ஊற்று

காணொளி: டிசம்பர் 24 எம்.ஜி.ஆரின் 21ஆவது நினைவு தினம்

லங்கையிலும் உலகெங்கினும், தமிழ் நெஞ்சங்களின் உள்ளங்களை ஆளாத் துயரில் ஆழ்த்தி, மீளாத் துயர் சென்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அமரராகிய தினம் 1987 ஆம் ஆண்டு, டிசம்பர் 24ஆம் திகதி.

புரட்சித் தலைவர் நினைவாக இப் பாடல்:

[உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ....அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ]

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை

ஆடி வா
ஆடி வா
ஆடி வா

ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா

இடை என்னும் கொடியாட நடமாடி வா
இசை கொண்டு அழகே நீ தேராடி வா
தரை மீது போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா
(ஆடி வா )

மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
(ஆடி வா )

உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ
(ஆடி வா )

MGR1224.jpg

1967 இல் மக்கள் திலகம் நடிப்பில் வெளிவந்த அரச கட்டளை திரைப் படத்தில் இடம் பெற்ற இப் பாடலை எழுதியவர்: கவிஞர் வாலி, இசை: திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன், பாடியவர்: ரி.எம்.சௌந்தரராஜன்.

Comments

MGR... the legend and the man for all seasons!

Post a comment

(The comment may need to be approved by Ootru.com. Until then, it won't appear on the entry. Thanks for waiting.)

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை