ரம்பொடை ஸ்ரீ பக்த அனுமான் ஆலய பௌர்ணமி தினம்
ஸ்ரீ அனுமான் பக்த அடியார்களுக்கு பௌர்ணமி தினம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மலை உச்சியில் வீற்றிருக்கும் ரம்பொடை ஸ்ரீ பக்த அனுமான் ஆலயத்தில் தெய்வீக பரவசத்துடன் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறும்.
குளிர் காலத்தில் கதிரவன் தனது ஒளிக்கற்றைகளை ஆலய சுற்று வட்டாரத்தில் பரப்புவதற்கு முற்பகல் வரை செல்லும்.
ஆலயத்திற்கு சென்ற அது போன்றதொரு பௌர்ணமி தினத்தன்று, மலர்கள், பட்டாடைகள் மற்றும் ஏனைய சுவாமி அலங்காரப் பொருட்களை திரட்டுவதில் ஆன்மீக தோற்றமுடைய வீரப்ப சந்திரபோஸ் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்; ஸ்ரீ அனுமான் விக்கிரகம் மீது செந்தூரம் இட்டு, அலங்காரங்கள் பல செய்த வண்ணம் விழாவிற்கு ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார்.
செந்தூரம் வெற்றியின் சின்னமாக கருதப்படுகிறது. ஆஞ்சனேய ஆலயங்களில் மாத்திரமே செந்தூரம் வழங்கப்படுகின்றது.
ஸ்ரீபக்த அனுமான் விக்கிரகத்திற்கான அலங்காரப் பணிகளை தொடர்ந்து கொண்டு உரையாடினார் வீரப்ப சந்திரபோஸ்.
25 வயதான வீரப்ப சந்திரபோஸ் புஸ்ஸலாவைப் பகுதியைச் சேர்ந்தவர். 10 ஆண்டுகளுக்கு முன்னர் பூமாலை கட்டுபவராக தமது பணிகளை சந்திரபோஸ் ஆரம்பித்திருந்தார். 1999ம் ஆண்டு முதல் இதுவரை ரம்பொடை ஸ்ரீ பக்த அனுமான் ஆலயத்தின் பூமாலை கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இராம நாமத்தைச் உச்சரிப்பதன் மூலம் ஸ்ரீ அனுமானை மிக எளிதில் அடையமுடியும் என நம்பப்படுகிறது
[காணொளியில் ரம்பொடை ஸ்ரீ பக்த அனுமான் ஆலயம், பின்னணியில் 'சாகா வரம் அருள்வாய்..' சுப்பிரமணிய பாரதியார் பாடலுடன்...வழங்குபவர் சாவித்ரி ராமனந்த்]
எவரெல்லாம் ஸ்ரீ அனுமானை மனப்பூர்வமாக நம்புகின்றனரோ அவர்களையெல்லாம் எம்பெருமான் காத்தருள்வார் என வீரப்ப சந்திரபோஸ் கூறுகின்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "நான் ஸ்ரீ அனுமானை பூரணமாக ஏற்றுக்கொண்டுள்ளேன். எனக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன, நான் ஸ்ரீ அனுமானின் பாதகமலங்களில் சரணடைந்தேன்," என குறிப்பிட்டார்.
மாதம்பை மற்றும் குருனாகலிருந்து அவர் பூமாலை கட்டுவதற்கான மலர்களைக் பெற்றுக்கொள்கின்றார். அவற்றில் இருந்து விசேட நிகழ்வுகளுக்காக, அழகிய பல நிறங்களிலான நூல்களினால் மலர் மாலைகள் உருவாக்கப்படுகின்றன.
சிறந்த படைப்பாற்றல்களை வெளிக்காட்ட வேண்டும் என்ற முயற்சியும், ஆவலும் சந்திரபோசிடம் நிறைவே காணப்படுகின்றது. சந்திரபோஸினால் கட்டப்பட்ட எழில்மிகு மலர் மாலைகள் தொடர்பாக பக்த அடியார்கள் வழங்கும் பராட்டுரைகள் அவரை அதிக ஆனந்தத்தில் ஆழ்த்துகின்றது. மெல்லிய புன்னகையின் மூலம் அவ்வாறான பாராட்டுக்களுக்கு அவர் நன்றி நவில்கின்றார்.
மலர் மாலை கட்டுவதைத் தவிர சுவாமி விக்கரங்களுக்கான அலங்காரப் பணிகளை சந்திரபோஸ் சிறந்த முறையில் மேற்கொள்கின்றார்.
திருமணம், பூப்படைதல் போன்ற நிகழ்வுகளுக்கான மலர் மாலைகளை கட்டுவதிலும் சந்திரபோஸ் கைதேர்ந்தவராகக் காணப்படுகின்றார்.
மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களின் ஆலய அலங்காரப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு குறித்த பிரதேசங்களுக்கு செல்வதாகவும் சந்திரபோஸ் தெரிவித்தார்.
எனினும் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக வடக்கு கிழக்கு பிராந்தியத்திற்கு அவர் செல்வதில்லையென்றார்.
மலையடிவாரத்தில் சந்திரபோஸிற்கு ஒரு சிறிய கடையொன்று உள்ளது. இந்தக் கடையில் சுவாமி அலங்காரப் பொருட்கள், சிலைகள் மற்றும் மலர்மாலைகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.
18 அடி உயரமுடைய ரம்பொடை ஸ்ரீ பக்த அனுமானின் சிலை
ஆலயத்தின் பிரதான கட்டிடமாகக் கருதப்படும் கோபுரம்
ஸ்ரீ பக்த அனுமானை ஒரு மீட்பராக பக்த அடியார்கள் போற்றுகின்றனர்
ஸ்ரீ பக்த அனுமான் ஆலயத்தின் பிரதம குரு மகேஸ்வர குருக்கள் மெய்அடியர் ஒருவரது நெற்றியில் செந்தூரம் இடுகின்றார்
ஸ்ரீ பக்த அனுமான் விக்கரத்திற்கு வீரப்ப சந்திரபோஸ் ஆடையலங்காரம் செய்யும் விதம்
விசேட தினங்களில் வீதி உலாவிற்கு எடுத்துச் செல்லப்படும் ஸ்ரீ பக்த அனுமானின் பித்தளை விக்கிரகம்
பூரணை நாட்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுகிறது
அலங்காரத்திற்கென மாதம்பை மற்றும் குருனாகலிலிருந்து மலர்கள் தருவிக்கப்படும்
குளிர் காலநிலை காரணமாக மலர்கள் வாடாமல் புதுர்ச்சியுடன் காணப்படுகின்றன
தனக்கு வாழ்க்கைத் துணையொன்றை தேடுகின்றார் வீரப்ப சந்திரபோஸ்
மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பக்த அனுமான் விழாவிற்காக அலங்காரம் செய்யப்பட்டுள்ளார்
வீரப்ப சந்திரபோஸ் அனுக்கிரகம் தரும் அலங்காரப்பணிகளில் ஈடுபடுகின்றார்
பக்த அடியார்கள் ஆலயத்திற்கு குழுமும் காட்சி
சிவபெருமானின் மறுவடிவமாகவும் அனுமான் கருதப்படுகின்றார்
தனது பணித்திறன்கள் குறித்து சந்திரபோஸ் திருப்தியுடன் காணப்படுகின்றார்
ஸ்ரீ பக்த அனுமானிற்கு வெற்றிலைமாலை சாத்தி வழிபாடுகள் நடத்தப்படுகிறது
பல இனங்களைச் சேர்ந்த பக்த அடியார்களும் ஸ்ரீ பக்த அனுமானின் அனுக்கிரகம் பெற குவிகின்றனர்
அர்ப்பணிப்பு மற்றும் சேவை என்பவற்றை ஸ்ரீ அனுமான் குறித்து நிற்கின்றார்
இராமயண இதிகாசத்தின் பிரதானமான பாத்திரங்களில் அனுமான் பாத்திரமும் ஒன்று
ஸ்ரீ அனுமானின் ஆயுதமாக கடாயுதம் காணப்படுகின்றது
வீரப்ப சந்திரபோஸ் மலையடிவாரத்தல் உள்ள தனது கடையில்
பல்வேறு சுவாமிப் பொருட்கள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன
இலங்கையில் ஸ்ரீ அனுமான் வழிபாட்டு நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது
ஸ்ரீ பக்த அனுமான் அடியார்கள் புடை சூழ வீதி உலா வருகின்றார்
மெய் அடியார்கள் ஸ்ரீ பக்த அனுமானை தமது தோள்களில் சுமக்கின்றனர்.
ஆலயத்தில் நீண்டநேரம் வழிபாடுகள் நடைபெறுகின்றன
இராம நாமத்தைச் உச்சரிப்பதன் மூலம் ஸ்ரீ அனுமானை மிக எளிதில் அடையமுடியும் என நம்பப்படுகிறது
ஆலய முகப்பில் ஸ்ரீ பக்த அனுமான் விக்கிரகத்திற்கு மலர்த்தூவி ஆராதிக்கப்படுகிறது
மற்றுமொரு மாலை உச்சியிலிருந்து நோக்கும் போது ரம்பொட ஸ்ரீ பக்த அனுமான் ஆலயத்தின் தரிசனம்
_______________________________________________
[ஆக்கம்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை-மின் அஞ்சல்: dushi.pillai@gmail.com ]
Comments
Brings back old memories of Ramboda and the Hanumman
Kovil on Hill top A place we use to vsit then when
there was peace Hope and pray peace will dawn again
for us to freely travel and worship in Sri Lanka
Santhi (Canada)
Posted by: Santhi Subramnaima | April 6, 2008 06:27 AM