ஊற்று

காணொலி: மாசிலா நிலவே நம் காதலை மாநிலம் கொண்டடுதே

திரைப்படம்: அம்பிகாபதி (1957 இல் வெளியானது)
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன்., பானுமதி

பாடலாக்கம்: கே.டி.சந்தானம் ~ இசை: ஜி. இராமநாதன்

மாசிலா நிலவே நம்
காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே! - கண்ணே!
மாநிலம் கொண்டாடுதே!

பேசவும் அரிதான ப்ரேமையின் திறம் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே! - கண்ணா
பேதங்கள் பறந்தோடுதே!

சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி
தீபமாய் ஒளிவீசுதே கண்ணே!
தீபமாய் ஒளிவீசுதே!

மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம்நீட்டி
மௌனமாய் நம்மை வாழ்த்துதே கண்ணா!
மௌனமாய் நம்மைவாழ்த்துதே!
(மாசிலா நிலவே)

ஆஆஆ அ ஆ
ஆஆஆ அ ஆ
ஆஆஆ அ ஆ

அன்பே
இன்பம்

எங்கே ?
இங்கே!

மாறாத பேரின்ப நீராடுவோம்.
நீரோடு நீர்போல நாம் கூடுவோம்.

அன்பே இன்பம் எங்கே இங்கே
மாறாத பேரின்ப நீராடுவோம்.....

நீந்தும் அலையின் மீது நிலவின் தன்னொளி விளையாடுதே
தேன் துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே

உந்தன் நீள்விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே
ஆணெழில் முகம் வான்மதியென அல்லியும் உனை நாடுதே

அன்பே இன்பம் எங்கே இங்கே
மாறாத பேரின்ப நீராடுவோம்.....

Post a comment

(The comment may need to be approved by Ootru.com. Until then, it won't appear on the entry. Thanks for waiting.)

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை