ஊற்று

"நாடுகடந்த தமிழீழ அரசமைப்பு ஸ்ரீலங்கா கடும் போக்காளர் கரங்களை வலுவாக்கும்"-டி.பி.எஸ்.ஜெயராஜ்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்போவதாக அறிவிப்பு:

ற்காலிக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்யப்போவதாக விடுதலைப்புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளரான செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து இலங்கை ஆய்வாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் ஜூன் 15ஆம் திகதி பி.பி.சி. தமிழோசைக்கு வழங்கிய கருத்துக்கள்: [mp3 ஒலிப்பதிவினை கேட்பதற்கு அழுத்தவும்]

இதற்கான முன்னேற்பாடுகளை அமெரிக்கா வாழ் சட்டத்தரணியான விஸ்வநாதன் உருத்திரகுமார் தலைமையிலான செயற் குழு மேற்கொள்ளும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

இந்தக் குழுவுக்கான ஆதரவை வழங்குமாறு அனைத்துலக தமிழர் அமைப்புக்களை அவர் கேட்டிருக்கிறார்.

ஜனநாயக ரீதியில் அமைக்கப்படவுள்ள இந்த அரசாங்கம் சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன்னெடுக்கும் என்றும், அதேவேளை, இலங்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், உள்நாட்டுக்கான செயற்திட்டங்களை மேற்கொள்வார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த இரு செயற்பாடுகளிலும் ஒரு இணைவு இருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

Post a comment

(The comment may need to be approved by Ootru.com. Until then, it won't appear on the entry. Thanks for waiting.)

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை