காணொளி: மாவீரர் 'நடுகல் வழிபாடு' சங்க காலம் தொட்டது
1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி 'வீரச் சாவு' அடைந்த சத்தியநாதன் சங்கர் நினைவில் முதலாவது 'மாவீரர் தினம்' 1989 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் நித்திக்குளம் பகுதியில் இடம் பெற்றது.
['கல்லறையில் விளக்கேற்றி பணிகின்றோம்' என்று தொடங்கும் பாடல்]
1990ம் ஆண்டு நடுப் பகுதியில் இருந்துதான் மாவீரர் நிகழ்வுகள் வைபவ ரீதியிலான அனுட்டானத்தை இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் பெற ஆரம்பித்தன.
போரில் இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் நாட்டி வழிபடும் 'நடுகல் வழிபாடு' சங்ககாலத்தில் (கி.மு 300) பரவலாக இருந்தது. ஆரிய - பார்ப்பனிய செல்வாக்கின் பின் இவை நின்று போயின.
'நடுகல் வழிபாடு' - நாட்டப்பட்டுள்ள கல்லினை வழிபடுவதனையே குறிக்கின்றது.
வீர மறவர் மரபு பேணிய தமிழ் பேரரசுகள் முகலாய, நாயக்கர் மற்றும் ஐரோப்பிய ஆக்கிரமிப்புக்களினால் காலோட்டதில் நலிந்து போயின. மேலும் யுத்தமற்ற பல பரம்பரைகளூடாக தமிழ் மறவர் வணக்கம் அருகிப்போயிற்று.
தமிழீழ விடுதலை புலிகள், வீரச் சாவடைந்த தமது மாவீரர்களது வித்துடல்களை மாவீரர் துயிலும் இல்லங்களில், கல்லறைகளில் விதைத்து, நடுகல் நாட்டி வழிபாடு இயற்றப்படும் வகை செய்துள்ளனர்.
மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர்.

