இயற்கைச் செல்வம்
காணொளியில் தமிழ் கவிதை:
பாவேந்தர் பாரதிதாசன் பாட்டருவி ~ குறு இசை தட்டில் இருந்து....பாட்டு: நித்தியஸ்ரீ மகாதேவன் ~ படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
விரிந்த வானே, வெளியே, - எங்கும்
விளைந்த பொருளின் முதலே,
திரிந்த காற்றும், புனலும், - மண்ணும்,
செந்தீ யாவும் தந்தோய்,
தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்
செறிந்த உலகின் வித்தே,
புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்
புதுமை! புதுமை! புதுமை!
அசைவைச் செய்தாய், ஆங்கே - ஒலியாம்
அலையைச் செய்தாய் நீயே!
நசையால் காணும் வண்ணம் - நிலமே
நான்காய் விரியச் செய்தாய்!
பசையாம் பொருள்கள் செய்தாய் - இயலாம்
பைந்தமிழ் பேசச் செய்தாய்!
இசையாம் தமிழைத் தந்தாய் - பறவை,
ஏந்திழை இனிமை குரலால்!
எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள்
எதினும் அசைவைச் சேர்த்தாய்.
சொல்லால் இசையால் இன்பம் - எமையே
துய்க்கச் செய்தாய் அடடா!
கல்லா மயில், வான்கோழி, புறவுகள்
காட்டும் சுவைசேர் அசைவால்
அல்லல் விலக்கும் "ஆடற்-கலை" தான்
அமையச் செய்தாய் வாழி! - பாவேந்தர் பாரதிதாசன்

Comments
Its nice to see pictures of Eelam & Sri Lanka slide show
wish more of them lively in movie form is presented in future
and put EELAM on the map
Posted by: santhi | March 26, 2008 03:52 PM