இருந்த காலத்தில் இவர் எல்.ரீ.ரீ.ஈ. உதவியாளாக இருந்தார். யாழ்ப்பாண குடாநாட்டில் தெற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள,  மாசார் மற்றும் புலோப்பளை, கிளாலி பகுதியில் தன் உள்ளுர் பயிற்சியை பெற்றதாக கூறப்படுகின்றது.</p>

<p>விநாயகம் முதலில், புலி வட்டாரத்தில் 'லொஸ் ஏன்ஜெல்ஸ்' என குறிப்பிடப்படும் புலிகளின் தென்மராட்சி பிரிவில் நிலைகொண்டார். அப்போது திலீபன் அல்லது கேடில்ஸ் தென்மராட்சி பிரதேசத்துக்கு பொறுப்பாக இருந்தார்.</p>

<p>சூசையின் கீழிருந்த வடமராட்சி பிரிவு கலிபோர்ணியா எனவும் ஜொனியின் கீழிலிருந்த வலிகாமம் பிரிவு சிக்காக்கோ எனவும் அழைக்கப்பட்டன. சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் அல்லது கிட்டு, யாழ்ப்பாண மாவட்ட புலிகிள் மீதான ஒட்டுமொத்த பொறுப்பையும் கொண்டிருந்தார்.</p>

<p>விநாயகத்தின் பிரதேச பொறுப்பாளராக இருந்த கேடில்ஸ், கைதடி பவுஸர் குண்டு வெடிப்பில் பெப்ரவரி 14 இல் கொல்லப்பட்டார்.</p>

<p>அதன்பின் சிறிது காலத்துக்கு குஞ்சன், பாக்கியராஜ் ஆகியோரின் கூட்டு பொறுப்பில் தென்மராட்சி விடப்பட்டது. பின்னர் புதிய பொறுப்பாளராக நரேன் நியமிக்கப்பட்டார்.</p>

<p>யூலை 29, 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்த யுத்த நிறுத்த காலத்தில் நரேன் மாற்றப்பட்டு அப்துல்லா நியமிக்கப்பட்டார்.</p>

<p>குமரப்பா, புலேந்திரன் ஆகிய சிரேஷ்ட புலித் தலைவர்கள் உட்பட 12 எல்.ரீ.ரீ.ஈ. போராளிகள் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து குறுகிய ஓய்வைத் தந்த சமாதானம் சிதறிப்போயிற்று.</p>

<p>பலாலியில் சயனைட் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டவர்களுள் தென்மராட்சியின் புதிய தளபதி அப்துல்லாவும் இருந்தார்.</p>

<p>இந்த நிகழ்வின் பின் இந்திய இராணுவத்திற்கும், எல்.ரீ.ரீ.ஈ. இற்கும் இடையில் யுத்தம் மூண்டது. அப்போது தினேஷ் என அறியப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. அரசியல் பிரிவு தலைவர் சுப்பையா பரமு தமிழ்செல்வன் தென்மராட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.</p>

<p>அவர், அதே பிரதேசத்தில் மட்டுவில் என்னும்; இடத்தை சேர்ந்தவர். அதே பிரதேசத்து மந்துவிலை சேர்ந்த பாப்பா அவருக்கு அடுத்த நிலையில் நியமிக்கப்பட்டார்.</p>

<p>கேடில்ஸிலிருந்து தமிழ்செல்வன் வரையிலான இந்த மாற்றங்களின்போது விநாயகமூர்த்தி எல்.ரீ.ரீ.ஈ. இன் தென்மராட்சி பிரிவிலேயே வேலை செய்தார். இவர் பாப்பாவின் கீழ் நேரடியாக வேலைசெய்ததாகவும், அம்பன் - குடத்தனை வரணி பகுதிகளில் நிலைக்கொண்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.</p>

<p>1990 இல் இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறிய பின், எல்.ரீ.ரீ.ஈ. யாழ்ப்பாண குடாநாடு உட்பட வட மாகணத்தின் பெரும்பகுதியின் கட்டுப்பாட்டை எல்.ரீ.ரீ.ஈ. பெற்றுக்கொண்டது. எல்.ரீ.ரீ.ஈ நிறுவனம் முற்றுமுழுதாக புனரமைக்கப்பட்டது.</p>

<p><strong>ஐயன்னா</strong></p>

<p>இந்த புதிய மாற்றங்களின்போது விநாயகமூர்த்தி, பொட்டு அம்மான் தலைமையிலான புலி நிறுவன பாதுகாப்பு புலனாய்வு சேவை  (TOSIS)  என்று அழைக்கப்பட்ட புலிகளின் புலனாய்வு பிரிவில் உள்ளீர்க்கபட்டார்.</p>

<p>இவர் இரண்டாம் லெப்டினென்ட் ஆக பதவி உயர்த்தப்பட்டு ஐயன்னா என்னும் இயக்கப்பெயர் சூட்டப்பட்டார். (எல்.ரீ.ரீ.ஈ. இன் சர்வதேச ஆயுத கொள்வனவாளரான பொன்னையா ஆனந்தராஜாவின் இயக்கப் பெயரான அய்யன்னா வேறு.)</p>

<p>விநாயகமூர்த்தி அல்லது ஐயன்னா 1990-1993 காலப்பகுதியில் நேரடியாக பொட்டு அம்மானின் கீழ் வேலை செய்தார். இவர், தனது அடிமைத்தனமான பக்தி மூலம் பொட்டு அம்மானின் நேயத்துக்குரியவர் ஆனார்.</p>

<p>'ஐயன்னா பொட்டுவின் அலுவலகத்தில் 'பீயோன்' ஆகவும் பொட்டுவின் வீட்டில் அவரது மனைவிக்கு வேலையாளராகவும் இருந்தார்.'' - இது ஐயன்னாவின் முகஸ்துதி பற்றி மேற்கத்தைய நாட்டில் வாழும் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் பரிகாசமாக கூறியது.</p>

<p>1994 இல் விநாயகமூர்த்தி லெப்ரினென்ட் ஆக உயர்த்தப்பட்டு, வவுனியா மாவட்டத்துக்கான புலனாய்வு தலைவராக  வவுனியாவுக்கு அனுப்பப்பட்டார். 1996 இல் இவரிடம் வட, வடமத்திய மாகாண காடுகளில் உளவு பார்த்தல் அல்லது 'றெக்கி' எடுக்கும் பொறுப்பும், அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் ஊடுருவி காட்டுப்பாதைகளை உருவாக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது.</p>

<p>பின்னர், 1997 இல் இவர் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. இராணுவ புலனாய்வு தலைவர் சாள்ஸுடன் இணைந்து தொழிற்படுமாறு அனுப்பப்பட்டார். சாள்ஸ், கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கு, அல்லாத பிற மாவட்டவங்களில் நாசவேலைகள், அரசியல்வாதிகளின் கொலைகள் என்பவற்றுக்கு பொறுப்பாக இருந்தவர். வவுனியாவும் மட்டக்களப்பும் இப்படியான நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதற்கும் கட்டளை வழங்குவதற்கும் உரிய முக்கிய இடமாக காணப்பட்டன.</p>

<p>மட்டக்களப்பு – அம்பாறைக்கான புலனாய்வு தலைவர் ரமணன், வவுனியா மாவட்ட புலனாய்வு தலைவர் விநாயகமூர்த்தி அல்லது ஐயன்னா ஆகியோர் தமது அந்தங்களிலிருந்து தேவையான பொருட்களை அனுப்பிவைக்கும் வேலைகளை கவனித்தனர். இந்த காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ. ஆல் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கொலைகள் பலவற்றின் தயாரிப்பு வேலைகளுக்கு இந்த இருவரும் பொறுப்பாக இருந்தனர்.</p>

<p>இவர், 1990 இல் கப்டனாக பதவி உயர்த்தப்பட்டு புதிய கடமைகள் வழங்கப்பட்டு பெரும்பாக கொழும்பு பகுதிக்கு அனுப்பப்பட்டார். இவர் சாள்ஸுடன் இணைந்து வேலை செய்தார்.</p>

<p>இவர் நீர்கொழும்பில் நிலைகொண்டதாக கூறப்படுகிறது. அக்காலத்தில் இவர் தனது பெயரை விநாயகம் என சுருக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இவர் விநாயகம் என்றே அழைக்கப்பட்டார். 1985 இல் இவர் எல்.ரீ.ரீ.ஈ. இல் சேர்ந்தபோது இவர் விநாயகம் என்றே அறியப்பட்டிருந்தார்.</p>

<p>இவர் நீர்கொழும்பு- கொழும்பில் பணிப்பொறுப்பிலிருந்த காலத்தில் இவரது பிரதான 'சாதனை'யாக ஜுலை 12, 2001 இல் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு அடித்தளம் இட்டமையாக அமைகின்றது. இந்த பொறுப்பு வெற்றிகரமாக சாதிக்கப்பட்டதன் பின், இவர் வன்னிக்கு அழைக்கப்பட்டு மேஜர் பதவி வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டார்.</p>

<p><strong>புலனாய்வு</strong></p>

<p>ஒஸ்லோ ஆதரவு சமாதான செயற்பாடு பெப்ரவரி 23, 2002 இல் போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்தது. இக்காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ., உலகளவில் தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே அதிகளிவில் வேலை செய்வதில் கவனத்தை செலுத்தியது. யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தி புலம் பெயர்ந்தோரிடையே புலிகளின் பிடியை வலுவாக்குவதே திட்டமாக இருந்தது.</p>

<p>இராணுவ நடவடிக்கைகளில் அனுபவம் பெற்ற புலி உறுப்பினர்களை, புலிகளின் கிளைகளையும், முகப்பு நிறுவனங்களையும் நிர்வகிக்க பல நாடுகளுக்கும் அனுப்புவதே இந்த உத்தியின் பிரதான கூறாக காணப்பட்டது. போர்க்கள அனுபவம் பெற்ற முழுதாக இயக்கத்தில் ஈடுப்பட்ட புலிகள், புலம் பெயர்ந்தோர் மீது கூடிய கட்டுப்பாட்டை கொண்டிருப்பர் என்றும் ஈவிரக்கமற்ற முறையில் விடயங்களை அச்சொட்டாக முன்னெடுப்பர் எனவும் எல்.ரீ.ரீ.ஈ. உயர்பீடம் கருதியது.</p>

<p>இந்த உத்திக்கு இணைந்ததாக எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு பிரிவி;ன் பாத்திரம் அமைந்தது. பல புலி புலனாய்வு தொழிற்படுநர்கள் இந்தியாவுக்கும் பல மேற்கத்தைய நாடுகளுக்கும் அனுப்பப்பட்டனர். சிலர் எதையும் காணாதவர் போலிருந்து நடப்பவற்றை நன்கு அவதானித்து அறிக்கை அனுப்பும் பணிக்காக நியமிக்கப்பட்டவர்கள்.</p>

<p>மற்றவர்கள் எல்.ரீ.ரீ.ஈ. கிளைகள், முகப்பு நிறுவனங்களின் பிரதான தொழிற்படுநர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.</p>

<p>இதே போன்று எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தொழிற்படுனர்களை இந்தக் காலத்தில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் அனுப்பிவைத்தனர். இவர்களில் சிலர் தமது தலைமையகத்துடன் தொடர்பிலிருந்தாலும், ஏனையோர், தேவை ஏற்படும்போது மட்டும் தொழிற்பட பணிக்கப்படும் நோக்கில் அடக்கத்தில் இருந்தவர்கள் ஆவர்.</p>

<p>வன்னிக்கு அப்பால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் தொழிற்படுவோர் தொடர்பான விடயங்களை மேற்பார்வை செய்யும் நோக்கில் எல்.ரீ.ரீ.ஈ. இன் உளபிரிவு விசேட அலகு ஒன்றை உருவாக்கியது. இந்த விசேட புலனாய்வு அலகு 'வெளிநாட்டு – உள்நாட்டு புலனாய்வு விவகாரங்கள்' என அழைக்கப்பட்டது.</p>

<p>விநாயகமூர்த்தி 2002 இல் இந்த விசேட அலகின் தலைவராக்கப்பட்டார். இந்த புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டபோது இவரது இயக்கப்பெயர் மீண்டும் மாற்றப்பட்டது. இப்போது அவர் அறிவழகன் என அழைக்கப்பட்டார்.</p>

<p>ஒரு கட்டத்தில் மேஜர் அறிவழகன், போலி கடவுச்சீட்டில் இந்தியாவுக்கு பயணமாகி சில காலம் அங்கு தங்கி ஆதரவு வலையமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். இவர், போலி கடவுச்சீட்டுடன், சமாதான பேச்சுவார்த்தைக்காக ஐரோப்பியாவுக்கு சென்ற எல்.ரீ.ரீ.ஈ. தூதுக்குழுவோடு பயணமாகி பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அமைதியான முறையில் புலம்பெயர்ந்தோருடன் கலந்துரையாடினார்.</p>

<p>இந்தக் காலத்தில் விநாயகத்தின் செல்வாக்கு வளர்ச்சி கண்டது. இவரது சகோதரரான சக்தி, வன்னியில் எல்.ரீ.ரீ.ஈ.இனால் உருவாக்கப்பட்ட மரசபை தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த மர சபைக்கு, கட்டுமான வேலை மற்றும்; விறகு தேவைக்காக மரம் வெட்டுதல் தொடர்பான சகல விடயங்களையும் கட்டுப்படுத்தியது. இச்சபை மரம் வெட்டுவோர், மரவியாபாரிகள் ஆகியோரிடமிருந்து வரி அறவிட்டது. சக்தியின் இந்த நியமனத்துக்கு காரணமாக இருந்தது அவரது சகோதரனின் செல்வாக்கே.</p>

<p><strong>தொடர்பாடல்</strong></p>

<p>நவம்பர் 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்த பின் நிலைமை தலைகீழாக மாறியது. பலவீனமான சமாதான செயற்பாடு பூரணமாக செயலிழந்தது. விரைவில் முழுவளவிலான யுத்தம் வெடித்தது. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புகளுக்கும் வன்னியிலிருந்த புலி உயர்பீடத்துக்கும் இடையில் தொடர்பாடல் கடினமாயிற்று. இராணுவம் முன்னேறி வர புலிகள் பின்வாங்கி சென்றமையால் வெளிநாட்டு கிளைகளுடனும், முகப்பு நிறுவனங்களுடனுமான தொடர்பு அறுந்து போயிற்று.</p>

<p>வன்னியில் பெரும் சண்டை நடந்தபோது விநாயகத்தின் பாத்திரம் என்னவாக இருந்து என்பது தெளிவாக தெரியவில்லை. இவர் பொட்டு அம்மானுக்கு நெருக்கமாக இருந்தார் எனவும் தேசிய புலனாய்வு நிறுவன தலைவருக்கு நெருங்கிய உள்வட்டத்தில் பத்துப்பேரில் ஒருவராக இருந்தார் எனவும் தெரிகிறது.</p>

<p>ஜனவரி 2, 2009 இல் கிளிநொச்சி வீழ்ச்சியடைந்தமை எல்.ரீ.ரீ.ஈ வட்டாரத்தில் பெரும் பதகளிப்புக்கு காரணமாகிற்று. எல்.ரீ.ரீ.ஈ. அச்சுறுத்திக் கொண்டிருந்த தோல்வியை தாமதிக்கும் வகையில் விளைவைப்பற்றி சிந்தியாது, அந்தரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.</p>

<p>அதில் ஒன்றாக , கரும்புலி தற்கொலை அணியொன்றை, தெற்கில் வன்முறை தாக்குதல்களையும் அழிவுச்செயல்களையும் மேற்கொள்வதற்காக அனுப்பியமை இருந்தது.</p>

<p>இந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் விநாயகம்தான். அவர் இப்போது லெப்.கேணலாக தரமுயர்த்தப்பட்டிருந்தார். ஆனால் விநாயகமூர்த்தி நேரடியாக தற்கொலை தாக்குதலில் ஈடுபடவேண்டும் என எதிர்பார்க்கப்படவில்லை.</p>

<p>அவர் இந்த தற்கொலைத் தாக்குதல்களை திட்டமிட்டு, இணைப்பு செய்து, மேற்பார்வையும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.</p>

<p>ஜனவரி 2009 இல் எல்.ரீ.ரீ.ஈ. இனால், விநாயகம் தலைமையில் அனுப்பப்பட்ட 15-20 வரையிலான கரும்புலிகள், வவுனியா – அனுராதபுரம் பிரதேசத்திலிருந்த காட்டுப்பாதைகள் ஊடாக வடமத்திய மாகாணத்தினுள் நுழைய முயன்றபோது பேரிடரில் சிக்கினார். ரோந்து சென்ற படையினருடனான சண்டையில் இந்த அணியின் அரைபங்கினராவது கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது.</p>

<p>தப்பிப்பிழைத்த ஒரு சிலரில் விநாயகமும் ஒருவர். இந்த அணியின் வேறு சில அங்கத்தவர்களும் பின்னர் வந்து சேர்ந்தனர். விநாயகம் எஞ்சியோருடன் தெற்குக்கு சென்றார். எல்.ரீ.ரீ.ஈ. இன் தலைமைபீடம் பெரும் அழிவுச் செய்தியை எதிர்பார்த்திருந்தாலும் அப்படி ஏதும் நடக்கவில்லை. எதிர்பார்த்த மாதிரி விநாயகத்தால் சாதிக்க முடியவில்லை. இந்த நடவடிக்கை புஷ்வாணமாயிற்று.</p>

<p>இந்த நடவடிக்கையின் தோல்வி விநாயகத்திற்கு இன்னொரு வகையில் நன்மை ஆயிற்று. எல்.ரீ.ரீ.ஈ. நிலைகளை இராணுவம் கைப்பற்றி வந்த நிலயில் விநாயகம் வன்னிக்கு வெளியே தொடர்ந்து இருக்க முடிந்தது. தெற்கில் பாரிய தாக்குதலை மேற்கொள்ள தான் முயன்றாலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருந்தமையால் எதுவும் செய்யமுடியாது இருந்தது என்ற சாட்டு அவருக்கு இருந்தது.</p>

<p>இந்தத் தோல்வி, எல்.ரீ.ரீ.ஈ.இன் உயர்பீடத்தின் நலனுக்கு பாதகமாக இருந்தாலும் விநாயகத்திற்கு நன்மையாயிற்று. எல்.ரீ.ரீ.ஈ. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று உதவி அரசாங்க பிரிவில் முற்றுகைக்கு உள்ளான நிலையில் இறுதிப்போரில் ஈடுபட்டிருந்த போது அவர் ஒப்பீட்டு ரீதியில் வன்னிக்கு வெளியே பாதுகாப்பாக இருந்தார். இதனால் முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின்போது ஏனைய எல்.ரீ.ரீ.ஈ. சிரேஷ்;ட தலைவர்கள் போன்று விநாயகம் இறந்துபோகவில்லை. எல்.ரீ.ரீ.ஈ. இன் தோல்விக்கு முன்னரே இவர் இந்தியாவுக்கு போய்விட்டார்.</p>

<p><strong>அறிவழகன்</strong></p>

<p>இந்தியாவுக்கு சென்றவுடன் விநாயகம் மீண்டும் அறிவழகன் என்னும் பெயரை சூடிக்கொண்டார். கதிர்காமத்தம்பி என்பதையும் இதனோடு சேர்த்து ஒரு மரியாதையான தோற்றப்பாட்டை தன்பெயருக்கு ஏற்படுத்திக்கொண்டார். தன் வசமிருந்த நிதிவளத்தையும், தொடர்புகளையும் பயன்படுத்தி வன்னிக்கு வெளியே பல்வேறு இடங்களில் விடப்பட்டிருந்த பல்வேறு எல்.ரீ.ரீ.ஈ. உளவுப்படையினரின் மீட்புக்கு ஒழுங்கு செய்தார். இவர்களில் பலர் விமானம் மூலம் இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். கிழக்குக் கரையிலிருந்து ஒரு சில படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.</p>

<p>பிரபாகரன் இறந்துவிட்டதாக செல்வராசா பத்மநாதன் அல்லது கே.பி. அறிவித்தபோது கதிர்காமத்தம்பி அறிவழகன் என்ற பெயரில் இயங்கிய விநாயகம் செய்திகளில் இடம்பிடித்தார். அறிவழகன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை மறுத்தார். பின்னர் பிரபாகரன் உண்மையில் இறந்துவிட்டார்தான் என இன்னொரு அறிக்கையை வெளிவிட்டார். முதல் அறிக்கையை விட்டார் முதல் அறிக்கைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.</p>

<p>விநாயகம் அல்லது அறிவழகனின் அறிவுறுத்தலின் பேரில் உலகின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தொழிற்படுநர்கள் நெருங்கிய உறவை கொண்ட ஒரு அலகில் இணைக்கபட்டனர். அறிவழகன், எல்.ரீ.ரீ.ஈ.இன் வெளிநாட்டு புலனாய்வுக்கு பொறுப்பாக இருந்தமையாலும் அநேகமான தொழிற்படுநர்களை தனிப்பட்ட முறையிலும் அறிந்திருந்தமையாலும், தன் அதிகாரத்தை நிலைநிறுத்துவது கடினமாக இருக்கவில்லை.</p>

<p>அறிவழகனின் கீழிருந்த புலி புலனாய்வு பிரிவின் பிரதான நடவடிக்கைகளில் ஒன்றாக தலைமைத்துவம் பற்றிய நெருக்கடியை தீர்ப்பது இருந்தது.</p>

<p>உயிருடன், சுதந்திரமாக காணப்பட்ட செல்வராஜா பத்மநாதன் அல்லது கேபி, எல்.ரீ.ரீ.ஈ. இன் அதி சிரேஷ்ட தலைவராக பொறுப்பேற்றிருந்தர். எல்.ரீ.ரீ.ஈ. யின் வெளிநாட்டு கிளைகளின் நிர்வாகத்துக்கு பொறுப்பாக இருந்த பேரின்பநாயகம் அல்லது நெடியவன் இதை எதிர்த்தார். வெளிநாடுகளிலிருந்த எல்.ரீ.ரீ.ஈ. பிரிவு அங்கத்தவர்கள், எல்.ரீ.ரீ.ஈ. க்கு தலைமை தாங்க கூடுதலான தகைமையுடையவர் யார் என்பது பற்றி ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பை புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ . விசுவாசிகளிடையே நடத்தினர். பேட்டி காணப்பட்டவர்களில் பலர் கேபியை விரும்பினர்.</p>

<p>இதனடிப்படையில் கதிர்காமத்தம்பி அறிவழகனால் தலைமைத்தாங்கப்படும் எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு பிரிவு கே.பி.யுடன் சேர்த்துகொள்ள தீர்மானித்தது. இது நெடியவனுடனான பேச்சுவார்த்தையில் கே.பியின் கையை ஓங்கச் செய்தது. இதனால் மீளமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. இன் தலைமைச் செயலராக கே.பி. தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ள வழிவகுத்தது. இந்திய அதிகாரிகள் ஒரு சிரேஷ்ட எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தொழிற்படுநர் இந்திய மண்ணிலிருந்து செயற்படுவதாக சந்தேகிக்க தொடங்கினார். சுருக்கு இருகத் தொடங்கியது. ஆனால் சுருக்கு இறுகியபோது விநாயகம், இந்தியாவைவிட்டு ஒரு தென்கிழக்கு ஆசிய நாட்டுக்கு போயிருந்தார். அவர் அங்கிருந்து ,தனது உறவினர் ஒருவரின் உதவியுடன் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி லண்டனுக்கு சென்றார். இது நடந்தது ஒக்டோபர் அல்லது நவம்பர் 2009 இல் ஆகும்.</p>

<p><strong>ஐரோப்பா</strong></p>

<p>பிரித்தானியாவில் சிறிதுகாலம் ஓய்விலிருந்த பின் விநாயகம் கண்டப் பெருநிலப்பரப்புக்கு சென்றார். இவர் ஒரு தாராளவாத ஐரோப்பிய நாடு ஒன்றில், போலி ஆளடையாளத்துடன் அரசியல் அடைக்கலம் கோரியதாகவும் பின்னர் சிறிது காலத்தின் பின் வேறு நாட்டுக்கு சென்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. விநாயகம், புலம்பெயர்ந்த முக்கியஸ்தர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு போய்க் கொண்டிருந்தார்.</p>

<p>கே.பி. மலேஷியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் பல மாற்றங்கள் விரைந்து ஏற்பட்டன. இந்த நிகழ்வுடன் புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. யினரிடையே நெடியவனின் ஆதிக்கம் அதிகரித்தது.</p>

<p>முன்னர் கே.பி.யை ஆதரித்த விநாயகமும் மாறத் தொடங்கினார். ஆவர் நெடியவனுடன் சமாதானமாக தொடங்கி 'உயரமான' மனிதனுடன் ஒரு தந்திரோபாய கூட்டில் சேர்ந்து கொண்டார்.</p>

<p>நெடியவனுக்கும் விநாயகத்துக்கும் இடையில் அதிகாரப்பிரிப்பு வரம்புகள் தெளிவான வரையறைகளை கொண்டதாக தெரிகிறது.</p>

<p>விநாயகம் பல்வேறு புலனாயவ்வு தொழிற்படுநர்களையும் நெருக்கமான அலகொன்றில் இணைத்து அதன் முற்றுமுழுதான பொறுப்பையும் ஏற்றுள்ளார். புலிகளின் புலனாய்வு பிரிவில் நெடியவனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. புலனாய்வு பிரிவு ,தனி அமைப்பாக வெளிப்படையாக இயங்குவதில்லை. ஆனால் அதன் அங்கத்தவர்கள், கண்ணில்படாமல் பல்வேறு புலி அமைப்புகளில் வேலை செய்கின்றனர்.</p>

<p>அதேபோல நெடிவன் எல்.ரீ.ரீ.ஈ. கிளைகள், முகப்பு நிறுவனங்கள் என்பவற்றிற்கு பொறுப்பாக உள்ளார். விநாயகம் இந்த அமைப்புகளின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. ஏதாவது ஒரு கிளை அல்லது முகப்பு நிறுவனம் ஒரு காரியத்தை செய்யவேண்டுமென விரும்பினால் அவர் நெடியவனின் தயவையே நாடவேண்டும்.</p>

<p><strong>மூன்று பேர்</strong></p>

<p>மூன்று பேர் விநாயகத்துக்கும் நெடிவயனுக்குமிடையில் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் அரவிந்தன் அல்லது இரும்பொறை. மற்ற இருவரும் நந்தகோபன், அன்புச்செல்வன் ஆவர். இரும்பொறை, எல்.ரீ.ரீ.ஈ. இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்த ஒரு முக்கிய தொழிற்படுநர் என கூறப்படுகிறது. இவர் 2008 இல் பின்பகுதியில் கொள்வனவுக்காக லாவோஸுக்கு அனுப்பப்ட்டார். 2009 இல் சண்டை முடிந்தபோது இரும்பொறை ஐரோப்பாவில் நிலைகொண்டார்.</p>

<p>அன்புச்செல்வன், யுத்தத்த நிருந்த காலத்தில் நோர்வேக்கு அனுப்பப்பட்டார். தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட இளைய தலைமுறையினால் மேற்கொள்ளப்பட்ட அநேகமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் தமிழ் வாலிபர் நிறுவனத்தின் (ரி.வை.ஓ.)  பொறுப்பாளராக இவர் இருந்தார்.</p>

<p>நந்தகோபன் மணிவண்ணன் அல்லது கஸ்ட்ரோவின் நெருங்கிய சகாவாக உள்ளார். இவர் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமகன் போல இராணுவத்திடம் சரணடைந்தார்.</p>

<p>இவர் அரசாங்கத்துடன் வேலைசெய்யும் ஓர் அரசியல் கட்சிக்கு இலஞ்சம் கொடுத்து அகதி முகாமிலிருந்து வெளியேறினர். இந்த கட்சி நந்தகோபனை கொழும்புக்கு கொண்டுவந்தது. பின் பொய்யான பெயரில் கடவுச்சீட்டு பெற்றுக்கொடுத்து இவரை தாயலாந்துக்கு அனுப்பியது. கொடுக்கப்பட்ட இலஞ்சம் மில்லியன்கள் கணக்கில் இருந்திருக்கும் எனப்படுகிறது.</p>

<p>இரும்பொறை, அன்புச்செல்வன், நந்தகோபன், ஆகிய மூவரும், நெடியவனுக்கும் விநாயகத்துக்கும் இடையில் இணைப்பு செய்கின்றனர். இவர்கள் இருவரையும் நெருக்கமாகச் செய்து ஒரு தந்திரோபாய கூட்டை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தனர்.</p>

<p><strong>நெடியவன்</strong></p>

<p>நெடியவனைப் பொறுத்தவரையில் எல்.ரீ.ரீ.ஈ. இன் வெளிநாட்டு அமைப்புகள் மீது தனது கட்டுப்பாட்டை தொடர்வதிலும் எல்.ரீ.ரீ.ஈ.க்கு உரித்தான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை சேதமின்றி பேணுவதிலுமே அவரது அக்கறை உள்ளது. அவரது தொழிற்படுநருக்கு 'சம்பளம்' என்ற பெயரில் பெரும் பணம் கொடுக்கப்படுவதால், அவருக்கு தொடர்ச்சியான நிதிசேகரிப்பை உறுதி செய்யவேண்டியுள்ளது.</p>

<p>நெடியவன் பணம் மீதான கட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கம் கொண்ட வீண்பெருமை பேசும் நபர் என்பதை அவரது கடந்தகால செயல்கள் எடுத்துக்காட்டுகின்றன. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற கட்டுக்கதையை இவர் பரப்பிக்கொண்டிருந்தாலும் தலைவரையும் குடும்பத்தினரையும் ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி மீட்கும் முயற்சிக்கு தேவையான 3.5 மில்லியன் அமெரிக்க டொலரை கேபிக்கு கொடுக்க மறுத்தவரும் இவரே.</p>

<p>தனது இலட்சியம் எனக் கூறிக்கொள்ளும் எதற்காகவும் ஆபத்துக்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளவராக நெடியவன் காணப்படவில்லை. இவர் ஒரு வகையில் புலம்பெயர்ந்தோரிடையே உள்ள எல்.ரீ.ரீ.ஈ. சார்பு ஆட்களிடையே காணப்படும் ஆஷாடபூதிகளின் குறியீடாக உள்ளார்.</p>

<p>எல்.ரீ.ரீ.ஈ. இன் இலட்சியத்தின் மீதான பற்று உறுதியானதாகவும் நேர்மையானதாகவும் உள்ளதென்ற வகையில், விநாயகம், நெடியவனிலிருந்து வேறுபடுகிறார். அவர் தன்செயற்பாட்டில் பற்றும் உறுதியும் உடையவராக தென்படுகிறார். இலங்கையிலிருந்து தப்பி வந்தப்பின் அவரது நடத்தையில ஒழுங்குமுறை, அர்ப்பணிப்பு என்பவற்றுக்கான சான்றுகள் தெரிகின்றன.</p>

<p><strong>விநாயகம்</strong></p>

<p>விநாயகம், புலம்பெயர்ந்தோரிடையே உள்ள எல்.ரீ.ரீ.ஈ.  ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுள்ளார். சிலரை நேரிலும் சந்திக்கின்றார். 'எல்லாம் முடிந்து போகவில்லை, கெதியாய் ஏதோ நடக்கப்போகுது' என்று சொல்லி அவர்களிடம் மீண்டும் உற்சாகத்தை உருவாக்க முனைகிறார்.</p>

<p>சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் இவர் தன்னை 'கேணல்' என அறிமுகம் செய்வதே. ஆனால் இவர் இயக்கத்தினால் 'கேணல்' அந்தஸ்து வழங்கப்பட்டவரா என்பதும் சந்தேகமாக உள்ளது.</p>

<p>விநாயகம், ஐரோப்பிய பெருநிலப்பரப்பில் பல நாடுகளிடையே சுதந்திரமாக பயணம் செய்துவந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது ஊடகங்களின் கவனம் திரும்பியபோது விநாயகம் தனது பயணங்களை மட்டுப்படுத்திக்கொண்டார்.</p>

<p>ஐரோப்பாவில் உள்ள புலிகள், விநாயகம் கனடாவுக்கு சென்றுவிட்டார் என கதை பரப்பி வருகின்றனர். ஆனால் இது உண்மையல்ல. சிலர், விநாயகம் தற்போது ஸ்கண்டிநேவிய நாடொன்றில் இருப்பதாக கூறிவரினும் அவர் ஐரோப்பாவில்தான் தொடர்ந்தும் இருக்கின்றார்.</p>

<p>நீண்ட காலத்தில் நோக்கும்போது பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்ற கட்டுக்கதையால் இடம்பெயர்ந்தோரிடையே புலிகளை பலமாக நிலைநிறுத்த முடியாது. 12000 போராளிகள் இரகசியமான ஓர் இடத்தில் பயிற்றப்படுகின்றனர், விரைவில் கடல்வழி படையெடுப்பு நடக்கும் என்ற பொய்களிலும் தங்கியிருக்க முடியாது.</p>

<p><strong>வன்முறை</strong></p>

<p>புலிகளின் எச்சசொச்சங்களுக்கு புலம்பெயர்ந்தோரிடையே தம்மை நிலைநிறுத்திகொள்ள தேவையாக இருப்பது இலங்கையில் பாரிய வன்முறை சம்பவம் ஒன்றை அரங்கேற்றுவதே. இது நடந்தால், வெளிநாட்டில் உள்ள தமது ஆட்களுடன் வரிந்துக்கட்டிக் கொண்டு பெரும் நிதிசேகரிப்பு இயக்கத்தை தொடக்க முடியும். கரடியானாறு வெடிப்பு நடந்தபோது புலிகள் வட்டாரத்தின் சந்தோஷப்பரபரப்பைக் காண வேடிக்கையாக இருந்தது.</p>

<p>இப்படியிருக்கும்போது விநாயகம் இலங்கையில் ஒரு 'நிகழ்வை'  நடத்தமுடியும். பாதுகாப்பு அமைப்பின் தயார்நிலை என்பவற்றை பார்க்கும்போது எந்தவொரு பெரிய தாக்குதலும் எவ்வகையிலும் சாத்தியமற்றது.</p>

<p>ஒரு அரசியல்வாதியின் கொலை அல்லது குண்டுவெடிப்பு போன்ற ஒப்பீட்டளவில் சிறிதான ஒரு நிகழ்ச்சி சாத்தியமாகலாம்.</p>

<p>கருதுகோள் ரீதியாக, வெளிநாட்டு புலிகளால் அவர்கள் வசமுள்ள பணத்தின் வலுவால், இலங்கையில் உள்ள ஒருவருக்கு பணம் கொடுத்து ஒரு கைக்குண்டொன்றை வீசவைக்கவோ அல்லது குண்டொன்றை வெடிக்கவைக்க முடியும். நன்கறியப்பட்ட ஒருவர் சுட்டுக் கொல்லப்படலாம்.</p>

<p>இவர்களின் பணபலத்துடன், வெளிநாட்டு புலிகள் வறுமைப்பட்ட முன்னாள் புலிபோராளியை அல்லது எல்லைப்படையை சேர்ந்த ஒருவரை இவ்வாறான வன்முறைக்கு பயன்படுத்தலாம். கருதுகோள் ரிதீயாக முன்னாள் படைவீரரை அல்லது ஊர்காவற் படையை சேர்ந்த ஒருவரை கூட பயன்படுத்துவது சாத்தியமே பாதாள உலக கோஷ்டியில் ஒருவரையும் பயன்படுத்தலாம்.</p>

<p>எல்.ரீ.ரீ.ஈ.க்கு தேவையானது ஒரு கைக்குண்டு, ஒரு குண்டு அல்லது ஒரு துப்பாக்கி மட்டுமே.</p>

<p><strong>ஆற்றல்</strong></p>

<p>இப்படியான நிலைவரத்தில், விநாயகமே தனது சாதனை, அநுபவம் என்பவற்றின் காரணமாக கொழும்பிலே அல்லது இலங்கையின் வேறு பாகத்திலோ தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளக் கூடியவராவார்.<br />
 <br />
விநாயகம் சாள்ஸுடன் சேர்ந்து தென்பகுதியில் பல வன்முறை செயல்களை திட்டமிட்டு செயற்படுத்திக் கொண்டிருந்தார் என்பதை  ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். விநாயகம் தற்போதும், வன்செயலில் ஈடுப்படுத்துவதற்கு ஒருவரை அல்லது ஒரு சிலரை பெற்றுக்கொள்வதற்கான தொடர்புகளை கொண்டிருக்கலாம் என கருதுவது தர்க்க ரீதியானதே.</p>

<p>நெடியவனுக்கும் விநாயகத்துக்கும் இடையிலான தந்திரோபாய கூட்டு ஒருவருக்கொருவர் தேவையானவர் என்ற அடிப்படையிலே உருவானது. வெளிநாட்டு புலி அமைப்புகளை, உற்சாகப்படுத்தவும், நிதிசேகரிப்பை அதிகரிக்கவும் நெடியவனுக்கும் விநாயகம் தேவை. அதைவிடவும் முக்கியமாக விநாயகத்தால் மட்டும்தான் வன்செயல்களை இலங்கையில் ஏற்பாடு செய்யமுடியும் என்பதை நெடியவன் அறிவார்.</p>

<p>விநாயகத்தை பொறுத்தளவில், தனது புலனாய்வு பிரிவை இயக்குவதற்கு நெடியவனின் வசமுள்ள நிதிவளம் அவருக்கு தேவையாகும். அவருக்கு தான் எண்ணியுள்ள 'செயற்றிட்டத்தை' நடைமுறைக்கு கொண்டுவர நிதி தேவை.</p>

<p>இதைவிட முக்கியமாக, தான் நெடியவனை புறம்பு காட்டினால் தன்னால் வினைத்திறனுடன் இயங்க முடியாது என்பதை  விநாயகம் அறிவார். கேபியின் நன்னோக்க முயற்சிகளை நெடியவன் எவ்வாறு குழப்பினார் என்பது விநாயகத்துக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கிறது.</p>

<p>இவைதான் கூடிய சிரேஷ்டரான விநாயகம், தனது கனிஸ்டரான நெடியவனின் வழியில் செல்லவும், தந்திரோபாய கூட்டில் சேரவும் வைத்த காரணங்களாகும்.</p>

<p>நெடியவன் இப்போதைக்கு எல்.ரீ.ரீ.ஈ. இன் தலைமைப் பொறுப்பை விநாயகத்துக்கு கொடுப்பதில் திருப்தியோடு உள்ளார். விநாயகம் தற்போது எல்.ரீ.ரீ.ஈ. பின்னணியோடு உள்ளவர்களை அணுகுவதிலும், அவர்களை, தன்னால் உருவாக்கப்படும் எல்.ரீ.ரீ.ஈ. மத்திய குழுவில் சேர்க்கவும் அழைத்துவருகிறார். விநாயகத்திக் முயற்சிகள் எதிர்காலத்தில் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>

<p><strong>சிவப்பு அறிவித்தல்</strong></p>

<p>கொழும்பு, விநாயகத்தின் ஆற்றலை குறைத்து மதிப்பிடுவதாக இல்லை. ஆகக் குறைந்த அளவில் பிரச்சினைக்குரியவராகவும் ஆகக் கூடியளவில் தொல்லை தருபவராகவும் இருப்பதற்கான வளங்களை எல்.ரீ.ரீ.ஈ. இன் புதிய தலைவர் விநாயகம் கொண்டுள்ளதாக பாதுகாப்பு உயர்பீடங்களில் உள்ளோர் கருதுகின்றனர்.</p>

<p>இதனால்தான் 'இன்ரபோல்' சிவப்பு அறிவித்தலை விடுப்பதற்கான விரைவான ஏற்பாடுகள் நடந்தன. இதன்பின், விநாயகம் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து கைதுசெய்து இயலுமாயின் இலங்கைக்கு கொண்டுவரவும் மேற்கத்தைய நாடுகளின் சட்ட அமுலாக்கல் நிறுவனங்களில் ஆதரவை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும்.</p>

<p>எல்.ரீ.ரீ.ஈ. இன் நிறுவுனர் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன், மே, 2009 இல் நந்திக்கடல் கடனீரேரியின் கரையில் கொல்லப்பட்டார். அவரின் பின் தலைமையை ஏற்ற செல்வராசா பத்மநாதன் அல்லது கேபி கைதுசெய்யப்பட்டு ஓகஸ்ட் 2009 இல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார். இவரது புதிய எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் ஐரோப்பாவில் தோற்றம் பெற்றுள்ளார்.</p>

<p>சேகரப்பிள்ளை விநாயகமூர்த்தி அல்லது 'கேணல்' விநாயகமூர்த்தியின் விதி என்னவாகும்? <em>~ நன்றி: தமிழ் மிரர் ~</em></p>

<p><em>(டெய்லிமிரர் ஆங்கிலப் பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)</em></p>]]>
    </content>
</entry>
<entry>
    <title>எல்.ரீ.ரீ.ஈ. விரைவில் வன்முறையுடன் மீண்டும் வருமா?</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2010/12/post_292.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=356" title="எல்.ரீ.ரீ.ஈ. விரைவில் வன்முறையுடன் மீண்டும் வருமா?" />
    <id>tag:ootru.com,2010://1.356</id>
    
    <published>2010-12-19T03:39:33Z</published>
    <updated>2010-12-19T21:45:27Z</updated>
    
    <summary>டி.பி.எஸ். ஜெயராஜ் முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்கிலிமைந்த கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தொடராக நடந்த யுத்தத்தில் இலங்கை பாதுகாப்பு படைகளினால் தமிழீழ விடுதலைப் புலிகள் மே 2009 இல் திட்டவட்டமாக நிர்மூலமாக்கப்பட்டனர். எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது சிரேஷ்ட பிரதித்தலைவர்கள், தளபதிகள், ஆகியோருடன் ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இத்தோடு பெருமளவிலான பொதுமக்களும்...</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><strong>டி.பி.எஸ். ஜெயராஜ் </strong></p>

<p><strong>மு</strong>ல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்கிலிமைந்த கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தொடராக நடந்த யுத்தத்தில் இலங்கை பாதுகாப்பு படைகளினால் தமிழீழ விடுதலைப் புலிகள் மே 2009 இல் திட்டவட்டமாக நிர்மூலமாக்கப்பட்டனர். </p>

<p>எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது சிரேஷ்ட பிரதித்தலைவர்கள், தளபதிகள், ஆகியோருடன் ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இத்தோடு பெருமளவிலான பொதுமக்களும் பலியாகினர்.</p>]]>
        <![CDATA[<p>பத்தாயிரத்துக்கு மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் பாதுகாப்பு படைகளிடம் சரணடடைந்தனர். இவர்கள் விசேட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்களில் சில ஆயிரம்பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளோர் கட்டங்கட்டமாக விடுவிக்கப்படுவர். ஆயிரம் வரையிலான வைரித்த புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p>

<p>மே 29 இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பிரதான விளைவு சண்டை முடிவுக்கு வந்துள்ளமையாகும். புலிகளின் பாணியிலான வன்முறைகள் இலங்கையில் அற்றுப்போயுள்ளமை விசேட கவனத்துக்குரியதாகும்.</p>

<p>கடந்த 18 மாதங்களாக இலங்கையின்  எந்தப் பக்கத்திலும் எல்.ரீ.ரீ.ஈ. செய்வித்த வன்முறை இடம்பெறவில்லை. புலிகளின் வன்முறை காணப்படாமை, மற்றும் யுத்தத்தின் வடுக்கள், புண்களை ஆற்ற மேற்கொள்ளப்படும் நத்தைவேக நடவடிக்கைகளையிட்டு நாட்டு மக்கள் ஆறுதல் பெருமூச்சு விடும் இவ்வேளையில், தற்போதுள்ள அமைதி நிரந்தரமானதா அல்லது இடைவேளை மட்டும்தானா என்ற கேள்வி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.</p>

<p>இன்னும் சிறிது காலத்தில் புலிகளின் மீள் வருகையினால் வன்முறைகள் மீண்டும் தொடங்கக் கூடும் என்ற பயமும், விளக்கமும் இந்த கேள்வியின் ஆதார சுருதியாக உள்ளன.</p>

<p>பொதுவாக நாட்டிலும், குறிப்பாக தமிழர் வாழும் பிரதேசங்களிலும் காணப்படுகின்ற, மெதுவாக, ஆனால், தொடர்ந்து வரும் வழமை நிலை நோக்கிய நகர்வை எல்.ரீ.ரீ.ஈ. வன்முறையின் மீட்சி குழப்பிவிடக் கூடும் என்பது கவலையளிப்பதாக உள்ளது. நிலையான சமாதானம், உண்மையான இணக்கப்பாடு நோக்கிய மட்டுப்படுத்திய முன்னேற்றம் பின்னடைவைக் காணும்.</p>

<p>இப்படி நடக்குமிடத்து இதனால் இலங்கை தமிழ் மக்களுக்கு ஏற்படக் கூடிய நிலைமை மிகவும் பயப்பட வேண்டியதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தசாப்தங்களாக நடத்தப்பட்ட யுத்தம் தமிழ் மக்களை அடித்து நொறுக்கி உருக்குலையாகச் செய்துள்ளது. இவர்கள் சாம்பலிலிருந்தும் தூசியிலிருந்தும் எழுந்து தம்மைத் தாதே மீட்க படும் பாடு பரிதாபகரமானது.</p>

<p>எல்.ரீ.ரீ.ஈ. இனால் முன்னெடுக்கப்படும் அரசியல் வன்முறை மீண்டும் தொடங்குவது நிலைமையை  மோசமடைய செய்யலாம். இலங்கை அரசாங்கம் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மீண்டும் இரும்புக்கர ஆட்சிக்கு திரும்பும். வழமைக்கும் திரும்பும் செயற்பாடு பின்னடைவதற்கு, அப்பால்,  அரசு வடக்கு கிழக்கின் தற்போதைய சனத்தொகையமைப்பை மாற்றும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.</p>

<p>இருப்பினும் அடிநிலை யதார்த்தம், புலிகளின் மீள்வருகைக்கு எதிராகவே காணப்படுகிறது. வடக்கு, கிழக்கில், பாதுகாப்பு இயந்திரம் சேதாரமின்றி காணப்படுவதும், அந்தப் பகுதிகளில் ஆயுதப்படைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு குறிப்பிடத்தக்களவுக்கு திருந்தியிருப்பதாலும் புலிகளின் மீள்வருகைக்கான வாய்ப்பு மிக சொற்பமே.</p>

<p>அத்துடன் மக்களின் விருப்புத் தெரிவுகள், வன்முறையை மீண்டும் தொடங்குவதாக அல்லாமல், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், பொருளாதார நிலைமைகளை முன்னேற்றுதல், என்பனவாகவே உள்ளன. தம்மை அழிவுக்கு இட்டுச்சென்ற ஆயுத போராட்ட தசாப்தங்களுக்குப் பின்பு பலவீனப்பட்டுப்போன தமிழ் மக்கள், சில பொறுப்பற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆவேசப் பேச்சுகளின் மத்தியிலும் வன்முறையை ஏற்கும் மனநிலையில் இல்லை.</p>

<p><strong>புலம்பெயர்ந்தோர் பாத்திரம் </strong> </p>

<p>இருப்பினும் புலம்பெயர்ந்தோரின் பாத்திரம் கவலை தருவதாக உள்ளது.</p>

<p>எல்.ரீ.ரீ.ஈ இலங்கையில் மரண அடி வாங்கினாலும் அதன் வெளிநாட்டு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை. அதன்கிளைகள், முன்னணிகள், தொழில்கள், ஊடக அமைப்புகள் வழமை போல இயங்கின. தமக்குள் சச்சரவுகள் காணப்படினும், புலிகளும் புலிகளுக்கும் சார்பான புலம் பெயர்ந்தோரும் தமிழ் ஈழ இலட்சியத்தை ஆதரிப்பதோடு இயன்ற போதெல்லாம் புலிக்கொடியை பறக்க விடுகின்றனர்.<br />
 <br />
ஏமாற்றும் முயற்சியாக, புலிக்கொடி எல்.ரீ.ரீ.ஈ யின் கொடியல்ல, அது தமிழ் ஈழத்தின் கொடி என கூறப்படுகின்றது. வெளிநாட்டிலுள்ள பிரதான ஊடகங்களுக்கும், தமிழ் பேசாத தமிழ் இளைஞர் தலைமுறைகளுக்கும், உறுமும் புலி, தமிழ் தேசியக்கொடி என பிழையாகக் கூறப்படுகின்றது.</p>

<p>எல்.ரீ.ரீ.ஈ. யும் எல்.ரீ.ரீ.ஈ. சார்பான சக்திகளும் 2009 இல் புலிகளின் இராணுவ ரீதியான தோல்வியின் பின் கணிசமான வலுவையும் செல்வாக்கையும் இழந்துள்ளனர். உட்பூசல்களும், குழுக்களாகப் பிரிந்தமையும் இயக்கத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான கண்ணிற்படும் உதாரணமாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதம மந்திரி என தனக்குத் தானே பெயர் சூட்டிய விசுவநாதன் ருத்ரகுமாரன் மீது, ஒரு காலத்தில் புலி ஊடகங்களின் தலைமைக் காப்பாளராக இருந்த 'தமிழ்நெற்' வெட்ட வெளிச்சமாக காட்டி வரும் கசப்புணர்வைக் கூறலாம்.</p>

<p>ஆயிரக்கணக்கான கொடிபிடிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒரு குறுகியகால அறிவித்தலில் அணித்திரட்ட இப்போது எல்.ரீ.ரீ.ஈ யால் முடியாது. அந்தக் காலம் போய்விட்டது. பெரும் எண்ணிக்கையிலான எல்.ரீ.ரீ.ஈ. ஊடகங்கள் இப்போது இயங்குவதில்லை.</p>

<p>நிதி சேகரிப்பு முற்றாக நின்றுவிடவில்லை. ஆனால், நிச்சயமாக குறைந்து விட்டது. எல்.ரீ.ரீ.ஈ யிற்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை, வர்த்தக முயற்சிகளை வைத்திருப்பது அல்லது முகாமைத்துவம் செய்த பல 'பினாமிகள்' அவற்றை தமது சொந்த தேவைக்குப் பயன்படுத்த அல்லது விற்றுக்கொண்டு பணத்துடன் ஓடத் தொடங்கிவிட்டனர்.</p>

<p>உயர்கல்வித் தகைமை அல்லது வாண்மைத் தகைமையுடன் கூடிய, 'படித்த' எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்களின் இரவோடிரவான  மாற்றமும் நகைப்புக்குரியதாக உள்ளது. மாற்றுக் கருத்துடையோரை கொலை செய்தல் உட்பட புலிகளின் ஒவ்வொரு செயலையும் நியாயப்படுத்திய இவர்கள்; இப்போது மனித உரிமைகளின் பாதுகாவலர்களாகிவிட்டனர். இவர்கள்  வெட்கமில்லாமல், சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு போன்ற புகழ்பெற்ற மனித உரிமை நிறுவனங்களுடன், இணைந்துக்கொண்டு மனித உரிமைகள் பற்றி பேசுகின்றனர்.</p>

<p>இலங்கையில் எல்.ரீ.ரீ.ஈ இன் மறைவுக்குப் பின்னர். வெளிநாடுகளில் தோற்றம் பெற்றுள்ள இன்னொரு வகைப் புலி 'இணையப் போராளிகள்' ஆவர். பலவகையான இணையம் தளங்களும், ஈமெயில் குழுக்களும்  உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இணையத்தளங்கள், இலங்கையில் காணப்படும் நிலைமை பற்றி கட்டுக்கதைகளையும் பச்சைப் பொய்களையும் தான் அநேகமாக வெளியிடுகின்றன. ராஜபக்ஷ ஆட்சியின் வீழ்;ச்சி, புலிகளின் மீள்வருகை, என்பவற்றையிட்டு நம்பிக்கை கொண்டு அவைக்காக ஏங்கிக்கொண்டு ஈமெயில் போராளிகள் தமக்குள்ளே ஆவேசமான நீண்ட கடிதங்களை பரிமாறிக்கொள்கின்றனர்.</p>

<p>இவர்களது வேடிக்கை விளையாட்டுக்கள்  போலவே புலிகளின் மீள்வருகை, வன்முறைகள் மீண்டும் தொடங்குதல் என்பவற்றை மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் அமைப்புகள் இலேசான விடயனெக் கருதி உதாசீனம் செய்யாமல், புலம் பெயர்ந்தவர்களின்  பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஏதோவொரு விடயம் இருக்கக் கூடும் எனக் கவலைப் படுவதுடன் எல்.ரீ.ரீ.ஈ மீண்டும் வன்முறையை தொடங்கக் கூடும் எனவும் கவலைப்படுகின்றன.</p>

<p><strong>மீண்டும் தொடங்குதல்</strong></p>

<p>இந்த மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் அமைப்புகள் புலி வன்முறைகள் மீண்டும் தொடங்குவதால் எந்த ஒரு பெறுமதியான நோக்கமும் நிறைவேறபோவதில்லை என்றும் அவை இலங்கை அரசால்  ஈவிரக்கமின்றி நசுக்கப்படும் என்றும் கருதுகின்றன. இருந்தாலும் அவ்வாறான வன்முறைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை. இவ்வாறான வீண்முயற்சிகள் வழமை நிலைக்கு திரும்பும் தொடர்செயற்பாட்டின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம்பற்றிய கவலையும் அவர்களுக்கு இருக்கிறது.</p>

<p>மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் அமைப்புகளின் புலிகளின் மீள்வருகைப் பற்றிய கவலையை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கொண்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் உயர்மட்டக் குழுவொன்று சில வாரங்களுக்கு முன் இலங்கை அதிகாரிகளுடன் பேசுவதற்காக இலங்கைக்கு வந்திருந்தது. இங்கு பேசப்பட்ட முக்கிய விடயமாக எல்.ரீ.ரீ.ஈ. மீண்டும் அணித்திரளுதலும், வன்முறை வெடித்தலும் இருந்தன.</p>

<p>இந்திய தூதுக்குழுவினர், கே.பி. என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனுடனும் கொழும்பில் நீண்ட நேரம் பேசினர். முன்னாள் புலிகளின் இராணுவத்தளவாட கொள்வனவாளராக இருந்தவரும், தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவருமான இவரிடம் புலிகளின் மீள்வருகையின் சாத்தியம் பற்றியும் புலிகள் சார்பான புலம்பெயர்ந்தோரின் பாத்திரம் பற்றியும் கேள்விகள் நிறையக் கேட்கப்பட்டன. இந்தியா, இந்திய மண் , இவ்வாறான முயற்சிகளுக்கு பயன்படுத்துவதையிட்டு மிகுந்த கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. கே.பியுடனான இந்த உரையாடலின்போது இலங்கை அதிகாரிகளும் உடனிருந்தனர்.</p>

<p>இந்தியாவில் புலிகள் மீதான தடையை நீடிப்பது பற்றியதாக தற்போதைய சட்ட நடவடிக்கைகள் உள்ளன. இந்த தடை 1992 இலிருந்து அமுலில் உள்ளது. இது இரண்டு வருடத்துக்கொரு தடைவை புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த முறை புலி ஆதரவுக் குழுக்கள் தடையை நீடிப்பதற்கு எதிராக நீதிமன்றங்களால் கடுமையாக போராடி வருகின்றன. இந்தியாவில் புலிகள் அணிதிரண்டு மீண்டும் செயற்பாட்டுக்கு வரலாம் என்ற நியாயமான பயத்தைக் கொண்டுள்ள மத்திய, மாநில அரசுகள் புலித் தடையை நீடிக்க வேண்டுமென உறுதியாக வாதாடுகின்றன.</p>

<p>இருப்பினும் எல்.ரீ.ரீ.ஈ இல் மீள்வருகை சாத்தியமாதல் பற்றிய விடயத்தில் மேற்கத்தைய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முக்கிய ஒரு வேறுபாடு உண்டு.  </p>

<p>மேற்கத்தைய நாடுகளும் ஐக்கிய, பிரிபடாத இலங்கை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், தமிழ் புலம்பெயர்ந்தோரின் நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியாக, வன்முறையற்றதாக இருக்கும் பட்சத்தில், இவர்களின் தமிழ் ஈழத்துக்கான பரப்புரையை தமது மண்ணில் சகித்துக்கொள்பவையாக இவை உள்ளன. உதாரணமாக, எல்.ரீ.ரீ.ஈ. அமெரிக்காவில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்ற வகையில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், நாடு கடந்த தமிழீழ அரசு, பிடடெல்பியா, நியூயோர்க் ஆகிய இடங்களில், பகிரங்க மாநாடுகளை நடத்தியுள்ளது.</p>

<p>ஆனால், இந்தியாவை பொறுத்தவரை இது வித்தியாசமானது. கடந்தகால கசப்பான அனுபவங்களின் பின்னணியில், எல்.ரீ.ரீ.ஈ. க்கோ அல்லது அதன் அனுதாபிகளுக்கோ சகிப்புத் தன்மை காண்பிக்கப்படுமென்பது அநேகமாக சாத்தியமற்றதே. சட்டத்தில் எங்காவது ஒரு பலவீனம் காணப்படினும், தமிழ்நாட்டில், உள்ள அரசுக்கெதிரான போக்கை கொண்டுள்ளவர்களும் தீவிரவாத, பிரிவினை ஆதரவுக் குழுக்களும் இழந்துபோன தமது  செல்வாக்கை மீட்க இதைப் பயன்படுத்துவர். மேலும் மணிப்பூர் தீவிரவாதிகளுக்கு பயிற்சியையும் ஆயுதங்களையும் முட்டாள்தனமாக புலிகள் வழங்கியமையை இந்தியா கவனத்தில் எடுக்காமல்விட முடியாது. எனவே ஜனநாயக ரீதியாக, வன்முறை சாராத தமிழ் ஈழத்துக்கான ஆதரவைக்கூட குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் அனுமதிக்கும் சாத்தியம் இல்லை.</p>

<p>எல்.ரீ.ரீ.ஈ. யின் மீள்வருகை அதனை தொடர்ந்து வரக்கூடிய வன்முறை பற்றி சில மேற்கத்தைய நாடுகளிலும் கவலையும், சந்தோசமும், இப்போதைய நிலைமையில் பொருத்தமானதா இல்லையா என்பது பற்றி எதுவும் உறுதியாக கூறமுடியாது.  உலகளவில் இடம்பெயர்ந்த தமிழர்களிடையே எல்.ரீ.ரீ.ஈ எவ்வளவு தூரம் வலுப்பெற்றுள்ளது, இலங்கையில் புலிகள் மீண்டும் வன்முறையை அவிழ்த்துவிடும் வாய்ப்பு எந்தளவு உள்ளது?</p>

<p>வெளிநாடுகளில் உள்ள புலி மற்றும் புலி ஆதரவு அமைப்புகளை, பொதுவில் இரண்டு வகைகளுக்குள் அடக்கலாம். இந்த இரண்டு வகையில் முதல் வகையில், புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள், மற்றும் புலிகளின் வெளிப்படையாக இயங்கும் அமைப்புகள் அடங்குகின்றன. எல்.ரீ.ரீ.ஈ அநேகமான மேற்கத்தைய நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பதாலும், இலங்கையில் எல்.ரீ.ரீ.ஈ. நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாலும் இந்த அமைப்புகள் இப்போது எல்.ரீ.ரீ.ஈ. ஐ வெளிப்படையாக ஆதரிப்பதில்லை. சிலர் தாம் புலிகளுடன் இல்லை என்பதுபோல வெளியில் காட்டினாலும் இரகசியமாக புலிகளுக்கு விசுவாசமாக உள்ளனர்.</p>

<p><strong>ருத்ரகுமாரன்</strong><br />
 <br />
முதலாவது வகைக்குள் அடங்கும் நிறுவனங்களில் மூன்று பிரிவினர் உள்ளனர். இவர்கள் முதலாவது நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் (TGTE) அதன் அமைப்புகளாகும். ஊடகங்களும், தனிநபர்களும், இதனுடன் சேர்ந்துள்ளனர். நியூயோர்க்கில் தொழிற்படும் வழக்குரைஞரான, ருத்ரா என அறியப்படும் விசுவநாதன், ருத்ரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை இயக்குபவராவார். முன்னர் ருத்ரா எல்.ரீ.ரீ.ஈ. யின் சர்வதேச செயலகத்திற்கு சட்ட ஆலோசகராக இருந்தார். இவர் நோர்வே ஒழுங்கு செய்த அரசாங்க – எல்.ரீ.ரீ.ஈ. சமாதான பேச்சுவார்த்தைகளின்போது எல்.ரீ.ரீ.ஈ. தூதுக்குழுவுக்கு வளவாளராக செயற்பட்டார்.</p>

<p>நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) 'பிரதமர்' ஆக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட ருத்ரா, அண்மையில் நாடுகடந்த அமைச்சரவையையும் ஆக்கியுள்ளார். இதில் மூன்று பிரதி பிரதம மந்திரிகளும், ஏழு அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் உள்ளனர். இதில் இரண்டு அமைச்சர்களும், மூன்று பிரதி அமைச்சர்களும் பெண்கள் ஆவர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE)சட்ட சபையில் ஒரு (ஆண்) சபாநாயகரும் (பெண்) பிரதி சபாநாயகரும் உள்ளனர். ருத்ரா (செனட்) மேலவை ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறார்.</p>

<p>'பிரதமர்' ருத்ரகுமாரனும் அவரது அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் கோமாளித்தனமான மன ஆறுதலை வழங்கிவரும் வேளையில், மேற்கத்தைய நாட்டு சிரேஷ்ட அதிகாரிகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற எண்ணக்கருவை ஏற்புடையதாகக் கருதுகின்றனர். இவ்வாறான ஜனநாய செயற்பாடுகள் மனவெழுச்சிக்கு ஆட்படும் புலம்பெயர்ந்தோர் சிலரை வன்முறை நாட்டத்திலிருநது பிரித்தெடுக்கக் கூடுமென இந்த அதிகாரிகள் எண்ணுகின்றனர்.</p>

<p>நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சில அங்கத்தவர்கள் தமது முக்கியத்துவம் பற்றியும் அந்தஸ்து பற்றியும் மாயைகளை கொண்டுள்ளனர். ஓர் ' அமைச்சர்' இந்திய வெளிநாட்டு அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு சமமாக ராஜபக்ஷ அரசாங்கத்தின் அரசவிருத்தினராக கொழும்பு செல்வதற்காக உத்தியோக பூர்வ அழைப்பை எதிர்பார்த்துக்கொண்டுள்ளார். ஏனையவர்கள் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அழைக்கப்படுவர் என எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.</p>

<p>யதார்த்தம் என்னவெனில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனங்காணப்பட்ட சகல அங்கத்தவர்களும் இலங்கை அரசாங்கத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ளவர்கள் என்பதே. இந்த அமைப்பை சமமான பேச்சுவார்த்தைப் பங்காளராக அரசாங்கம் நடத்தும் சாத்தியம் ஏதுமில்லை. இருந்தும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள், தம்மையும் தமது ஆதரவாளர்களையும் இப்படியான பிரம்மைகள் மூலம் ஏமாற்றிவருகின்றனர்.</p>

<p>மேற்கத்தைய அதிகாரிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அதிகாரிகளை கௌரவமாக நடத்த விரும்புகின்றனர். ருத்ரகுமாரனின் ஏற்பாட்டை தீங்கற்ற பகிடியாகவும், உள்ளவற்றில் ஆகக் குறைந்தளவில் தீங்கானது எனவும் இவர்கள் கருதுவதனால், குறைந்த மட்டத்திலான உத்தியோகரீதியான பேச்சுவார்த்தைகளை இவர்களுடன் நடத்தவும் கூடும்.</p>

<p>மேற்கத்தைய பாதுகாப்பு என்ற பார்வையில் கூடிய தீங்கான விடயமாகக் காணப்படுவது நெடியவனால் கட்டுப்படுத்தப்பட்டு வழிப்படுத்தபடும் அமைப்புகளே ஆகும். நெடியவனின் செல்வாக்கு மண்டலத்தினுள் உள்ளவையாக, பல எல்.ரீ.ரீ.ஈ. கிளைகளும், உலக தமிழ் அரங்கமும் (றுவுகு)    இதற்குள் அடங்கும். பல்வேறு நாடுகளிலும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மக்கள் முன்னணிகளும் தேசிய மன்றங்களும் உள்ளன.</p>

<p><br />
உலக தமிழ் அரங்கம் பல்வேறு நாடுகளில் உள்ள 14 நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் முக்கியமானவையாக  பிரித்தானிய தமிழ் அரங்கமும் (BTF) கனடாவில் உள்ள கனேடிய தமிழ் காங்கிரஸும் உள்ளன. பிரித்தானிய தமிழ் அரங்கம் (BTF) உற்சாகமாக தொழிற்படுகிறது. அது பல பிரித்தானிய அரசியல்வாதிகளுடனும், ஊடக முக்கியஸ்தர்களுடனும் உயர்மட்ட தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.</p>

<p>கனேடிய தமிழ் காங்கிரஸ் நன்றாக இயங்கவில்லை. இந்த அமைப்பின் பேச்சாளரும் வெளியில் அறியப்பட்டவருமான டேவிட் பூபாலபிள்ளையின் அறிவிப்புகளும் பேச்சுக்களும் கனேடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பினை (CTC)    பலமுறை தர்மசங்கடமான நிலைக்கு தங்கியுள்ளது. பூபாலபிள்ளை புளொட் அமைப்பின் முன்னாள் பிரதி தலைவரான வாசு தேவாவினதும் பத்திரிகையாளரான (தராக்கி) சிவராமினதும் மைத்துனராவார்.</p>

<p><strong>நெடியவன்</strong></p>

<p>உலக தமிழ் அரங்க (GTF)  அங்கத்துவ அமைப்புகள் சில தனித்தியங்கும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றன. முக்கிய பிரச்சினைகளில் முரண்பாடான நிலைப்பாட்டையும் எடுக்கின்றன. அங்கத்துவ அமைப்புகளுக்குள்ளும் பிரிவுகள் உண்டு.</p>

<p>உலக தமிழ் அரங்கத்தின் (GTF)  தலைவராக முன்னாள் யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் கத்தோலிக்க மாகாண முதல்வராகவிருந்த வண.பிதா. எஸ்.ஜே. இமானுவெல் உள்ளார். இவர் இப்போது ஜேர்மனியில் நிலை கொண்டுள்ளார். இவர் நிதானமாக, மெதுவாக, ஒரு குருவானவருக்குரிய பக்குவத்துடன் பேசுவார். இவர் தமிழ்தேசியம் என்னும் போது இறுக்கமான ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் போக்கை கொண்டவர் என்பதும் நெடியவனுக்கும் அவரது அடியாட்களுக்கும் 'தொட்டப்பா'வாக உள்ளார் என்பதும் நன்கு பிரசித்தமாக விடயம்.</p>

<p>பேரின்பநாயகம் சிவபரன் என்னும் சொந்த பெயர் கொண்ட இவரைப் பற்றி இப்பத்தியில் நிறைய எழுத்தப்பட்டுள்ளது. இவர், புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளுக்கு பொறுப்பாகவிருந்த எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் மணிவண்ணன் அல்லது கஸ்ட்ரோவினால் எல்.ரீ.ரீ.ஈ. யின் வெளிநாட்டு கிளைகளின் இணைப்பாளராக முன்பு நியமிக்கப்பட்டவர்.</p>

<p>கஸ்ட்ரோவின் மரணத்தின் பின் எல்.ரீ.ரீ.ஈ.யின் வெளிநாட்டு கிளைகளின் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் உயரமானவர் எனப்பொருள்ப்படும் இயக்கப் பெயரை வெற்றிக்கொண்டார். சொற்ப காலத்தின் முன் இதை நெடியோன் என மாற்றிக்கொண்டார். இதுவும் உயரமானவர் எனப்பொருள் படினும் செந்தமிழாகவும் மரியாதைக்குரியதாகவும் உள்ளது.</p>

<p>34 வயதான நெடியவன் 18 வயதில் எல்.ரீ.ரீ.ஈ. யில் சேர்ந்தார். இவரை எல்.ரீ.ரீ.ஈ உயர்க்கல்விக்காக ரஷ்யாவுக்கு அனுப்பியது. ஆனால் இவர் அங்கு பட்டப்படிப்பை  பூர்த்தி செய்யவில்லை போல தெரிகிறது.</p>

<p>நெடியவன் எல்.ரீ.ரீ.ஈ இன் அரசியல் பிரிவில் வேலைசெய்தார். எல்.ரீ.ரீ.ஈ. யின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப்பையா பரமு தமிழ்செல்வனுடன் தாய்லாந்தில்; நடந்த நாலாவது சுற்று சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றார். பின்னர் இவர் ஐரோப்பாவில் நிலைக்கொண்டார்.</p>

<p>2002-2005 காலப்பகுதியில் சமாதான பேச்சு இடம்பெற்ற சமயத்தில் எல்.ரீ.ரீ.ஈ. பல செயற்பாட்டாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளது. இவர்களில் அநேகமானவர்கள் அரசியல் அல்லது உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். நெடியவன் நோர்வேயுக்குச் சென்று அங்கு வசிக்கலானார்.</p>

<p>நெடியவன், சிவகௌரி சாந்த மோகன் என்னும் பெண்ணை திருமணம் செய்தார். இவருடைய தந்தை சகோதரன் ஞானேந்திர மோகன் அல்லது ரஞ்சன் லாலா ஆவார். ஞானேந்திர மோகன் எல்.ரீ.ரீ.ஈ. இன் ஆரம்பகால உறுப்பினரும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாக இருந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தபோது இராணுவம் இவரை சுட்டுக்கொன்றது.</p>

<p>திருமணபந்தம், எல்.ரீ.ரீ.ஈ. க்குள் நெடியவனின் செல்வாக்கை வலுப்படுத்தியது. கஸ்ட்ரோ வழிவந்த அதிகாரத்தின் மூலம் இவர், கே.பி. உலக புலி பிரதானியாக வருவதற்கு எதிரான செயற்பாடுகளை தொடங்கி முன்னெடுத்தார்.</p>

<p>கடந்த ஆகஸ்டில் கே.பி. மலேஷியாவில் பிடிப்பட்டதன் பின் இவர் எல்.ரீ.ரீ.ஈ.இன் வெளிநாட்டு கிளைகள் மீது கூடிய கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டார்.</p>

<p>நாடுகடந்த தமிழீழ அரசு (TGTE) என்ற எண்ணக்கரு கே.பி.யின் மூளையிலேயே முதலில் உருவாகியது. கே.பி. சுதந்திரமாக இருந்த காலத்திலேயே நாடுகடந்த தமிழீழ அரசு என்ற திட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு கே.பி. விசுவாசியான ருத்ரகுமாரனிடம் கொடுக்கப்பட்டது. கே.பி. பிடிப்பட்டதுடன் கேபிக்கும் ருத்ரகுமாரனுக்குமிடையிலான தொடர்புகள் அறுந்து போயின. ருத்ரகுமாரன் இத்திட்டத்தை முழுமையாகப் பொறுப்பேற்று தனது திறமை, நேரம் என்பவற்றை இத் திட்டத்தை செயற்படுத்துவதிலேயே அர்ப்பணித்தார்.</p>

<p>நெடியவனின் சதிக்கூட்டம் ருத்ரகுமாரனையும் நாடுகடந்த தமிழீழ அரசையும் கே.பியின் எறியங்களாகவே பார்த்தனர். இந்தக் கூட்டம் இத்திட்டத்தின் முன்னேற்றத்தை பல வகைகளிலும் குழப்ப முயன்றது. அதில் ஒன்றுதான் நாடு கடந்த தமிழ் நிறுவனங்கள் அடுத்தது வண. பிதா இமானுவலின் செல்வாக்கைப் பயன்படுத்தி உலக தமிழ் அரங்கத்தின்மீது நெறிப்படுத்தும் அதிகாரத்தை கைப்பற்றியதாகும்.</p>

<p>தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் நாடுகளில் நிறுவனங்களின் வலைமைப்பை நெடியவன் அணி ஏற்படுத்தியது. இவை மக்கள் பேரவை அல்லது தேசிய மன்றங்கள் என அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஜனநாயக ரீதியான தேர்தல்களை நடத்தியது போலவே நெடியவனின்  வலையமைப்பும் தேர்தல்களை நடத்தியது.</p>

<p><strong>ஜெயானந்தமூர்த்தி</strong></p>

<p>இவ்வாறான போட்டி முயற்சிகள் காணப்பட்ட போதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற எண்ணக்கரு பரந்துப்பட்ட மக்களின் மனதைப் பற்றியதுடன் உயர்கணிப்பு பெற்ற முக்கியஸ்தர்களின் உள்ளத்தையும் கவர்ந்தது.</p>

<p>இதனால் நெடியவன் அணி உத்தியை மாற்றிக் கொண்டது. அது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரிவுகளுக்குள் ஊடுருவத் தொடங்கியது. முன்னாள் மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயானந்தமூர்த்தியை ருத்ரகுமாரனுக்கு போட்டியாளராக கொண்டுவந்து ருத்ரகுமாரனை கவிழ்க்கும் வெளிப்படையான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது. ஜெயானந்தமூர்த்தி, ருத்ரகுமானுடன் நின்றுபிடிக்க முடியாதவராகையால் அந்த முயற்சி மோசமான தோல்வியை கண்டது.</p>

<p>ருத்ரகுமாரனை வெல்லமுடியதாதெனக் கண்ட நெடியவன் சதிக்குழு தனது அணுகுமுறையை மீண்டும் மாற்றியமைத்தது. இது பிரதம அமைச்சர் என்ற ரீதியில் ருத்ரகுமாரனின் அதிகாரத்தை குறைக்க அல்லது மட்டுப்படுத்த சதி செய்ததது. இந்த முயற்சியும் இதனால் நெடியவன் அணி இனி என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டுள்ளது.</p>

<p>பரஸ்பரம் அழிவைக் கொண்டுவரக் கூடிய இந்த இரண்டு அணியினருக்கும் இடையிலான பகைமை சிறிது கவலை தருவதாகவும் உள்ளது. மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் இதை பாரதூரமான விடயமாகக் கருதவில்லை. பல்வேறு நாடுகளில் இரண்டு அணியினரதும் ஆதரவாளர்கள் மற்றும், தொழிற்படுநர்களிடையிலும் மோதல் ஏற்பட்ட சம்பவங்கள் பல உள்ளன. நியூயோர்க்கில் நடந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டமொன்றில் வில்லுக்கத்திகளுடன் இரண்டு வன்குழுக்கள் காணப்பட்டன.</p>

<p>இவ்வாறான வெளிப்பாடுகள் காணப்பட்ட போதும், சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை பற்றிய பயமின்றி உள்ளன. உண்மையில் சில அதிகாரிகள் தமிழ் அணிகளுக்கு இடையிலான இந்த 'போட்டியை' தமிழ் புலம்பெயர்ந்தோரிடையேயான மலர்ந்து வரும் உள் ஜனநாயகத்தின் ஆரோக்கியமான போட்டியாகக் காண்கின்றனர். உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், மரதன் நடைகள், கொடும்பாவி எரிப்புகள் என்பன ஜனநாயக ரீதியான மாற்றுக்கருத்து மற்றும் எதிர்ப்பு என்பவற்றின் சட்டபூர்வமான வடிவங்களாக கருதப்படுவதனால் இவர்கள் இவற்றை வெறுப்போடு பார்ப்பதில்லை.</p>

<p>வெளிப்படையாக இயங்கும், பொறுப்புக் கூறவேண்டிய நிலையில் உள்ள தனிச்சிறப்பு அமைப்புகளின் எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள் பாதகமானவை எனக் கருதப்படாதபோதும், அதிகம் வெளித்தெரியாத, பொறுப்புக் கூறும் நிலையில் இல்லாத சில இரகசிய செயற்பாடுகள் பற்றி அதிக கவலை காணப்படுகிறது. எல்.ரீ.ரீ.ஈ. இன் மீள்வருகை, இலங்கையில் வன்முறைகள் மீண்டும் தொடங்குதல் இவற்றினால் வெளிநாடுகளில் வரக்கூடிய தொடர் நடவடிக்கைகள், மறைமுகமான தாக்கங்கள் என்பவை பற்றியே ஆகக் கூடிய பயம் உள்ளது.</p>

<p>அண்மைக் காலத்தில் மேற்கத்தைய நாடுகளில், தமது மண்ணை, இலங்கை உட்பட எந்தவொரு நாட்டிலும் மேற்கொள்ளவுள்ள 'பயங்கரவாதத்துக்கு' நிதி சேகரிக்க பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற பொதுக்கருத்து காணப்படுகிறது.</p>

<p>இந்த கருத்தொற்றுமையின் ஒரு பகுதியாகவே, சில வருடங்களின் முன் எல்.ரீ.ரீ.ஈ. இன் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து  ஆகிய நாடுகள், முக்கியமான புலித் தலைவர்கள் மீதும் நிதி சேகரிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுத்தன.</p>

<p><strong>முள்ளிவாய்க்கால்</strong></p>

<p>முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பின் அநேகமான மேற்கத்தைய நாடுகள் இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீது அனுதாபம் கொண்ட காரணத்தால் நிதிசேகரிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் சற்று ஓய்ந்திருந்தன.</p>

<p>இலங்கைத் தமிழ் மக்களின் துன்பநிலை பற்றி கவலை கொண்டவர்களாக காட்டிக் கொள்ளும் புலிகளும் புலி ஆதரவு அமைப்புகளும் இயன்றளவு உச்ச அளவில் நிதி சேகரித்து, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் போன்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு அதைப் பயன்படுத்துவர் என்பதே எதிர்பார்க்கப்பட்டது.</p>

<p>அது நடக்கவில்லை. பதிலாக புலிகளும் புலி ஆதரவு நிறுவனங்களும் இடம் பெயர்ந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவுவதற்கு எதிராக நச்சுத்தனமான பிரசாரத்தை மேற்கொண்டு  வருகின்றனர். இது தமிழ் மக்கள் மீதான அக்கறையின்மையின் அருவருப்பூட்டும் வெளிப்பாடு எனில் பல்வேறு அழிவு நோக்கத்துடன் நிதிதிரட்டுவது பற்றி கவலை தரும் தகவல்களும் தெரியவந்தன.</p>

<p>இது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தது. மீண்டும் எல்.ரீ.ரீ.ஈ. நிதி சேகரிப்பாளர்கள் மற்றும் முக்கிய தொழிற்படுநர்கள் மீது நடவடிக்கைகள் அண்மைய மாதங்களில் இடம்பெற்றன. நெதர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் புலி செயற்படுநர்களை கைது செய்துள்ளது. வேறு நாடுகளிலும் எல்.ரீ.ரீ.ஈ.க்கு நிதி சேகரிப்பவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் சிலர், விரைவில் கைது செய்யப்படலாம் அல்லது தடுத்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>

<p>மே 2009 இல் இடம்பெற்ற நிகழ்வுகளின் பின் எல்.ரீ.ரீ.ஈ.இன் நிதி சேகரிப்பு பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இப்போது வைரித்த எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களிடமிருந்தும் செயற்பாட்டாளர்களிடமிருந்தும்தான் பிரதானமாக நிதி சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் நிதியின் அளவு, சில வருடங்களின் முன் சேகரிக்கப்பட்ட நிதியின் 10-15 வீத அளவுக்கு குறைந்துள்ளது. இவ்வளவு பாரிய வீழ்ச்சி காணப்பட்ட போதும் இந்த நிதியில் சில மறைக்கப்படும் காரணங்களுக்காக நிதி சேகரிக்கப்படுவது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிலேசத்தை ஏற்படுத்துகின்றது.</p>

<p>ஒரு மட்டத்தில் ராஜபக்ஷ ஆட்சிக்கும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கும் எதிரான சட்ட நடவடிக்கைக்கு என்று கூறி நிதி சேகரிக்கப்படுகின்றது. ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளை யுத்த குற்றமிழைத்தவர்கள் என குற்றஞ்சாட்டி சர்வதேச விசாரணை மன்றங்களுக்கு இழுக்கப் போவதுபற்றி பெரிதாகப் பேசப்படுகிறது. புரியப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றம், மனித இனத்துக்கு எதிரான குற்றம் என்பவற்றுக்கான சான்றுகளை,  சாட்சியங்களை சேகரிப்பது பற்றியும் பேசப்படுகின்றது.</p>

<p>இப்படியான தேவைக்கான நிதி சேகரிப்பு தமிழ் புலம்பெயர்ந்த மக்களுள் ஒப்பீட்டளவில் முன்னேறிய பகுதியினரிடமிருந்து மேற்கொள்ளப்படுகிறது. உயர்கல்வி தகைமையுடன் கூடிய படித்த தமிழர்களுக்கு, ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கம், எவ்வளவுதான் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தப்போதும், ஆசைக்காட்டுவதாக உள்ளது. இது தொடர்பில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் பற்றிய கற்பனைகள் மனதை உருக்குவனவாக இருப்பதனால் கணிசமான புலம்பெயர்ந்த வாண்மையாளர்களும் புத்திஜீவிகளும் தாராளமாக நிதி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சில மேற்கத்தைய நிபுணர்களும் வழக்குரைஞர்களும் நம்பிக்கெடும் புலம்பெயர்ந்த இந்த ஏமாளிகளிடமிருந்து பெருந்தொகைப் பணத்தை கறந்துக்கொண்டிருக்கின்றனர்.</p>

<p>ஒரு பிரபல வழக்கறிஞர் ஒருவருக்கு முற்பணமாக நாளொன்றுக்கு 1000 அமெரிக்க டொலர்வீதம் , மூன்று மாதங்களுக்கு மேலாக அண்மைக் காலம்பவரை பணம் கொடுக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. 'அறப்படிச்ச பல்லி கூழ் பானையில் விழுந்ததாம்' என பழமொழி உண்டு. இந்த கோமாளிக் கூத்துகள் இந்த பழமொழியை ஞாபகப்படுத்துகிறது.</p>

<p>வடக்கு, கிழக்கிலுள்ள ஆயிரக் கணக்கான வறிதாக்கப்பட்ட மக்கள் துன்பத்தில் வாழும் நிலையில் இப்படியான விடயங்கள் கவலை தருவனவே. இப்படியான நிதிவளங்களை கிடைக்கப் போகாத நீதிக்காக வீணாக்காமல், இந்த மக்களுக்கு உதவப் பயன் படுத்தலாம். தமிழ் மக்களுக்கு உதவப் பயன்படுத்தலாம். தமிழ் மக்களுக்கு பெரும் துயரங்களை கொடுத்த போருக்கு நிதி வழங்கி, அதை தூண்டிய புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தார் மீகக் கடமையொன்று உள்ளது.</p>

<p>இவர்கள் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்த வேண்டும், பிராயச்சித்தம் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செத்துப்போய் வாழும் மக்களை புறக்கணித்துவிட்டு இறந்து போனவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் பழைய வழியிலேயே செல்கின்றனர். இது எவ்வளவு தூரம் கோமாளித்தனமாக, யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டததாக இருப்பினும் சட்ட நடவடிக்கைக்காக நிதி சேகரிப்பதை மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் கணக்கில் எடுக்க மாட்டா.</p>

<p>கவலையளிக்கும் விடயமாக இருப்பது என்னவெனில் புலம்பெயர்ந்தோரின் சில பகுதியினரிடம் இரகசியமாக மேற்கொள்ளப்படும் வேறொரு விதமான நிதி சேகரிக்கப்பாகும். இவை நேரடியாக புலிகளின் மீள்வருகையுடனும், வன்முறைக்கு திரும்புவதுடனும் தொடர்பானவை.</p>

<p><strong>பொதுவான கதை</strong></p>

<p>எல்.ரீ.ரீ.ஈ.  நிதிசேகரிப்பாளர்களும், தொழிற்படுநர்களும் பல்வேறு மேற்கத்தைய நாடுகளில் பணம் சேகரிக்கச் செல்கின்றனர். இவர்கள் ஒரே கதையைத்தான் எல்லா இடத்திலும் கூறுகின்றனர். கதை சொல்லும் விதம், கதை கூறுபவர், கேட்பவர்களைப் பொறுத்து மாறுபடும். கதையின் சாராம்சம் இதைப்போலவே இருக்கும்:-</p>

<p>"எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் பிரபாகரனும் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் அநுபவம் வாய்ந்த 2000 புலிப்போராளிகளுடன் இரகசியமான ஒரு இடத்தில் பாதுகாப்பாக உள்ளனர். முள்ளிவாய்க்கால் அனர்த்தத்திற்கு சில நாட்களுக்கு, முன் இவர்கள் இராணுவம், கடற்படை ஆகியவற்றின் முற்றுகை வளையத்தை உடைத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிட்டனர். இவர்கள் நல்ல காரணத்துக்காகவே வெளிப்படாமல் உள்ளனர். ஆனால் வடக்கு, கிழக்கில் நன்கு ஆயத்தம் செய்யப்பட்ட தாக்குதலை தொடக்கி ஆயுதப்படைகளை துரத்தி அல்லது அழித்தொழித்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதிகளை கைப்பற்றும் திட்டங்கள் தயாராகிக் கொண்டுள்ளன.</p>

<p>'பல்வேறு தொகுதிகளாக வேறு இரகசிய இடங்களில் 10,000 போராளிகள் பயிற்றப்படுகின்றனர். பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் தலைமையில் ஒரே தடவையில் பெரும் தாக்குதலை தொடக்குவதே திட்டமாக உள்ளது.</p>

<p>'12,000 எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளும் இணைந்து தமிழ் ஈழத்தின் நிலப்பரப்பை மீட்டெடுப்பதுடன் தற்போது காணப்படும் இராணுவ நிலைமையை தலைகீழாக மாற்றுவர்</p>

<p>'இந்த இராணுவ தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக, சிங்களப் பெரும்பான்மை கொண்டுள்ள ஏழு மாகாணங்களிலும் நன்கு இணைக்கப்பட்ட நிலக்கண்ணி மற்றும் குண்டுத்தாக்குதல்கள் தொடராக நடத்த நாம் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றோம். இதற்காக நாம், பெருமளவு, இலஞ்சம் கொடுத்து சிங்கள முன்னாள் படை வீரர்களை சேர்த்துக்கொண்டிருக்கின்றோம். சரியான நேரத்தில், எமது பிரதான தாக்குதலுடன் இவர்களும் சேர்ந்து செயற்படுவர்.</p>

<p>இந்த திட்டங்கள் நற்பயன்தர எமக்கு பணம் வேண்டும். நாம் கண்ட எல்லோரிடமும் கேட்கமுடியாத எம்மால் இது தொடர்பில் வெளிப்படையான வேண்டுகோளை விடுக்கவும் முடியாது. உங்களைப் போன்ற சில நம்பிக்கைக்கு பாத்திரமான, ஈடுபாடு காட்டிய ஆட்களில்தான் நாம் தங்கியிருக்க முடியும். எனவே உங்களால் முடிந்ததை தாருங்கள்."</p>

<p>இதுதான் பணம் சேகரிப்பதற்கு புலி நிதி சேகரிப்பாளர்கள் கூறிவரும் கதையின் சாரம் - சுருக்கம்.</p>

<p>முதலில் இந்தக் கதையை கேட்டப்போது நான் பெரிதாக சிரித்தேன். இருந்தாலும் இதைச் சொன்னவர், உண்மையாகவே இந்த கதையை நம்புகிறார், அவர் என்னையும் நம்பவைக்க முயற்சிக்கின்றார் என உணர்ந்தப்போது சிரிப்பதை நிறுத்திவிட்டேன். பின்னர் இதே கதை வேறு நபர்களால் வேறு பல நாடுகளிலும் திருப்பித் திருப்பி கூறப்படுவதாக நான் கேள்விப்பட்டேன்.</p>

<p>பின்னர் நான் 'பயங்கரவாதம்'  பற்றி நிபுணத்துவம் பெற்றுவருபவரும், பல்வேறு தேசத்து பாதுகாப்பு, உளவு அதிகாரிகளுடன் நிறைய தொடர்புகளை உடையவருமான ஒரு மேற்கத்தைய பத்திரிகையாளருடனும் குறிப்புகளை பரிமாறிக்கொண்டேன். இந்த கதையை முதலில் கேட்டப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அதைக் கணக்கில் எடுக்கவில்லை என்றும் ஆனால் இதை உண்மையென நம்பும் விசுவாசத்தின் தீவிரத்தன்மை அவர்களுக்கு புதிராகக் காணப்படுவதாகவும், கூறினார். குறைந்தப்பட்சம் சிலராவது, இந்த 'சாத்தியமாகாத நோக்கத்திற்கு' நிதி வழங்குகின்றனர் என்பதையிட்டு அவர்களும் கிலேசமடைந்துள்ளனர்.</p>

<p><strong>சாத்தியமின்மை</strong></p>

<p>இந்த பத்தி எழுத்தாளர் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்துவிட்டனர் என்றும் எல்.ரீ.ரீ.ஈ. இன் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது எனவும் உறுதியாக நம்புகின்றனர். சரணடைந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தொகுதி, தொகுதியாக விடுவிக்கப்படுகின்றனர். இதுவரை இலங்கையில் பிடிபடாது தப்பியுள்ள சில எல்.ரீ.ரீ.ஈ செயற்படுநர்களும், ஆதரவு வலையமைப்பின் அங்கத்தவர்களும் இருக்கக் கூடும். ஆனால் இவர்களும் திட்டமிட்ட வகையில் பிடிக்கப்பட்டு வருகின்றனர்.</p>

<p>தற்போது காணப்படும் உலக யதார்த்த நிலைமையின்படி 12,000 போராளிகளுக்கு இலங்கையை தாக்குவதற்கு இராணுவ பயிற்சியளிக்க புலிகளை எந்த நாடும் அனுமதிக்கப் போவதில்லை. மேலும் இவ்வாறான தாக்குதலுக்கு பின்தளமாக தென்னாசிய அல்லது தென்கிழக்காசிய பிரதேசங்களே இருக்கமுடியும். இந்தியாவின் அமைவிடத்தைப் பார்க்கும்போது இது சாத்தியமற்றது.</p>

<p>ஒருங்கிணைக்கப்பட்ட வகையில், முன்னாள் படை வீரர்களுக்கு பணங்கொடுத்து அவர்களைக்கொண்டு நிலக்கண்ணிகளை வைப்பது என்பதும் குண்டுகளை தொடர்ந்து வெடிக்க வைப்பது என்பதும் கற்பனைத் திறனின் உச்சப்பறப்பு ஆகும்.</p>

<p>புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் முன்னர் நாசவேலைகளில் ஈடுபட பாதுகாப்புப் படையை சேர்ந்த பலருக்கு பணங்கொடுத்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான முயற்சிகள் படுதோல்வியிலேயே முடிந்தன. படைவீரர்கள் அல்லது முன்னாள் படைவீரர்களிடம் உள்ள உண்மையான தேசப்பற்று இந்த முயற்சிகளை முறியடிக்கும். சரத்பொன்சேகா நடத்தப்படும் முறைப்பற்றி கோபங்கொண்டுள்ள எவரேனும் ஒரு முன்னாள் இராணுவ வீரர்கூட இந்த வேலையைச் செய்யமாட்டார்.</p>

<p>இதைவிட முக்கியமானது நாட்டின் பாதுகாப்பு நிலை உறுதியான கட்டுப்பாட்டில் உள்ளது என்பதாகும். பேரளவிலான நாசவேலை சாத்தியமில்லை. இந்த எச்சசொச்ச எல்.ரீ.ரீ.ஈ.யினரால் கற்பனை செய்யப்படும் கடல்வழி ஆக்கிரமிப்பும் சாத்தியமற்றதே. ஒரு சிறு தாக்குதல் படை தரையிரங்கி ஊடுருவினாலும்  இது நீண்டகாலம் தப்பிப் பிழைத்திருக்காது. இதுவே தற்போதைய இராணுவ யதார்த்தம்</p>

<p>இந்த பின்னணயில் நோக்கும்போது இலங்கை மீது இராணுவ தாக்குதலை நடத்தவென வெளிநாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ தொழில்படுநர்கள் பணம் சேகரிக்க முயல்வது, புலம் பெயர்ந்த ஏமாளிகளிடமிருந்து பணத்தை தந்திரமாக பெறும் பெரும் ஏமாற்று வேலையின் ஒரு பகுதியேயாகும். புலம் பெயர்ந்தோரில் ஒரு பகுதியினரிடம் இலங்கை அரசாங்கத்தின் மீது காணப்படும் குருட்டுத்தனமான வெறுப்பும் கோபமும் காணப்படும் பின்னணியில் கற்பனை செய்யப்படும் இந்த திட்டத்துக் குறிப்பிட்ட ஒரு தொகையை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், இந்த திட்டம் எழுச்சிபெறவோ அல்லது சாத்தியமாகவோ முடியாது.</p>

<p>எல்.ரீ.ரீ.ஈ. விரைவில் வன்முறையுடன் மீண்டும் வருமா என்ற கேள்விக்கு பதிலாக இல்லை என்றே அடித்துக் கூறமுடியும்.</p>

<p>இராணுவ தாக்குதல் பற்றிய பிரமாண்ட திட்டம் சாத்தியமில்லாவிடினும் புலிசார்பு புலம்பெயர்ந்தோர் தொடர்ந்தும் தொல்லை கொடுப்பவர்களாகவும் எரிச்சலூட்டுபவர்களாகவும் நிச்சயமாக இருக்க முடியும். எனவே அடுத்து வரவிருக்கும் கட்டுரை புலிகள் இயக்கம், புலிசார்பான புலம்பெயர்ந்தோர் பிரிவினர் பற்றி ஆழமாக பரிசீலனை செய்வது சுவாரஷ்யமாகவும் அறிவூட்டுவதாகவும் இருக்கும். <em>- நன்றி: தமிழ் மிரர் - </em></p>

<p><em>(டெய்லிமிரர் ஆங்கிலப் பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)</em></p>]]>
    </content>
</entry>
<entry>
    <title>mp3: திருவேட்கை: அமரர் போல வாழ்வேன், -  என்மேல் அன்பு கொள்வையாயின்</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2010/12/post_291.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=355" title="mp3: திருவேட்கை: அமரர் போல வாழ்வேன், -  என்மேல் அன்பு கொள்வையாயின்" />
    <id>tag:ootru.com,2010://1.355</id>
    
    <published>2010-12-04T18:06:09Z</published>
    <updated>2010-12-05T02:19:40Z</updated>
    
    <summary>மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல் ~ வழங்குபவர்: சீர்காழி எஸ். கோவிந்தராஜன்:...</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><strong>ம</strong>காகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல் ~ வழங்குபவர்: சீர்காழி எஸ். கோவிந்தராஜன்:</p>

<p><img alt="BharathyO124.jpg" src="http://ootru.com/neer/BharathyO124.jpg" width="350" height="467" /><br />
</p>]]>
        <![CDATA[<p><embed src='http://ootru.com/files/dewplayer.swf' height='30' width='200' allowscriptaccess='false' allowfullscreen='true' flashvars='author=ootru.com&description=courtesy of:&file=http://ootru.com/neer/MMTSB.mp3&image=http://transcurrents.com/tc/FRTF.jpg&icons=false'/></p>

<p>mp3 <em><strong>ம</strong>காகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல் ~ வழங்குபவர்: சீர்காழி எஸ். கோவிந்தராஜன்:</em></p>

<p><strong>திருவேட்கை</strong></p>

<p>ராகம் - நாட்டை ~ தாளம் - சதுஸ்ர ஏகம்</p>

<p>மலரின் மேவு திருவே! - உன்மேல்<br />
மையல் பொங்கி நின்றேன்;<br />
நிலவு செய்யும் முகமும் - காண்பார்<br />
நினைவ ழிக்கும் விழியும்,<br />
கலக லென்ற மொழியும், - தெய்வக்<br />
களிது லங்கு நகையும்,<br />
இலகு செல்வ வடிவும் - கண்டுன்<br />
இன்பம் வேண்டு கின்றேன். </p>

<p>கமல மேவும் திருவே! நின்மேல்<br />
காத லாகி நின்றேன்;<br />
குமரி தன்னை இங்கே - பெற்றோர்<br />
கோடி யின்ப முற்றார்;<br />
அமரர் போல வாழ்வேன், - என்மேல்<br />
அன்பு கொள்வை யாயின்;<br />
இமய வெற்பின் மோத, - நின்மேல்<br />
இசைகள் பாடி வாழ்வேன். </p>

<p>வாணி தன்னை என்றும் - நினது<br />
வரிசை பாட வைப்பேன்!<br />
நாணி யேக லாமோ? என்னை<br />
நன்க றிந்தி லாயோ? <br />
பேணி வைய மெல்லாம் - நன்மை<br />
பெருக வைக்கும் விரதம்<br />
பூணு மைந்த ரெல்லாம் - கண்ணன்<br />
பொறிக ளாவ ரன்றோ? </p>

<p>பொன்னும் நல்ல மணியும் - சுடர்செய்<br />
பூண்க ளேந்தி வந்தாய்!<br />
மின்னு நின்றன் வடிவிற் பணிகள்<br />
மேவி நிற்கும் அழகை<br />
என்னு ரைப்ப னேடீ - திருவே!<br />
என்னு யிர்க்கொ ரமுதே!<br />
நின்னை மார்பு சேரத் - தழுவி<br />
நிக ரிலாது வாழ்வேன். </p>

<p>செல்வ மெட்டு மெய்தி - நின்னாற்<br />
செம்மை யேறி வாழ்வேன்:<br />
இல்லை என்ற கொடுமை - உலகில்<br />
இல்லை யாக வைப்பேன்;<br />
முல்லை போன்ற முறுவல் - காட்டி<br />
மோக வாதை நீக்கி,<br />
எல்லை யற்ற சுவையே! - எனை நீ<br />
என்றும் வாழ வைப்பாய். </p>]]>
    </content>
</entry>
<entry>
    <title>காணொலி: &apos;வேலவா..வடி வேலவா&apos; - கொழும்பு ~ புதிய கதிரேசன் கோயில் சூரன் போர்</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2010/11/post_290.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=354" title="காணொலி: 'வேலவா..வடி வேலவா' - கொழும்பு ~ புதிய கதிரேசன் கோயில் சூரன் போர்" />
    <id>tag:ootru.com,2010://1.354</id>
    
    <published>2010-11-25T18:52:35Z</published>
    <updated>2011-01-03T09:51:43Z</updated>
    
    <summary>வேலவா..வடி வேலவா...வேடனாக வந்து நின்ற வேலவா - வழங்குபவர்: பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள் கொழும்பு ~ புதிய கதிரேசன் கோயில் சூரன் போர் நிகழ்வில் இருந்து படக் கோவை ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை...</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><strong>வே</strong>லவா..வடி வேலவா...வேடனாக வந்து நின்ற வேலவா - வழங்குபவர்: பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள் </p>

<p><br />
<object width="350" height="287"><param name="movie" value="http://www.youtube.com/v/9tcUdi8PCN0?fs=1&amp;hl=en_US&amp;color1=0x234900&amp;color2=0x4e9e00"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/9tcUdi8PCN0?fs=1&amp;hl=en_US&amp;color1=0x234900&amp;color2=0x4e9e00" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="350" height="287"></embed></object></p>

<p>கொழும்பு ~ புதிய கதிரேசன் கோயில் சூரன் போர் நிகழ்வில் இருந்து படக் கோவை ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை</p>]]>
        <![CDATA[<p><object width="350" height="275"> <param name="flashvars" value="offsite=true&lang=en-us&page_show_url=%2Fphotos%2Fpassionparade%2Fsets%2F72157625239963189%2Fshow%2Fwith%2F5203013283%2F&page_show_back_url=%2Fphotos%2Fpassionparade%2Fsets%2F72157625239963189%2Fwith%2F5203013283%2F&set_id=72157625239963189&jump_to=5203013283"></param> <param name="movie" value="http://www.flickr.com/apps/slideshow/show.swf?v=71649"></param> <param name="allowFullScreen" value="true"></param><embed type="application/x-shockwave-flash" src="http://www.flickr.com/apps/slideshow/show.swf?v=71649" allowFullScreen="true" flashvars="offsite=true&lang=en-us&page_show_url=%2Fphotos%2Fpassionparade%2Fsets%2F72157625239963189%2Fshow%2Fwith%2F5203013283%2F&page_show_back_url=%2Fphotos%2Fpassionparade%2Fsets%2F72157625239963189%2Fwith%2F5203013283%2F&set_id=72157625239963189&jump_to=5203013283" width="350" height="275"></embed></object></p>]]>
    </content>
</entry>
<entry>
    <title>காணொலி: திருகோணமலை நிலாவெளியில் மீனவர் மரபு இசைப்பாடல்</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2010/11/post_288.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=353" title="காணொலி: திருகோணமலை நிலாவெளியில் மீனவர் மரபு இசைப்பாடல்" />
    <id>tag:ootru.com,2010://1.353</id>
    
    <published>2010-11-21T13:08:12Z</published>
    <updated>2010-11-21T21:16:30Z</updated>
    
    <summary> ஸ்ரீ லங்கா மேல் மாகாணத்தில் இருந்து , கிழக்கு மாகாணம் வந்துள்ள மீனவர்கள் கடற்கரையில் இசைக்கும் மரபு இசை...</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><object width="350" height="287"><param name="movie" value="http://www.youtube.com/v/tDNgFa3FGg4?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0x006699&amp;color2=0x54abd6"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/tDNgFa3FGg4?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0x006699&amp;color2=0x54abd6" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="350" height="287"></embed></object></p>

<p><em>ஸ்ரீ லங்கா மேல் மாகாணத்தில் இருந்து , கிழக்கு மாகாணம் வந்துள்ள மீனவர்கள் கடற்கரையில் இசைக்கும் மரபு இசை</em></p>]]>
        <![CDATA[<p><strong>தி</strong>ருகோணமலை மாவட்டம், நிலாவெளியில் மீன் பிடி நிமித்தம் மேல்மாகாணத்தில் உள்ள உடப்பு கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள மீனவர்கள் மரபுப் பாடல் இசைப்பு ~ படங்கள், ஒலிப்பதிவு: துஷியந்தினி கனகசபாபதிப்பிளை</p>]]>
    </content>
</entry>
<entry>
    <title>அளவெட்டி, கும்பிளாவளை பிள்ளையார்: &quot;எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி!&quot;</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2010/11/post_289.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=352" title="அளவெட்டி, கும்பிளாவளை பிள்ளையார்: &quot;எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி!&quot;" />
    <id>tag:ootru.com,2010://1.352</id>
    
    <published>2010-11-20T23:40:16Z</published>
    <updated>2010-11-21T07:49:08Z</updated>
    
    <summary>மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல், வழங்குபவர் சீர்காழி எஸ். கோவிந்தாரஜன் ~ விநாயகர் நான்மணி மாலையிலிருந்து: கும்பிளாவளை பிள்ளையார் கோயில், அளவெட்டியிலிருந்து ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை...</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><strong>ம</strong>காகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல், வழங்குபவர் சீர்காழி எஸ். கோவிந்தாரஜன் ~ விநாயகர் நான்மணி மாலையிலிருந்து:</p>

<p><object width="350" height="287"><param name="movie" value="http://www.youtube.com/v/QYahHVL0z4A?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0xcc2550&amp;color2=0xe87a9f"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/QYahHVL0z4A?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0xcc2550&amp;color2=0xe87a9f" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="350" height="287"></embed></object></p>

<p>கும்பிளாவளை பிள்ளையார் கோயில், அளவெட்டியிலிருந்து ~ <a href="http://www.flickr.com/photos/passionparade/5192155198/in/set-72157625191529303/">படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை</a></p>]]>
        <![CDATA[<p><strong>ப</strong>க்தி உடையார் காரியத்திற்<br />
பதறார்! மிகுந்த பொறுமையுடன்<br />
வித்து முளைக்குந் தன்மைபோல்<br />
மெல்லச் செய்து பயனடைவார்</p>

<p>சக்தி தொழிலே அனைத்துமெனிற்<br />
சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்?<br />
வித்தைக் கிறைவா! கணநாதா!<br />
மேன்மைத் தொழிலிற் பணியெனையே</p>

<p>எனக்கு வேண்டும் வரங்களை<br />
இசைப்பேன் கேளாய் கணபதி!<br />
மனத்திற் சலன மில்லாமல்,<br />
மதியில் இருளே தோன்றாமல்,</p>

<p>நினைக்கும் பொழுது நின் மவுன<br />
நிலை வந் திடநீ செயல் வேண்டும்,<br />
கனக்குஞ் செல்வம் நூறு வயது;<br />
இவையும் தர நீ கடவாய்!</p>]]>
    </content>
</entry>
<entry>
    <title>காணொலி: எல்லோரும் ஹஜ் செய்யலாம்...</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2010/11/post_287.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=351" title="காணொலி: எல்லோரும் ஹஜ் செய்யலாம்..." />
    <id>tag:ootru.com,2010://1.351</id>
    
    <published>2010-11-17T05:56:42Z</published>
    <updated>2010-11-17T14:14:26Z</updated>
    
    <summary>இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் ஹாஜி ஈ. எம். நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள்...</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><strong>இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்</strong></p>

<p><strong>ஹா</strong>ஜி ஈ. எம். நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள்</p>

<p><object width="350" height="287"><param name="movie" value="http://www.youtube.com/v/vawAhY1EDgo?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0x234900&amp;color2=0x4e9e00"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/vawAhY1EDgo?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0x234900&amp;color2=0x4e9e00" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="350" height="287"></embed></object></p>]]>
        <![CDATA[<p>சென்று வரலாம் மதினா!!!</p>

<p><object width="350" height="287"><param name="movie" value="http://www.youtube.com/v/4RJrc9QR7bk?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0x234900&amp;color2=0x4e9e00"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/4RJrc9QR7bk?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0x234900&amp;color2=0x4e9e00" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="350" height="287"></embed></object></p>]]>
    </content>
</entry>
<entry>
    <title>கிளிநொச்சி தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் உறவுகளுக்கு விடுக்கும் வேண்டுகோள்</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2010/11/post_286.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=350" title="கிளிநொச்சி தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் உறவுகளுக்கு விடுக்கும் வேண்டுகோள்" />
    <id>tag:ootru.com,2010://1.350</id>
    
    <published>2010-11-13T20:46:46Z</published>
    <updated>2010-11-14T04:58:17Z</updated>
    
    <summary>கிளிநொச்சியில் சர்வதேச மருத்துவ உதவி (International Medical Health Organization - ஐ.எம்.எச்.ஓ) நிறுவகம் செயற்படுத்தி வரும் வாழ்வாதாரத் திட்டங்களின் காணொலித் தொகுப்பிலிருந்து: பகுதி 1...</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><strong>கி</strong>ளிநொச்சியில் சர்வதேச மருத்துவ உதவி (<a href="http://theimho.org/projects/idp-relief">International Medical Health Organization</a> - ஐ.எம்.எச்.ஓ) நிறுவகம் செயற்படுத்தி வரும் வாழ்வாதாரத் திட்டங்களின் காணொலித் தொகுப்பிலிருந்து:</p>

<p><object width="350" height="287"><param name="movie" value="http://www.youtube.com/v/NGTGukC7SL0?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0x234900&amp;color2=0x4e9e00"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/NGTGukC7SL0?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0x234900&amp;color2=0x4e9e00" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="350" height="287"></embed></object></p>

<p><strong>பகுதி 1</strong></p>]]>
        <![CDATA[<p><object width="350" height="287"><param name="movie" value="http://www.youtube.com/v/D0v8PLw8Qdg?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0x2b405b&amp;color2=0x6b8ab6"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/D0v8PLw8Qdg?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0x2b405b&amp;color2=0x6b8ab6" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="350" height="287"></embed></object></p>

<p><strong>பகுதி 2</strong></p>

<p><object width="350" height="287"><param name="movie" value="http://www.youtube.com/v/xVseG9m0gvo?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0x2b405b&amp;color2=0x6b8ab6"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/xVseG9m0gvo?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0x2b405b&amp;color2=0x6b8ab6" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="350" height="287"></embed></object></p>

<p><strong>பகுதி 3</strong></p>

<p><object width="350" height="287"><param name="movie" value="http://www.youtube.com/v/j9Hj_77wv7Q?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0x2b405b&amp;color2=0x6b8ab6"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/j9Hj_77wv7Q?fs=1&amp;hl=en_US&amp;rel=0&amp;color1=0x2b405b&amp;color2=0x6b8ab6" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="350" height="287"></embed></object></p>

<p><strong>பகுதி 4</strong></p>]]>
    </content>
</entry>
<entry>
    <title>mp3 ~ சந்ததம்: பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள் வழங்கும் அருணகிரிநாதரின் திருப்புகழ்</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2010/11/mp3_2.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=349" title="mp3 ~ சந்ததம்: பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள் வழங்கும் அருணகிரிநாதரின் திருப்புகழ்" />
    <id>tag:ootru.com,2010://1.349</id>
    
    <published>2010-11-10T04:35:45Z</published>
    <updated>2010-11-10T12:51:05Z</updated>
    
    <summary>  /2006_10_01_archive.html</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><strong>நவம்பர் 6 - 12, 2010 : கந்த சஷ்டி ~ சிறப்புப் பதிப்பு</strong></p>

<p><strong>மா</strong>லோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு<br />
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்<br />
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ<br />
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே. 90 - கந்தர் அலங்காரம்</p>

<p><img alt="DCMO119.JPG" src="http://ootru.com/neer/DCMO119.JPG" width="350" height="467" /></p>

<p><strong>ஐக்கிய அமெரிக்கா, வாஷிங்டன். டி.சி. தலை நகர் முருகன் முகப்பு</strong></p>]]>
        <![CDATA[<p><embed src='http://ootru.com/files/dewplayer.swf' height='30' width='200' allowscriptaccess='false' allowfullscreen='true' flashvars='author=ootru.com&description=courtesy of:&file=http://ootru.com/neer/MMBRSB.mp3&image=http://transcurrents.com/tc/FRTF.jpg&icons=false'/> </p>

<p><strong>பெங்களூர் ஏ.ஆர். ரமணி அம்மாள் வழங்கும் அருணகிரிநாதர் திருப்புகழ்</strong></p>

<p><strong>ச</strong>ந்ததம் பந்தத் தொடராலே <br />
சஞ்சலத் துஞ்சித் திரியாதே<br />
கந்தனென் றென்றுற் றுனைநாளும் <br />
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ<br />
தந்தியின் கொம்பைப் புணர்வோனே <br />
சங்கரன் பங்கிற் சிவைபாலா<br />
செந்திலங் கண்டிக் கதிர்வேலா <br />
தென்பரங் குன்றிற் பெருமாளே.</p>

<p><strong><u>பொருள்: சந்ததம் பந்தத் தொடராலே</u></strong></p>

<p><strong>த</strong>ன்மைக்குத் தக்கவாறு கயிறு பிணைக்கப்படும் <br />
பசுவினைக் கட்டுவதோ ஒரு கயிற்றால் <br />
யானையைப் பிணைப்பது இரு சங்கிலியால் <br />
குதிரையைக் கட்டவோ கயிறு மூன்று வேண்டும் <br />
ஊஞ்சலைக் கட்ட சங்கிலிகள் நான்கு வேண்டும் <br />
ஆன்மாவைக் கட்டவோ ஐந்து கயிறு வேண்டும்!</p>

<p>கயிற்றின் எண்ணிக்கை கூடக்கூட <br />
கட்டுவதின் முரட்டுத்தனம் விளங்கும். <br />
ஒருகயிற்றால் கட்டிய பசு <br />
சுற்றளவைச் சுற்றிவரும் <br />
இருகயிற்று யானையோ <br />
அங்குமிங்கும் அசைந்து நிற்கும் <br />
முக்கயிற்று குதிரையும் <br />
முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும். <br />
நாற்கயிற்று ஊஞ்சலும் <br />
மேலும் கீழும் ஆடிவரும் <br />
ஐங்கயிற்று ஆன்மாவோ (நன்றி: <a href="http://thirupugazh.blogspot.com">http://thirupugazh.blogspot.com</a>)</p>

<p><img alt="WDCM119A.JPG" src="http://ootru.com/neer/WDCM119A.JPG" width="350" height="263" /></p>

<p><strong>ஐக்கிய அமெரிக்கா, வாஷிங்டன். டி.சி. தலை நகர் முருகன் வாசற் கோலம்</strong></p>]]>
    </content>
</entry>
<entry>
    <title>எம்.எச்.எம்.அஷ்ரப்: முஸ்லிம் காங்கிரஸின் காவிய நாயகன்</title>
    <link rel="alternate" type="text/html" href="http://ootru.com/neer/2010/10/post_285.html" />
    <link rel="service.edit" type="application/atom+xml" href="http://ootru.com/neer-mt/mt-atom.cgi/weblog/blog_id=1/entry_id=347" title="எம்.எச்.எம்.அஷ்ரப்: முஸ்லிம் காங்கிரஸின் காவிய நாயகன்" />
    <id>tag:ootru.com,2010://1.347</id>
    
    <published>2010-10-14T00:25:02Z</published>
    <updated>2010-10-14T07:32:24Z</updated>
    
    <summary> (20.09.2010 ஆம் திகதி வெளியான டெய்லிமிரர் ஆங்கிலப் பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.) அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் முடிசூடா மன்னனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காவிய நாயகனுமான மொஹமட் ஹூசைன் முஹமட் அஷ்ரப்பின் மறைவின் 10 ஆவது ஆண்டுப் பூர்த்தி செப்டம்பர் 16, 2010 அன்று ஆகும்....</summary>
    <author>
        <name>ootru.com</name>
        
    </author>
    
    <content type="html" xml:lang="en" xml:base="http://ootru.com/">
        <![CDATA[<p><em> (20.09.2010 ஆம் திகதி வெளியான டெய்லிமிரர் ஆங்கிலப் பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.)</em></p>

<p><strong>அ</strong>ம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் முடிசூடா மன்னனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காவிய நாயகனுமான மொஹமட் ஹூசைன் முஹமட் அஷ்ரப்பின் மறைவின் 10 ஆவது ஆண்டுப் பூர்த்தி செப்டம்பர் 16, 2010 அன்று ஆகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகர்த்தாவான காத்தான்குடியைச் சேர்ந்த அகமத் லெப்பையுடன் கூட்டாக செப்டெம்பர் 1981 இல் அஷ்ரப், கட்சியை நிறுவினார். ஆனால் 1986 இல் கட்சியின் தலைமைத்துவத்தை உரிய வகையில் பொறுப்பேற்ற பின்னர், எம்.எச்.எம். அஷ்ரப்தான் முஸ்லிம் காங்கிரஸிற்கு புதிய தொலைநோக்கையும், புதிய பாதையையும் கொடுத்தவர் ஆவார்.</p>

<p><img alt="MHMA1013.jpg" src="http://ootru.com/neer/MHMA1013.jpg" width="319" height="278" /></p>]]>
        <![CDATA[<p>15 வருடங்களாக அஷ்ரப் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் அவரின் இலட்சிய வீறும், சாதிக்கும் ஆற்றலும் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்பல சாதனைகளைக் கண்டது. இவரது வசீகரம், அரசியல் நிலைமைகளை சரியாக கணக்குப் போடும் திறன், அர்ப்பணிப்பு, ஒரு தலைவருக்குரிய உரிய பண்பு ஆகியவற்றின் காரணமாகவே பலகாலமாக புறக்கணிக்கப்பட்டுவந்த கிழக்கு முஸ்லிம்களை, தனித்து இயங்கக் கூடிய ஒரு சக்தியாக உருவாக்கவும், வரலாற்றில் குறிப்பிடப்படும் மோஸஸ் அல்லது மூஸாநபி போன்று, வனாந்திரத்தினூடாக ஓர் இலட்சிய தேசத்தை நோக்கி இவர்களை இட்டுச் செல்லவும் முடிந்தது.</p>

<p>வாழ்வின் உச்சக் கட்டத்தில், இலங்கையின் அரசியல் வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த இந்த நட்சத்திரத்தை மர்மமான ஒரு விமான வெடிப்பு அழித்தொழித்ததனால், மோஸஸை போலவே அஷ்ரப்பிற்கும் வாக்களிக்கப்பட்ட தேசத்தை சென்றடைய விதி இருக்கவில்லை. மரணிக்கும் வரையிலும், இவர் வடக்கு- கிழக்கு முஸ்லிம்களின் ஒரேயொரு தேசியத் தலைவராக இருந்தார்.</p>

<p>கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பகுதியில் உரக்கந்த மலைத்தொடர்மேல் இலங்கை விமானப்படையின் எம்.ஐ- 17 ரக ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளாகிய துன்ப நிகழ்வில் இந்த துடிப்புமிக்க தலைவர் மரணமானார். இவருடன், விமான ஊழியர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தனிப்பட்ட ஊழியர்கள், அரசியல் ஆதரவாளர்கள் என 14 பேர் கொல்லப்பட்டனர்.</p>

<p>விமான வெடிப்பு, விபத்தா அல்லது நாச வேலையா என ஆராய புலனாய்வுகள் தொடக்கப்பட்டன. அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் சதி வேலைகள் பற்றி பலவிதமான கருத்துகள் அடிப்பட்டன. புலனாய்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. புலனாய்வின் முடிவு எப்படி இருந்தாலும், அஷ்ரப்பின் மரணம் இதுவரை நிரப்பப்படாத வெற்றிடத்தை முஸ்லிம் அரசியலில் உருவாக்கிவிட்டது.</p>

<p><strong> பயனுக்கு வராதிருந்த சக்தி</strong></p>

<p>எம்.எச்.எம். அஷ்ரப், குறிப்பாக முஸ்லிம்களின் முன்னெடுப்புமிக்க தலைவராகவும் பொதுவாக இந்த நாட்டின் தலைவராகவும் இருந்தார். அவர் பல விதத்திலும் தொலைநோக்கில் சிந்திப்பவராக இருந்துள்ளார். அவர், தனது சமூகத்தில் காணப்பட்ட பயனுக்கு கொண்டுவரப்படாத அரசியல் வலுவை கண்டுகொண்டு, தனது மக்களின் அபிலாஷைகள் நிறைவேறும் வகையில், அவர்கள் குறைகள் நிவர்த்திக்கப்படும் வகையில் மக்களை வலுப்படுத்துவதற்கான ஒரு பாதையில் செல்ல முயன்றார். நாட்டில் காணப்பட்ட மோதல் 'சிங்களவருக்கும் தமிழருக்குமிடையிலானது' என எளிமையாக கருதப்பட்டபோது அஷ்ரபின் முயற்சிகள் முஸ்லிம் மக்கள் முகங்கொடுத்த பிரச்சினைகளை முதன்மைப்படுத்தின.</p>

<p>அஷ்ரப், முஸ்லிம்களின் நோக்கங்களை வினைத்திறனுடனும் பேச்சுத்திறனுடனும் பரிந்துரை செய்தமையினால் தீர்க்க முடியாதது போன்று காணப்பட்ட இன நெருக்கடி, தமிழ் - சிங்களம் என்ற இருப்பக்க பிரச்சினை அல்ல, இது முஸ்லிம்களையும் அடக்கிய முப்பக்க பிரச்சினை என்ற விழிப்புணர்வு பொதுவில் தோன்றக் காரணமாயிற்று.</p>

<p>சோனகர் என்றும் அழைக்கப்படும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு சிறப்பான இனத்துவ அடையாளம் உண்டு. சனத்தொகையில் 08 சதவீதமான இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், சிங்களவர்கள் பெரும்பான்மையாகவுள்ள ஏழு மாகாணங்களிலும் பரந்து காணப்படுகின்றனர். மீதமானோர் தமிழர் பெரும்பான்மையாகவுள்ள வடக்கு, கிழக்கில் வாழ்கின்றனர்.</p>

<p>சிங்கள மக்களிடையே வாழும் பகுதியினர் உட்பட இச்சமுதாயத்தின் மிகப்பெரும்பாலோர் வீட்டில் தமிழ் பேசுகின்றனர். இவர்கள் தமிழ் பேசுவோர் என்னும் வகுதிக்குள்ளேயே அடக்கப்படுகின்றனர். அநேகமான முஸ்லிம் பாடசாலைகள் தமிழ்மொழி மூல பாடசாலைகளாகவே காணப்படுகின்றன. இந்த சமூகத்திலிருந்து பல தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், சித்திரக் கலைஞர்கள் ஆகியோர் தோன்றிப் பிரபலமடைந்துள்ளனர்.</p>

<p>இப்படியெல்லாம் இருந்தப்போதும், இந்த சமூகம் தன்னை ' தமிழ்' எனக் கருதாது 'முஸ்லிம்' என்றே கருதுகிறது. முஸ்லிம் என்ற அடையாளம், இன-மொழி வழிப்பட்டதாகவன்றி இன- சமய வழிப்பட்டதாக உள்ளது. இந்த சமூக கலாசார யதார்த்தம், அண்மைக்காலத்தில் கூரிய அரசியல் பரிமாணங்களை பெற்றுள்ளது.</p>

<p>சிதறிவாழும் குடித்தொகையாக இருப்பினும் இலங்கை முஸ்லிம்கள், ஆகக் கூடியளவில் கிழக்கு மாகாணத்தில்தான் அடர்ந்து வாழ்கின்றனர்.</p>

<p>இங்கு 1981 இல் நடந்த குடித்தொகை கணக்கெடுப்பின்படி (கடைசியாக நடந்த உத்தியோக பூர்வ கணக்கெடுக்கின்படி) சனத்தொகையில் 42 சதவீதம் தமிழ், 33 சதவீதம் முஸ்லிம், 25 சதவீதம் சிங்களம் ஆக காணப்பட்டது. தற்போது உத்தியோகப்பற்றற்ற உத்தேச மதிப்பீட்டின்படி சிங்களக் கூறானது கூடியும் தமிழ்க் கூறானது குறைந்தும், முஸ்லிம் எண்ணிக்கை மாறாமலும் இருக்கின்றது என கூறப்படுகின்றது.</p>

<p>'எழுவான்கரை' ( சூரியன் உதிக்கும் கரை)  என அழைக்கப்படும் கடற்கரையோரமாக அமைந்த தமிழ் கிராமங்களுக்கு இடையில் மட்டக்களப்பு – அம்பாறை முஸ்லிம்களில் பலர் பரந்து காணப்படுகின்றனர். மட்டக்களப்பு வாவியின் மேற்கேயுள்ள, படுவான்கரை ( சூரியன் மறையும் கரை) என அழைக்கப்படும் உட்பிரதேசம் தமிழர் ஆதிக்கம் பெற்றது.<br />
 <br />
<strong>குறிச்சிகள்</strong></p>

<p>கிழக்கு மாகாண முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர், விவசாயிகள் ஆகவும், மீனவர்களாகவும் உள்ளனர். கணிசமான முஸ்லிம் வாக்குகள் கொண்ட, முஸ்லிம் குறிச்சிகளை அடக்கிய கிழக்கு மாகாணம், ஒவ்வொரு தேர்தலிலும், இந்த மாகாணத்திலிருந்து நான்கு தொடக்கம்  ஆறு வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு உதவியுள்ளது.  கிழக்கு மாகாணப் பிரதேசம் சில காலங்களில் மொத்த முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் 50 சதவீததிற்கு மேல் வைத்திருந்தது.</p>

<p>இந்த சாதகமான நிலைமையிலும் இந்த சமுதாயத்தின் ஒட்டுமொத்த தலைமை கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கைகளில் இருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தின் பின்தங்கிய கிராமத்து முஸ்லிம்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில், ஒப்பீட்டளவில் முன்னேறிய, மத்திய, மேல், தெற்கு மாகாண முஸ்லிம் தலைவர்கள் காணப்பட்டனர். இருந்தாலும் அஷ்ரப்பின் வருகையின் பின் இந்த நிலைமை மாறியது.<br />
 <br />
அஷ்ரப், 1948 ஒக்டோபர் 23 இல் அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை என்னும் கிராமத்தில் பிறந்தார். அதே பிரதேசத்தில் கல்முனை நகரில் இவர் வளர்ந்தார். கல்முனையில் பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட அஷ்ரப் சட்டக் கல்லூக்குத் தெரிவாகி முதலாம் சிறப்பு வகுப்பில் சித்தியடைந்தார்.</p>

<p>பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து சட்டமாணி, சட்ட முதுமாணிப் பட்டங்களைக் பெற்றுக் கொண்டார். இவர் 1995 இல் அமைச்சராக இருந்த போதே சட்டமுதுமாணிப் பட்டத்தை  பெற்றுக்கொண்டார். 1997 இல் ஜனாதிபதி சட்டத்தரணியானார்.</p>

<p>பிற்காலத்தில், விட்டுக்கொடுக்காத முஸ்லிம் தேசியவாதியாக வந்தபோதும் அஷ்ரப் எப்போதும் தமிழ் மொழியோடும் அதன் கலாசாரத்தோடும் நெருக்கமாக இருந்தார். கல்முனை வெஸ்லி கல்லூரியில் படித்த காலத்திலும், சட்டக்கல்லூரி மாணவனாக இருந்த போதும் தமிழர்களுடன் நெருங்கிப் பழகினார். அரசியலின் விநோத நடவடிக்கைகளுக்கு அப்பால், தனது வகுப்புத் தோழர்களோடும், சகபாடிகளோடும் தனிப்பட்ட நட்புறவை பேணிக்கொண்டார். இவர் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் பரந்த அறிவுடையவராக இருந்தார்.</p>

<p>அஷ்ரப் தமிழில் கிளர்ச்சியூட்டும் பேச்சாளராக இருந்தார். இதற்கும் மேல், தமிழை தன் சிந்தனையின் வாகனமாக பயன்படுத்திய ஒரு கவிஞராகவும் இருந்தார். இவர் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு இவரது முகஸ்துதியாளர்கள் காட்ட முயன்றது போல அதி சிறப்பானதாக இல்லையென்றாலும் பாராட்டத்தக்கது. எப்படியாயினும் தற்போதைய தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரே கவிதை வாசிப்போராக உள்ளபோது அவர்கள் கவிதை இயற்றுவதைப் பற்றி பேசவே தேவையில்லை.</p>

<p><strong>செல்வநாயகம்</strong></p>

<p>அநேகமான கிழக்கு மாகாண முஸ்லிம் தலைவர்கள் போலவே, சமஷ்டிக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான, தமிழ் தந்தையாக உருவகிக்கப்பட்ட செல்வநாயகத்தை மெச்சுபவராகவே அஷ்ரப் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். வடக்கு கிழக்கு பாரம்பரிய தமிழ் தாயகத்தின் தமிழ் பேசும் மக்களுக்கான சமஷ்டி என்ற இலட்சியத்தாலும், செல்வநாயகத்தாலும் இவர் பெரிதும் வசீகரிக்கப்பட்டார்.</p>

<p>குறிப்பாக, சிங்களப் பொலிஸாரினால் புத்தளம் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பிரச்சினையை செல்வநாயகம் கிளப்பினார் என்பதை அஷ்ரப் வியந்து பாராட்டினார். புத்தளம், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரான நய்னாமரிக்கார் உட்பட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது விஷயத்தில் மௌனம் சாதித்தனர்.</p>

<p>அஷ்ரப் சமஷ்டிக் கட்சியின் மேடைகளில் பேசினார். புதிதாக அமைக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) தமிழ் ஈழத்திற்கான கோரிக்கையை ஏகமனதாக நிறைவேற்றிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை மாநாட்டில் அஷ்ரப் 1976 இல் கலந்து கொண்டார்.<br />
 <br />
தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் மேடைகளில் தமிழ் ஈழத்திற்காக வேகத்துடன் பிரசாரம் செய்து கொண்டிந்தபோது 1977 இல் நான் முதன் முதலாக அஷ்ரப்பை சந்தித்தேன். இவர், முஸ்லிம் ஐக்கிய முன்னணியை உருவாக்கி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தை செய்து கொண்டார். கல்முனை, சம்மாந்துறை, புத்தளம், மூதூர் ஆகிய இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் 'சூரியன்' சின்னத்தில் தேர்தலில் இறக்கப்பட்டனர். சேருவலையில் போட்டியிட ஆயத்தப்படுத்தப்பட்டவர் கடைசி நேரத்தில் மனுவை தாக்கல் செய்யத்தவறிவிட்டார்.</p>

<p>இதில் அஷ்ரப் தான் போட்டியிடவில்லை. ஆனால் உற்சாகமாக பிரசாரம் செய்தார். இந்த நேரத்தில்தான் 'அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழத்தை அமைக்க முடியாமல் போனால், தம்பி அஷ்ரப் அதை செய்வான்' என பகிரங்கமாக அஷ்ரப் அறிவித்தார். அமிர்தலிங்கம் தமிழ் ஈழ இலட்சியத்தை கைவிட்டாலும் அஷ்ரப் அதற்காக தொடர்ந்து பாடுபடுவான் என்ற டம்பப் பேச்சு அஷ்ரபின் உரையின் உச்சக் கட்டமாக அமைந்தது.<br />
 <br />
தமிழ் ஈழம் மீதான அஷ்ரப்பின் விருப்பத்துக்கு மாறாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டியலில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களை நிராகரித்தனர். இது அஷ்ரப்பிற்கு ஒரு விடயத்தை தெளிவாக்கியது. அஷ்ரபினுடைய தமிழ் - முஸ்லிம் அரசியல் இலட்சியத்தை பகிரும் விருப்பத்துக்கு அப்பால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் வேறு அபிலாஷைகளை கொண்டிருந்தனர் என்பதை தேர்தல் முடிவு எடுத்துக் காட்டியது.</p>

<p> தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தமிழ் வேட்பாளர்கள் தேர்தலில் அமோக வெற்றி பெற்றபோது, இந்த கட்சிப்பட்டியலில் போட்டியிட்ட முஸ்லிம்கள் எவரும் வெற்றி பெறவில்லை.</p>

<p><strong> கசந்த உறவு</strong></p>

<p>தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் அஷ்ரபின் உறவு படிப்படியாக நலியத் தொடங்கியது. 1981 மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, மன்னாரிலும், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தமிழர்களை மட்டும் தனது பட்டியலில் போட்டியிட வைத்தது. அஷ்ரப் முஸ்லிம்களையும் சேர்க்க விரும்பினார். ஆனால், அது மறுத்துரைக்கப்பட்டது. இது, ஏற்கெனவே மனத்தாங்கலுடன் இருந்த அஷ்ரபை தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியிலிருந்து முற்றாக விலகி, தனிவழி செல்ல வைத்தது.</p>

<p>இருப்பினும் அவர் சிங்கள ஆதிக்க தேசிய கட்சியொன்றில் சேரவில்லை. இதில் அவர் பழைய முஸ்லிம் தலைவர்களிடமிருந்து வேறுபட்டு நின்றார். பழைய முஸ்லிம் தலைவர்கள், சமஷ்டிக் கட்சி மூலம் அரசியலில் இடம் பிடித்துவிட்டு பின்னர் சந்தோஷமாக கட்சி தாவினர். தமிழ் அரசியலிலிருந்தும் சிங்கள அரசியலிலிருந்தும் விடுபட்டு ஒரு சுயாதீனமான பாதையை தெரிய வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு உண்டு என அஷ்ரப் உணர்ந்து கொண்டார். இதனால் அவர் காத்தான்குடி அஹமத்துடன் கூட்டுச் சேர்ந்தார். பின்னர் இருவருமாக முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தனர்.</p>

<p>அஷ்ரப் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்தபின்னர், முஸ்லிம் ஐக்கிய முன்னணி (MUF) சிதைவடையத் தொடங்கியது.</p>

<p>ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் செம்டம்பர் 21, 1981 இல் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசியல் பிரச்சினைகளைவிட அதிகமாக சமூக கலாசார விடயங்களில் அக்கறைப்பட்ட, ஏறத்தாழ ஒரு கிழக்கு மாகாண அமைப்பாகவே காணப்பட்டது.</p>

<p> 1983 இல் இடம்பெற்ற தமிழருக்கு எதிரான படுகொலைக் கலவரம் அதைத் தொடர்ந்து உருவான ஆயுதம் தாங்கிய தீவிரவாதத்தின் பெருவளர்ச்சி என்பன அரசியல் வானத்தில் தமிழ் ஈழம் சாத்தியமே என்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள், 'தமிழ்'  தேசத்தில் தமது எதிர்காலம் பற்றி கிலேசமடைந்தனர்.<br />
 <br />
அதேநேரம், இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவு புதுப்பிக்கப்பட்டமை தொடர்பில் முஸ்லிம்களின் எதிர்ப்பை ஜே.ஆர். ஜயவர்த்தன அலட்சியமாக தட்டிக் கழித்த விதம் முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வை இரணமாக்கியது. இந்த பிரச்சினைiயில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குப்படுத்துவதில் அஷரப் மூலகர்த்தாவாக இருந்தார். இருப்பினும் அப்போது காணப்பட்ட உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாதப் போக்குகளில் அக்கறை காண்பிக்காதவர்களாக இலங்கை முஸ்லிம்கள் இருந்தனர்.</p>

<p>கிழக்கில் முஸ்லிம் சமுதாயம், கல்விகற்ற, துடிப்புமிக்க ஒரு புதிய தலைமுறையை தோற்றுவித்தது. இவை எல்லாம் சேர்ந்து தேசிய அளவில் அஷ்ரபும், அவரது அரசியல் கொள்கையும் இடம் பிடிக்க கூடிய ஒரு சூழலை தோற்றுவித்தது. தமிழ் ஆயுதப் போராட்டம், முஸ்லிம் அரசியலில் ஒரு வகையான அரசியலில் அவசரத்தை உருவாகியது.</p>

<p><strong>வன்முறை</strong></p>

<p>அரச,தமிழ் ஆயுத குழுக்களின் கையாட்களால், தூண்டப்பட்டு கல்முனை காரைதீவு பகுதிகளில் 1985 இல் இடம்பெற்ற தமிழ், முஸ்லிம்களுக்கு இடையிலான வன்முறை ஊக்கியாக செயற்பட்டது.</p>

<p> 1985 கல்முனை- காரைத்தீவு, தமிழ் - முஸ்லிம் கலவரங்கள் அஷ்ரபை நேரடியாகப் பாதித்தன. தமிழ் தீவிரவாதிகளினால் வரக் கூடிய கெடுதியை கருத்திற்கொண்டு அஷ்ரப் கொழும்புக்கு தப்பிச் சென்றார்.</p>

<p>அஷ்ரப் தான் கல்முனையிலிருந்து,  கொழும்புக்கு தப்பியோடியதை, புனித நபி அவர்கள், மதினாவிலிருந்து மெக்காவுக்கு சென்ற 'ஹிஜ்ரா'வுடன் ஒப்பிட்டு எதிர்ப்புகளை தோற்றுவித்த ஒரு கருத்தை கூறியிருந்தார். இது பல சூடான மறுப்புரைகளை தோற்றுவித்தது. புனித நபி அவர்கள், தான் வெளியேற முன்னர், தனது ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பான பயண ஒழுங்கை  செய்திருந்தார் எனவும், மாறாக அஷ்ரப் தனது ஆதரவாளர்களை கல்முனையில் விட்டுவிட்டு சென்றார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.</p>

<p>'அரசியல் அடைக்கலம்' தேடி அஷ்ரப் கொழும்புக்கு வந்தமை, இவரது வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. இவருக்கு பிரபல சட்டத்தரணியான பாயிஸ்  முஸ்தபா அடங்கலாக அக்கறை கொண்ட முஸ்லிம்கள் உதவி வழங்கினர். முஸ்தபாவின் ஆலோசனைக் கூடத்தில் தான் ரவூப் ஹக்கீம் அஷ்ரப்புடன் நெருங்கிப் பழகி அவரின் பக்திமிக்க சீடாராகினார்.</p>

<p>தலைநகரில் அவரது அரசியல் எல்லை, கிழக்குக்கும் அப்பால் விரிந்து சென்றது. அவர் பரந்து பட்ட முஸ்லிம் மக்கள், தமது மேட்டுக்குடி தலைவர்களையிட்டு விரக்தியுற்றிருந்ததை அறிந்து கொண்டார். முஸ்லிம் சமுதாயத்திற்கு, தனது அடையாளத்தை உறுதியாகவும் தெளிவாகவும் நிலைநாட்டவுள்ள தேவையையும் அதற்கான அவர்கள் ஏக்கத்தையும் அஷ்ரப் இனங்கண்டார்.</p>

<p>ஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றிலிருந்த முஸ்லிம் தலைவர்களையிட்டு அஷ்ரப் வெறுப்புற்றிருந்தார். இவர்கள் முஸ்லிம்களின் மோசமான நிலை பற்றிய உண்மையான அக்கறையின்றி, தமது சிங்கள எஜமானர்களுக்கு எடுபிடியாக வேலை செய்பவர்களாக இருந்தனர் என அஷ்ரப் உணர்ந்து கொண்டார். அதிகாரம் மீதான அவாவும், பதவி வழி வரும் சலுகை மீதான கவர்ச்சியுமே இதற்கான காரணம் என அஷ்ரப் நினைத்தார். ஒரு சுயாதீனமான குரல் அவசியமாக காணப்பட்டது. இதற்கு முஸ்லிம்களின் உறுதியான ஒற்றுமை தேவையாக இருந்தது.</p>

<p>கொழும்பில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திய பின் அஷ்ரப், முஸ்லிம் காங்கிரசை மீட்டெடுத்து புனரமைப்புச் செய்தார். 1986 இல் புஞ்சிபொரளையில் நாடளாவிய கட்சி மாநாடொன்றை கூட்டினார். அதில், அஹமத் லெப்பையை கௌரவமாக  விலக்கிவிட்டு கட்சித் தலைமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.<br />
 <br />
<strong>தீர்க்கமான முடிவு</strong><br />
 <br />
முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் முக்கியமான இந்த நிகழ்வை நேரில் கண்டவன் நான். இந்த மாநாட்டுக்கு நான் பத்திரிகையாளன் என்ற வகையில் காலமாகிவிட்ட எனது நண்பரான வீரகேசரி, எம்.பி.எம். அஸ்ஹருடன் சென்றிருந்தேன். இவர் பின்னாளில் முஸ்லிம் வாரந்திரியான நவமணியின் ஆசிரியராக இருந்தவர். முஸ்லிம் போராளர்கள், இப்போதும் தொடரும் நீண்ட பயணம் தொடர்பில் தமது தீர்க்கமான அடியை எடுத்துவைத்த அந்தப் பொழுதில் சபை மந்திரத்தால் கட்டுண்டிருந்தது.<br />
 <br />
1986 – 1988 காலப்பகுதியில் நான் அஷ்ரப்புடன், நெருங்கிய தொடர்பிலிருந்தேன். அக்காலத்தில் தனது மக்களுக்கான இலட்சியங்களையும், நோக்கங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்த அஷ்ரப்பை கூர்ந்து அவதானிக்க என்னால் முடிந்தது. அப்போது அவரது இலட்சியங்களில் சில எட்ட முடியாதவையாக தெரிந்தன. முஸ்லிம்கள், சிங்கள, தமிழ் மக்களுக்கு சரிநிகரான, சமமான, தனியான இனம் என அங்கீகரிக்கப்பட்ட வேண்டும் என அஷ்ரப் விரும்பினார்.</p>

<p>நாட்டில் பரந்து வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அவர்களுக்கென ஒரு தமக்கேயுரித்தான, சுயாதீனமான அரசியல் கட்சி தேவையாக இருந்தது. அந்த இடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிரப்ப வேண்டியிருந்தது.</p>

<p>சிங்கள, தமிழ் அரசியல் மேலாதிக்கத்திலிருந்து விடுபட்டதாக அந்தக் கட்சி இருக்க வேண்டியிருந்தது. அவர் இரண்டையுமே ' சாத்தான்கள்' என அப்போது கூறியிருந்தார். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இந்த வகையில் கூடிய பங்காற்ற வேண்டியிருந்தது. இவ்வாறு செய்வதனால்தான் இந்த புறக்கணிக்கப்பட்ட மக்கள் இலங்கையில் தமது உரிய இடத்தை பெற வேண்டியிருந்தது.</p>

<p>பாண்டிச்சேரி மாதிரியில் முஸ்லிம்களுக்கென புவியியல் ரீதியில், தொடர்ச்சியில்லாத வடக்கு - கிழக்கு சபையொன்றை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை அஷ்ரப்  அறிமுகம் செய்தார். அப்போது அவரது நோக்கம், வடக்கு, கிழக்கில் உள்ள சகல, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள உதவி அரசாங்க பிரிவுகள் எல்லாவற்றையும் இணைத்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடியதாக மாகாண சபை ஒன்றை அமைப்பதாகும்.</p>

<p>முஸ்லிம் காங்கிரஸை அகில இலங்கைக் கட்சியாக மாற்றுவதற்காக, அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கங்களை மீளமைத்து யாப்பை திருத்தி எழுதினார். 1988, பெப்ரவரி 11 இல் தேர்தல் ஆணையாளரினால் கட்சி அங்கீகரிக்கப்பட்டு 'மரம்' என்ற சின்னம் வழங்கப்பட்டது.</p>

<p>அஷ்ரப் தலைமையிலான 'புதிய' ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1988 இல் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டது. இது வடக்கு – கிழக்கில் 17 இடங்களையும் மேற்கு, வட மேற்கு, மத்திய, தென் மாகாணங்களில் 12 இடங்களையும் கைப்பற்றியது. புதிதாக அமைந்த இந்தக் கட்சி மாகாணசபைத் தேர்தலில் மனதில் இடம் பதிக்கத்தக்க வகையில் சாதிக்க விகிதாசாராப் பிரதிநிதித்துவம் உதவிற்று. முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்புள்ள கட்சியாகிற்று.<br />
 <br />
முஸ்லிம்களின் கருத்தை புறக்கணித்தது என கருதிய அவர், ஜுலை 1987 இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை, விரும்பாதபோதும், ஒப்பந்தத்தின் சட்ட ஏற்பாடுகளை ஆதரித்தார். முஸ்லிம் காங்கிரஸ் 1988 இல் நடந்த மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு அண்ணாமலை வரதராஜ பெருமாளின் தலைமையிலான நிர்வாகத்திற்கு பிரதான எதிர்க்கட்சி ஆகியது.</p>

<p>ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 1988 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளரான ரணசிங்க பிரேமதாஸவை ஆதரித்தது. 1989 இல் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் தனித்து போட்டியிட்டு 4 இடங்களை பெற்றுக் கொண்டது. அஷ்ரப்பும்; ஏராளமான விருப்புவாக்கை பெற்றுத் தெரிவானர். கட்சி மீது அகில இலங்கை ரீதியான விருப்பு வெளியிடப்பட்டபோதும், பெற்றுக்கொண்ட நான்கு நாடாளுமன்ற அங்கத்தவர்களும் வடக்கு-கிழக்கிலிருந்து வந்தவர்களே என்பதை முஸ்லிம் காங்கிரஸ் கண்டுகொண்டது.<br />
 <br />
<strong>குயின் மேக்கர்</strong></p>

<p>பிரதிநிதித்துவத்தை உச்சப்படுத்த வேண்டுமாயின் தந்திரமான விட்டுக்கொடுப்புகள் தேவையென்பதையும் பிரதான கட்சிகளோடு தந்திரோபாய கூட்டுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அஷ்ரப் உணர்ந்துகொண்டார்.<br />
 <br />
அஷ்ரப் தான் பெரிதும் மெச்சிய சௌமிய மூர்த்தி தொண்டமானிடமிருந்து சில விடயங்களை கற்றுக்கொண்டு, சந்திரிகா குமாரதுங்கவுடன் தேர்தல் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார். தொண்டமானைப் போலவே அஷ்ரப்பின் தந்திரோபாயமும், தேர்தல் உடன்படிக்கைகள் மூலம் தனது மக்களின் பிரதிநிதித்துவத்தை உச்சப்படுத்துவதாகவே இருந்தது.</p>

<p>1944 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களையும், இரண்டு தேசிய பட்டியல் அங்கத்தவர்களையும் பெற்றுக் கொண்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு – கிழக்கில் தனது சொந்த சின்னத்திலும், வேறு மாகாணங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணி சின்னத்திலும் போட்டியிட்டது.</p>

<p>தொங்கு நாடாளுமன்றம் அமைந்த நிலையில் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தை நிறுவுவதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆக்கபூர்வமான முறையில் 'குயின் மேக்கர்' பாத்திரத்தை வகித்தது. அஷ்ரப் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து புனர்வாழ்வு அமைச்சராக வந்தார்.</p>

<p>ஹிஸ்புல்லாவும், அபூபக்கரும் பிரதியமைச்சர்களாயினர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரவூப் ஹக்கீம் குழுக்களின் தவிசாளரானார்.</p>

<p>அஷ்ரப் மந்திரியாக இருந்த காலம் சம்பவங்கள் நிறைந்ததாகவும், பிரச்சினைகளைத் தோற்றுவித்ததாகவும் காணப்பட்டது. தனது அதிகாரத்தினுள் வந்த பல்வேறு துறைமுகங்களிலும் பெருமளவில் முஸ்லிம்களுக்கு வேலை வழங்கியதாக அவர் குற்றஞ் சாட்டப்பட்டார். கொழும்பு, திருகோணமலை, காலி என்பன உதாரணங்களாக காணப்பட்டன. இவ்வாறே புனர்வாழ்வு, அபிவிருத்தி திட்டங்களில், முஸ்லிம் பிரதேசங்களுக்கு முன்னுரிமைக் கொடுத்ததாகவும் இவர் பிழை காணப்பட்டார். ஒலுவில் துறைமுகம் அஷ்ரப்பின் நீண்ட கால விருப்பத்துக்குரிய கனவாக விளங்கியது.<br />
 <br />
<strong>சீறும்புயல்</strong></p>

<p> அஷ்ரபிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சரான எ.எச்.எம். பௌஸிக்குமிடையே பொறி பறக்கும் தர்க்கம் ஏற்படும். இது அஷ்ரப்பை அடிக்கடி ஆவேசம் கொள்ளவும், இராஜினாமா செய்யப் போவதாக மிரட்டவும் வைக்கும். இது போன்ற பௌசியுடனான ஒரு பிரச்சினையில் அஷ்ரப்பின் இராஜினாமா சந்திரிகாவினால் ஏற்கப்படவில்லை.</p>

<p>பொன்னன்வெளிப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்று தீகவாபி புனித பிரதேசத்துடன் அது இணைக்கப்பட்டதாக அஷ்ரப் ஒருமுறை குற்றஞ் சாட்டினார். இது தொடர்பில் தன்னுடன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு வரும்படி வண. சோம தேரர் சவால் விடுத்தார். சிங்களத்தில் நடந்த விவாதத்தை அஷ்ரப் ஏற்று தர்க்கரீதியாகவும் மறுக்கமுடியாத வகையிலும் விவாதித்தார்.</p>

<p>புத்த பகவானை விழித்துக் கூறுவதாக அமைந்த ஒரு தமிழ் கவிதையை அஷரப் எழுதியபோது இன்னொரு பிரச்சினை கிளப்பப்பட்டது. இந்த கவிதைநுட்பம் முன்னரும் பல கவிஞர்களால் பயன்படுத்தப்பட்டதுதான். ஆனால் அஷ்ரப் அதே நுட்பத்தை பயன்படுத்தியபோது சூடாக விமர்சிக்கப்பட்டது. அஷ்ரப் விட்டுக்கொடுக்காமல், தன்னை விமர்சித்தவர்களை உறுதியாக நின்று மடக்கினார்.</p>

<p>கட்சி விடயங்களை கையாளுவதில் அஷ்ரப் எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டார். அவர் அதிஉயர் தலைவராக இருந்தார். அவர் கட்சிக்குள் விழல் பேச்சுகளை சகித்துக் கொள்வதில்லை. அவர் மரணித்த வேளையில் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்தியிருந்தார். இன்னொருவருக்கு 'காரணம் காட்டு' அறிவித்தலை விடுத்திருந்தார்.</p>

<p>முஸ்லிம் வெகுஜனங்களின் மீது அஷ்ரப் கொண்டிருந்த வசீகரப் பிடிக்கும் மேலாக, அவரது இசைந்து போகும், விட்டுக்கொடுக்கும் ஆற்றலும் அவரது பலமாக காணப்பட்டது. வடக்கு, கிழக்கு முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்ட, புவியியல் ரீதியாக தொடர்ச்சியற்ற, முஸ்லிம் பெரும்பான்மை மாகாணசபை ஒன்றை உருவாக்க வேண்டுமென்பது முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படையாக கோரிக்கையாக காணப்பட்டது. இந்த விடயத்தில், முன்வைக்கப்பட்டிருந்த வடக்கு-கிழக்கு இணைப்பு ஏற்படும் பட்சத்தில் 17 சதவீதமாக குறையக் கூடிய தற்போதுள்ள 33 சதவீத முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அஷ்ரபின் வாதமாக காணப்பட்டது.</p>

<p>புவியியல் ரீதியாக தொடர்ச்சியற்ற மாகாணசபை என்ற கொள்கைக்கு பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமே தூண்டுதலாக இருந்தது. அங்கு பாண்டிச்சேரி, காரைக்கால், யானம், மாகே ஆகிய பிரதேசங்கள், புவியியல் ரீதியாக தொலை தூரங்களில் காணப்பட்ட போதிலும், இவை தனியொரு நிர்வாக அலகின் கீழ் அமைந்திருந்தன. இவை முன்னர் பிரான்ஸ் தேசத்தின் காலனிகளாக இருந்து பொதுவான வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்டிருந்தமையால், அவை சுதந்திர இந்தியாவில் ஓரலகாக நிர்வகிக்கப்பட்டன.</p>

<p>பிரதேச ரீதியாக தொடர்ச்சியற்ற அலகுக்கான கோரிக்கை வெல்லப்பட முடியாதது என அவர் கண்டப்போது, சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ஆகிய தொடர்ச்சியுள்ள தேர்தல் பிரிவுகளை உள்ளடக்கிய தென்கிழக்கு மாகாணசபை என்பதை பிரதியீடாக முன்வைத்தார். அவர் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களை வடமாகாணத்தோடு இணைப்பதற்கும் விருப்பம் தெரிவித்தார்</p>

<p>தேவை ஏற்படின் இதையும் விட்டுக்கொடுக்க அவர் தயாராகவிருந்தார். பதிலாக 10 வருடத்தின் பின், இணைப்பை நீக்குவதற்கான அபிப்பிராய வாக்கெடுப்பு உட்பட முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமிடத்து வடக்கு கிழக்கு இணைப்புக்கும் விருப்பம் தெரிவித்தார்.</p>

<p><strong>உணர்வோடு ஒன்றித்தல்</strong></p>

<p>அம்பாறை மாவட்டத்திலிருந்து, முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட கல்முனை என அழைக்கப்படும் கரையோர மாவட்டம் ஒன்றை பிரித்தெடுக்க அஷ்ரப் விரும்பினார். இந்த கரையோர மாவட்டத்திற்கு போதிய நிலம், நீர்வளங்கள் இல்லாது போகலாம் என அவர் அஞ்சியமையால் அவர் இதில் பின்னர் தயக்கம்  காட்டினார்.</p>

<p>தனது சமுதாயத்தின் நலன் தொடர்பில் அஷ்ரப் பின்னாளில் தமிழ் தலைவர்களுடன் மோத வேண்டியிருந்தது, இது தவிர்க்க முடியாததே. ஆனால், தற்போதைய கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் போலன்றி இவர், தமிழோடும், தமிழர்களோடும் உணர்வால் ஒன்றியிருந்தார். அவர் தமிழர்களின் மனத்தாங்கலை விளங்கியிருந்தார். அவர்களின் அபிலாஷைகளை ஏற்றிருந்தார்.</p>

<p>அஷ்ரப், சிங்கள பெரும்பான்மைவாதமே அடிப்படைப் பிரச்சினை எனவும் இதை வெற்றி கொள்ள சிறுபான்மை சமூகங்களிடையிலான புரிந்துணர்வு அவசியம் எனவும் கருதினார்.  முஸ்லிம்களின் நலனில் உறுதியாக இருந்த போதும், அஷ்ரப் தமிழருடன் சேர்ந்து வேலை செய்ய எப்போதும் தயாராக இருந்தார். இந்த வகையில் அஷ்ரபினுடைய அலைநீளத்தில் உள்ள கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் இல்லையென்றே கூறலாம். அவரது சமூகத்தின் நலன்கள், அவருக்கு மிக முக்கியமானதாக காணப்பட்டபோதும் தமிழர் பிரச்சினைகள், மனத்தாங்கல்கள் தொடர்பிலும் அவர் மிகுந்த அனுதாபம் கொண்டவராக இருந்தார். தமிழர்களின், முஸ்லிம்களின் நலன்கள் நேரடியாக மோதிய வேளைகள் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் தமிழர்கள் தமது நியாயமான அபிலாஷைகளை அடைந்து கொள்ளும் வகையில் அவர் உதவ முயன்றார்.</p>

<p>இந்திய வம்சாவளியை பிரதிநிதித்துவம் செய்த  இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் ஒரு ஒத்துப்போகும் உறவொன்றை ஏற்படுத்தும் முகமாக ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருந்தார்.</p>

<p>ஒரு குறுகிய இன நிலைப்பாட்டிலிருந்து தேசிய தலைவராக பரிணமித்தமை அஷ்ரபின் அதி சிறப்பாகும். 2000 ஆம் ஆண்டு அளவில் அஷ்ரபின் பார்வை விசாலமாகியது. அவர் தேசிய ஐக்கிய முன்னணியை ஸ்தாபித்தார். இப்போது அஷ்ரப் முஸ்லிம் இனத்துவத்துக்கு அப்பால் சிந்திக்க தயாராகி ஏனைய சமுதாயங்களையும் இணைத்து செல்ல முயன்றார். அவரிடம் 2012 அளவில் நிரந்தர, சமாதானத்தை சாதிக்கும் திட்டமொன்று இருந்தது. ஒரு காலத்தில் தமிழீழவாதியாக இருந்து, பின்னர் முஸ்லிம்களுக்கென அவர்களுக்கே உரித்தான தனிக்கட்சியை தொடக்கியவர் தேசியவாதியாக முகிழ்த்த, பரிணாம நிலையை எய்தியிருந்தார்.<br />
 <br />
<strong>ஜாம்பவான்</strong></p>

<p>ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தலைமைக் கப்பலாக இருக்கும் அதேவேளையில் தேசிய ஐக்கிய முன்னணி விசாலமானதாக எல்லா இனங்களையும் இணைத்து  செல்வதாக இருந்தது. அஷ்ரப் தனது இலட்சியத்தை அடையும்வரை வாழ்ந்திருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் எதிர்காலம் எப்படி இருக்கக் கூடும் என்பது யாருக்கும் தெரியாதது. அஷ்ரப், 2000, ஒக்டோபர் 10, இல் நடக்கவிருந்த தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் துரதிர்ஷ்ட வசமாக மரணமடைந்தார். முக்கிய கட்டத்தில் அஷ்ரப்பின் வாழ்வு அணைந்துப் போனமை, அப்போது அமைக்கப்பட்டிருந்த பரந்த தேர்தல் கூட்டமைப்பு முன்வைத்திருந்த பல்வகைத் திட்டங்களுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.</p>

<p>அஷ்ரப் தற்போது எம்மோடு  இல்லாதிருக்கலாம், ஆனால், அவரது ஆன்மா, இப்போதும் கிழக்கு முஸ்லிம் அரசியல் சிந்தனையில் வியாபித்துள்ளது. இவர் கிழக்கு முஸ்லிம் அரசியலில் தனியொரு மிகப் பிரபலமான ஜாம்பவானாக இருந்தார். மரணத்திலும் முஸ்லிம் வெகுஜனங்கள் மீதான மாயப் பிடி விரவியுள்ளது.</p>

<p>அஷ்ரப் நினைவுக் கூட்டங்களில் நிறையப் பேர் கலந்துகொண்டனர். தமிழ் ஊடகங்கள் அநேகமாக நேர்மையானதாக மனமார்ந்ததாக காணப்பட்ட புகழாஞ்சலிகளை வெளியிட்டன.  அவரது மறைவு ஆழமாக உணரப்படுகிறது. அஷ்ரபின் பின்னரான முஸ்லிம் அரசியலின் பரிதாப நிலை, அவரது இழப்பினால் விளைந்த துன்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. அவர் உருவாக்கிய கட்சி பல துண்டுகளாகியுள்ளது.</p>

<p>அவரது விதவையும், முன்னைய தளபதிகளும் அவரது முடியைச் சூட மோதிக் கொண்டனர். அவர் விட்டுச் சென்ற அரசியல் முதுசம் துண்டாடப்பட்டது. அஷ்ரபின் இடத்துக்கு வந்த ரவூப் ஹக்கீமும், அவரது விதவை பேரியலும் கட்சியை பிளவுபடுத்தினர். பேரியல் தேசிய ஐக்கிய கூட்டமைப்பை பொறுப்பேற்றார்.</p>

<p>அதாவுல்லாஇ மற்றும் அன்வர், இஸ்மாயில் போன்றோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து தேசிய முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்ததோடு பிளவுபடல் மேலும் தொடர்ந்தது. ரிஷாத் பதியுதீன், அமீர் அலி மற்றும் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்தபோது பிளவுபடல் மேலும் தொடர்ந்தது.</p>

<p>அவரது இலட்சியங்களையும்இநோக்கங்களையும் தொடர்ந்து பேணவும் கட்சியை காப்பாற்றவும் ரவூப் ஹக்கீம் உறுதியாக போராடி வருகிறார். காலத்துக்குக் காலம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவியினதும் அரசாங்கக் கவனிப்பினதும் கவர்ச்சி ஆசை காட்டுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித் தனியாக கட்சி தாவத் தயாரான போது, கட்சியின் ஒற்றுமை சிதறிப் போவதை தடுக்கும் முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2006 இல் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டது.</p>

<p>இந்த வருடமும் பழைய காட்சிகள் மீண்டும் தெரிந்தன. கட்சி பிளவுபடுதலையும், கட்சிமாறுதலையும் தடுக்க 18 ஆவது யாப்புத் திருத்தம் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, எதிர் வரிசையிலிருந்தவாறே அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நவம்பரில் அரசாங்கத்துடன் ஒழுங்கு முறையாக இணையலாம் என ஊகங்கள் அடிபடுகின்றன.</p>

<p>ஒவ்வொரு தேர்தலின் பின்னும் கட்சி பிளவுண்டு சிறுத்துச் சிறுத்துப் போவதால், முஸ்லிம்களை ஒரே கொடியின் கீழ் அணிதிரட்டும் அஷ்ரபின் உயர் இலட்சியம் சிதைந்து போவதை நாம் காண்கிறோம்.</p>

<p>முஸ்லிம்கள், தமது சுயாதீனத்தை பேணியவாறு தமிழ், சிங்கள அரசியலிருந்து சமதூரத்தை பேண வேண்டும் என்னும் இலட்சியமும் பின்னடைவைக் கண்டுள்ளது.</p>

<p>மாறிமாறி வரும் அரசாங்கங்கள் வழங்க முன்வரும் கவனிப்புகளும் சலுகைகளும், பல முன்னாள் முஸ்லிம் தலைவர்களை தமது 'சுயாதீனத்தை' கைவிட்டுப் போகச் செய்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாற்று மேடையில் வளர்க்கப்பட்ட இந்த அரசியல்வாதிகள் அநேகமானோரை,அமைச்சர் பதவி, பிரதியமைச்சர் பதவி, அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர், பணிப்பாளர் பதவிகள், வெளிநாட்டில் தூதுவர் பதவி என்பன அமுக்கிவிடுகின்றன.</p>

<p>இவர்களை தெரிவுசெய்த முஸ்லிம் வாக்காளர்களின் நலன்கள், விருப்பங்கள் என்பன மனவுறுத்தலேதும் இல்லாமலும் அலட்சியமாகவும் கைவிடப்படுகின்றன. கொள்கைப்பிடிப்போடு கூடிய அரசியலை எங்கும் காணமுடியவில்லை.</p>

<p>இந்த துன்பகரமான பின்னணியில், இருள் கௌவிய பாலைவனத்தில் தனது மக்களுக்கான ஒரு பசுந்தரையை தேடிய அஷ்ரபின் இலட்சியம் கானல் நீராகி வருகின்றது.</p>

<p>இப்படியான நிலைமையில், அஷ்ரபின் மரணத்தின் 10 ஆண்டு நிறைவாகும். இந்த வேளையில் கட்சியின் விசுவாசிகளும் முஸ்லிம் சமுதாயத்தின் நலனின் அக்கறை கொண்டோரும் குறைந்தபட்சம் மன ஆறுதலுக்காகவேனும் எம்.எச்.எம். அஷ்ரபின் நினைவில் ஆழ்ந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை. <em>(தமிழில் நா. கிருஷ்ணராசா)</em></p>

<p>நன்றி: TamilMirror.lk</p>]]>
    </content>
</entry>

</feed> 


