திரை இசை: தாரணி மீதிலே பாடுங்க

ஜூலை 25, ஆடி மகோற்சவ தினத்தன்று காலை, பம்பலப்பிட்டி சம்மாங்கோட்டார் ஆலய முன்றலில்....
[ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடி வாங்க-1952 இல் வெளியாகிய 'பராசக்தி' திரைப் படப் பாடல்]
கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடி வாங்க
என்ற அனுபவப் பொருள் விளங்க
அந்த அனுபவப்பொருள் விளங்க
காக்கை அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
காக்காவென ஒண்ணாகக் கூடுறீங்க வாங்க
(கா கா கா)
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க
ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
உயிர் காப்பாத்த கஞ்சித் தண்ணி ஊத்துங்க
என்றால் தாப்பாளப் போடுறாங்க பாருங்க
அந்த சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க ராகம் கா கா கா
எச்சிலை தனிலே எறியும் சோத்துக்கு
பிச்சைக் காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க - எங்க
பகுத்தறிவாளரைப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகிர்ந்துண்டு வாழுங்க
பழக்கத்தை மாத்தாதீங்க எங்கே பாடுங்க கா கா கா

படம்: பராசக்தி
இசை: ஆர்.சுதர்சனம்
பாடல்: கலைஞர் கருணாநிதி
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்


