Main

March 16, 2008

கர்நாடக சங்கீத மாமேதை ஸ்ரீ தியாகராஜருக்கு கொழும்பில் இசைவிழா

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

“ஒவ்வோர் கீர்த்தனையும் எழில்மிகு ஆலயம், பாடுவோர் மற்றும் கேட்போரின் இதயங்களில் தெய்வத்தை பிரதிஷ்டை செய்யக்கூடிய வல்லமை உயரிய இசைப்படைப்பாளிகளின் படைப்புகளுக்கு உண்டு” – ராஜாஜி

சை மாமேதை ஸ்ரீ தியாகராஜார் இசை உலகிற்கு ஆற்றிய அரிய தொண்டுகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அனைத்து இசைக்கலைஞர்களும், இசைப்பிரியர்களும் கூடியிருந்தனர். இசை மாமேதையின் அற்புத படைப்புக்களை பாடி மகிழ கிடைத்த சந்தர்ப்பம் அங்கு குழுமியிருந்தோர் பெற்ற பெரும் பாக்கியமாகும். மிக எழில் மிகுந்த ஆடைகள் அணிந்த ஆண்களும், பெண்களும் அரங்கில் கூடியிருந்தனர். ஆராதணைகளின் போது பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்பட்டன. பஞ்சரதன கீர்த்தனைகள் நாட்டி ராகத்தில் அமைந்த ஜகதான்தா, கோவல ராகத்தின் டுடுகுலகா, ஆரபி ராகத்தின் சதின்சானி, வராலி ராகத்தின் கனகனா ருசிரா மற்றும் ஸ்ரீ ராகத்தின் எந்தாரு மாஹானு பவாலு ஆகியனவே இந்த பஞ்சரதன கீர்த்தனைகளாகும்.

 

[இசை மாமேதை ஸ்ரீ தியாகராஜர் தென்னிந்திய இசை பாரம்பரியத்தின் வளர்ச்சியில் உன்னத உந்துகோலாக இருந்தவர்]

தனது காதல் கடவுளான ராமரை நோக்கி புகழ்ந்து பாடும் வகையில் அமைந்துள்ள இந்த கீர்த்தனைகள் அனைத்தும் மிகச்சிறந்த ரம்மியமான இசை சிருஷ்டிகளாகும். இந்த அனைத்து கீர்த்தனைகளும் ஆதி தளத்தில் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும். ஒவ்வொரு ராகமும் குறித்த கீர்த்தனையின் உணர்வையும், பாடல் வரிகளின் கருத்தாழத்தையும் படம்பிடித்துக் காட்டுவதனைப் போன்று சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ராகம், தாளம், பல்லவி என்ற கிராம முறையில் ஸ்வர அமைப்புக்களுடன் காணப்படுகின்றன. 

ஸ்ரீ தியாகராஜரை புகழ்ந்து பாராட்டும் கர்நாடக சங்கீத விழா கடந்த 2008 பெப்ரவரி மாதம் 15ம் திகதி  கொழும்பு இந்திய கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. தியாகராஜ ஆராதணை என்ற இசைத் திருவிழா இரண்டாவது தடவையாக இலங்கையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

161ஆவது ஸ்ரீ தியாகராஜ ஆராதணைகள் நிகழ்வு கடந்த ஜனவரி 27ம் திகதி திருவையாற்றில் நடைபெற்றது. தமிழகத்தின் எல்லா பிராந்தியங்களிலிருந்தும் இசைக்கலைஞர்கள் இந்த இசை விழாவில் கலந்து ஆர்வத்துடன் கொண்டனர். காவிரி ஆற்றிக்கு அருகாமையில் அமைந்துள்ள இசை மாமேதை ஸ்ரீ தியாகராஜரின் சமாதிக்கு அவர்கள் தமது பக்தி கலந்த மரியாதையை செலுத்தினர். 

இசை மாமேதை ஸ்ரீதியாகராஜர் 1767ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவையாற்றில் பிறந்தார். ராமபிரகாமிற்கும் சீதாஅம்மாவிற்கும் மூன்றாவது குழந்தையாக அவர் இந்த உலகில் பிறந்தார். தியாகராஜரின் தந்தை ஒர் கதாசிரியர். தியாகராஜர் பிறந்த சில காலத்திலேயே அவரது குடும்பம் திருவையாற்றிற்கு சென்றது. தியாகராஜருக்கு 18 வயதிருக்கும் போது 1784ம் ஆண்டு பார்வதி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். 1789ம் ஆண்டு அவரது பாரியார் இந்த உலகத்தை விட்டு நீத்தார். அப்போது தியாகராஜருக்கு வயது 23 மட்டுமே. அதன் பின்னர் பார்வதி அம்மையாரின் தங்கைக் கமலாவை 1790ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார். கமலா அம்மையார் ஒரு பெண்குழந்தையை ஈன்றார். அந்த பெண் குழந்தைக்கு சீதாலக்ஷ்மி எனப் பெயரிடப்பட்டது. 1847ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் திகதி தியாராஜர் முக்தியடைந்த நாளாகக் நம்பப்படுகிறது. திருவையாற்றில் அமைந்துள்ள புஷ்ய பகுல பஞ்சமியில் அன்னார் சமாதியடைந்தார். 

மாமேதை தியாகராஜர் மிகப் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத கலைஞராவார். மேலும் அவர் ஒரு சிறந்த கவிஞராகவும், சிறந்த சிந்தனையாளராகவும் காணப்பட்டார். 

