கொழும்பு - ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் வேட்டைத் திருவிழா
துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த திருவிழா உற்சவங்கள் 2008 பங்குனி மாதம் 12ம் திகதி நந்திக் கொடியேற்றத்துடன் கோலகலமாக ஆரம்பமானது.
பத்து தினங்கள் நடைபெற்ற இந்த உற்சவங்களினால் ஆலயம் அற்புத தரிசனமாக மிளிர்ந்தது.
திருவிழாவை முன்னிட்டு காலையிலும், பிற்பகலிலும் விசேட பூஜை ஆராதணைகள் நடைபெற்றன.
அழகிய கோலங்கள், தோரணங்கள் மற்றும் மலர்களினால் பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தானம் எழில்கோலம் பூண்டிருந்தது.
உற்சவத்தின் எட்டாம் நாளில், மிருக யாத்திரை என்றழைக்கப்படும் வேட்டைத் திருவிழா (மிருக யாத்திரை) 2008ம் ஆண்டு மார்ச் 19ம் திகதி நடைபெற்றது.
வர்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட சுவாமி விக்கிரகத்தை தாங்கிய குதிரை, அதனைத் தாங்கிய தேரை பக்தகோடிகள் தமது தோள்களில் தாங்கியவாறு உலாச் சென்ற காட்சிகள் காண்போரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.
வேட்டைத் திருவிழா நடைபெற்ற கிழக்கு வீதி மனோ ரம்மியமான வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெள்ளைநிற மிருதுவான துணிகள், புதிய மரக்கறி வகைகள் குறிப்பாக கத்தரிக்காய், சாம்பல் வாழை, பாவற்காய், புடலங்காய் முதலியவற்றினாலும், மாவிலைத் தோரணங்களாலும் காண்போரை ஈர்க்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
விக்கிரகத்தைத் தாங்கிய மெய் அடியர்கள் மூன்று முறை கோயிலை வலம் வந்தனர். அதன் பின்னர் ஆலயத்தின் பிரதம அர்ச்சகர் சிறிய பூஜையொன்றை நடாத்தினார்.
திருவிழா முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்த தவில் வாத்தியமும், நாதஸ்வர இசையும் ஒரு தெய்வீக தன்மையை உணர்த்தியது.
அலங்காரம் செய்யப்பட்டு, தென்னங் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த மரக்கறி வகைகளை ஒவ்வொன்றாக ஆலயத்தின் பிரதம குருவான பாலசுந்தர குருக்கள் வெட்டி (வேட்டையாடினார்) அகற்றினார்.
மெய் அடியார்கள் இரு கரம் கூப்பி “அரோகர” என மெய்மறந்து தமது பக்திப் பரவசத்தை வெளிப்படுத்தினர்.
மிருதுவான துணியில் சுற்றப்பட்ட மரக்கறி வகைகள் புனித ரதத்தின் உச்சியில் வைக்கப்பட்டு, பின்னர் ரதம் ஆலயத்தைச் சுற்றி வலம் வந்தது.
வேட்டைத் திருவிழா மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றதனைக் அடையாளப்படுத்தும் வகையில் ரதத்தில் உள்ள குதிரையின் கால்களில் ஒரு மெல்லிய பட்டுத்துணியை முடிந்து, சிலையின் நெற்றியில் பிரதம குரு திலகமிட்டார்.
திருவிழாவின் முடிவில் பக்தர்களினால் மீண்டும் சுவாமி விக்கிரகம் ஆலயத்தில் மீள பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கோபுரத்தின் முகப்புப்பகுதி
வேட்டைத் திருவிழாவின் தெய்வீக வாகனமான குதிரை உலா போவதற்கு காத்திருக்கும் காட்சி
வேட்டைத் திருவிழா நடைபெறும் இடம்
ஆலயத்திற்கு வெளியே தேவஸ்தான மூர்த்தி எழுந்தருளச் செய்யப்பட்டார்
எட்டாம் நாள் திருவிழாவாக மிருக யாத்திரை இடம் பெறுகிறது
திருவிழா நிகழ்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர்
அலங்காரம் செய்யப்பட்ட சுவாமி விக்கிரகம் ஆலயத்திற்கு வெளியே....
மிருக யாத்திரை - வேட்டைத் திருவிழாவினை கொழும்பு ஆலயங்களில் காண்பது மிகவும் அரிதான சந்தர்ப்பமாகும்
இந்த ஆலயத்தில் நடைபெறும் முதன்மையான எழில்மிகு விழாக்களில் ஒன்று
வேட்டைத் திருவிழா ஆரம்பிப்பதற்கு முன்னர் தீப ஆராதணைகள் சமர்ப்பிக்கப்படுகிறது
இந்த விழாவை கண்டு களிக்க நோக்கில் பக்தகோடிகள் குழுமி வருகின்றனர்
ஆலயத்தின் வடக்கு வீதியினூடாக மூர்த்தி உலா வருகின்றார்
வேட்டைத் திருவிழா நடைபெறும் இடத்திற்கு சுவாமி எழுந்தருளச் செய்யப்பட்டார்
பிரதம குரு பாலசுந்தர குருக்கள் பூஜைவழிபாடுகளில் ஈடுபடுகின்றார்
சுவாமியை தெய்வ வாகனமான குதிரை சுமந்து செல்கின்ற அதேவேளை, தெய்வ ரதத்தை ஆண் பக்தர்கள் தோள்களில் சுமந்து செல்கின்றனர்
மூர்த்தியின் உருவச் சிலை வேட்டைத் திருவிழா நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பக்தர்கள் வேட்டைத் திருவிழா நடைபெறும் இடத்திற்கு வருகை தரும் விதம்
வேட்டைத் திருவிழா நடைபெறும் இடத்தில் மூர்த்தி வரவேற்கப்படுகின்றார்
மரக்கறி வேட்டை ஆரம்பம்
பக்தர்கள் வேட்டைத் திருவிழாவை தரிசிக்கும் காட்சி
தவில், மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் விழாவிற்கு மேலும் மெருகேற்றினர்
அடியார்கள் வேட்டைத் திருவிழவை கண்டுகளித்து பரவசமடைகின்றனர்
வேட்டைத் திருவிழா இனிதே நிறைவுற்றதை குறிக்கும் வகையில் குதிரை வாகனத்தில் காலில் பட்டுத் துணியை பிரதம குரு கட்டுகின்றார்
சுவாமி சிலையின் மீது மலர் தூவி ஆராதிக்கப்படுகிறது
சுவாமி சிலை மீண்டும் பக்தர்களினால் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது

தீப ஆராதணை காட்டப்படுகிறது
பல வித்தியாசமான கோலங்களினால் ஆலய வளாகம் முழுவதும் எழில்கோலம் பூண்டிருந்தது
மரத்தினால் தயாரிக்கப்பட்ட பாரமான குதிரை உருவத்தை பல மணித்தியாலங்கள் பக்த அடியர்கள் தமது தோள்களில் சுமந்து கெண்டிருந்தனர்
இறுதி நிகழ்வாக நடைபெறும் சடங்குகளுக்காக காத்திருக்கும் குதிரை வாகனம்
ஆலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகிலிருந்து மூலஸ்தானம் நோக்கி பஞ்சாச்சராரத்தியை ராஜன் சர்மா குருக்கள் காட்டுகின்றார்