ஊற்று

இலங்கைத் தமிழர் விடயத்தில் ஒருமித்த குரலுக்கு முதல்வர் வலியுறுத்துகிறார்

முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழருக்காக திரட்டும் நிவாரண நிதி குறித்து ஏனைய கட்சிகள் பல்வேறு விதமாக விமர்சித்துள்ளதையடுத்து, கட்சிகளிடையே ஒருமித்த குரல் ஒலிக்காவிட்டால் இது தான் இலங்கைத் தமிழனின் தலைவிதி என எண்ணி கண்ணீர் விட வேண் டியது தான் என முதலமைச்சர் கருணாநிதி தெரி வித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா நிதி திரட்டு வதையே மோசடி நாடகம், கபட நாடகம் என்கிறார்.

ம.தி.மு.க. வின் பொதுச் செயலாளர், வைகோ, நிவாரணப் பொருட்கள் வழங்குவோம் என்று கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் வேலை என்கிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன், திரட்டப்படும் நிவாரண நிதி அப்பாவி தமிழர்களுக்குப் போய்ச் சேரும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்கிறார். தே.மு.தி.க.

தலைவர் விஜயகாந்த், நிவாரண உதவிகள் உண்மையில் மரணப்படுக்கையில் உள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்குப் போய்ச் சேருமா என்பதே சந்தேகம் என்கிறார்.

[இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் கொடுத்த ரூ. 32 லட்சத்துக்கான காசோலையை சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் கருணாநிதியிடம் வழங்குகிறார் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராமநாதன்.]

இத்தனை குரல்களும் வேறுபட்டு, மாறுபட்டு ஒலிக்காமல் ஒன்றுபட்டு ஒலித்திட்டால் மத்திய அரசின் முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்திட உதவியாக அது அமையும் என்பது தான் என்னுடைய கருத்து.

இல்லையேல் இலங்கைத் தமிழர்களின் தலைவிதி இப்படித்தான் அமையும் போலும் என்று கடந்த கால நிகழ்வுகளையும், இக்கால நிகழ்வுகளையும் எண்ணி ஏங்கி எதிர்கால விடியல் வருமா என்று கண்ணீர் விட வேண்டியதுதான்!

Comments

India has produced many great leaders. India should not stoop down to take revenge on any individual. ltte is the only hope for the sri lankan tamils. India by now should have understood what would happen to the tamils, if the ltte looses, that will be the end of the tamil nation.

First of all India should stop aiding and abetting Sri Lanka. The sinhala government is committing genocide.
The ltte and the TNA only have the moral right to represent the tamils.No others should dictate terms without consulting the TNA at least. They only will know what is sustainable in Sri Lanka.

Post a comment

(The comment may need to be approved by Ootru.com. Until then, it won't appear on the entry. Thanks for waiting.)

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை