Main

February 29, 2008

கொசோவோ விடுதலை இராணுவத்தின் பரிணாம வளர்ச்சி

டி.பி.எஸ். ஜெயராஜ்

சுதந்திர கொசோவோ என்னும் பறவைக் குஞ்சு முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவந்து ஒரு வாரகாலமாகிறது. கடந்த 17ம் திகதி சேர்பிய மாகாணமான கொசோவோ, சேர்பியாவிலிருந்து விலகி சுதந்திரபிரகடனத்தை மேற்கொண்டது. 39 வயதான பிரதமர் ஹசீம் தாசியினால் இந்த சுதந்திரப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.

சுதந்திரத்தையொட்டி கொசோவோ மக்கள் கீதங்கள் இசைத்தும், ஆரவாரித்தும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொசோவோ மக்கள் தலைநகர் பிரிஸ்றினாவில் பெப்பிரவரி 16 இரவு கொண்டாட்டத்தில்: படம்: நியு யோர்க் ரைம்ஸ்

புதிய தேசத்தில் நீலம் மற்றும் மஞ்சள் வர்ணத்தினாலான கொடிகள் திக்கெங்கும் ஏற்றப்பட்டன.

இது உண்மையிலேயே அல்பானிய மக்கள் மகிழ்ச்சி களிப்படைய வேண்டிய தருணமாகும். பல தசாப்தங்களாக அஹிம்சை மற்றும் வன்முறைப் போராட்டங்களினால் சிந்திய வியர்வைக்கும், இரத்தத்திற்கும் கிடைக்கப்பெற்ற விலைமதிப்பற்ற சன்மானமாக கொசோவோ மக்கள் தமக்கே உரிய தனிநாட்டைப் பெற்றுக்கொண்டனர்.

கொசோவோ விடுதலை இராணுவத்தினது நீண்டகால போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர் என்ற ரீதியில் பிரதமர் தாசிக்கு தனிப்பட்ட ரீதியில் இதுவொரு மாபெரும் வெற்றி மைல்கல்.

ஒரு காலத்தில் பிரதமர் ஹசீம் தாசி பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டிருந்தார். சேர்பிய நீதிமன்றம் ஹசீம் தாசிக்கு பத்தாண்டு கால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. எனினும் தாசியை சிறைப்பிடிப்பதென்பது சுலபமான காரியமாக அமையவில்லை.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளிடம் தக்க தருணத்தில் தலைசாய்ப்பதனூடாக இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க முடியும் என்பதை தாசி நன்றாக விளங்கிக் கொண்டிருந்தார். 

கொசோவோ விடுதலை இராணுவம் உஸ்ற்ட்ரா ச்ரிமேட்ரே ஈ கொசோவோ அல்லது யூ.சீ.கே என அல்பானியாவில் பிரபலமடைந்திருந்தது. அண்மைக்கால கெரில்லா போராட்ட இயக்கங்களில் மிகவும் வெற்றிகரமான இயக்கமாக கொசோவோ விடுதலை இராணுவத்தைக் குறிப்பிடலாம். கொசோவோ விடுதலை இராணுவம் அதன் முக்கிய இரண்டு இலக்குகளில் ஒன்றை வெற்றிகரமாக எட்டியுள்ளது. முதலாவது சேர்பிய மாகாணமாக காணப்பட்ட கொசோவோவை தனிநாடாக பிரகடனப்படுத்திக் கொண்டதாகும்.

மற்றைய இலக்கை அவர்கள் எவ்வாறு அடைவார்கள் என்பது குறித்த தேடல் மிகச் சுவையானது. அல்பானிய இராச்சியமொன்றை அமைத்தலே அவர்களது மற்றைய இலக்கு.

உலகின் பல முன்னணி விடுதலைப் போராட்ட இயக்கங்களுடன் ஒப்பீடு செய்யும் போது கொசோவோ விடுதலை இராணுவம் அவ்வளவு பலம் பொருந்திய ஒன்றாக கருத முடியாது. அவ்வாறு இருந்த போதிலும் அவர்கள் தமது இலக்கை என்ன வழிமுறையில் அடைந்தார்கள் என்பது நோக்கத்தக்க ஒன்றாகும்.

கொசோவோ இராணுவத்தை; ஒரு பலம்வாய்ந்த இராணுவ அமைப்பாக குறிப்பிட இயலாது. ஒரு சில சந்தர்ப்பங்களில் சேர்பிய படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது சூட்சுமமாக கொசோவோ இராணுவம் பின்வாங்கியிருந்தது.

என்றாலும், வெற்றியோ, தோல்வியோ கொசோவோ இராணுவம் ஒரு அமைப்பு என்ற வகையில் குறிப்பிட்டுக் கூறக்கூடியதொரு அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது. 

புவியியல் அமைப்பின் காரணமாக கொசோவோ விடுதலை இராணுவத்தை நிராகரிக்க முடியாத ஒரு சூழ்நிலைக் காணப்பட்ட போதிலும், ஏனைய பல அமைப்புக்கள் இதனைவிட சாதகமான பின்புலத்தைக் கொண்டிருந்த போதிலும் தமது போராட்டங்களில் வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

யதார்த்தபூர்வமான அனுமுறையின் மூலமே கொசோவோ விடுதலை இராணுவம் வெற்றியீட்டியுள்ளது. ஆயுதப் போராட்டமொன்றின் வரையறைகளை மிக நுணுக்கமாக கொசோவோ இராணுவம் அறிந்து வைத்திருந்தது. எந்த நேரத்தில் போராட்டம் நடத்த வேண்டும், எந்த நேரத்தில் மௌனம் காக்க வேண்டும் என்பதனை நன்கு உணர்ந்திருந்தது. 

இந்த அமைப்பு இராஜதந்திர விளையாட்டில் அதிகாரம் என்ற பந்தை மிக சிறப்பான முறையில் கையாண்டதாகவே குறிப்பிடவேண்டும்.

சர்வதேச சமூகத்தின் நிபந்தணைகளுக்குக் கட்டுப்பட்டு, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக செயலாற்றுவதன் மூலம் பேச்சுவார்த்தைகளை நீட்டிச் சென்றது. எந்த நேரத்தில் சமாதான இணக்கப்பாடுகளை தமக்குத் தேவையான கோணத்திற்கு திசைதிருப்ப வேண்டும் என்பதை கொசோவோ விடுதலை இராணுவம் தெளிவாக புரிந்து வைத்திருந்தது.

எதிர்த்தரப்பினர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளாத சந்தர்ப்பங்களிலும் கூட கொசோவோ விடுதலை இராணுவம் போற்றத்தக்கதோர் பொறுமையுடன் செயலாற்றியது. பேச்சுவார்த்தைகளை ரத்து செய்து ஆயுதப் போராட்டத்தில் மீண்டும் குதிக்காமல் தமது இலட்சிய பாதையில் சற்றும் விலகாமல் நிலைத்து நின்றது.

இதனால்தான் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமை கிட்டியது. கொசோவோ விடுதலை இராணுவத்தின் முக்கியஸ்தருக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக அமெரிக்கா பிரச்சாரம் செய்திருந்தமை நோக்கத் தக்கதோர் விடயமாகும்.

கொசோவோ சேர்பியாவின் ஒரு மாநிலமாகும். புராதண காலத்தில் சேர்பியாவின் முக்கிய கலாச்சார சின்னமாகவே கொசோவோ மாநிலம் கருதப்பட்டது. இந்த மாநிலத்தில் அதிகமாக சேர்பியர்களே வாழ்ந்து வந்தனர். பின்னர் கிறிஸ்தவர்கள் இந்த மாநிலத்தில் அதிகமாக வாழ்ந்து வந்தனர்.

1389ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் திகதி கொசோவோவில் வரலாற்று புகழ்பெற்ற இராணுவப் போராட்டம் நடைபெற்றது. துருக்கிய சக்கரவர்த்தி ஒட்டமானின் ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து கொசோவோ 523 ஆண்டுகள் துருக்கியின் கட்டுப்பாட்டின் கீழ்; காணப்பட்டது. தென்கிழக்காசிய யுத்தத்தின் மூலம் 1912ம் ஆண்டு சேர்பியா கொசோவோவை கைப்பற்றியது. 1913ம் ஆண்டு லண்டன் உடன்படிக்கையின் மூலம் கொசோவோ சேர்பியாவுடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டது.

முதலாவது உலக மகா யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், 1918ம் ஆண்டு கொசோவோ சேர்பிய இராச்சியத்தின் ஒரு அங்கமாக சட்டரீதியாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது உலக யுத்தத்தின் போது கொசோவோவின் பெரும்பகுதி இத்தாலியின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது. இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கொசோவோ யுகோஸ்லாவிய சமஷ்டி ஆட்சின் அங்கமான சேர்பியாவின் ஒரு மாகாணமாக 1946ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.

அறுபதுகளில் யுகோஸ்லாவியாவின் அதிபர் மார்ஸல் டுடோவினால், சேர்பியாவின் தீவிர தேசியவாதத்திற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் உத்தியாக கொசோவோ மாகாணத்திற்கு அதிகாரங்களை வழங்கியிருந்தார். 1974ம் ஆண்டு அரசியல் சாசன சீர்த்திருத்தத்தின் மூலம் குறிப்பிடத்தக்களவு சுயாட்சி அதிகாரம் கொசோவோ மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த பல ஆண்டுகளாக கொசோவோ அதிக ஜனத்தொகை ரீதியான மாறுதல்களைக் கண்டுள்ளது. சேர்பிய சனத்தொகை குறைவடைந்ததுடன், அல்பானியர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு அதிகரித்தது. மத அடிப்படையில் கிறிஸ்தவர்கள் வெகுவாக குறைவடைந்த அதேவேளை, முஸ்லிம்கள் பெருகத் தொடங்கினர். 

இருபதாம் நூற்றாண்டில் சேர்பியர்கள் சிறுபான்மையினர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். பெரும்பான்மை இனத்தவராக அல்பானியர்கள் காணப்பட்டனர். பெரும்பாலும் அல்பானியர்கள் முஸ்லிம்களாகவும், சேர்பியர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருந்தனர்.

சேர்பிய கிறிஸ்தவர்களுக்கும், அல்பானிய முஸ்லிம்களுக்கும் இடையில் நீண்டகாலமாக ஒரு பனிப்போர் நிலவிவந்தது. தேசியவாத உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் நதிமூலமாக 1979களில் பிரபலமடைந்திருந்த கொசோவோ குடியரசு இயக்கத்தை குறிப்பிடலாம். அல்பானிய சர்வாதிகாரி என்வர் ஒக்ஸாவினால் இந்த இயக்கம் நிறுவப்பட்டது. அல்பானியர்களின் இந்த உந்துதல் கொசோவோ தேசியவாதம் தோன்றுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது என்று கூறின் அது மிகையாகாது.

1981ம் ஆண்டு நாடு தழுவிய ரீதியில் பிரிவினைவாதம் பரவி வியாபித்து, இறுதியில் ஓர் கலகமாக வெடித்தது. இதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் உதவி நாடப்பட்டது.

இந்த இயக்கத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் நாட்டைவிட்டு வெளியேறி சுவிட்ஸர்லாந்தில் இயங்கிய மார்க்சிச – லெனின்வாத கொள்கைகளை பின்பற்றத் தொடங்கினர். 1982ம் ஆண்டு கொசோவோ மக்கள் இயக்கம் என்ற அமைப்பை சுவிட்ஸர்லாந்தில் நிறுவினர்.

அயர்லாந்தின் விடுதலை இராணுவத்தை (ஐ.ஆர்.ஏ) மாதிரியாகத் தழுவி தமது செயற்பாடுகளை கொசோவோ மக்கள் இயக்கம் ஆரம்பித்தது. யுகஸ்லாவிய சோசலிச குடியரசுக்குள் அல்பானிய தேசிய குடியரசொன்றை நிறுவுவதே இந்த அமைப்பின் பிரதான இலக்காக காணப்பட்டது. படிப்படியாக பாரிய அல்பானிய சாம்ராஜ்ஜியமொன்றை கட்டியெழுப்புவதே அவர்களின் இரண்டாவது இலக்காக அமைந்திருந்தது.

கடும்போக்குடைய தேசியவாத கொள்கைகளைக்க் கொண்ட ஸ்லொபொடன் மிலொச்சிவிக் சேர்பிய ஆட்சிப் பொறுப்பிற்கு அறிமுகமானதுடன் பிரிவினைவாதம் உச்சமடைந்தது. 1974ம் ஆண்டு அரசியல் சாசனத்தின் பிரகாரம் கொசோவோவிற்கு வழங்கப்பட்ட சுயாட்சி அதிகாரங்களை மிலொச்சிவிக் ரத்து செய்தார். இந்த செயல் கொசோவோ மக்களின் இதயங்களில் ரணமேற்படக் காரணமாக அமைந்தது. 1989ம் ஆண்டு அல்பானிய தலைவர்கள் சேர்பியாவிலிருந்து சுதந்திரப் பிரகடனம் செய்தனர். இதனால், சேர்பிய அரசாங்கம் கொசோவோவின் ஆட்சியைக் கலைத்தது. 

செப்டம்பர் மாதம் 100,000ற்கும் அதிகமான அல்பானியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதன் காரணமாக பொது வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டம் அடக்குமுறையின் மூலம் இறுதியில் கட்டுப்படுத்தப்பட்டது.

1991ம் ஆண்டு ஸ்லோவேனியா, குரேஷியா மற்றும் பொஸ்னியா ஆகிய நாடுகள் யுகோஸ்லாவியிலிருந்து விலகி சுதந்திரப் பிரகடனம் செய்தன. இதன் காரணமாக யுத்தம் வெடித்தது. 

அல்பானிய தலைவர்களும் ஒருதலைபட்சமாக 1991ம் ஆண்டில் சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொண்டனர். எனினும் இதனை அல்பானியா மாத்திரமே அங்கீகரித்தது. 

1992ம் ஆண்டு எழுத்தாளர் இப்ரஹிம் ரொகுவா ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 

ரொகுவா ஓர் காந்தியவாதி, அஹிம்சை வழியில் சுதந்திரம் அல்லது சுயாட்சியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைளை அவர் மேற்கொண்டார். 

எனினும், மிலோசிவிக்கினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தின் முன்னால் இந்த காந்தியவாத அஹிம்சைப் போராட்டத்;திற்கான உரிய பலன் கிடைக்கவில்லை.

சேர்பிய இராணுவப் படையினர் கொசோவோவின் அல்பானியர்கள் மீது இன ஒடுக்குமுறைகளைப் பிரயோகத்தினர்.

கொசோவோ மாநிலத்தில் சேர்பிய பெரும்பான்மையை உருவாக்கும் எண்ணத்தில் அல்பானிய இனத்தை களையும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்தனர். இதனால் ஆயிரக்கணக்கான உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன.

பல்லாயிரக்கணக்கான கோசோவோ அகதிகள் அல்பானியா, மசிடோனியா மற்றும் மொன்டென்க்ரோவில் சரணாகதி அடைந்தனர்.

ரொகுவாவின் வன்முறைகளற்ற காந்தியவாதப் போராட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற பெரும் ஏமாற்றம் கொசோவோ மக்கள் அமைப்பு ஆயுதப் போராட்டக்குழுவாக வளர்ச்சி பெறுவதற்கு ஒரு துணைக்காரணியாக அமைந்திருந்தது. 1993ம் ஆண்டு கொசோவோ விடுதலை இராணுவம் மசிடோனியாவில் இரகசியமாக தமது நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

அயர்லாந்து விடுதலை இராணுவத்தை மாதிரியாகக் கொண்டு கொசோவோ விடுதலை இராணுவம் தன்னை நெறிப்படுத்திக் கொண்டது. கொசோவோவிற்கும் சேர்பியாவிற்கும் இடையில் பாரிய மோதலொன்றை ஏற்படுத்துவதற்கு தூண்டுவதே அப்போதைய பிரதான தந்திரோபாயமாக காணப்பட்டது.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் ஆரம்ப கர்த்தாக்காளக சஹிர் பஜ்ஜாட்சி மற்றும் அதம் ஜஸ்ரி ஆகியோரைக் குறிப்பிடலாம்.

கொசோவோ விடுதலை இராணுவம் மாறுபட்ட தரப்புக்களிடமிருந்து நிவாரணங்களையும், உதவிகளையும் பெற்றுக்கொண்டது. அமெரிக்காவும், ஜேர்மனியும் ஆயுதங்கள், ஆயுத பயற்சி மற்றும் நிதி உதவி முதலியவற்றை  வழங்கின. உண்மையில் தங்களது அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கான தந்திரோபாயமாகவே இந்த உதவிகள் நோக்கப்படுகிறது.

மறுபுறத்தில் கொசோவோ விடுதலை இராணுவத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஒரு தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. 

எனினும், அமெரிக்க அரசாங்கம் கொசோவோ விடுதலை இராணுவத்தினருக்கு மறைமுகமாக உதவிகளைத் தொடர்ந்தது.

அல்கய்தா அமைப்பு, கொசோவோ விடுதலை இராணுவத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய மற்றுமொரு சக்தியாக திகழ்கிறது. கொசோவோ விடுதலை இராணுவ வீரர்கள் பல சந்தர்பங்களில் ஆப்கானிஸ்தானில் பயிற்சிகளை பெற்றனர். இந்த விடயங்கள் அம்பலப்படுத்தபடாதவையாக காணப்படுகின்றன. 

1995ம் ஆண்டு கொசோசோ விடுதலை இராணுவம் சேர்பிய பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை இலக்கு வைத்து தாக்குதல்களை ஆரம்பித்தனர். 1996களில் மிகப் பிரபலமான ஒரு ஆயுதப் போராட்டக் குழுவாக கொசோவோ விடுதலை இராணுவம் உலகில் பிரபலமடைந்தது.

வடக்கு, கிழக்கு அல்பானிய பகுதிகளில் கொசோவோ விடுதலை இராணுவம் தமது பயிற்சி முகாம்களை நிறுவியது. யுகோஸ்லாவிய படைகளைச் சேர்ந்த பல அல்பானிய படையதிகாரிகள் பதவி விலகி கொசோவோ விடுதலை இராணுவத்தில் இணைந்து கொண்டனர். புதிய படைவீரர்களுக்கு அவர்கள் பயிற்சிகளை வழங்கினர். ஒரு இராணுவ அகடமி உருப்பெறும் அளவிற்கு இது வளர்ச்சிப் பெற்றிருந்தது.

16-20 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய கட்டளைக் கட்டமைப்பைக் கொண்ட குழுக்களாக கொசோவோ விடுதலை இராணுவ இயக்கத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 7 இராணுவ நடவடிக்கை வலயங்களாக கொசோவோ மாநிலம் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வலயத்திற்கும் பொறுப்பான கட்டளைத் தளபதியொவருவர் காணப்பட்டார். “டி குரிஸ்” என கொசோவோ மொழியில் இந்தத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். இதற்கு மேலதிகமாக அரசியல் துறையொன்றும் காணப்பட்டது. “ட்ரிஜிடோரியா பொலிட்டிகா” என இந்தத்துறை அழைக்கப்பட்டது. இந்த அரசியல்துறைக்கு தற்போதைய கொசோவோ பிரதமர் ஹசீம் தாசி தலைமை வகித்தார்.

1997 – 1999 ஆண்டு காலப்பகுதியில் கொசோவோ இராணுவம் ஒரு சடுதியான வளர்ச்சிப் போக்கை வெளிக்காட்டியது. ஆரம்ப காலத்தில் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் சிவில் படை அதிகாரிகள் மீது கொசோவோ விடுதலை இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டது. தடைகளை அமைப்பதன் மூலம் அரசாங்கப் படைத்தரப்பின் ரோந்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியது.

1998ம் ஆண்டின் மத்தியபகுதியில் கொசோவோ மாநிலத்தின் ஒரு கால்வாசிப் பகுதியை கொசோவோ விடுதலை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தனர். கொசோவோவின் டெரினிக்கா பிராந்தியத்தில் கொசோவோ விடுதலை இராணுவத்தினரின் பலம் ஓங்கிக் காணப்பட்டதுடன், ப்ரிகாஸ் என்ற கிராமத்தில் விடுதலை இராணுவத்தின் தலைமைக் காரியாலத்தை அமைத்திருந்தனர்.

சேர்பிய தலைநகர் பில்கிரேட் விடுதலை இராணுவத்தினரின் பலத்தை நூற்றுக் கணக்கில் மதிப்பிட்டது. எனினும், 20,000க்கும் மேற்பட்ட போராளிகளையும் பல நவீன ரக ஆயுதங்களையும் கொண்டமைந்த பாரிய போராட்ட இயக்கமாக கொசோவோ விடுதலை இராணுவம் வளர்ச்சிப் பெற்றது.

குறிப்பாக ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், ஆர்.பி.ஜீ. – 7 ரக ஆயுதங்கள் மற்றும் எஸ்.ஏ. – 7 ரக ஏவுகணைகள் போன்ற ஆயுதங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

ஆரம்பத்தில் கொசோவோ விடுதலை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரேசங்களுக்கான ரோந்து நடவடிக்கைகளை சேர்பிய இராணுவம் தவிர்த்துக் கொண்டது. விடுதலை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அடைந்த மோசமான தோல்விகளினாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும், நேரடியான மோதல் ஒன்றின் போது சேர்பிய படையினருடன் ஒப்பிடக்கூட முடியாத அளவிற்கு சிறிய சக்தியாகவே கொசோவோ விடுதலை இராணுவம் கருதப்படுகிறது.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் பாரிய போராட்ட பின்னடைவாக ஹொராஹொவாக் பகுதியை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட இராணுவ முன்னகர்வைக் குறிப்பிடலாம். உண்மையில் இந்த முயற்சியின் காரணமாக கொசோவோ விடுதலை இராணுவம் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியது. அதன்பின்னர், சேர்பிய இராணுவத்தரப்பினர் அடிக்கடி கொசோவோ இராணுவத்தினருடன் மோதல்களில் ஈடுபட்டனர். 

இந்த மோதல்களினால் விடுதலை இராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர். அதுவரையில் கெரில்லா இயக்கத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பல பகுதிகளை சேர்பிய இராணுவம் முற்றாக மீட்டெடுத்தது. எல்லைப்புறமான ஜூனிக்கைத் தவிர ஏனைய அனைத்துப் பகுதிகளின் கட்டுப்பாட்டையும் தலைநகர் பில்கிரேட் கைப்பற்றிக் கொண்டது.

சேர்பிய இராணுவத்தினரின் மோசமான தாக்குதல்களின் காரணமாக கொசோவோ விடுதலை இராணுவம் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. கொசோவோ விடுதலை இராணுவத்திற்கோ இதுவொரு எதிர்பாராத தண்டனையாக அமைந்தது. இஸ்ரேலுக்கு வெளியே வசிக்கும் யூதர்கள் (அல்பானியர்கள்) இதனால் கொதிப்படைந்தனர். கொசோவோ விடுதலை இராணுவத்தினருக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் மேற்குலக நாடுகளில் உச்சமடைந்திருந்தது. ஐரோப்பாவிற்குச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொசோவோ விடுதலை இராணுவத்தில் இணையும் பொருட்டு தாயகம் திரும்பினர். உண்மையில் இந்த பெரும் எண்ணிக்கையிலானோரை சமாளிப்பதில் கொசோவோ விடுதலை இராணுவம் சிக்கல்களை எதிர்நோக்கியது என்றே கூறலாம்.

அப்பாவி அல்பானியர்கள் பாரியளவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களினால் கொசோவோ விடுதலை இராணுவத்திற்கான ஆதரவு பல்கிப் பெருகத் தொடங்கியது எனலாம். கொசோவோ விடுதலை இராணுவ வீரர்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் நான்கு சேர்பிய பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதில் தாக்குதலாக நிக்சோசன் மற்றும் சிரிஸ் ஆகிய கொசோவோ கிராமங்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை சேர்பிய படையினர் மேற்கொண்டனர்.

குறிப்பிட்ட கிராமங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மற்றுமொரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் கொல்லப்பட்டனர். ஏழுமாத கர்ப்பிணித் தாயயொருவரின் தலையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

மற்றுமொரு இடத்தில், அதம் ஜசரி என்ற கொசோவோ விடுதலை இராணுவத்தின் தளபதியை கைது செய்வதற்காக பிரிகாஸ் கிராமத்தில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் 60 பேர் கொல்லப்பட்டனர். இதில் 45 அப்பாவி சிவிலியன்களும் அடங்குகின்றனர். இந்த மோதல்களின் போது அதம் ஜசரியும் கொல்லப்பட்டார்.

சேர்பிய இராணுவத்தினரால் சிவிலியன்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை கொசோவோ விடுதலை இராணுவம் தமது பிரச்சார உத்தியாக கையாண்டது. சேர்பிய அரசாங்கத்தின் இனஒடுக்குமுறை முழு உலகிற்கும் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டது. பொஸ்னியாவின் அப்போதைய சூழ்நிலை இதற்கு மேலும் வலுவூட்டியது.

1999ம் ஆண்டு மார்ச் மாதமளவில் கொசோவோவில் முழுஅளவிலான போர் வெடித்தது. சேர்பிய மற்றும் யுகோஸ்லாவிய படையினர் கொசோவோ விடுதலை இராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலினால் விடுதலை இராணுவம் பாரிய அழிவுகளை எதிர்நோக்கியதுடன், அல்பானியவிற்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கொசோவோவில் சில ஆயிரம் போராளிகளே எஞ்சியிருந்தனர்.

கொசோவோ படையினர் நேட்டோ படையினருடன் இணைந்து செயற்பட்டனர். நேட்டோ படையினர் 78 நாள் வான்தாக்குதல்களை மேற்கொண்ட போது கொசோவோ விடுதலை இராணுவத்தினர் இலக்குகளை அடையாளங்காட்டுவதில் ஒத்துழைப்பு வழங்கினர்.

1999ம் ஆண்டு மே மாதத்தில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் கமாண்டர் ஸ்லிஜமன் செலிமி பதவி நீக்கம் செய்யப்பட்டு, அல்பானிய இனத்தவரும், முன்னாள் செச்னிய இராணுவ பிரிகேடியர் ஜெனரலுமான அகீம் செகு புதிய கமாண்டராக நியமிக்கப்பட்டார். 

அகீம் சேகு பதவியேற்றதன் பின்னர் தீவிர இராணுவ முன்னகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அடிக்கடி சேர்பிய பாதுகாப்பு அலகுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த யுத்தம் முடிவடைந்த சந்தர்ப்பத்தில், நோட்டோவும் சேர்பிய தலைவர்களும் சமாதான இணக்கப்பாடொன்றை எட்டியிருந்தனர். கொசோவோ ஐக்கிய நாடுகளினால் நிர்வகிக்கப்படும் என இதன் போது இணக்கம் காணப்பட்டது. கொசோவோ விடுதலை இராணுவத்தினரின் ஆயுதங்கள் களையப்படவிருந்தன. எனினும், கொசோவோ விடுதலை இராணுவம் சமாதான முன்னெடுப்புக்களில் பங்கேற்கவில்லை. ஆயுதங்களை களைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதிலாக கொசோவோ விடுதலை இராணுவத்தினர் சாணக்கியமாக ஆயுதக்களைவிற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பிரிவினரால் கொசோவோ படையினர் சமாதான முன்னெடுப்புக்களில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 3000 கொவோவே விடுதலைப் போராளிகள், கொசோவோ பாதுகாப்பு வீரர்கள் என்ற பெயரில் நேட்டோவுடன் இணைந்து பணியாற்றினர்.

அனர்த்த நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்புபணிகள், கண்ணிவெடியகற்றல், மனிதாபிமான உதவிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்தல் போன்ற பணிகளில் இந்த மூவாயிரம் படைவீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

கொசோவோ பாதுகாப்பு வீரர்களின் செயற்பாடுகளும், கொசோவோ விடுதலை இராணுவத்தின் செயற்பாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கட்டமைப்பைக் கொண்டிருந்தது. இதன் மூலம் இந்த இரண்டு அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்பினை தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். முன்னால் யுகோஸ்லாவிய படைவீரர்களின் விடுதிகளில் கொசோவோ பாதுகாப்பு வீரர்கள் நிலைகொள்ளச் செய்யப்பட்டனர்.

அல்பானிய பிரதிநிதிகளின் தலைவரான ஹசீம் தாசிக்கு இத்தாலிய பரிஸின் ராம்போலியூட்  நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் மேற்கத்தைய நாடுகளினால் முன்வைக்கப்பட்ட கொசோவோ சுயாட்சி யோசனைகளை தாசி நிராகரித்தார்.

பின்னர் மாற்றுச் சிந்தனையுடைய தாசி இந்த சோசனையை ஏற்றுக்கொண்டார். இந்த முடிவு கொசோவோ விடயத்தில் ஒரு மிக முக்கிய திருப்பு முனையாக அமைந்தது எனக் குறிப்பிடலாம்.

இதன் காரணமாக கொசோவோ விடுதலை இராணுவம் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு ஜனநாயக கட்சியாக கொசோவோவில் தோன்றியது. கொசோவோவில் இடைக்கால ஆட்சியொன்றை அமைப்பது குறித்து பிரதான மூன்று கட்சிகளும் கவனம் செலுத்தின. ரொகுவோவின் ஜனநாயக லீக் கட்சி (டுனுமு) , ஐக்கிய ஜனநாயக லீக் (டுடீனு) மற்றும் கொசோவோ விடுதலை இராணுவம் (முடுயு) ஆகியனவே இந்த பிரதான மூன்று கட்சிகளுமாகும். 

இடைக்கால நிர்வாகத்தின் பிரதமராக ஹசீம் தாசி நியமிக்கப்பட்டார்.

இனஒடுக்குமுறை தற்போது தலைகீழாக மாறியது. ஒதுக்கப்பட்ட அல்பானியர்களின் மீள் வருகையினால் சேர்பிய இனத்தவர்கள் மெதுவாக கொசோவோவைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அல்பானியர்கள் சேர்பியர்களுக்கு எதிரான இன வன்முறைகளை சுதந்திரமாக அரங்கேற்றினர். ரோமா மற்றும் ஜிப்சி இனத்தவர்கள் இந்த இனஒடுக்குமுறையினால் மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டனர்.

கடும்போக்குடைய தேசியவாதிகளுக்கு ஐக்கிய நாடுகளின் நிர்வாகிகள் பூரண சுதந்திரம் வழங்கியிருந்தனர். சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் கொசோவோவில் மிக மோசமான பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

கொலை, பாலியல் வல்லுறவு, ஆட்கடத்தல் மற்றும் குண்டு வெடிப்பு போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணைகளை உரிய முறையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு மேற்கொள்ளத் தவறியது என கொசோவோவின் மனிதவியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

நேட்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களினால் மூன்றில் இரண்டு பங்கு ரோம இனத்தவரும், அஸ்காலி இனத்தவரும் வேறுவழியின்றி அப்பிரதேசங்களைவிட்டு வெளியேறினர். 

துரதிஷ்டவசமாக பெருமளவிலான ரோம இனத்தவர்கள் கொசோவோவைவிட்டு வெளியேற நேர்ந்ததது.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ரோம இனத்தவர்கள் மிக பாரதூரமான அளவில் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட அல்லது அழிவடைந்த சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. ஆயிரக் கணக்கான சேர்பியர்களும் பலவந்தமாக கொசோவோவைவிட்டு வெளியேற்றப்பட்டனர். 

பிரதமர் தாசி இடைக்கால நிர்வாக ஆட்சியைப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் 348 கொலைகள், 116 கடத்தல்கள், 1070 கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் 1106 சொத்துக்களைச் சேதப்படுத்திய சம்பவங்கள் பதிவாகின. 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைக்கால நிர்வாக ஆணைக்குழு நிறுவப்பட்டதன் மூலம் தாசியின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தாசியின் டி.பி.கே. கட்சி மாநராட்சி தேர்தலில் படுதோல்வியடைந்தது.

ஹசீம் தாசி சேர்பியாவின் வடமேற்கு பள்ளத்தாக்கான டெனிசாவின் புரோஜா மாநகரில் 1968ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி பிறந்தார். பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் அல்பெனிய மாணவத் தலைவர்களில் ஒருவராகவும், பிரிஸ்தினா நகரில் அமைந்துள்ள அல்பானிய பல்கலைக்கழகத்தின் முதலாவது மாணவ தலைவராகவும் தாசி கடமையாற்றியுள்ளார். 

1993ம் ஆண்டு ஹாசீம் தாசி சுவிட்ஸர்லாந்திற்குச் சென்றார். அங்கு கொசோவோ விடுதலை இராணுவத்தின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டார். விடுதலை இயக்கத்தில் தாசிக்கு “ஜர்பீரி” (பாம்பு) என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது.

ஹசீம் தாசி அல்பானியாவின் பயிற்சிப் போராளிகளுக்கு பொறுப்பாளராக கடமையாற்றியிருந்தார். பின்னர் கொசோவோ விடுதலை இராணுவத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக பதவி உயர்த்தப்பட்டார்.

கொசோவோவின் தற்போதைய ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனத்தவர்கள் உரிமைகள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

துருக்கியர்கள், பொஸன்ஜன்க்ஸ் மற்றும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களான சேர்பியர்கள், ரோமர்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட உள்ளது.

பெப்ரவரி 17ம் திகதி கொசோவோவின் சுதந்திரப்பிரகடனம் செய்யப்பட்டதற்கு அதன் ஒத்துழைப்பு நாடுகள் உந்துசக்தியாக அமைந்திருந்தது. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகியனவே பிரதான நட்பு நாடுகளாகும். 

இந்த சுதந்திரப் பிரகடனம் நீண்டகாலம் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டது என்பது தெளிவாக புலனாகிறது. 

ஒரு வருடத்திற்கு முன்னதாக பின்லாந்தின் ஜனாதிபதி மாட்டீ அதிஷாரி சுதந்திரத் திட்டமொன்றை முன்வைத்தார். இந்தத் திட்டத்தில் ரஸ்யா மற்றும் சேர்பிய நிபந்தணைகளுக்கு நிகரான கொசோவோவின் நிபந்தணைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

பின்லாந்துத் தலைவரின் திட்டவரைவு நிராகரிக்கப்பட்டது, சுதந்திரத்திற்கான அடிப்படையும், கால அட்டவணையும் இந்தத் திட்டத்தில் காணப்பட்டது. சுதந்திரத்திற்கான ஒவ்வொரு படியையும்;, சுதந்திரத்திற்கான நாளையும் கொசோவோ பிரதமர் தாசியும், ஒத்துழைப்பு குழுவினரும் இணைந்து தீர்மானித்தனர்.

உத்தேசிக்கப்பட்ட முழு சுயாட்சியை சேர்பியா நிராகரித்ததன் மூலமாக, கொசோவோ பூரண சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. நாட்டின் இறைமை என்ற எண்ணக்கருவினை விஞ்சி தேசிய சுயநிர்ணய உரிமை முன்னிலைப்படுத்தப்பட்ட நிலைமையாகவே இது கருதப்படுகிறது.

2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி கொசோவோவில் தேர்தல்கள் இடம்பெற்றன. கொசோவோ விடுதலை இராணுவத்தின் ஆதரவு கட்சியான கொசோவோ ஜனநாயக கட்சி 34 வீதமான (220,000) வாக்குகளையும், 1998ம் ஆண்டு நேட்டோவின் தலையீட்டுன் ஆட்சியில் இருந்த கொசோவோ ஜனநாயக லீக் 22 வீதமான வாக்குகளையும் பெற்றுக் கொண்டன. 

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்தத் தேர்தலை புறக்கணித்தனர். கொசோவோ யுத்த்தின் பின்னர் 80 வீதமாக காணப்பட்ட வாக்களிப்பு வீதம் சடுதியாக 37 வீதமாக குறைவடைந்தது. 

தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகள் மீது மக்களின் அதிருப்தியும், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையின்மையுமே இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் பிரதிபலிப்பதாக ஐரோப்பிய பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவின் தலைவர் டொரிஸ் பெக் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், தமது கட்சிக்கு கிடைத்த 15 வீதத்திற்கும் குறைவான வாக்குகளை சேர்பியாவிலிருந்து சுதந்திரம் பெற்றுக் கொள்வதற்கான மக்களின் அங்கீகாரமாக ஹசீம் தாசி பிரடகனம் செய்தார். இந்தத் தேர்தலின் மூலம் கொசோவோ மக்கள் சர்வதேசத்திற்கு ஒரு பலமான செய்தியை கூற முனைந்துள்ளனர். “கொசோவா சுதந்திரத்திற்கு தயார்” என தாசி தெரிவித்தார்.

2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி கொசோவோ அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பு ஹாசீம் தாசிக்கு வழங்கப்படுவதாக கொசோவோ ஜனாதிபதி பெட்மீர் செஜிடு தெரிவித்தார். மேலும் விரைவாக ஆட்சியை அமைக்குமாறு தாசிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி பாராளுமன்றத்தினால் ஹாசீம் தாசி பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். தாசிக்கு ஆதரவாக 85 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பாராளுமன்றத்தில் பதிவாகின.

பிரதமர் பதவியை பொறுப்பேற்ற போது கொசோவாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுப்பதே தமது முதன்மையான இலட்சியம் என ஹாசீம் தாசி குறிப்பிட்டார்.

பெப்ரவரி மாதம் 16ம் திகதி நாளைய தினம் கொசோவோ மக்களுக்கு மிக முக்கியமான நாள் என பிரதமர் ஹாசீம் தாசி சுதந்திரப் பிரகடனம் செய்தார். 

பெப்ரவரி மாதம் 17ம் திகதி கொசோவோ ஒரு தலைப்பட்சமாக சுதந்திரத்தை பிரகடனம் செய்தது.

“ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எமது மக்களின் தலைவர்கள் நாமே” கொசோவோ சுதந்திரமானதும், இறைமையானதுமான இராச்சியம் என பிரகடனம் செய்கிறோம். இந்தப் பிரகடனம் எமது மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கின்றது. ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதி மர்ட்டீ அஜ்ஸ்தாரியின் பூரண அங்கீகாரத்துடனேயே இந்த சுதந்திரப் பிரகடனம் மேற்கொள்ளப்படுகிறது என பிரதமர் ஹாசீம் தாசி தெரிவித்தார்.

மதசார்பற்ற, பல்லின மக்களும் சட்டத்தின் முன் சமனாக கருதப்படக்கூடிய ஜனநாயக நாடாக நாம் கொசோவோவை பிரகடனம் செய்கிறோம். கொசோவோவில் வாழும் அனைத்து சமூகத்தினரதும் உரிமைகளை பாதுகாத்து, அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என ஹாசீம் தாசி பிரதிக்ஞை செய்தார். 

கொசோவோவின் அரசியல் விவகாரங்கள் மற்றும் தீர்மானங்களின் போது பல்லின மக்களது கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் செயலாற்றுவோம் என பிரதமர் மேலும் உறுதிமொழியளித்தார். 

அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி நாடுகள் இந்த புதிய நாட்டை அங்கீகரித்துள்ளன.

கொசோவோ விடுதலை இராணுவம் தமது இலட்சிய சிகரத்தின் உச்சத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளது என்று கூறின் அது மிகைப்படாது.

February 25, 2008

2002 ஒப்பந்த முறிவு குறித்த கோட்பாட்டியல் நோக்கு

கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ்
 
கிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது இலங்கையில் வடக்கு – கிழக்கை உள்ளடக்கியதான நிலப்பரப்பில் தமிழர்களுக்கான தன்னாட்சி கோரிப் போராடிவரும் அரசியல் இராணுவ பேரியக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அன்றைய அரசாங்கம் பெப்ரவரி 2002 இல் கைச்சாத்திட்டுக் கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அதாவது ரத்துச் செய்வதற்கு எடுத்த தீர்மானமானது, இலங்கை அரசியல் அவதானிகள் பலரையும் ஏனையோரையும் பலத்த ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ள ஒரு விவகாரமாகும். இத்தகையதொரு பின்னணியில் அவர்கள் அவ்வாறான முடிவு எடுக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியினை எழுப்பி வருகின்றனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுமளவிலான தீர்மானத்தை எடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்டியது எது அல்லது எலை என்பதே இன்று எழுந்துள்ள கேள்வியாகும். இதற்குக் கிரமமான ஒழுங்கிலான அரசியல் சம்பவங்களதும் மற்றும் சூத்திரங்கள், சுலோகங்களதும் அடிப்படையில் ஒருவர் பலவேறான விடைகளையும் விளக்கங்களையும் முன்வைக்க முடியும். இந்த வகையில் இக்கட்டுரை, அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கு வழிவகுத்திருக்கக் கூடிய காரணங்கள் குறித்து ஆராய முற்பட்டுள்ளது. இது குறியீட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சில கோட்பாட்டு ரீதியிலான விளக்கங்களை முன்வைக்கும் ஒரு கட்டுரையாகும்.

கோட்பாட்டு அடிப்படையிலான விளக்கங்கள்:


கோட்பாட்டு ரீதியில் சிந்திக்கையில் எப்போதும் மக்கள் அறிவார்ந்த தளத்தில் செயற்பட நினையாது தமது மனச்சாய்வுகளுக்கு ஏற்ப உணர்வு ரீதியாகவே செயற்பட முனைகிறார்களென்பது ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதொரு உண்மையாகும். ஒரு பதற்றமான அரசியல் சூழ்நிலையில் அல்லது அத்தகையதொரு பின்னணியில் தலைவர்ள் நேரடியாகவே அம் மக்களது உணர்வுகளைக் கிளற முற்பட்டு விடுகிறார்கள் என்பது அவதானிக்கப்பட வேண்டியதொரு அம்சமாகும். குறியீட்டு அரசியல் தொடர்பில் ஆராய்கையில், மக்களை மிக இலகுவாக இரையாக்கும் அவர்களை உணர்ச்சி வசப்படுத்தி ஆட்டிவைக்கக் கூடிய அடையாளங்கள் என்ற ரீதியில் உணர்வுகளைத் தூண்டும், சூத்திரங்கள் - சுலோகங்களான யுத்தம் சார்ந்த அல்லது சமாதானத்திற்கு எதிரான கோஷங்கள், கொட்டி – பதாகைகள் இன்னும் தேசிய கீதம், இனக்குழும வரலாறுகள்,  நேசத்திற்குரிய தாய் தந்தையர் நாடு குறித்த கற்பிதங்கள் அல்லது பிரமைகள் போன்றனவே பிரதான தோற்றுவாய்களாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியும். உணர்வு ரீதியாக மக்களை வசப்படுத்தி எழுச்சிக்குத் தூண்டக்கூடிய ஆயதங்களாக சமூக மேலோங்கிகளால் இவையே வெகுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதிகார மையங்களை நிலை நிறுத்தவும் இருப்பினைத’ தக்க வைத்துக் கொள்ளவும் அவர்களுக்கிருக்கும் ஒரே மார்க்கம் இதைவிட வேறெதுவுமில்லை.

அரசியல் அரங்கில், அடையாளக் குணாம்சங்களை வெளிக் கொணரும் இக் குறியீடுகள், பெரும் பங்கினை வகிக்கின்றன என மானிட பண்பியல் ஆய்வாளரான சிட்சிஸ்லோமாச் கூறுகிறார். அவை மக்களை உணர்ச்சிகளைத் தூண்டி எழுச்சிகளுக்கும், கிளர்ச்சிகளுக்கும் உள்ளாக்குவதற்கு நன்கு பயன்படுத்தப்படுகின்றன.

அரசியல்வாதிகளோ, அரசியல் இயக்கங்களது தலைவர்களோ மக்களைத் தமது அணிகளுக்குள் உள்ளீர்த்துக் கொள்வதுடன், சடுதியான உணர்வகளுக்கு ஆட்படுத்தி தமது குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இந்த வகையில், மக்களும் தம்வசமிழந்து அரசியல்வாதிகளின் போக்கிலேயே கட்டுண்டவர்களாகச் செயற்படுகின்றனர். இவ்வாறாக இலகுவாக மக்கள் ஆதரவை மிகப் பரந்தளவில் திரட்;டிக் கொள்ள முடிவதற்கான காரணம் என்னவெனில், மக்கள் அதீத சக்தி வாய்ந்த குறியீடுகளான வீரவரலாறுகள் ஆவேசமான இனப்பற்று மற்றும் தொன்மங்கள், கலாசாரம், மதம், பாரம்பரிய கற்பிதங்கள் போன்ற அடையாளக் கூறுகளினூடாக அவற்றினடியாக தூண்டப்படக் கூடியோராக ஏற்கனவே அவைமீது அதீத பற்றுடையோராய் உள்ளார்ந்த பிடிமானங்கள் கொண்டோராய் இருப்பதாகும்.

படித்த வர்க்கத்தினரை உள்ளடக்கிய மேலோங்கிகள், அரசியல்வாதிகள் அல்லது தேசியத் தலைவர்கள் சூத்திரங்கள், சுலோகங்களின் மூலமாக வரலாற்றுப் பெருமைகளை உன்னதங்களை புகழ்ந்து போற்றும் போதும், இன – மத பிரிவினைகளின் அடிப்படையில் தமது விரோதிகள் மீது போர் தொடுக்கும் போதும், உள்நாட்டு நெருக்கடிகளின் விளைவுகளுக்கு வெளிநாடுகளைத் தூற்றி வசைபாடும் போதும், புராதன மன்னர்கள் கால ஆட்சியினை மீண்டும் கொண்டு வருவதற்கு உறுதி பூணும் போதும், புராணிக வீரர்களது சாகசங்களைப் புகழ்ந்து பரணி பாடும் போதும், கொடிகளை வானளாது உயர்த்தி ஆவேச பிரகடனங்களை உதிர்க்கும் போதும் குறிப்பிட்ட இனக் குழுமத்தின் மொழி, மத பாரம்பரியங்களுக்கு உத்தியோகபூர்வ ரீதியான அந்தஸ்து பாதுகாப்பு மற்றும் சலுகைகளை முன்மொழிந்து ஆரவாரிக்கும் போதும், வருங்கால சந்ததியினரின் இளந்தளிர்களான குழந்தைகளை அரவணைத்து முத்தமிடும் போதும் மக்கள் அளவுகடந்த உணர்ச்சிகளுக்கும் நெகிழ்ச்சிகளுக்கும் ஆட்பட்டு விடுகின்றனர். மக்களுணர்வுகளை இலக்கு வைத்து, அவர்களைத் தூண்டி எழுச்சிகளை உண்டு பண்ணக் கூடிய சக்தி வாய்ந்த குறியீடுகளைப் பயன்படுத்துவதே அரசியல்வாதிகளின் வெற்றிகளுக்கு எப்போதும் இடப்படும் அடித்தளமாக இருக்கின்றது.

நாட்டின் குறிப்பிட்டதொரு நிலப்பகுதியில் ஆதிக்கம் பெற்றவர்களாக இன அல்லது மதம் சார்ந்த ஒரு குழுவினர் பெரும்பாண்மையினராக இருக்கும் பட்சத்தில், இக் குறியீட்டு அரசியலின் பிரதான விளைவாக அவர்களுக்கு எதிராக வன்மம் சார்ந்த உள்நாட்டு யுத்தம் கூட மூண்டுவிடக் கூடிய அபாயம் நேரலாம். குறிப்பிட்ட இனப்பிரிவினர் பூகோள ரீதியாக தமக்கான பூர்வீக நிலப்பரப்பை தமது தாயகமாகக் கொண்டிருப்பதற்கு உரித்துடையோராகத் தம்மைக் கருத நேரும் பட்சத்தில், அவர்களுக்கு எதிரான பகைமை நியாயப்படுத்தப்படுகிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது கற்பிதங்களே என்கிறார் எஸ்.ஜே.கொவ்மான்.

உதாரணமாக இலங்கையின் வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் பெரும்பான்மையினராக வாழுகின்ற தமிழ் மக்கள் தாம் அரசாங்கத்தினாலும் பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளாலும் கடுமையான பாரபட்சங்களுக்கும் ஒடுக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாகக் கூறி, தமது தாயகத்தினை உள்ளடக்கியதாக தமிழர்களுக்கென தமிழீழம் கோரி, தீவிரமான பிரசாரங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை அரசியல்வாதிகள் எப்போதும் போல தேர்தல் லாபங்களை முன்னிறுத்தி சிங்கள மக்களது இன உணர்வுகளைத் தூண்டும் கையில் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருவது மாத்திரமன்றி, தமிழர்களது நியாயபூர்வமான பிரச்சினைக்கு சம்ஷ்டி அடிப்படையிலான சுயாட்சிக்கான அரசியல் தீர்வினைக்கூட எட்டமுடியாதவாறும் எதிர்த்து வருகின்றனர். சிங்கள அதிகாரவர்க்கத்தினர் இந்த வகையில் தமிழர்களுக்கு எதிரான இன உணர்வுகளைத் தூண்டி அவர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் கொதித்தெழச் செய்யக்கூடிய விதமாக தீர்வு நோக்கில் பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஒற்றையாட்சி முறைமை என்ற வரையறைக்கு அப்பால் செல்ல முடியாதவாறு மட்டுப்படுத்துவதன் மூலம் நிலைமைகளை மேலும் மேலும் கடினமடையச் செய்தும் வருகின்றனர்.

ஒப்பந்த ரத்தின் பின்னணியில்…..

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இன அடிப்படையிலான பிளவுகள், குரோதங்களைப் பிரதானப்படுத்தி அத்தகைய அடையாளங்கள் - குறியீடுகள் மூலமாக இலாபமீட்டுவதே மேலோங்கிகளின் அரசியலில்  ஒரு பிரதான போக்காக இருந்து வந்துள்ளது. குறுகிய தேர்தல் - வாக்காளர் மைய தந்திரோபார அரசியலே அன்று தொடக்கம் இலங்கையில் கோலேச்சிவ ந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே சிறுபான்மையினருக்கு எதிராக மிகுந்த வன்மத்துடன் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த அரசியல் போக்கு கடும் நம்பிக்கையீனங்களையும் பீதியையுமே சிறுபான்மையினர் மத்தியில் தோற்றுவித்திருந்தது. சிங்கள அரசியல் கட்சிகளுக்கு இத்தகையதொரு பின்னணி மேலும் முனைப்புடன் இயங்குவதற்கான வாய்ப்பானதொரு சூழ்நிலையை தோற்றுவித்துக் கொடுத்திருந்தது. 

சிங்கள மக்களை பெரும்பாண்மையினராகக் கொண்ட தென்பிராந்திய பிரதேசத்தைச் சேர்ந்தவரான ராஜபக்ஷ மிகந்த தீவிரத்துடன் சிங்கள சார்பிலான கொள்கைகளையும் கோஷங்களையும் நவம்பர் 17, 2005 தேர்தலில் முன்வைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். தேர்தல் பிரசார காலத்தின் போது தனக்கேயுரியதொரு பாணியில் மிகுந்த தந்திரோபாயத்துடன் சிங்கள மக்களுக்கு தன்னை ஒடுக்கு முறைக்குள்ளானதொரு சிங்கள மக்களின் பிரதிநிதியைப் போல இனங்காட்டியும் கொண்டார். இத்துடன் தென்னிலங்கைச் சிங்கள மக்களது அனுதாபத்தையும் ஆதரவையும் சுவீகரித்துக் கொள்ளும் வகையில், குறியீட்டு அரசியல் சார்ந்த கோஷங்களை மிகத் தாராளமாகவே பயன்படுத்தியும் கொண்டார். எல்.ரி.ரி.ஈ யினருக்கு எதிராக மிகக் கடுமையான நிர்ப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகள், ஜனாதிபதி குமாரதுங்க எல்.ரி.ரி.ஈ யினருடன் செய்து கொண்ட சுனாமி ஒப்பந்தத்தை ரத்தச் செய்வதற்கான வாக்குறுதி, நோர்வே அனுசரணையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முற்றாக மாற்றுவது, நாட்டின் நெருக்கடிக்கு மேற்கு நாடுகள், குறிப்பக நோர்வே மீதான  வசைபாடல் போன்றவற்றுடன் தேசியக் கொடி, குழந்தைகளை அரவணைத்தல் ஆகிய உத்திகளும் இவற்றிலடங்கும். இவையெல்லாவற்றுக்கும் மகுடம் வைக்கும் வகையில், சிங்கள தேசியவாதக் கட்சிகளான ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடனான ஒப்பந்தங்கள் ராஜபக்ஷவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தனவாய் இருந்தன. எல்.ரி.ரி.ஈ யை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் இவை, ராஜபக்ஷ பதவிக்கு வரும் போது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நீக்க வேண்டும் என முன் நிபந்தனையையும் விதித்தன.

மக்களைக் கவரும் குறியீட்டு அரசியல் அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலின் மூலம் பதவியினைக் கைப்பற்றும் அரசியல்வாதிகள் தாம் உணர்ச்சிபூர்வமாக அளித்த வாக்குறுதிகளை, மறந்து செயற்படுவது என்பது சற்றுக் கடினமானது. உதாரணமாக, இலங்கை அரசியலில் முதல் முதலாக நிறுவன மயப்பட்ட சிங்கள பேரினவாதத்தை அறிமுகப்படுத்திய எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்காவினால் அவர் கட்டவிழ்த்து விட்ட உணர்ச்சி கொந்தளிப்புக்களை அடக்க முடியாத நிலையே ஏற்பட்டது. சிங்கள மக்களது நலன்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் தமிழ் மக்களுக்கு சலுகைகளை பண்டாரநாயக்கா அள்ளி வழங்கிவிட்டதாகக் கருதிய தீவிரவாத பிக்கு ஒருவரால், 1959இல் அவர் படுகொலை செய்யப்பட்டார். சமஷ்டிக்கு எதிரான அல்லது சமாதானத்திற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்து, தேர்தலில் வெற்றியீட்டிய ராஜபக்ஷ மிகக் கவனமாக, தந்திரோபாயத்துடன் தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு செயற்பட்டார். சிங்கள மக்களது ஆதரவுப் பலத்தைத் திரட்எ, அவர்களது நம்பிக்கையினை வென்றெடுப்பதே அவரது குறிக்கோளாகும். இதில் கடும் போக்காளர்களுள் பிரதான சக்தியாகிய பாராளுமன்றத்தில் 39 ஆசனங்களைக் கொண்ட ஜே.வி.பியினரின் ஆதரவினை எந்த விதத்திலும் இழப்பதற்கு அவர் தயாரில்லை.

ஜே.வி.பி யிடமிருந்து கிளம்பிய அழுத்தமும் நிர்ப்பந்தமும், ராஜபக்ஷ நிருவாகத்தை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யும் தீர்மானத்தை எடுக்கத் தூண்டிய விவகாரத்தில் பெரும் பங்கினையாற்றியிருந்ததென்பது பரவலானதொரு அபிப்பிராயமாகும். சிங்கள சார்பிலான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்ததன் மூலம், பதவிக்கு வந்த ராஜபக்ஷவுக்கு தேர்தல் காலத்தில் அவரது உணர்ச்சிக் கோஷங்களையும் வாக்குறுதிகளையும் உண்மையென்று விழுங்கிய ஏழை மக்களுக்கு பொருளாதார விடுதலையை மற்றும் நல மேம்பாடுகளை எவ்வாறு அளிப்பதென்பது பாரியதொரு சவாலாக உருவெடுத்துள்ளது.

ராஜபக்ஷ ஆட்சியினரின் முன்நிலையில் இப்போது இரு தெரிவுகள் மாத்திரமே உள்ளன:

(1) தொடரும் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வரக் கூடியவாறு அரசியல் தீர்விகை; காணுதல்.

(2) இன அடிப்படையிலான குறியீட்டு அரசியலை மேலும் தொடர்வது. ஜே.வி.பியினரின் சமாதான எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஆட்சியினர் இணங்கியிருப்பதைப் பார்க்கையில், அவர்கள் இரண்டாவது தெரிவினையே தழுவியிருக்கின்றனர் எனத் தோன்றுகின்றது. சிங்கள மக்களிடமிருந்து வரும் அதிருப்தி அலையினைத் திசை திருப்புவதற்கும் அவர்களுக்கிருக்கும் உபாயம் இதுவேயாகும்.

உண்மையிலேயே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய ராஜபக்ஷ எடுத்திருக்கும் தீர்மானம், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டினை நியாயப்படுத்தும் மேலும் வலுப்படுத்தும் ஒன்றாகவே கருதப்பட வேண்டும். அரசாங்கமும் அதன் நிறுவனங்களும், சிங்களவர்கள் சார்பிலானவையென்றே இலங்கைத் தமிழர்கள் நம்புகின்றனர். சிங்களத் தரப்பிலிருந்து நீதியான தீர்வு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்ற எண்ணமே அவர்கள் மனதில் மேலோங்கியுள்ளது. நூற்றாண்டுக்கும் பழைமை வாய்ந்த ஒற்றையாட்சி கட்டமைப்பிலிருந்து விலகும் விதத்தில் எத்தகையதொரு அரசியல் தீர்வினையும் முன்வைக்கும் திராணியற்றனவாகவே சிங்கள அரசியல் நிறுவனங்கள் இருக்கின்றன. சிங்களவர்களின் பிரிக்க முடியாத ஒரு அடையாளமாகவே நாட்டில் ஒற்றையாட்சி அமைப்பானது தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றது.

அரசியல் அரங்கில் இடையறாது மேலும் மேலும் அரசியல்வாதிகளால் குறியீட்டு அடிப்படையிலான அரசியல் கொள்கைகளும் கோஷங்களும் முனைப்புடன் தீவிரப்படுத்தப்பட்டு வரும் ஒரு சூழ்நிலையில் ராஜபக்ஷ நிருவாகதடதழனரழனட நடவடிக்கையால், நாடு மீட்சியற்றதொரு நிலைக்கே அதள பாதாளத்தை நோக்கித் தள்ளப்பட்டு வருவதாகவே காட்சியளிக்கிறது. இத்தகையதொரு நிலைமை தொடரும் பட்சத்தில் பேரழிவான விளைவுகள் எக் கணமும் எற்பட்டு விடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது. குறியீட்டுக் கொள்கைகளின் மூலம் சிறுபாண்மையினரது கலாசார அடையாளங்களை முன்நிறுத்தி அவர்கள் மீது இலக்கு வைக்கும் போது ஓரங்கட்டப்படும் அல்லது ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகும் சிறுபாண்மையினர் முழு அளவில் அரசிற்கு எதிராக திரண்டெழுவது எதிர்பார்க்கப்பட வேண்டிய இயல்பானதொரு வெளிப்பாடேயாகும். அரசிடமிருந்தும் அதனுடைய நிறுவனங்களிடமிருந்தும் நம்பிக்கையிழக்கும், ஒரங்கட்டப்படும் சிறுபாண்மையினர் தமது போராட்டத்தைத் தொடர்வது தவிர்க்க முடியாததொன்றாகி விடுகிறது. ஆட்சியிலிருக்கும் அதிகார வர்க்க மேலோங்கிகளாலும் எதிர்கட்சி அணியிலுள்ள மேலோங்கிகளாலும் நிறுவனமயப்படுத்தப்பட்டு வருகின்ற விடாப்பிடியான, பகைமையும் வன்மமும் சார்ந்த குறியீட்டு அரசியல் கொள்கைகளினாலும் நடவடிக்கைகளினாலும் அவர்கள் தமிழர்களுக்கென தனிநாடு கோரி போராடி வரும் அரசியல் - இராணுவ பேரியக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினையே ஆதரிக்க முற்படுவர். வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு சுதந்திரமும், தன்னாட்சி இறைமையும் கொண்ட தனிநாட்டுக்கான அவர்களது போராட்டமும் ஒருவகையில் இத்தகையதொரு நிலைமையின் பிரதிபலிப்பாகவே தோன்றுகின்றது.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் குறியீட்டு அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக நாடு, நவீனத்துவம் சார்ந்த முன்னேற்றங்களையும் அபிவிருத்தி இலக்குகளையும் எட்ட மடியாத நிலையில் பாரிய சவால்களை எதிர்நோக்கியவாறு முடங்கிப் போயுள்ளது. இலங்கை உரியவாறு முன்னேற்றங்களையம் எற்ற அபிவிருத்திகளையும் எய்த வேண்டுமாயின் அரசியல்வாதிகளும் தலைவர்களும் காலாதி காலமாக பின்பற்றி வரும் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளையும் குறுகிய தேர்தல் அபிலாஷைகளுக்கான தந்திரோபாயங்களையும் முன்னிறுத்தும் அரசியல் மற்றும் ஆட்சி முறைகளை முற்றாக ஒதுக்கி, நவீனத்துவப் பாங்கும் விரிந்த பார்வையும் கொண்டதொரு புதிய யுகத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்.

இலங்கை அரசியலில் பகைமைகளும் எதிர்ப்புணர்வு வன்மங்கள் சார்ந்த கொள்கைகளுமே தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்துமாயின், குறியீட்டு அரசியலின் விகாரமான, பாதகமான விளைவுகள் மற்றும் தாக்கங்கள் குறித்து ஆராயும், பகுப்பாய்வு செய்யும் ஆய்வாரள்களுக்கு இலங்கையே ஒரு அசலான ஆய்வுக் களமாக மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

[கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ், பென்சில்வேனியா-ரெம்பிள் பல்கலை கழகத்தினை சார்ந்த அரசியல் விஞ்ஞான பீட விரிவுரையாளர்] - தமிழாக்கம்: ஜி.ரி.கே

February 20, 2008

யுத்தத்தை மேலும் வலுவடையச் செய்வதற்கான ஓர் ஒப்பந்தம்

கொழும்பு அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக ரத்து செய்ததன் மூலம் இலங்கையின் தேசியப் பிரச்சினை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இது நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்க வழிகோலும்.

ஜயதேவ உயங்கொட

யுத்தத்தின் கோர விளைவுகள் குறித்து நாடு அவ்வளவு கரிசனை காட்டுவதாக விளங்கவில்லை. உண்மையில் இந்த மோசமான யுத்தத்தின் பாதக விளைவுகள் குறித்து இலங்கையர்களை விட வெளிநாட்டவர்கள் அதிகம் அக்கரை செலுத்துவதாகவே தோன்றுகின்றது. இனப்பிரச்சினையை இராணுவ ரீதியில் தீர்க்க முடியாது எனவும், யுத்தத்தின் மூலம் இறுதியில் யாரும் வெற்றி பெறப் போவதில்லை எனவும் நாட்டிற்கு புறத்தே உள்ள அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மாறாக இந்தப் போரினால் ஆழமான மனித உரிமைப் பிரச்சினைகள் தோன்றக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், அரசாங்கம், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இலங்கையில் வாழும் அனேகர் போரை ஒரு தவிர்க்க முடியாத யதார்த்த நிலையாகவே நோக்குகின்றனர். இந்தப் புரியாத புதிரை எவ்வாறு விளக்குவது?

[பேராசிரியர் ஜயதேவ உயங்கொட]

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் தோல்வியடைந்த சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பான பிரச்சினையின் பரிமாணங்களில் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒரு குறிப்பிட்டுக்கூறக்கூடிய இடமுண்டு. 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர்நிறுத்த உடன்படிக்கை அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் சமாதான முன்னெடுப்புக்களுக்கான முதல்கட்டமாக போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்த அனைத்து சமாதான பேச்சுவார்த்தைகளுக்கும் நோர்வே அரசாங்கப் பிரதிநிதிகள் மத்தியஸ்தம் வழங்கினர். சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளாக தொடர்ச்சியாக நோர்வே அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்கி வந்தது. போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் பின்னர் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆறு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இவை அனைத்தும் இலங்கைக்கு வெளியே இடம்பெற்றவை என்பது நோக்கத்தக்கது.

2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒஸ்லோவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கிய  கட்டத்தை எட்டியது எனக் குறிப்பிடலாம். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டி ஆட்சி முறைமை குறித்து ஆராயப்பட்டது. எனினும், ஒஸ்லோவில் காணப்பட்ட புரிந்துணர்வு தொடர்ச்சியாக நீடிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த ஒஸ்லோ புரிந்துணர்வை நிராகரித்தனர். 2003ம் ஆண்டளவில் சமாதான பேச்சுவார்த்தைகள் சர்ச்சைக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் இணங்கியவற்றை அமுல்படுத்தவில்லை எனக்கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக்கொண்டனர். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களினாலும், 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவினாலும் தடைப்பட்டிருந்த இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

போர்நிறுத்த உடன்படிக்கை மீறல்களுடன் படிப்படியாக பழைய மோசமான நிலைமைக்கு இந்தப் பிரச்சினை மீண்டும் திரும்பியது. அனேகமான சந்தர்ப்பங்களில் நேரடியான யுத்த நிறுத்த மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளே ஈடுபட்டதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் குற்றஞ்சாட்டினர். குறிப்பாக ஆயுதக் கடத்தல்கள் மற்றும் இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளின் படுகொலைகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மறுபுறத்தில் போர்நிறுத்த உடன்படிக்கையில் காணப்பட்ட இணக்கபாடுகளின் அடிப்படையில் கொழும்பு அரசாங்கம் செயற்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. குறிப்பாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களாகக் காணப்பட்ட கிராமங்களிலிருந்து இராணுவத்தினரை அகற்றுவது தொடர்பில் கொழும்பு அரசாங்கத்தின் நிலைப்பாடு யுத்த நிறுத்த மீறல்களில் பிரதான சர்ச்சையாகக் கருதப்படுகிறது.

போர்நிறுத்த மீறல் குற்றச்சாட்டை ஒருவர் மீது ஒருவர் சுமத்தும் இந்த ஆடு புலியாட்டத்தில் யார் குற்றவாளிகள் என்பதை ஆராய்வதைவிட, போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய இணக்கப்பாடுகளின் உண்மை நிலைமையை வெளியிலிருந்து அவதானிப்போருக்கு இலங்கையின் இனப்பிரச்சினையின்  தெளிவான பரிமாணங்களை நன்றாக விளங்கிக்கொள்ள முடியும். அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அரசியல் ரீதியான அனுகுமுறையை தொடங்குவதற்கான அடித்தளமாகவே உண்மையில் போர்நிறுத்த உடன்படிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகார பரவலாக்கலின் மூலம் அரசியல் சாசனத்தினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க அப்போதைய கொழும்பு அரசாங்கம் தயாராக இருந்தது. தனிநாட்டு கோரிக்கையினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் தமது தீர்வுத் திட்டங்களைத் தேட தமிழீழ விடுதலைப் புலிகள் விளைந்தனர்.

இந்த இரு வேறுபட்ட நோக்கங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப வேண்டிய நிர்ப்பந்தமே 2002ம் ஆண்டு சமாதான முன்னெடுப்புக்களின் பிரதான சவாலாகக் காணப்பட்டது. இரண்டு தரப்பினருக்கும் இடையில் காணப்படும் இணக்கப்பாட்டுத் திறனின் அடிப்படையில் சாதாரண அதிகாரப் பகிர்வொன்றை நோக்கிச் செல்லக்கூடிய வாய்ப்பு இருந்த போதிலும், மறுபுறத்தில் அது பிரிவினையாக மாறக்கூடிய வாய்ப்பாகவும் அமைந்திருந்தது. சர்வதேச மத்தியஸ்தர்களின் ஒத்துழைப்புடன் 2002-2003ம் ஆண்டு காலப்பகுதியில் இனப்பிரச்சினை தொடர்பாக நிலவிய இணக்கப்பாட்டு நிலைமை இதுவரையில் எட்டப்படவில்லை என்றே குறிப்பிடலாம்.

போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் சமாதான முன்னெடுப்புக்களின் போது இலங்கை அரச தரப்பு இரண்டு பிரதான பிரிவுகளாக பிளவுபட்டிருந்தது என்பது ஒரு முக்கியமான விடயமாக நோக்கப்பட வேண்டும். 1987ம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கையின்போது காணப்பட்ட நிலைமையை ஒத்த ஒரு சந்தர்ப்பமாகவே இது காணப்பட்டது. ஆழமாக பிளவுபட்டு காணப்பட்ட அரசாங்கமாகவே காணப்பட்டது. இந்த நிலை ஏற்கனவே பிளவுபட்டிருந்த நிலைமையை மேலும் வலுப்படுத்துவதாகவே கருதப்படுகிறது.

இந்த பிளவு நிலை சிங்கள அரசாங்கத்தில் மிக அழுத்தமாக வெளிபடத் தொடங்கியது. உண்மையில் அரசாங்க அதிகாரம் இரண்டு மாறுபட்ட எதிரணிகளைக் கொண்டமைந்ததாக காணப்பட்டது. ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பொதுஜன ஐக்கிய முன்னணி ஒரு அணியாகவும், பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மற்றொரு அணியாகவும் இரண்டு பிளவுகளாகக் காணப்பட்டன. ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஒரு சிறந்த அடித்தளமாக போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சமதான முன்னெடுப்புக்களினூடாக எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் கிடைக்கப் பெறாமை என்பவற்றை பொதுஜன ஐக்கிய முன்னணி உபாயமாகப் பயன்படுத்திக் கொண்டது. போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகபட்ச சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதனால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனவும், நாட்டின் இறைமைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படக்கூடும் எனவும் பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட சிங்கள தேசியவாதக் க