மனித நேயத்தையும், இராம பக்தியையும் இசையினூடாக மக்களுக்கு கற்றுக்கொடுப்பதில் இசை மாமேதை தியாகராஜர் ஓர் உன்னத மா மனிதராகவே கருதப்படுகின்றார்.

இராம பிரானே இந்த உலகத்தின் முழுமுதற் கடவுளாக அவர் பாவனை செய்தார், இராம பிரானாலேயே மனித குலத்தை காப்பாற்ற முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு அவர் தனது இசைப் பயணத்தை தொடர்ந்தார்.

ஸ்ரீஇராமரை வழிபட்டார், அவரை விமர்சித்தார், அவருக்காக கண்ணீர் மல்கினார், அவருக்காக இன்சொல் உரைத்தார், இராம கடவுளுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார் என்றுக் கூறின் அது பிழையென்றாகாது.

ஸ்ரீதியாகராஜர் சமஷ்கிருதத்தையும், சோதிடத்தை கற்றுத் தேர்ந்தார். அவரது தாய் மொழியான தெழுங்கில் புலமைப் பெற்று விளங்கினார். அவர் பல்வேறு கிர்த்தனைகளை உருவாக்கியுள்ளார். அவர் சுமார் 200க்கும் மேற்பட்ட ராகங்களைக் கொண்டு கீhத்தனைகளுக்கு உயிரூட்டினார்.

திவ்யானம சங்கீர்தனங்கள் மற்றும் உற்சவ சம்ராத்ய ஆகிய கீர்த்தனைகள் அவரது மிகப்பிரபலமான மெல்லிசை கீர்த்தனைகளாக போற்றப்படுகின்றன.

இசை மா மேதை ஸ்ரீதியாகராஜரின் சிருஷ்டிகளில் ஏறக்குறைய 1800 கீர்த்தனைகளும், இரண்டு சங்கீத நாடகங்களும் அடங்குகின்றன. “பிரதாள பக்தி விஜயம்” மற்றும் “நொவ்கா சித்திரம்” என்பவையே அந்த பிரபலமான சங்கீத நாடக சிருஷ்டிகள். 

அவரது அனேகமான கீர்த்தனைகள் தாய் மொழியான தெலுங்கிலும், ஏனையவை சமஷ்கிருதத்திலும் யாக்கப்பட்டன.

ஸ்ரீதியாகராஜர் என்ற இசை பிரம்மாவின் படைப்புக்களுக்கு மனதை பறிகொடுக்காத, அந்த கீதங்களில் பாதிக்கப்படாதோரே இல்லை என்று குறிப்பிடலாம்.

இந்த உலகத்தில் உதித்த மிகச்சிறந்த இசை மாமேதைகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜருக்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் செய்யக்கூடிய உயரிய நன்றி பாராட்டுதலாகவே ஸ்ரீ தியாகராஜ ஆராதணை இசைத் திருவிழா அமைந்துள்ளது. இதனை ஒரு தனித்துமான இசை பெரு விழாவாகவே இசையுலகம் வியந்து நோக்குகின்றது. 

இசை மாமேதை ஸ்ரீதியாகராஜர் இசை உலகின் மூவேந்தர்களில் ஒருவராக மதிக்கப்படுகின்றார். 

ஸ்ரீ தியாகராஜர், இந்துக் கடவுளான இராமரை புகழ்ந்து பாடும் நூற்றுக் கணக்கான பக்தி பாக்களை உருவாக்கியுள்ளார்.

மிக எளிமையான மொழியமைப்பு, உருக்கமான வரிகள் மற்றும் மிக உயர்தரமான மெட்டுக்களின் காரணமாக அவருடைய இசை படைப்புகள் மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று, சகாவரம் பெற்று என்றென்றும் இந்தக் காற்று மண்டலத்தை வசந்தப்படுத்திக் கொண்டிருக்கும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

 

பாலர்கள் பஞ்சரதன கீர்த்தனைகளுடன்

 

இசை விழாவில் நேசன் தியாகராஜா

 

இசை பங்களிப்பு செய்ய சகல கலைஞர்களும் ஒரே கூரையின் கீழ் கூடினர்

 

கலந்து சிறப்பித்த சபையோரில் ஒரு பகுதியினர்

 

விழாவில் மோர்சிங் வழங்கும் கலைஞர். மோர்சிங் கர்னாடக இசையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 'யூத யாழ்' இசைக் கருவிக்கு ஒத்த மோர்சிங், கிராமிய பாடல்களுக்கு இசை வளங்கவும் பயன் படுத்தபடுகிறது

 

இசை வழங்கிய அன்னையருடன் சிறார்களும் இணந்து குதூகலித்தனர்

 

இசை விழாவில் கலாசூரி அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன், மாணவர்கள் மற்றும் சக இசை கலைஞர்களுடன் இணைந்து கொண்டார்

 

இது இசை மாமேதை ஸ்ரீ தியாகராஜருக்கு இசை கலைஞர்கள் எடுக்கும் வருடாந்த விழா

 

இசை விழாவில் வீணையிசை வழங்கும் கலைஞர்கள்

 

ஸ்ரீ தியாகராஜரின் முத்துக்களை பாடுவதில் சபையினரும் இணந்து கொண்டனர்

 

இசை பிரியர்களுக்கு பரவசமளிக்கும் ஓர் இசை விழா

 

பாடல் இசைத்தோருடன் மிருதங்கம், வீணை மற்றும் மோர்சிங் இசை கலைஞர்களும் இணந்து சிறப்பித்தனர்

 

விழாவின் இசைக்கோலத்தில் அனைவரும் உளமார இணைந்து சிறப்பித்தனர்

[மின் அஞ்சல்: dushi.pillai@gmail.com]