ஊற்று

தொடரும் கடின நிலவரங்களுக்கு மத்தியில் யாழ்வாசிகள்

"தீவிரமான பதட்ட நிலவரம் உள்ளது. முக்கியமாக 16 ஜனவரிக்கு பிற்பாடு (ஸ்ரீ லங்கா அரசு புலிகளுடனான 2002 சமாதான ஒப்பந்தத்தை முடிவுற்ற தருணம்), அத்துடன் அதீத இராணுவப்பிரசன்னமும் காணப்படுகிறது"

யாழ் குடா நாட்டில் வாழ்பவர்களின் மனத்தில் ஆழப் பதிந்திருக்கிறது ஆகஸ்ட் 11, 2006 திகதிய மாலைப் பொழுது. அன்று மாலை 5:30 மணியளவில் தமிழ் ஈழ விடுதலை புலிகள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும், தெற்கே உள்ள புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கும் இடையேயான முன்னரங்க காவல் நிலைகள் மீது தாக்குதல் நடாத்தினர். இத் தாக்குதல் நடவடிக்கையானது யாழ் குடா நாட்டையும், நாட்டின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் ஒரே பிரதான நெடுந்தெருவாகிய ஏ-9 இனது மூடுதலுக்கு வழிகோலியது.

ஏ-9 பாதையின் சுமார் 100 கி.மீ. பகுதி புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசங்களினூடாகவே செல்கிறது. பொதுசன போக்குவரதுக்குப் பாதை மூடப்பட்ட பின் யாழ்வாசிகள் தனிமைப் படுத்தப்பட்டனர்.

"ஏ-9 பாதை மூடுதலே யாழ் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய முக்கிய சம்பவம்", என்கிறார் கொழும்பில் உள்ள மாற்று கொள்கைகளுக்கான நடுவகத்தினை சேர்ந்த மனித உரிமைகள் ஆய்வாளர் மிராக் இரஹீம். இடம் பெற்ற எனைய தொடர் விளைவுகள் யாவும் பாதை மூடுதலின் தோற்றப்பாடுகளே எனவும் அவர் கூறுகின்றார்.

தற்போது யாழ் குடா நாட்டில் வசிக்கும் 632,000 பேர் மட்டுப்படுத்தப்ப்பட்ட அளவிலான அளவில் கடல்-ஆகாய மார்க்கமாக கொண்டு வரப்படும் அத்தியாவசியப் பொருட்களிலேயும் மற்றும் மருந்துப் பொருட்களிலேயுமே தங்கியுள்ளனர். பெப்பிரவரி 18ம் திகதியன்று வெளியிடப்பட்ட உலக உணவு திட்டம், ஐக்கிய நாடுகள் சிறுவர் பராமரிப்பு சபை, சர்வதேச தொழில் அமைப்பு என்பவற்றின் ஜனவரி மாதத்திற்கான யாழ் உணவு மற்றும் பாதுகாப்பு பற்றிய செய்தி சுற்றறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நிலவரம் 2006 இல் இருந்ததனை விட முன்னேற்றம் கண்டுள்ளது. "உள்ளூர் அதிகாரிகளும் சர்வதேச ஸ்தாபனங்களும் ஒத்துழைத்து இது விடயத்தில் இயங்குவதன் பிரதிபலன், பரந்த அடிப்படையில் உணவு மற்றும் உறையுள் தேவை பொருட்கள் கிடைக்கூடியதக உள்ளதாகும்", என்கிறார் சமீபத்தில் யாழ் நகரிற்கு விஜயம் செய்து நிலவரங்களை பார்வையிட்ட ஸ்ரீ லங்காவில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் நீல் பேஹ்ன்.

[யாழ் நகரில் உள்ள ஓர் சில்லறை விற்பனைக் கடை-படப்பிடிப்பு: பிரெனன் ஜோன்ஸ்]

"பெரும்பாலும் சகல அத்தியாவசிய பொருட்களும் யாழ்ப்பாணத்தில் கிடைக்கின்றன; இருப்பினும் பொது சந்தையில் மளிகைப் பொருட்களின் விலை கையிருப்பு மற்றும் ஏனைய நிலவரங்களையும் பொறுத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது; இவ்வாறு தெரிவிக்கிறது யாழ் உணவு மற்றும் பாதுகாப்பு பற்றிய சுற்றறிக்கை.

மேலும் நாட்டின் ஏனைய பகுதகளை விட விலை இன்னும் அதிகமாக இருப்பினும், ஆகஸ்ட் 2007 இல் இருந்ததனை விட விலைகள் குறைவடைந்துள்ளன, என்று செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

"குடா நாட்டில் உள்ள பல்வகை உணவு கையிருப்புக்கள் மூன்று மாதங்களுக்கு போதுமானது," என்கிறது செய்தி சுற்றறிக்கை. எட்டு சரக்குக் கப்பல்கள் யாழ் விநியோக சேவையில் உள்ளன.

"அங்கு பாவனைக்கு மாதந்தம் 25,000 மெட்ரிக் தொன்களே தேவைப்படினும், இக் கப்பல்கள் மூலம் மாதம் 30,000 மெ.தொ. களை அனுப்பவியலும்." மேலும், சுற்றறிக்கை 326,000 பேர் உலக உணவு திட்டம் மற்றும் அரச அனுசரணை பெறுவதாயும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் நிலவரம் குறுகிய கால அவகாசத்தில் மோசமடையலாம் என்று விசனப் படுகிறார் இரஹீம். "தீவிரமான பதட்ட நிலவரம் உள்ளது. முக்கியமாக 16 ஜனவரிக்கு பிற்பாடு (ஸ்ரீ லங்கா அரசு புலிகளுடனான 2002 சமாதான ஒப்பந்தத்தை முடிவுற்ற தருணம்), அத்துடன் அதீத இராணுவப்பிரசன்னமும் காணப்படுகிறது" என்கிறார் இரஹீம்.

"இன்னும் கடப்பதற்கு கணிசமானளவு சவால்கள் உள்ளன." என்கிறார் பேஹ்ன். "யாழ்ப்பாணம் இவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டுள்ளமை, பொருளாதாரம் மீழ்ச்சி பெறும் வய்ப்புக்களை மட்டுப்படுத்தியே வைத்துள்ளது."

"பொது மக்கள் அன்றாட வீதி போக்குவரத்து இராணுவ அணியினர் நடமாட்டத் தேவைகளுக்குக் கட்டுப்பட்டது. மற்றும் குடா நாட்டின் பகுதிகள் பல அதி உயர் பாதுகப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது; இவ்விரு காரணிகளும் சேர்ந்து நிவாரண அமைப்புக்கள் பணிகளுக்கு குந்தகமாக உள்ளன." என்று வெளிநாடுகளினதும் உள்ளூர் தொண்டர் ஸ்தாபனங்களினதும் கூட்டாமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஜீவன் தியாகரஜா கூறுகின்றார்.

"அதி உயர் பாதுகாப்பு வலையங்கள், வீதி அடைப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு என்பன நடமாட்டங்களை பல மாதிரியும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது," என்கிறார் ஸ்ரீ லங்காவில் உள்ள யூனிசெப் தொடர்புத்துறை பணிப்பாளர் கோர்டன் வெயிஸ்.

வேறு தொண்டர் அமைப்புக்கள் தடைகள், கட்டுப்பாடுகள் என்பவற்றினைச் சுற்றி, அத்தியவசிய தேவைப் பொருட்கள் விநியோகத்தில் தாமதங்கள் ஏற்படுவத்னை தவிர்க்கும் பொருட்டு பணி புரிவதாக கூறுகின்றன.

"இரணுவத் தொடர் அணிகள், ஊரடங்கு நேரங்கள் என்பவற்றை சிரத்திற் கொண்டு திட்டமிட்டு செயலாற்றுவதன் மூலம் தடங்கல்களை தவிர்த்துக்கொள்ளலாம்," என்கிறார் சிறுவர் பாதுகாப்பு (ஐக்கிய இராச்சியம்) அமைப்பின் பேச்சாளர் மேனகா கலிரத்ன. "முன் கூட்டியே மாற்று பாதைகள், திட்டமிடுதல் மூலம் தடங்கல்களை சந்திப்பதனை தவிர்த்து வருகிறோம்."

ஸ்ரீ லங்கா இராணுவத்தினர் மக்கள் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடுகள் உள்ளதாகவும், தேவயற்ற தடங்கல்களை தவிர்க்க விசேட சிரத்தை கொள்வதயும் கூறுகின்றனர். "இராணுவத்தினரை குறி வைத்து நாடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல்களில் பொது மக்களும் அகப்பட்டு பலியாகிப்போயினர்," என்கிறார் இராணுவத்தினர் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார.

[இது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஓர் அங்கமாகிய ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்திய தகவல் வலையத்தின் (irinnews.org) செய்தி அறிக்கை: Tough times continue for Jaffna residents இனது தமிழாக்கம்]

Post a comment

(The comment may need to be approved by Ootru.com. Until then, it won't appear on the entry. Thanks for waiting.)

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை